Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர்  சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம்  கையளித்தார்.  

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும்  வெள்ளத்தடுப்பு மற்றும்  முகாமைத்துவம்  தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.  

மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.  

அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில்  வெள்ள நிலைமை  ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு  உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன.

https://www.virakesari.lk/article/196865

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 

இனி இந்தா நான் தாறன்.....அவனை விட கூட தாறன் எண்டு போட்டி போட்டுக்கொண்டு குப்பன் சுப்பன் மப்பன் கொம்பனியள் எல்லாரும் வருவினம். 🙂

சிறிங்காவை பொறுத்தவரை அப்பப்ப புயல்,வெள்ளம் வரணும். அப்பதான் பஞ்ச போராட்டங்கள் வராமல் இருக்கும். 😎

 

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் வேதாளம் முருக்கம் மரம் ஏறுகிறது 😀

 

வாய்ப்பே இல்லை ராஜா .

இனி அங்கு சுற்றுலா போவபவர்களுக்கு எச்சரிக்கை காலவதியான மருந்தும் காலவதியான உணவு பொருளுமே அங்கு இருக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, பெருமாள் said:

மறுபடியும் வேதாளம் முருக்கம் மரம் ஏறுகிறது 😀

 

வாய்ப்பே இல்லை ராஜா .

இனி அங்கு சுற்றுலா போவபவர்களுக்கு எச்சரிக்கை காலவதியான மருந்தும் காலவதியான உணவு பொருளுமே அங்கு இருக்கும் .

அனுர ஆட்சி ஆறுமாதம் கடந்த பின்னரே எதையும் சொல்லமுடியும் என்பது என் கருத்து.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி

china-1.jpg

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது.

https://thinakkural.lk/article/311408

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2024 at 09:29, பெருமாள் said:

மறுபடியும் வேதாளம் முருக்கம் மரம் ஏறுகிறது 😀

 

வாய்ப்பே இல்லை ராஜா .

இனி அங்கு சுற்றுலா போவபவர்களுக்கு எச்சரிக்கை காலவதியான மருந்தும் காலவதியான உணவு பொருளுமே அங்கு இருக்கும் .

இது "நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் செல்வதை தடுக்க சில புலம்பெயர்ஸ் விசமிகளால் பரப்படும் செய்தி ....திட்டமிட்ட சதி ...இந்தியாவின் பின்புலமும் இதில் உண்டு....


ஆனால் நாம்"நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் சென்று சிறிலங்காவின் பொருளாதரத்தை நாம் வாழும் புலம் பெயர் நாட்டுக்கு சமனாகவோ அல்லது அதற்கு மேலாகவோ கொண்டு வருவோம் ..இது தோழர் ,அதி உத்தம ஏக்கராஜ்ஜ ஜனாதிபதி அனுரா மீது நாம் எடுக்கும் சத்திய பிரமானம்...
இப்படிக்கு 
"நல்ல புலம்பெயர்ஸ்  ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"  

😅

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

இது "நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் செல்வதை தடுக்க சில புலம்பெயர்ஸ் விசமிகளால் பரப்படும் செய்தி ....திட்டமிட்ட சதி ...இந்தியாவின் பின்புலமும் இதில் உண்டு....


ஆனால் நாம்"நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் சென்று சிறிலங்காவின் பொருளாதரத்தை நாம் வாழும் புலம் பெயர் நாட்டுக்கு சமனாகவோ அல்லது அதற்கு மேலாகவோ கொண்டு வருவோம் ..இது தோழர் ,அதி உத்தம ஏக்கராஜ்ஜ ஜனாதிபதி அனுரா மீது நாம் எடுக்கும் சத்திய பிரமானம்...
இப்படிக்கு 
"நல்ல புலம்பெயர்ஸ்  ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"  

😅

புத்தா எனக்கொரு சந்தேகம்.

நீங்களும் @ரசோதரன்  மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?
 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

புத்தா எனக்கொரு சந்தேகம்.

நீங்களும் @ரசோதரன்  மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?

