Jump to content

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,REUTERS

17 அக்டோபர் 2024, 14:16 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘இறந்த மூன்று பயங்கரவாதிகளின்’ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகள் கொல்லப்பட்டக் கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை," என்று இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறியிருக்கிறது.

கொல்லப்பட்டவர் யஹ்யா சின்வாரா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக AFP செய்தி முகமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சின்வாரின் டிஎன்ஏ மற்றும் பிற தரவுகளை அவர் சிறையில் இருந்த காலத்திலிருந்து ஏற்கனவே இஸ்ரேல் கோப்பில் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேலும் தகவல்கள் பகிரப்படும்.

 

யார் இந்த யாஹ்யா சின்வார்?

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் குற்றம்சாட்டி வந்தது.

இவர் காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 62 வயதாகும் யாஹ்யா சின்வார், அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளானார்கள்.

1948 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985 ஆம் ஆண்டு கைதான போது ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார்.

இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர்.

ஹமாஸ் 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார்.

1988 ஆம் ஆண்டு சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எகிப்த்தில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம்

'மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள்'

சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார்.

அவர் 2011-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.

இதன் பிறகு அவர் காஸாவிற்கு திரும்பியதும், உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று கோபி மைக்கேல் கூறுகிறார்.

ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவர் மிகவும் கொடூரமானவர்," என்றும் கோபி மைக்கேல் கூறுகிறார்.

சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி கூறுகிறார்.

2013-ஆம் ஆண்டு, அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-ஆம் ஆண்டு அவர் அதன் தலைவராக ஆனார்.

 
சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹமாஸ் குழுவின் தலைவர்

சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள்.

2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது.

2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு பாலத்தீன மக்களை அவர் ஊக்குவித்தார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது.

சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்விடுவோமோ என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்பி வந்தது.

இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பயங்கரவாதி யஹ்யா சின்வாருக்கு இப்ப அளவற்ற அருளாளனும் நிகரற்ற பண்பாளனுமாகிய அல்லாஹ் 72 கன்னிகைகளையும் இன்னுமொரு அய்ட்டத்தையும் அருளியிருப்பான். கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் கொல்லப்படுவது பயங்கரவாதிகள் தரப்பில் கடும் சோகம்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய இஸ்ரேல்

புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார்.

மேலும் "இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” என்றார் காட்ஸ்.

"சின்வாரைக் கொன்றது பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பைத் திறக்கிறது. இது காஸாவில் ஹமாஸ், மற்றும் இரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று யதார்த்தத்திற்கு வழி வகுக்கும்,” என்றார்.

முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

இது ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Hamas Leader Yahya Sinwar: Israel ஹமாஸ் தலைவரை கொன்றதாக உறுதிப்படுத்தியது - BBC News தமிழ்

‘ஒரு வருடகால தேடுதல்’

இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு வருடகால தேடுதலுக்குப்’ பிறகு நேற்று (அக்டோபர் 16) காஸாவின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டார்’, என்று கூறப்பட்டுள்ளது.

சின்வார் இன்று (அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணம் தெளிவாக இல்லை.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தனது அறிக்கையில், சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகவும், ‘பல இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் கடத்தலுக்குப் பொறுப்பானவர்’ என்றும் கூறுயிருக்கிறது.

"காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில், தரைக்கு மேலேயும் கீழேயும் காஸாவின் பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்த யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்," என்று அது கூறுகிறது.

ஹமாஸின் மூத்த உறுப்பினர்களது சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலைத் தொடர்ந்து தெற்கு காஸாவில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

அப்பகுதியில் இயங்கி வரும் 828-வது படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேலிய வீரர்கள் ‘மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றனர்’ என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வார் என்பதை உறுதிப்படுத்தியது.

Link to comment
Share on other sites

X தளத்தில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் உடலினதும், அருகில் முகம் மறைக்கபட்ட இஸ்ரேல் இராணுவத்தினரதும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

(கொல்லப்பட்டவரின் உடல் சற்று கோரமாக இருப்பதால் என்பதால் அதை அப்படியே யாழில் இணைக்க முடியாது...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே ............

