Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

 

2009க்கு முன் சீமான் இதை விட‌ திராவிட‌ மேடைன‌ளில் பேசி இருக்கிறார் ம‌றுப்ப‌துக்கில்லை

 

2009க்கு பின்னான‌ சீமானை தான் நாம் ஆத‌ரிக்கிறோம்..............................

  • Replies 306
  • Views 15.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

2009க்கு முன் சீமான் இதை விட‌ திராவிட‌ மேடைன‌ளில் பேசி இருக்கிறார் ம‌றுப்ப‌துக்கில்லை

 

2009க்கு பின்னான‌ சீமானை தான் நாம் ஆத‌ரிக்கிறோம்..............................

அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, island said:

“எப்போதும் தமிழன்”, என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழை ஒழுங்காக வாசித்து அதன் பொருள் அறியும் அறிவும் திறனும் வேண்டும். 

ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகள் என்றால் அது ஏற்கத்தக்கது. அதைவிட்டு இனத்தை இங்கே இழுக்காதீர்கள்.

தமிழ் உங்களின் நாவில் பட்டுத்தவிக்கும் பாடு எங்களுக்கு தெரியாதா நானா!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள். 

சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவேன்..................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதிகள் என்றால் அது ஏற்கத்தக்கது. அதைவிட்டு இனத்தை இங்கே இழுக்காதீர்கள்.

இதுவரை எவருமே  ஜனநாயக முறைப்படி ஒரு நிர்வாகத்தை செய்யவில்லை என்பதால்  அப்படி தான் கூற முடியும். அரசியல்வாதிகள் மீது மட்டும் எல்லா பழி போட்டு தமது தவறுகளை மறைத்து தப்பிக்க நினைப்பவர்கள் மகா கோழைகள். 

எதிர் காலத்தில் புதிய தலைமுறையாவது  பழைய கறள் கட்டிய  அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  உண்மையான அனைவருடைய புரிந்துணர்வான பண்பாடாக அறிவுபூர்வமான  அரசியலை செய்யும் போது நிலைமை மாறுபடலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள். 

2009க்கு பிற‌க்கான‌ சீமானை தான் என‌க்கு தெரியும் அத‌ற்க்கு முன்பு சீமான் எப்ப‌டி இருந்தார் என்ப‌து என‌க்கு முக்கிய‌ம் கிடையாது

 

2009க்கு முன் தான் ப‌ய‌னித்த‌ பாதை த‌வ‌று என்ப‌த‌ற்க்கான‌ விள‌க்க‌ம் ப‌ல‌ த‌ட‌வை கொடுத்து விட்டார் முடிந்தால் அதையும் தேடி பாருங்கோ......................திருட்டு திராவிட‌ம் 2009க‌ளில் உண்மையும் நேர்மையுமாய் செய‌ல் ப‌ட்டு இருந்தால் என் போன்ர‌ இளைஞ‌ர்க‌ளுக்கு சீமான் யார் என்று தெரிந்து இருக்காது.................இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌

 

சீமான் சொன்ன‌ ஆயிர‌ ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்க‌ த‌க்க‌ சீமான் துப்பிர‌ எச்சில‌ தான் இப்ப‌த்த‌ ஊட‌க‌ம் ம‌க்க‌ளுக்கு காட்டுது😁........................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழ் உங்களின் நாவில் பட்டுத்தவிக்கும் பாடு எங்களுக்கு தெரியாதா நானா!!

நானாவா? அது யாரப்பா நானா? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, island said:

அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள். 

உங்க‌ளை போல் தான் சீமானும்

நீங்க‌ள் புலிக‌ள் இருந்த‌ கால‌த்தில் யாழ்க‌ள‌த்தில்

புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌வ‌னுக்கு த‌லை வெடிக்குது என்று எழுதின‌ கூட்ட‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர் என்று ஊதித்து பிடிக்க‌ முடியுது

 

அதே போல் தான் 2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு த‌ன்னையே மாற்றி கொண்டார் சீமான்................................த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் வைக்கோ திருமாள‌வ‌ன் இவ‌ர்க‌ளை விட‌ சீமான் ஈழ‌ விடைய‌த்தில் த‌ன‌து கொள்கைய‌ கைவிட‌ வில்லை

 

எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ்ச‌ க‌ட்டி த‌ழுவிய‌ பெருமை வைக்கோவை சேரும்

காங்கிர‌ஸ்சுக்கு ஆத‌ர‌வாய் பிர‌ச்சார‌ம் செய்த‌ பெருமை திருமாவை சேரும்...............................