அண்ணேய் அவர் பகிடிக்கு சொல்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

புத்தா எனக்கொரு சந்தேகம்.

நீங்களும் @ரசோதரன்  மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?
 

சீ சீ அவருடன் படித்தனான் என சொல்லி மாட்டுப்பட விருப்பமில்லை 😅ஆனால் ஒன்றாக அனுராபுரத்தில் பிரச்சாரம் செய்தனாங்கள்...அவரின்ட வீட்டில கிளிதட்டு விளையாடின ஞாபகம் இருக்கு 😅

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

புத்தா எனக்கொரு சந்தேகம்.

நீங்களும் @ரசோதரன்  மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?
 

🤣...............

யார் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல, அண்ணை.........😀.

அநுர பெயில் அண்ணை, நான் பாஸ்............... அந்த வித்தியாசத்தை வைத்துத் தான் அவர் ஜனாதிபதியானவர்..............🤣.

(பிறகு அவர் வேறு இடம் போய் பாஸாகியும் விட்டார்.........)

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2024 at 11:22, ஏராளன் said:

சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 

இலங்கை காசுக்கு மூண்டு கோடி,

மூண்டு கோடியில் இலங்கையில் இப்போ மூண்டுபரப்பு காணிகூட வாங்க முடியாது, இதை வைச்சு எப்படி இலங்கை முழுவதும் நிவாரணம் வழங்குறது?

எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் ஒருநாடு இன்னொருநாட்டுக்கு செய்த ஆககுறைந்த நிதி உதவி இதுவாதானிருக்கும்.

பரவாயில்ல, எதுவா இருந்தாலும் உதவி உதவிதான், ஆனாலும் எது குடுத்தாலும் வாங்குவாங்கள் எண்டு தெரிஞ்சு கொடுப்பது எகத்தாளம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, valavan said:

எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் ஒருநாடு இன்னொருநாட்டுக்கு செய்த ஆககுறைந்த நிதி உதவி இதுவாதானிருக்கும்.

 

🤣..............

மேலதிகமாக இன்னும் ஒரு 400 மில்லியன் ரூபாவும் கொடுக்கப் போகின்றார்களாம்.

சீனர்கள் கழுதை, குரங்கு என்று நாடு நாடாக போய் வாங்குகின்றார்கள். 430 மில்லியன் ரூபாய்களை கொடுத்து விட்டு இப்ப என்னத்தை விலைக்கு கேட்கப் போகின்றார்களோ.............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

யார் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல, அண்ணை.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ்தேசியம் போல.

நாங்களும் இதை விடமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

மேலதிகமாக இன்னும் ஒரு 400 மில்லியன் ரூபாவும் கொடுக்கப் போகின்றார்களாம்.

யாரோ பேசி போட்டாங்கள்போல,

ஏண்டா உலக வல்லரசுகளில் ஒண்டா இருந்துகொண்டு இதெல்லாம் ஒரு உதவியா   எண்டு அதனாலதான் மான பிரச்சனையில மல்டி மில்லியன் ரூபா கொடுக்குறான்போல

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

இது "நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் செல்வதை தடுக்க சில புலம்பெயர்ஸ் விசமிகளால் பரப்படும் செய்தி ....திட்டமிட்ட சதி ...இந்தியாவின் பின்புலமும் இதில் உண்டு....


ஆனால் நாம்"நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் சென்று சிறிலங்காவின் பொருளாதரத்தை நாம் வாழும் புலம் பெயர் நாட்டுக்கு சமனாகவோ அல்லது அதற்கு மேலாகவோ கொண்டு வருவோம் ..இது தோழர் ,அதி உத்தம ஏக்கராஜ்ஜ ஜனாதிபதி அனுரா மீது நாம் எடுக்கும் சத்திய பிரமானம்...
இப்படிக்கு 
"நல்ல புலம்பெயர்ஸ்  ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"  

😅

உழைகிற காசிற்கு மேலாக ( நாட்டின் வருமானம்) வட்டி கட்டும் நிலையில், புலம் பெயர்ந்தவர்களின் உதவி இல்லாவிட்டால், ஏழ்மை பட்டினி போசாக்கின்மை என ஒரு எதிர்கால தலைமுறையினையே இந்த இலங்கையின் பொருளாதாரத்தினால் பாதிக்கப்படும் நிலை.