இந்த மனுசன் அவர்களின் நிலக்கீழ் சுரங்கப்பாதை வலையில் பாதுகாப்பாக சுற்றி வந்து கொண்டிருந்தது. ஆழ்கடல் மீன் ஒரு புது மூச்சு விட தண்ணீருக்கு மேல எப்பவாவது வருவது போல ஒரு தடவை வெளியால வந்திருக்கின்றார் போல..............

இனிமேல் இந்த சுரங்கப்பாதைகளை அடித்து நொறுக்குகின்றோம் என்று அப்பாவி மக்களை இஸ்ரேல் கொல்லத் தேவையில்லை......... என்ன பாவம் செய்த சனங்கள் அதுகள்........... இரண்டு பக்கங்களாலும் அடி....😌.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய  தொழில்நுட்ப சக்தியுடன் தேடித் தேடி அழித்து வெற்றிவாகை சூடுகின்றார்கள். இது இனி வரும் காலங்களில் இஸ்ரேலை நிம்மதியாக தூங்க விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் இஸ்ரேலின் மேல் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க தாக்குதலின் சூத்திரதாரி இவர்தான். இத்தாக்குதலின் ஊடாக பலஸ்த்தீன மக்களின் அறப்போராட்டத்தின் மீதான சர்வதேச அனுதாபத்தினை இவர் இழக்கவைத்தார். பலமுறை ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே நடந்துவந்த பணயக் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுக்களில் மிகக்கடுமையாக இவர் நடந்துகொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவரது இழப்பால் ஹமாஸின் போராட்டம் முற்றுப்பெற்றதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பலஸ்த்தீன மக்களின் அவலங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. 

பலஸ்த்தீன மக்களுக்கான சுமூக வாழ்வினை, அவர்கள் தங்கள் வாழிடத்தில் நிம்மதியாக அனுபவிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்பதே தமது ஒரே குறிக்கோள் என்று கருதுவதை ஈரானின் முல்லாக்களும் அதன் கூலிகளும் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவரின் கடைசி நேர வீடியோவைப் பார்த்தேன் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு, காயப்பட்ட நிலையில் ஒரு கதிரையில் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி இஸ்ரேலின் ட்ரோன் ஒன்று செல்கிறது. அதனை நோக்கி அருகில் இருந்த பலகை ஒன்றினை  எடுத்து எறிகிறார், ட்ரோன் விலக்கிக்கொள்கிறது. அடுத்த சில நிமிடங்களில் பூரண இராணுவ உடையில் அவரது சடலம் கீழே கிடக்க அருகில் இஸ்ரேலிய விசேட படைகள் நிற்கின்றனர். இறுதிவரை தன் மக்களுக்காகப் போரிட்டு மடிந்த தலைவர் என்று பலஸ்த்தீனர்கள் இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இவரது உடலை இஸ்ரேல் எடுத்துச் சென்று பல் ஆய்வுகளின் மூலம்  இவர் சின்வார்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

சுமார் 20வருடங்களாக இஸ்ரேலின் சிறையில் இருந்த சின்வார் 2011 ஆம் ஆண்டில் ஹமாஸினால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனின் விடுதலைக்காக இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட 1000 ஹமாஸ் உறுப்பினர்களில் ஒருவராக வெளியில் வந்தவர் . படிப்படியாக ஹமாஸின் தலைமைப்பொறுப்புக்களைப் பெற்ற இவர் முன்னாள் தலைவரின் இறப்பிற்குப் பின்னர் பிரதான தலைமைப்பொறுப்பை எடுத்தவர். சிறையில் இருந்த காலத்தில் மூளையில் வளர்ந்துவந்த கட்டியொன்றினை இஸ்ரேலிய இராணுவ மருத்துவர்கள் அகற்றி இவரைக் காப்பாற்றியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

https://edition.cnn.com/2024/10/17/world/video/sinwar-hamas-leader-killed-final-moments-idf-drone-lead-digvid

Edited by ரஞ்சித்
ஒன்றினை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான்.

எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள்,

ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம்

ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை  இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது.

இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே.

தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதான் யூ டியுப் போராளிகள் அங்கு போய் பட்ம் பிடிக்கவில்லை போல‌
    • தமிழர்களுக்கு தனித்துவம் தேவையில்லை என கூறுபவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தரப்பிலும் உண்டு ...சிங்கள தரப்பிலும் உண்டு  இதன் விகிதாசாரம் காலத்துக்கு காலம் மாறு படுகின்றது..வெள்ளைகள்(துதரக அதிகாரிகள்) தங்கள் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிடுதுகள் அல்லோ அதை பார்த்திட்டு இந்த புலம்பெயர்ஸும் ஏக்க ராஜ்ய கொண்சப்ட்டுக்குள்ள மூக்கை நுழைக்கினம்... எது எப்படியோ அனுராவின் ஆட்சி 5 வருடங்களின் பின் நிலைத்து நிற்காவிடில் என்ன நடக்கும் தமிழர் நிலை?என சிந்திக்க தவறுகின்றனர் சில எம்மவர்கள்...   சிறிலங்காவில் ஒர் ஸ்தீரனமான ஆட்சி வேணும் என இன்றைய வெளிநாட்டு சக்திகள் விரும்புகின்றது..அது அணுராவுக்கு ஒர் வரப்பிரசாதமாகிவிட்டது...அமெரிக்காவுக்கு நிரந்தர தளம் இந்து சமுத்திரத்தில் தேவைப்படுகிறது .....
    • நன்றி நிலாமதி, கந்தையா. நான் நினைக்கிறன் கொஞ்ச நாள் போனாப் பிறகு தான் எழுதலாம் போல.
    • 1)அதில அதிகமானவர்கள் அரசியலே பேசாதவர்கள்/தெரியாதவர்கள்  ...விடுமுறைக்கு சிறிலன்கா சென்றால் கதிர்காமம்,தென்னிலங்கை கடற்கரை என சுற்றுலா செல்பவர்கள் அந்த அழகையும் ,அங்கு ஹொட்டல்களில் சிப்பந்திகள் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மயங்கி ஐயோ சிறிலங்கா மக்கள் புனிதமானவர்கள் என்ற மாயை ... கொட்டியும் சிங்கள அரசியல்வாதியும் தான் நாட்டை குட்டிசுவராக்கியவர்கள் என பிரச்சாரம் செய்தால் அதை நம்புபவர்கள்  2)"சிங்களவர்கள் அதிகமாக இந்த நாட்டில் வாழ்கின்றனர் அவர்கள் விருப்பிய்படி தமிழர்கள் வாழ்வதுதானே நியாயம்....புலம் பெயர்ந்த நாடுகளில் அப்படி தானே நீங்கள் வாழ்கின்றீர்கள் அவர்களுடைய மொழியை படிக்கிறீங்கள் அவர்களுடன் இரண்டர கலந்து  அந்த நாட்டவர்களாக மாறிவிட்டிர்கள் தானே ஏன் சிரிலங்கனாக மாறமாட்டீர்கள் என அடம் பிடிக்கின்றீர்கள்" என சிங்களவ்ர்கள் பாடம் எடுத்தவுடன் இந்த புலம்பெயர்ஸ் அதையும் நம்பி "ஆமால்ல" என்பார்கள்  3)3) புது ரென்ட் புலம் பெயர் நாடுகளில் ஏசியன்(இந்து,இந்தியன்,சிறிலங்கன்) என்ற அடையாளத்துடன் வாழ வேணும் என்ற‌ ஒர் நப்பாசை வந்திருக்கு சில ஈழத்தமிழருக்கு 
    • THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும், பழக்கவழக்கங்களாலும், பயம், வறுமை மற்றும் ஆசைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ### புத்தகத்தின் முக்கியத்துவம்: 1. **மனநிலைகளின் தாக்கம்**: பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உணர்ச்சிகள் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் சில சமயங்களில் பொருளாதார ரீதியான முடிவுகளை தவறாக எடுக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அவர்களின் மனசார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2. **நெருக்கடியை சமாளிக்கும் திறன்**: பணம் சம்பந்தமான சிக்கல்களை சமாளிக்கும் போது, மனிதர்கள் தங்களின் நிதிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான உளவியல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் வெற்றி அதிகமாக நிதி அறிவு அல்லது புது தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவில் இல்லை, ஆனால் நிதி மேம்பாட்டின் மனநிலையில் உள்ளது என்பதை புத்தகம் விளக்குகிறது. 3. **சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது**: பல மனிதர்கள் தங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையில் பணத்துடன் தொடர்புடைய முடிவுகளை எடுப்பார்கள். அதாவது, ஒரு பெரிய முதலீட்டாளர் அல்லது சாதாரண தொழிலாளி பணம் பற்றிய அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ### புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்: 1. **பணம் சம்பந்தமான அறிவு என்பது தகுதி அல்ல**: - பணம் சம்பந்தமாக அறிவு கொண்டிருப்பது மட்டுமே போதாது; நம் தனிப்பட்ட மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒரே மாதிரியான பண சிக்கலை, பலரும் வெவ்வேறு மனநிலைகளின் அடிப்படையில் வெற்றிகரமாக அல்லது தோல்வியடையலாம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. 