  • கருத்துக்கள உறவுகள்

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்!

christopherNov 03, 2024 14:07PM
26 resolutions passed by the TVK Executive Committee!

விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தவெக கட்சியின் முதல் மாநாட்டை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து  26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அவை பின் வருமாறு :-

1. தமிழக வெற்றிக்‌ கழகத்தின் கொள்கைகள்‌, கொள்கைத்‌ தலைவர்களை உறுதியாகப்‌ பின்பற்றும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

2. கொள்கைத்‌ திருவிழா மாநாட்டை மாபெரும்‌ வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும்‌,  பந்தல்‌ வடிவமைப்பாளர்‌ ஜே.பி.விஸ்வநாதனுக்கும்‌, மாநில மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும்‌, பொதுமக்களுக்கும்‌ நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

3. தமிழ்நாட்டில்‌ இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும்‌ சகோதரத்துவத்தையும்‌ நல்லிணக்கத்தையும்‌ பாதுகாப்பையும்‌ எப்போதும்‌ போற்றிப்‌ பாதுகாக்கும்‌ வகையில் மதச்சார்பற்ற சமூக நீதிக்‌ கொள்கைகள்‌ பற்றிய விளக்கத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

4. ஒரே நாடு; ஒரே தேர்தல்‌ என்ற அறிவிப்பும்‌, அதைச்‌ சட்டமாக்குதலுக்கும்‌ முனையும் பாஜக அரசிற்கு எதிராக ஐனநாயகக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

5. பெண்கள்‌, குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோருக்குத்‌ உச்சபட்ச தண்டனை வழங்க ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பெண்கள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

6. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில்‌ உடனடியாகச்‌ சாதிவாரிக்‌ கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும்‌ ஆய்வைக்‌ காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி சமூக நீதிக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

7. மருத்துவம்‌ போலவே கல்வியும்‌ மாநிலப்‌ பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள்‌ உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும்‌. அப்படி வழங்கினால்‌ நீட்‌ தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள்‌ மாணவர்களின்‌ மருத்துவக்‌ கனவை நிறைவேற்ற இயலும்‌ என்பதை வலியுறுத்தி மாநிலத்‌ தன்னாட்சி உரிமைக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

8. விவசாயம்‌ மற்றும்‌ விவசாய நிலங்களின்‌ பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும்‌ தமிழக வெற்றிக்‌ கழகம்‌, தன்‌ மண்ணுக்காகவும்‌ மக்களுக்காகவும்‌ சட்டரீதியாகப்‌ போராடவும்‌ தயங்காது என்பதை வலியுறுத்தி விவசாய நிலங்கள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

9. தொழில்‌ நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின்‌ எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் கோவை மெட்ரோ ரயில்‌ திட்டப்‌ பணிகளை விரைந்து தொடங்கக்‌ கோரும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

10. ஈழத்‌ தமிழருக்கான நிரந்தரத்‌ தீர்வைக்‌ கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், ஈழத்‌ தமிழர்கள்‌ மற்றும்‌ இலங்கை அரசால் சிறைப்படிக்கப்பட்டு, தாக்கப்படும் தமிழக மீனவர்களின்‌ உரிமைகளைப்‌ பாதுகாக்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

11. மொழி உரிமையே எங்கள்‌ தமிழ்த்‌ திருநாட்டின்‌ முதல்‌ உரிமை என்ற எங்கள்‌ கொள்கைப்படி, எங்கள்‌ தாய்மொழி காக்கும்‌ எல்லா முயற்சிகளிலும்‌ தமிழக வெற்றிக்‌ கழகம்‌ சமரசமின்றிச்‌ செயல்படும்‌. தமிழ்நாட்டின்‌ இருமொழிக்‌ கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத்‌ திணிக்க முயலும்‌ ஒன்றிய அரசுக்கு எதிராக மொழிக் கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

12. அரசின்‌ வருவாயைப்‌ பெருக்க எந்த ஓர்‌ அறிவார்ந்த திட்டத்தையும்‌ செயல்படுத்தாமல்‌, மின்‌ கட்டண உயர்வு, பால்‌ கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள்‌ மீது மேலும்‌ மேலும்‌ வரிச்‌ சுமையை மட்டுமே அதிகமாக விதித்து வரும் திமுக அரசுக்கு எதிராக மக்கள்‌ மீது நிதிச்‌ சுமைத்‌ திணிப்பு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம்.