அதனால் புலம்பெயர்ந்தவர்களின் உதவி இலங்கைக்கு தேவையாக உள்ளது (உங்களது உதவி).

இதனைதான் யாரோ ஒரு கவிஞர் "கண்ணே உன் விழியால் பிறர் அழுதால் கண்ணீரும் ஆனந்தம்" என்று பாடி இருக்கிறார் (சினிமா பாடல்) அதாவது பிறருக்காக அழுவது கூட நல்ல விடயமாம்.

இப்படிக்கு

"நல்ல புலம்பெயர்ஸ்  ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"  

Stream We Want You music | Listen to songs, albums, playlists for free on  SoundCloud

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடியும் வரையாவது இந்த கூட்டமைப்பு ஒற்றுமையாக  செயல் பட எம் பெருமான் நித்தியானந்தா அருள் புரிய வேண்டும்😅

சந்தர்ப்ப சூழ்நிலை,மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக் பிரிய வேண்டி வந்தா ஏ.கே.டி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை நீஙகள் வைக்கலாம்...😅


சிட்னியில் காலியான கொக் கான்,பியர் போத்தல்கள்,பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொடுத்தால் 10 சதம் (அவுஸ்ரேலிய 10 சதம்) கொடுப்பார்கள்..சிட்னியில் ஒர் அன்பர் இவை யாவற்றையும் சேகரித்து வரும் பணத்தை தாயக மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு பயன் படுத்துகிறார்.நானும் கிடைப்பவற்றை சேகரித்து கொடுப்பது உண்டு...வருடத்தில் 8000 டோலர் வரை  கிடைக்கும் இந்த காலியான போத்தல்கள் ஊடாக ...சிறு துளி பெரு வெள்ளம் ....

சீனாக்காரனே மில்லியன் கொடுத்து போட்டு படம் காட்டும் பொழுது நாங்கள் ஆயிரத்தில கொடுத்து போட்டு படம் கட்டினால் தப்பே
படம் காட்டினால் தப்பே இல்லை...😅

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

தேர்தல் முடியும் வரையாவது இந்த கூட்டமைப்பு ஒற்றுமையாக  செயல் பட எம் பெருமான் நித்தியானந்தா அருள் புரிய வேண்டும்😅

சந்தர்ப்ப சூழ்நிலை,மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக் பிரிய வேண்டி வந்தா ஏ.கே.டி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை நீஙகள் வைக்கலாம்...😅


சிட்னியில் காலியான கொக் கான்,பியர் போத்தல்கள்,பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொடுத்தால் 10 சதம் (அவுஸ்ரேலிய 10 சதம்) கொடுப்பார்கள்..சிட்னியில் ஒர் அன்பர் இவை யாவற்றையும் சேகரித்து வரும் பணத்தை தாயக மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு பயன் படுத்துகிறார்.நானும் கிடைப்பவற்றை சேகரித்து கொடுப்பது உண்டு...வருடத்தில் 8000 டோலர் வரை  கிடைக்கும் இந்த காலியான போத்தல்கள் ஊடாக ...சிறு துளி பெரு வெள்ளம் ....

