Jump to content

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின்  உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை  துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

pho_media__4_.jpeg

pho_media__2_.jpeg

pho_media__1_.jpeg

pho_media__5_.jpeg

https://www.virakesari.lk/article/196648

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலத்தின் போது மிகவும் துணிச்சலாக பல செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு

டக்ளசின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட

நிமலராஜனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உதயன் பத்திரிகை இதுபற்றி எதுவும் எழுதவில்லையா?

3 hours ago, ஏராளன் said:

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை  துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவரது வழக்கு மூடப்பட்டமையால் இனி மீண்டும் திறக்க முடியுமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

போராட்ட காலத்தின் போது மிகவும் துணிச்சலாக பல செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு

டக்ளசின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட

நிமலராஜனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உதயன் பத்திரிகை இதுபற்றி எதுவும் எழுதவில்லையா?

இவரது வழக்கு மூடப்பட்டமையால் இனி மீண்டும் திறக்க முடியுமோ தெரியவில்லை.

இந்த வழக்கை மீண்டும் தோண்ட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்த வழக்கை மீண்டும் தோண்ட வேண்டும். 

வேறெரு வழக்கில் வழக்கு முடிந்துவிட்டால் திரும்ப எடுக்க முடியாதென்றார்கள்.

அரசியலமைப்பை மாற்ற வேண்டுமாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்!  வணக்கம் வாருங்கள்.
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்   உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்..   by Karunya.                                                                              
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்  உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன்  காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...                                                                              
    • கடவுள் நடுச்சபை தன்னிலே      உடுக்கை இழந்தவள் - இருகை  எடுத்தே அழைத்தாலன்றி        இடுக்கண் களையேன் - என்று  வேடிக்கை பார்த்திருந்த              நீரெல்லாம் என்ன கடவுள்...!    கர்ணனின் கொடையையே             அவன் வினையாக்கி அவன் வரங்களையே               சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    துரோணரை வீழ்த்திடப்          பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும்          ஒரு பக்கச் சார்புடையீர்  இப்படி உம் குற்றப்பட்டியல்          கூடிக்கொண்டே போகிறதே                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    அட.....  நான் மறந்து தான் போய்விட்டேன்            நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்             நரகுலத்துக்கே உரித்தான  நாலைந்து பண்புகளை           ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்  அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்                                     by                         karunya                                 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.