13. அமைதிப்‌ பூங்காவான தமிழ்நாட்டில்‌, தொடரும்‌ கள்ளச்‌ சாராய விற்பனை, போதைப்‌ பொருட்களின்‌ பழக்கம்‌ போன்ற நிர்வாகச்‌ சீர்கேடுகளைச்‌ சரிசெய்யாமல்‌, ஆளும்‌ திமுக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சட்டம்‌ – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்‌ நிறைவேற்றம்.

14. தேர்தல்‌ வாக்குறுதியை வழக்கம்போலக்‌ காற்றில்‌ பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால்‌ தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத்‌ திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின்‌ கணக்கீடு செய்யும்‌ முறையைக்‌ கைவிட்டு, மாதந்தோறும்‌ மின்‌ கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மின்சாரக்‌ கட்டணத்தை மாற்றியமைக்கத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

15. மகளிர்‌ உரிமைத்‌ தொகை, பரிசுத்‌ தொகுப்பு என்று ஒரு புறம்‌ அறிவித்துவிட்டு, மறுபுறம்‌ மதுக்கடைகளைத்‌ திறந்து, அதன்‌ மூலம்‌ அரசுக்கு வருவாயைப்‌ பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக்‌ குற்றங்கள்‌, சமூகப்‌ பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக்‌ காரணமாக விளங்கும்‌ மதுக்கடைகளைக்‌ கால நிர்ணயம்‌ செய்து மூட வலியுறுத்தும்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

16. தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம்‌ வழங்குகின்ற வகையில்‌, உச்ச நீதிமன்றக்‌ கிளையைச்‌ சென்னையில்‌ அமைக்கவும், தமிழைத்‌ தாய்மொழியாகக்‌ கொண்ட நீதிபதி ஒருவரை நியமித்து சட்டரீதியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த  வேண்டும்‌ என்று வலியுறுத்தும்‌ உச்ச நீதிமன்றக்‌ கிளையை அமைக்க தீர்மானம்‌ நிறைவேற்றம்.

17. தமிழ்‌ மண்ணின்‌ மூவேந்தர்களான சேரர்‌, சோழர்‌, பாண்டியர்‌ ஆட்சியின்‌ வரலாற்றுப்‌ பெருமைகளை உலகுக்குப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌, பிரமாண்டமான அருங்காட்சியகத்தை தமிழத அரசு சென்னையில்‌ கட்ட வேண்டும்‌ என்று  தமிழ்நாட்டின்‌ தொன்மப்‌ பெருமைப்‌ பாதுகாப்புத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

18. தமிழ்நாட்டு மக்களின்‌ முன்னேற்றத்திற்குப்‌ பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச்‌ சமரசமும்‌ இன்றிப்‌ போற்றுவதைக்‌ கடமையாகக்‌ கொள்ள வேண்டும் என்று கோரி விடுதலைப்‌ போராட்டத்‌ தியாகிகளுக்குப்‌ பெருமை சேர்க்க வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

19. இஸ்லாமிய சகோதரிகளின்‌ தமிழ்த்‌ தொண்டை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ ஆண்டுதோறும்‌ இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில்‌ விருதும்‌ பணமுடிப்பும்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்று தெரிவித்து கண்ணியமிகு காயிதே மில்லத்‌ பெயரில்‌ அரசு விருது வழங்க வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

20. தமிழ்நாட்டில்‌ முதியோர்‌ நலனை உறுதி செய்யும்‌ கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்த வேண்டும்‌ என்று கோரி முதியோர்‌ நல்வாழ்வை உறுதி செய்யத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

21. இயற்கைத்‌ தாயின்‌ செல்லப்‌ பிள்ளையான கன்னியாகுமரிப்‌ பகுதியில்‌ அணுக்‌ கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்‌ சுரங்கத்‌ திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென்‌ தமிழகத்தைப்‌ பாழ்படுத்தும்‌ இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக்‌ கைவிடவேண்டும்‌ என்று இயற்கை வளப்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம்.