2. **அமைதியாக பணம் சேர்ப்பது**: - பணம் சம்பந்தமான நம் மனநிலைகளில் நிதானமாக செயல்படுவது மிக முக்கியம். வெற்றியடைய, மிகப்பெரிய சவால்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் மனநிலையிலும் உத்தியோகபூர்வமான சிந்தனையிலும் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 3. **சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட நல்லது**: - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நீங்கள் 100% சரியான முடிவுகளை எடுப்பது அவசியமில்லை. சில சிறு தவறுகளைச் செய்தாலும் கூட, முக்கியமான சில சிறந்த முடிவுகள் பல வருடங்களுக்குப் பெரும் ஆதாயத்தை தரும். 4. **நீண்டகால பார்வை**: - பணம் சம்பந்தமான முடிவுகளில் நீண்டகால பார்வையை நிலைநிறுத்துவது முக்கியம். பலருக்கும் எளிதாகவே பணத்தை செலவழித்துவிடுவது வரும், ஆனால் நீண்டகாலம் பொறுமையுடன் செயல்படுபவர்களே அதிக பணவீச்சுடன் வாழ முடியும். 5. **விதிகளின் அடிப்படையில் வாழ்தல்**: - மனிதர்கள் பொதுவாக அவர்கள் வாழும் சூழலில் எளிதான வழிகளை தேடுகின்றனர். ஆனால் சாத்தியமான சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பூரணமாக முன்னேற வேண்டியது முக்கியம். மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய **"The Psychology of Money"** (பணம் சார்ந்த உளவியல்) உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான புத்தகமாக மாறியதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த புத்தகம் நிதி சந்தை, முதலீட்டு உலகம், மற்றும் தனிப்பட்ட பண மேலாண்மையை பற்றி வழக்கமான டெக்னிகல் தரவுகளின் அடிப்படையிலான பேச்சுக்களை மட்டுமல்லாது, மனித மனநிலைகளின் தாக்கத்தை வெளிப்படையாக ஆராய்ந்து கொண்டாடுகிறது. இது அன்றாட வாழ்க்கையின் சாத்தியமான நிதி சிக்கல்களை மனநிலைகளின் அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ### 1. **புதுமையான கண்ணோட்டம்**: நிதி புத்தகங்களில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட நிதி கற்றல் மற்றும் டெக்னிக்கல் அனலிசிஸ்கள் தரப்படும். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் நிதியியல் கட்டுரைகளை தாண்டி, மனித உணர்ச்சிகள், பணம் பற்றிய மனநிலைகள், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சிறிய முடிவுகள் கூட நிதி வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும் என்பதற்கான சிந்தனைகளை முன்வைக்கிறது. இது வாசகர்களை இலகுவாகக் கவரும். ### 2. **சாத்தியமான பாடங்கள்**: புத்தகத்தில் வழங்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் உதாரணங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான, பரவலான மற்றும் அனைவரும் அணுகக்கூடியவையாக அமைந்துள்ளது. அதாவது, பணம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது சிக்கலான நிதி கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல், எளிய நிதி ஞானத்தையும் உளவியல் அடிப்படையிலும் முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. - உதாரணமாக, "பணம் சம்பாதிப்பதில் வெற்றி என்பது சிறந்த திட்டத்தை அமைப்பதில் இல்லை, ஆனால் சிறந்த சீரான பழக்கங்களை உருவாக்குவதில் இருக்கிறது" என்ற கருத்து மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. ### 3. **தனிப்பட்ட அனுபவங்கள்**: மணிதர்களின் பணவியல் அசைவுகளை கண்ணியமிக்க முறையில் ஆராய்ந்துள்ளது. எல்லோரும் தங்கள் சொந்த பணமுடிவுகளைத் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் என்பதைக் கூறுவதன் மூலம் இது நிதி பற்றி பேசும் வழக்கமான பாணியை மாற்றுகிறது. இது பலரை, குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ### 4. **நீதிகளை மீறிய அனுபவம்**: சாதாரணமாக, நிதி உலகத்தில் சில பல விதிகள் இருந்தாலும், அவற்றை