சீனாக்காரனே மில்லியன் கொடுத்து போட்டு படம் காட்டும் பொழுது நாங்கள் ஆயிரத்தில கொடுத்து போட்டு படம் கட்டினால் தப்பே
படம் காட்டினால் தப்பே இல்லை...😅

லண்டனில் முன்ன்னால் போராளி (இந்திய இராணுவ காலத்தில் தலைமைக்கு தெரியாமல் நிதி மோசடியில் ஈடுபட்டு பின்னர் பிடிபடும் நிலை ஏற்பட்டவுடன் தப்பி இங்கிலாந்து வந்ததாக கூறப்படுகிறது) ஒருவரின் தாயார்  ஊருக்கு போகும் போது அங்குள்ள பிள்ளைகளுடன் சேர்ந்து படம் எடுத்து வந்து அந்த படத்தினை வைத்து தனது உணவுப்பொருளை விற்கும் கடையில் அந்த உணவு பொருளிற்கு விளம்பரமாக பயன்படுத்தினதாகவும், அந்த பொருள் விற்பனையால் வரும் நிதி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செல்வதாக கூறி விறபனை செய்வதாக கூறினாலும், அதனால் வரும் வருமானத்தில் உள்ளாச பிராயாணத்தில் ஈடுபடுவதாக அவருக்கெதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது அது போல இல்லாமல் இருந்தால் சரிதான்.😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

லண்டனில் முன்ன்னால் போராளி (இந்திய இராணுவ காலத்தில் தலைமைக்கு தெரியாமல் நிதி மோசடியில் ஈடுபட்டு பின்னர் பிடிபடும் நிலை ஏற்பட்டவுடன் தப்பி இங்கிலாந்து வந்ததாக கூறப்படுகிறது) ஒருவரின் தாயார்  ஊருக்கு போகும் போது அங்குள்ள பிள்ளைகளுடன் சேர்ந்து படம் எடுத்து வந்து அந்த படத்தினை வைத்து தனது உணவுப்பொருளை விற்கும் கடையில் அந்த உணவு பொருளிற்கு விளம்பரமாக பயன்படுத்தினதாகவும், அந்த பொருள் விற்பனையால் வரும் நிதி போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செல்வதாக கூறி விறபனை செய்வதாக கூறினாலும், அதனால் வரும் வருமானத்தில் உள்ளாச பிராயாணத்தில் ஈடுபடுவதாக அவருக்கெதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது அது போல இல்லாமல் இருந்தால் சரிதான்.😁

இநத அன்பர் அந்தவகையானர் அல்ல ....சொந்த பணத்தில் பல உதவிகளை செய்பவர்...
 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2024 at 00:09, valavan said:

இலங்கை காசுக்கு மூண்டு கோடி,

மூண்டு கோடியில் இலங்கையில் இப்போ மூண்டுபரப்பு காணிகூட வாங்க முடியாது, இதை வைச்சு எப்படி இலங்கை முழுவதும் நிவாரணம் வழங்குறது?

எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் ஒருநாடு இன்னொருநாட்டுக்கு செய்த ஆககுறைந்த நிதி உதவி இதுவாதானிருக்கும்.

பரவாயில்ல, எதுவா இருந்தாலும் உதவி உதவிதான், ஆனாலும் எது குடுத்தாலும் வாங்குவாங்கள் எண்டு தெரிஞ்சு கொடுப்பது எகத்தாளம்.

நீங்க வேற. மில்லியன் என்று போடுவதே அது வேற லெவலில் மக்களால் பார்க்கப்படும் பேசப்படும் என்ற அரசியல் தானே? 

On 31/10/2024 at 21:38, putthan said:

 

இப்படிக்கு 
"நல்ல புலம்பெயர்ஸ்  ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"  

😅

நான் இந்த விளையாட்டுக்கு வரலை ராசா. சும்மா உங்களுக்கு பிடிக்கு நானும் உங்களுடன் சேருகிறேன் என்று இங்கே எழுதினால் பல வருடங்களுக்கு பிறகும் வைத்திருந்து தூக்கி கொண்டு வந்து செய்வார்கள் இங்கே. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி வைப்பு 

image

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீனாவால்  வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளை புனரமைப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.

மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் யுவான் பொருள் உதவி மற்றும் பொருட்கள் பெறப்பட்டவுடன் முறையான கணக்குப்பதிவுக்குப் பிறகு விநியோகிக்கப்பட உள்ளன.

மேலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், வீடுகளின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின் ஊடாக விரைவாக நிறைவேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/198269

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.