22. நாடாளுமன்றத்தில்‌ ஒன்றிய அரசால்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வக்‌ஃப்‌ சட்டத்‌ திருத்த மசோதா இஸ்லாமிய சமூகத்தின்‌ உரிமைகளைப்‌ பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள்‌ எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்‌ஃப்‌ சட்டத்‌ திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்று வலியுறுத்தி இஸ்லாமியர்‌ உரிமைத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

23. நீட்‌ தேர்வால்‌ தமிழ்நாட்டில்‌ இருக்கும்‌ மாணவ மாணவிகள்‌, குறிப்பாக, கிராமப்புறங்களில்‌ இருக்கும்‌ ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ பட்டியலின வகுப்பினைச்‌ சேர்ந்த மாணவ – மாணவிகள்‌ அனைவருமே மிகவும்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. நீட்‌ தேர்வு விலக்குப்‌ பிரச்சினைக்கு நிரந்தரத்‌ தீர்வு காண, கல்வியைப்‌ பொதுப்‌ பட்டியலில்‌ இருந்து மாநிலப்‌ பட்டியலுக்குக்‌ கொண்டு வர வேண்டும்‌ என்று கோரி நீட்‌ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

24. ஆளும்‌ அரசுகள்‌ மேற்கொள்ளும்‌ மக்கள்‌ நலன்‌ சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும்‌ ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக்‌ கருதுகிறோம்‌. தமிழ்நாட்டிற்கும்‌ தமிழினத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ மாபெரும்‌ பங்காற்றியவர்களைப்‌ பெருமைப்படுத்திடும்‌ வகையில்‌ தமிழக அரசு ஆண்டுதோறும்‌ ‘தகைசால்‌ தமிழர்‌ விருது’ வழங்குகிறது. இதனை பாராட்டும் வகையில் தகைசால்‌ தமிழர்‌ விருது வழங்கும்‌ அரசை வரவேற்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

25. தமிழகத்தில்‌ தூத்துக்குடி மாவட்டம்‌ குலசேகர பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட்‌ ஏவுதளம்‌ சுமார்‌ 2,376 எக்கர்‌ நிலப்‌ பரப்பளவில்‌ அமைக்க உள்ளது. பெரும்‌ வேலை வாய்ப்புகளை வழங்கும்‌ வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ராக்கெட்‌ ஏவுதளம்‌ அமைக்கும்‌ திட்டத்தை வரவேற்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம்.

26. நமது தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ மீது தீராப்‌ பற்றுடன்‌, கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள்‌ சிலர்‌ அண்மையில்‌ மறைந்த நிகழ்வுகள்‌, அதிர்ச்சியும்‌ வேதனையும்‌ அளிக்கின்றன. இயக்கத்திற்காகவும்‌ கழகத்திற்காகவும்‌ நீண்ட காலமாகப்‌ பணியாற்றி, உடல்நலக்‌ குறைவால்‌ திடீரெனக்‌ காலமான புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன்‌ மற்றும்‌ மாநாட்டில்‌ பங்கேற்க வரும்‌ போது, எதிர்பாராமல்‌ நிகழ்ந்த சாலை விபத்துகளில்‌ உயிரிழந்த சீனிவாசன்‌, விஜய்கலை, வசந்தகுமார்‌, ரியாஸ்‌, உதயகுமார்‌ மற்றும்‌ சார்லஸ்‌ ஆகியோர்‌ மறைவை கட்சி வரலாற்றில்‌ என்றென்றும்‌ நிலைத்திருக்கும்‌ வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.

 

 

https://minnambalam.com/political-news/26-resolutions-passed-by-the-tvk-executive-committee/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, island said:

அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள். 

புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு....
இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ பையித்திய‌ம் ம‌று ப‌டியும் வ‌ந்து விட்ட‌தா

சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கலியாணமே நின்று போகும் என்ற கருத்துடையோருக்கு விஜயலட்சுமியும் ஒரு ஆயுதம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு....
இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.

காட்டிக் கொடுத்து அழிக்க புலிகள் என்ன பத்து பதினைந்து பேராக கெரில்லா போரா நடத்திக்கொண்டிருந்தார்கள்.  