மாற்றியமைக்கவும், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதிகளை பயன்படுத்தவும் மனிதர்கள் தங்கள் மனநிலைகளின்பேரில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இது நிதியியல் வல்லுநர்கள் இடையே கூட ஒரு சிக்கலான விவாதமாக மாறுகிறது, ஏனெனில் பலரது அனுபவங்களில் சில நேரங்களில் நிதி தரவுகளுக்குப் பதிலாக அவர்களது உளவியல் செயல்பாடுகளே வெற்றி பெற்றிருக்கின்றன. ### 5. **எல்லோரும் அணுகக்கூடியது**: நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் நிதி வல்லுநர்கள் அல்லது பண மேலாண்மை விருப்பம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கிற புத்தகமாக இருப்பது வழக்கம். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது, தொடக்க நிலை முதலீட்டாளர்களிலிருந்து பெரிய முதலீட்டாளர்களை வரை தங்கள் பணம் சம்பந்தமான மனநிலைகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் மிகவும் சுலபமாக கற்றுத் தருகிறது. ### 6. **முடிவுகள் எடுக்கும் முறை**: மிக முக்கியமான ஒரு விஷயம், புத்தகம் உணர்ச்சிகள் மற்றும் மனித இயல்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் பணம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் அவர்களது தனிப்பட்ட மனநிலையினை பிரதிபலிக்கும். இது பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறை அல்லது கோட்பாடு இல்லாமல், தனிநபரின் தனித்தன்மையான அனுபவங்களை நிதிக்கான ஒரு வழிகாட்டியாக பார்ப்பது. இதனால் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட பரிசோதனையாக மாறுகிறது. ### 7. **நேர்த்தியான பரிந்துரைகள்**: மற்ற நிதி புத்தகங்களை போலவே இது நேரடியான பின்தொடரக்கூடிய வினைமுறைகளை நிதானமாக முன்வைக்காது. மாறாக, இது வாசகர்களை தங்கள் சொந்த முடிவுகளை தங்கள் பண நிர்வாகத்தில் எடுப்பதற்கான சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகை மாற்று பார்வையால் புத்தகம் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ### **விமர்சன நோக்கம்**: முன்னே குறிப்பிட்டவை அனைத்தும் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். ஆனால், சில விமர்சனங்களும் இவ்வினையில் இருக்கின்றன. 1. **சில பொதுவான அம்சங்கள்**: புத்தகத்தில் கூறப்படும் சில கருத்துகள் ஏற்கனவே பல புத்தகங்களில் அல்லது இணையதளங்களில் வெளிப்படுத்தப்பட்டதுபோல தென்படும். இவை அனைவருக்கும் புதிதாகத் தோன்றாமல், சிலருக்கு மிகவும் அடிப்படை தகவல்களாக உணரப்படலாம். 2. **அழுத்தமான உதவிக்குறிப்புகள் இல்லை**: புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான கூறுகள் இருந்தாலும், இது வாசகர்களுக்கு நேரடி வழிகாட்டுதல்களைத் தரவில்லை. அதாவது, “இந்த வழியில் செயல்படு” என்ற அளவில் தெளிவான பரிந்துரைகள் இல்லை. ### **முடிவுரை**: **"The Psychology of Money"** புத்தகம் உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான நூலாக மாறியுள்ளதற்கு அதன் மனித மனநிலைகளை பற்றிய கண்ணோட்டமே முக்கியக் காரணமாகும். இது வாசகர்களை அவர்களுடைய நிதி நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம். THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும், பழக்கவழக்கங்களாலும், பயம், வறுமை மற்றும் ஆசைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ### புத்தகத்தின் முக்கியத்துவம்: 1. **மனநிலைகளின் தாக்கம்**: பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உணர்ச்சிகள் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் சில சமயங்களில் பொருளாதார ரீதியான முடிவுகளை தவறாக எடுக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அவர்களின் மனசார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2. **நெருக்கடியை சமாளிக்கும் திறன்**: பணம் சம்பந்தமான சிக்கல்களை சமாளிக்கும் போது, மனிதர்கள் தங்களின் நிதிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான உளவியல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் வெற்றி அதிகமாக நிதி அறிவு அல்லது புது தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவில் இல்லை, ஆனால் நிதி மேம்பாட்டின் மனநிலையில் உள்ளது என்பதை புத்தகம் விளக்குகிறது. 