Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்

October 2, 2024
IMG_8775-696x392.jpeg

ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அதேபோல் நாங்களும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொள்கை எனப் பார்க்கையில் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடுகள் இல்லை. அதாவது அவர்கள் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஈபிடிபியும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தது. அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.”

டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த 2004 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் குறித்தும் ஈபிடிபி தலைவர் அதிக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“தேர்தலுக்கு பின்னர், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர்  ஈபிடிபியின் வீணை சின்னத்தின் வெற்றியின் பின்னர் நிச்சியம் அது நிறைவேறும் என்பதை கூறிக்கொள்கிறேன்.”

அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவாக செயற்பட்ட ஈ.பி.டி.பிக்கு எதிரான கடத்தல், சித்திரவதை, கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை எந்த அரசாங்கமும் விசாரிக்கவில்லை.

அந்த கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 1994 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.supeedsam.com/206232/

  • கருத்துக்கள உறவுகள்


 

யாழில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட தகவல் | EPDP | JAFFNA

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

அது ஏன் தேர்தல் முடிந்த பின்.

இடையில் யாராவது பெட்டி தருவாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

அது ஏன் தேர்தல் முடிந்த பின்.

இடையில் யாராவது பெட்டி தருவாங்களோ?

வடமாகாணத்தில். ஆறு இடங்களிலும் வெற்றி பெறுவேன். என்ற உறுதியான நம்பிக்கை தான்    🙏🤣

56 minutes ago, கிருபன் said:

அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.”

ஆனால் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெறவில்லையே   

பட்டதாரிகளுக்கு தான்  அமைச்சரவையில் இடமுள்ளது   

ஐந்து வருடங்கள்.  ஒய்வு எடுங்கள்   இதுவரை செய்த சேவைக்கு நன்றிகள் கோடி 🙏😀😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்

large.IMG_7146.jpeg.5c0c028d02e4638a2e26

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தாரே! இந்தபெருச்சாளிகளுக்கு இப்போ ஒரு சிக்கல், இவர்கள் அரசியலில் இருந்தாலும் பிரச்சனை, விலகினாலும் பிரச்சினை. இவர்களின் உதவி அனுராவுக்கு தேவையில்லை, தனக்கு வேண்டியதை தானே நேரடியாக செய்து முடிப்பார். அது நல்லதோ கெட்டதோ. தரகர் எல்லாம் தேவையில்லை. அப்படி நினைத்திருந்தால் இவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். இவர்களும் ஓடிப்போய் காலில் விழுந்திருப்பர். இந்தபெருச்சாளிகளுக்காக நேரம் செலவழிக்கவோ, பணம் விரையம் பண்ணவோ விரும்ப மாட்டார். அழைப்புக்காக காத்திருந்து இப்போ இவரே அழைப்பை ஏற்படுத்த நினைக்கிறார். இருந்த கொஞ்ச நஞ்ச வாக்குகளும் இனி கிடைக்காது இவருக்கு. மண் கொள்ளை, ஆட்களை கடத்தி கப்பமும் பெற முடியாது. என்ன செய்யப்போகிறார்? நல்ல வேளை, சம்பந்தர் தப்பித்தார், வீட்டைப் பறிமுதல் செய்ய முன். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்

அதொண்டும் தேவையில்லை! பேசாம வக்கேசனுக்கு போங்கோ!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.