வென்றால் எனது வீரம். தோற்றால் ஐயோ அவனால தான் தோற்றேன் என்று புலம்பல்.  இது  என்னப்பா சின்னப்பிள்ளை சண்டையா?  புலிகள் என்றுமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இது தான் உண்மையில் புலிகளை கொச்சைப்படுத்தும் செயல். 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

26 தீர்மானங்களும் தீர்மானங்களாகவே இருப்பது ஆறுதலான ஒரு விடயம். இதில் எதுவுமே போராட்டமாக இல்லாதது தவெக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அவரவர் சொந்த வேலையை முடிக்க உதவியாக இருக்கும்.............. இன்று 69வது படத்தின் ஷீட்டிங் ஆரம்பிக்கின்றது..........

மீனவர் பிரச்சனை அவ்வளவு கஷ்டமான ஒரு கேள்வியா........ இவர்கள் எல்லோருமே நூறுக்கு சைபர் வாங்குகின்றார்களே......... 

  • கருத்துக்கள உறவுகள்

 

விஜேய்....... அண்ண‌ன் சீமான் வீடு தேடி வ‌ந்து ப‌ல‌ வாட்டி ஆலோச‌னை கேட்டார்.....................

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு....
இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.

புலிகள் வலிமையோடு இருந்தபோது அவர்கள் இல்லாதுவிட்டால் எல்லாம் தருவர் சிங்களவர்கள் என்ற கோஷ்டி இது. இன்று என்ன கிழிக்குது என்றால் கச்சையை யும் கழட்டி ஜேவிபி யிடம் கொடுத்தால் மட்டுமே எல்லாம் கிடைக்கும் தருவர் என்கிறது. தமிழரை ஒன்றுமில்லாமல் உரிச்சு விடும் பணி முடிவுற வேண்டும் அல்லவா. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

புலிகள் வலிமையோடு இருந்தபோது அவர்கள் இல்லாதுவிட்டால் எல்லாம் தருவர் சிங்களவர்கள் என்ற கோஷ்டி இது. இன்று என்ன கிழிக்குது என்றால் கச்சையை யும் கழட்டி ஜேவிபி யிடம் கொடுத்தால் மட்டுமே எல்லாம் கிடைக்கும் தருவர் என்கிறது. தமிழரை ஒன்றுமில்லாமல் உரிச்சு விடும் பணி முடிவுற வேண்டும் அல்லவா. 

நேரடியாக நேர்மையாக கருத்தியல் ரீதியில் எதிர்கருத்து வைக்க திராணியற்ற கோழைகள் இப்படித்தான் பின்புறமாக  புரளியை கிளப்பி குளிர்காய்வது  வாடிக்கை. அவ்வளவு ரோஷம் இருந்தால்  நேரடியாக தாயகம் சென்று எதிர்ததுப் போராடுவது தானே. அதை விடுத்து, குடும்பத்துடன்  ஜாலியாக வாழ்ந்து கொண்டு  அடுத்தவன் பிள்ளையை தூண்டிவிட்டு தாம் அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கோஷ்டி தானே.  இப்போது வியாபாரம் கொஞ்சம்  மந்தம் போல, அதனால உசுப்பேத்தி வியாபாரத்தை தொடர முயற்சி செய்யும் கோஷ்டி இப்படி தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

எதற்காக தமிழ்த்தேசிய முகமூடி தேவைப்படுகிறது

நேற்று வரை விஜையை இன்னொரு தமிழ் தேசிய சக்தி என வரவேற்ற நீங்கள், நேற்றைய சீமானின் பேச்சுக்கு பின் நிலை மாறுகிறிர்கள்? 

ஏன்? சீமான் விசுவாசமா? 

விஜையை ஏன் முகமூடி என்கிறீர்கள். என்னை போல் அவரும் இரெண்டிலும் அதிக வேறுபாடு காணாத, இரெண்டிலும் பல நன்மைகள் இருப்பதை உணரும் ஒருவராக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, island said:

நேரடியாக நேர்மையாக கருத்தியல் ரீதியில் எதிர்கருத்து வைக்க திராணியற்ற கோழைகள் இப்படித்தான் பின்புறமாக  புரளியை கிளப்பி குளிர்காய்வது  வாடிக்கை. அவ்வளவு ரோஷம் இருந்தால்  நேரடியாக தாயகம் சென்று எதிர்ததுப் போராடுவது தானே. அதை விடுத்து, குடும்பத்துடன்  ஜாலியாக வாழ்ந்து கொண்டு  அடுத்தவன் பிள்ளையை தூண்டிவிட்டு தாம் அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கோஷ்டி தானே.  இப்போது வியாபாரம் கொஞ்சம்  மந்தம் போல, அதனால உசுப்பேத்தி வியாபாரத்தை தொடர முயற்சி செய்யும் கோஷ்டி இப்படி தான் இருக்கும். 