3. **சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது**: பல மனிதர்கள் தங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையில் பணத்துடன் தொடர்புடைய முடிவுகளை எடுப்பார்கள். அதாவது, ஒரு பெரிய முதலீட்டாளர் அல்லது சாதாரண தொழிலாளி பணம் பற்றிய அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ### புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்: 1. **பணம் சம்பந்தமான அறிவு என்பது தகுதி அல்ல**: - பணம் சம்பந்தமாக அறிவு கொண்டிருப்பது மட்டுமே போதாது; நம் தனிப்பட்ட மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒரே மாதிரியான பண சிக்கலை, பலரும் வெவ்வேறு மனநிலைகளின் அடிப்படையில் வெற்றிகரமாக அல்லது தோல்வியடையலாம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. 2. **அமைதியாக பணம் சேர்ப்பது**: - பணம் சம்பந்தமான நம் மனநிலைகளில் நிதானமாக செயல்படுவது மிக முக்கியம். வெற்றியடைய, மிகப்பெரிய சவால்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் மனநிலையிலும் உத்தியோகபூர்வமான சிந்தனையிலும் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 3. **சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட நல்லது**: - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நீங்கள் 100% சரியான முடிவுகளை எடுப்பது அவசியமில்லை. சில சிறு தவறுகளைச் செய்தாலும் கூட, முக்கியமான சில சிறந்த முடிவுகள் பல வருடங்களுக்குப் பெரும் ஆதாயத்தை தரும். 4. **நீண்டகால பார்வை**: - பணம் சம்பந்தமான முடிவுகளில் நீண்டகால பார்வையை நிலைநிறுத்துவது முக்கியம். பலருக்கும் எளிதாகவே பணத்தை செலவழித்துவிடுவது வரும், ஆனால் நீண்டகாலம் பொறுமையுடன் செயல்படுபவர்களே அதிக பணவீச்சுடன் வாழ முடியும். 5. **விதிகளின் அடிப்படையில் வாழ்தல்**: - மனிதர்கள் பொதுவாக அவர்கள் வாழும் சூழலில் எளிதான வழிகளை தேடுகின்றனர். ஆனால் சாத்தியமான சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பூரணமாக முன்னேற வேண்டியது முக்கியம். மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய **"The Psychology of Money"** (பணம் சார்ந்த உளவியல்) உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான புத்தகமாக மாறியதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த புத்தகம் நிதி சந்தை, முதலீட்டு உலகம், மற்றும் தனிப்பட்ட பண மேலாண்மையை பற்றி வழக்கமான டெக்னிகல் தரவுகளின் அடிப்படையிலான பேச்சுக்களை மட்டுமல்லாது, மனித மனநிலைகளின் தாக்கத்தை வெளிப்படையாக ஆராய்ந்து கொண்டாடுகிறது. இது அன்றாட வாழ்க்கையின் சாத்தியமான நிதி சிக்கல்களை மனநிலைகளின் அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ### 1. **புதுமையான கண்ணோட்டம்**: நிதி புத்தகங்களில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட நிதி கற்றல் மற்றும் டெக்னிக்கல் அனலிசிஸ்கள் தரப்படும். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் நிதியியல் கட்டுரைகளை தாண்டி, மனித உணர்ச்சிகள், பணம் பற்றிய மனநிலைகள், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சிறிய முடிவுகள் கூட நிதி வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும் என்பதற்கான சிந்தனைகளை முன்வைக்கிறது. இது வாசகர்களை இலகுவாகக் கவரும். ### 2. **சாத்தியமான பாடங்கள்**: புத்தகத்தில் வழங்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் உதாரணங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான, பரவலான மற்றும் அனைவரும் அணுகக்கூடியவையாக அமைந்துள்ளது. அதாவது, பணம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது சிக்கலான நிதி கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல், எளிய நிதி ஞானத்தையும் உளவியல் அடிப்படையிலும் முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. - உதாரணமாக, "பணம் சம்பாதிப்பதில் வெற்றி என்பது சிறந்த திட்டத்தை அமைப்பதில் இல்லை, ஆனால் சிறந்த சீரான பழக்கங்களை உருவாக்குவதில் இருக்கிறது" என்ற கருத்து மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. ### 3. **தனிப்பட்ட அனுபவங்கள்**: மணிதர்களின் பணவியல் அசைவுகளை கண்ணியமிக்க முறையில் ஆராய்ந்துள்ளது. எல்லோரும் தங்கள் சொந்த பணமுடிவுகளைத் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் என்பதைக் கூறுவதன் மூலம் இது நிதி பற்றி பேசும் வழக்கமான பாணியை மாற்றுகிறது. இது பலரை, குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ### 4. **நீதிகளை மீறிய அனுபவம்**: சாதாரணமாக, நிதி உலகத்தில் சில பல விதிகள் இருந்தாலும், அவற்றை மாற்றியமைக்கவும், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதிகளை பயன்படுத்தவும் மனிதர்கள் தங்கள் மனநிலைகளின்பேரில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இது நிதியியல் வல்லுநர்கள் இடையே கூட ஒரு சிக்கலான விவாதமாக மாறுகிறது, ஏனெனில் பலரது அனுபவங்களில் சில நேரங்களில் நிதி தரவுகளுக்குப் பதிலாக அவர்களது உளவியல் செயல்பாடுகளே வெற்றி பெற்றிருக்கின்றன. ### 5. **எல்லோரும் அணுகக்கூடியது**: நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் நிதி வல்லுநர்கள் அல்லது பண மேலாண்மை விருப்பம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கிற புத்தகமாக இருப்பது வழக்கம். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது, தொடக்க நிலை முதலீட்டாளர்களிலிருந்து பெரிய முதலீட்டாளர்களை வரை தங்கள் பணம் சம்பந்தமான மனநிலைகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் மிகவும் சுலபமாக கற்றுத் தருகிறது. ### 6. **முடிவுகள் எடுக்கும் முறை**: மிக முக்கியமான ஒரு விஷயம், புத்தகம் உணர்ச்சிகள் மற்றும் மனித இயல்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் பணம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் அவர்களது தனிப்பட்ட மனநிலையினை பிரதிபலிக்கும். இது பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறை அல்லது கோட்பாடு இல்லாமல், தனிநபரின் தனித்தன்மையான அனுபவங்களை நிதிக்கான ஒரு வழிகாட்டியாக பார்ப்பது. இதனால் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட பரிசோதனையாக மாறுகிறது. ### 7. **நேர்த்தியான பரிந்துரைகள்**: மற்ற நிதி புத்தகங்களை போலவே இது நேரடியான பின்தொடரக்கூடிய வினைமுறைகளை நிதானமாக முன்வைக்காது. மாறாக, இது வாசகர்களை தங்கள் சொந்த முடிவுகளை தங்கள் பண நிர்வாகத்தில் எடுப்பதற்கான சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகை மாற்று பார்வையால் புத்தகம் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ### **விமர்சன நோக்கம்**: முன்னே குறிப்பிட்டவை அனைத்தும் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். ஆனால், சில விமர்சனங்களும் இவ்வினையில் இருக்கின்றன. 1. **சில பொதுவான அம்சங்கள்**: புத்தகத்தில் கூறப்படும் சில கருத்துகள் ஏற்கனவே பல புத்தகங்களில் அல்லது இணையதளங்களில் வெளிப்படுத்தப்பட்டதுபோல தென்படும். இவை அனைவருக்கும் புதிதாகத் தோன்றாமல், சிலருக்கு மிகவும் அடிப்படை தகவல்களாக உணரப்படலாம். 2. **அழுத்தமான உதவிக்குறிப்புகள் இல்லை**: புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான கூறுகள் இருந்தாலும், இது வாசகர்களுக்கு நேரடி வழிகாட்டுதல்களைத் தரவில்லை. அதாவது, “இந்த வழியில் செயல்படு” என்ற அளவில் தெளிவான பரிந்துரைகள் இல்லை. ### **முடிவுரை**: **"The Psychology of Money"** புத்தகம் உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான நூலாக மாறியுள்ளதற்கு அதன் மனித மனநிலைகளை பற்றிய கண்ணோட்டமே முக்கியக் காரணமாகும். இது வாசகர்களை அவர்களுடைய நிதி நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம். https://www.facebook.com/photo?fbid=122121216038460178&set=a.122099946026460178
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.