யாழில் த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் இருக்க‌ கூடாது என்று நிர்வாக‌ம்

தொட‌ர்ந்து க‌ள‌ உற‌வுக‌ளுக்கு சொல்லி இருக்கின‌ம்

இது முற்றிலும் த‌னிப‌ர் தாக்குத‌ல்......................

இப்போது உள்ள‌ சூழ‌லில் யாரும் ஆயுத‌த்தை தூக்குங்கோ என்று சொன்ன‌தும் கிடையாது.................ப‌ப்பா ம‌ர‌த்தில் ஏற்றி விட்டு கூத்து பார்த்த‌தும் கிடையாது

 

இல‌ங்கையே வ‌றுமைப் ப‌ட்ட‌ நாடாக‌ மாறி இருந்த‌ போதேல்லாம் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் சரி முன்னாள் போராளிக‌ளுக்கும் ச‌ரி உத‌வி க‌ர‌ம் நீட்டின‌தே புல‌ம்பெய‌ர் தேச‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ள் தான்..............................இப்போதைக்கு அறிவுள்ள‌ யாரும் இன்னொரு போரை விரும்ப‌ மாட்டின‌ம் ஈழ‌ நில‌ம்ப‌ர‌ப்பில் வாழும் ம‌க்க‌ள் நின்ம‌தியாக‌ வாழ‌ட்டும் என்று தான் சொல்லுகின‌ம்.....................

 

ம‌றுப‌டியும் சிங்க‌ள‌வ‌ர் இன‌ க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கினால் அத‌ற்க்கு ப‌தில் வேறு மாதிரி இருக்கும்...................இன‌ க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கி இரு த‌ர‌ப்பின‌ரும் இழ‌ந்த‌வை ப‌ல‌ என்று சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் ந‌ங்கு  தெரியும் இப்ப‌ ஆட்சி செய்யும் அனுராவுக்கும் தெரியும்

 

நீங்க‌ள் தான் யாழில் தேவை இல்லாம‌ கோல் மூட்டும் செய‌லில் இற‌ங்கி தொட‌ர்ந்து புலிக‌ள் மீதான‌ வ‌ன்ம‌ம் ம‌ற்றும் சீமானை கேலியும் கிண்ட‌லும் செய்வ‌து..........................இது சில‌ரை வெறுப்ப‌டைய‌ செய்யும்👎😉.......................................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

விஜயகாந் போல ஏன் தனித்து நின்று தன் பலத்தைக்காட்டிவிட்டு பின்பு கூட்டணிபற்றி பேசலாமே. அதுவும் விஜயகாந்தை விட உச்ச நடிகர். மதற்தடைலையிலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். அது மிகவும்சவாலானதுதான் அதிமுக தன்தலைமைவிட்டுக் கீழிறங்காது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாயின் அதிமுகவே  4ட்டணியின் தலைமை அணியாக இருக்கும். விஜய் தன் பலததை நிரூபிக்கும் வரை  இதுதான நிலைமை. வேண்டுமானால் இன்னுமொரு மக்கள் நலக் கூட்டணியாக அல்லு சில்லு கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்கலாம். அது எந்த அளவுக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என்பது சொல்ல முடியாது.

விஜயகாத் அப்படி சொல்லி, பின் கூட்டணி வைத்து - நம்பகதன்மை இழந்தார்.

சீமான் அப்படி சொல்லி விட்டு - 8% வாக்கு வங்கி இருந்தும் ஆம்மஞ்சல்லிக்கு பயனற்ற, தன் சுய செல்வாக்கை, செல்வத்தை மட்டும் உயர்த்தும் அரசியல் செய்கிறார்.

இருவரில் இருந்தும் பாடம் படித்த விஜை - ஆரம்பக்திலேயே கொள்கை உடன்பாடு உள்ளோரோடு கூட்டணி என்கிறார் என நினைக்கிறேன்.

உண்மையில் விஜை அதிமுகவோடு, காங்கிரசையும் சேர்த்து 45%+45+10% சீட்டுகளை பங்கிட்டு ஒரு உடன்படிக்கை செய்தாலே போதும்.

அடுத்த தேர்தலில் கணிசமான இடத்தை பெறலாம்.

இது அதிகாரத்தை அடையும் கணக்கு. இதில் கொள்கை அடிப்படையில் எதிர்க்க எதுவும் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நேற்று வரை விஜையை இன்னொரு தமிழ் தேசிய சக்தி என வரவேற்ற நீங்கள், நேற்றைய சீமானின் பேச்சுக்கு பின் நிலை மாறுகிறிர்கள்? 

சீமான் கருத்துத் தெரிவிக்க முதலே கருத்துத் தெரிவித்து விட்டேன். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்று 2 தோணிகளில் கால்வைப்பது பிழை என்று. சீமானுக்காக கொள்கைகளை மாற்ற முடியாது. நாளை சீமான் தடம்மாறினால் அவரும் விமர்சிக்கப் படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நேற்று வரை விஜையை இன்னொரு தமிழ் தேசிய சக்தி என வரவேற்ற நீங்கள், நேற்றைய சீமானின் பேச்சுக்கு பின் நிலை மாறுகிறிர்கள்? 

ஏன்? சீமான் விசுவாசமா? 

விஜையை ஏன் முகமூடி என்கிறீர்கள். என்னை போல் அவரும் இரெண்டிலும் அதிக வேறுபாடு காணாத, இரெண்டிலும் பல நன்மைகள் இருப்பதை உணரும் ஒருவராக இருக்கலாம்.

வ‌ன்னி அர‌சு 2009 இறுதி போரின் போது விஜேயை ம‌ற்றும் விஜேன்ட‌ அப்பாவை தொட‌வு கொண்ட‌ போது அவ‌ர்க‌ள் சொன்ன‌ ப‌தில் 15வ‌ருட‌ம் க‌ழித்து இப்போது தான் இணைய‌த்தில் வ‌ந்து இருக்கு...................அதை பார்த்த‌தும் விஜேய் ம‌ற்றும் விஜேன்ட‌ அப்பா மேல் அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம்

 

இந்த‌க் கோமாளிய‌ போய் ஈழ‌த்து ம‌ரும‌க‌ன் என்று சொன்ன‌ எல்லாரும் வெக்கி த‌லை குனிய‌னும் நான் தொட்டு 😉.....................நான் நினைக்கிறேன் விஜேன்ட‌ ப‌ர‌ம்ப‌ரை அந்த‌க் கால‌ம் தொட்டு எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ் கூட‌ ந‌ல்ல‌ இன‌க்க‌ம் போல் தெரியுது😡.................................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

யாழில் த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் இருக்க‌ கூடாது என்று நிர்வாக‌ம்

தொட‌ர்ந்து க‌ள‌ உற‌வுக‌ளுக்கு சொல்லி இருக்கின‌ம்

இது முற்றிலும் த‌னிப‌ர் தாக்குத‌ல்......................

இப்போது உள்ள‌ சூழ‌லில் யாரும் ஆயுத‌த்தை தூக்குங்கோ என்று சொன்ன‌தும் கிடையாது.................ப‌ப்பா ம‌ர‌த்தில் ஏற்றி விட்டு கூத்து பார்த்த‌தும் கிடையாது

 

இல‌ங்கையே வ‌றுமைப் ப‌ட்ட‌ நாடாக‌ மாறி இருந்த‌ போதேல்லாம் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் சரி முன்னாள் போராளிக‌ளுக்கும் ச‌ரி உத‌வி க‌ர‌ம் நீட்டின‌தே புல‌ம்பெய‌ர் தேச‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ள் தான்..............................இப்போதைக்கு அறிவுள்ள‌ யாரும் இன்னொரு போரை விரும்ப‌ மாட்டின‌ம் ஈழ‌ நில‌ம்ப‌ர‌ப்பில் வாழும் ம‌க்க‌ள் நின்ம‌தியாக‌ வாழ‌ட்டும் என்று தான் சொல்லுகின‌ம்.....................

 

ம‌றுப‌டியும் சிங்க‌ள‌வ‌ர் இன‌ க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கினால் அத‌ற்க்கு ப‌தில் வேறு மாதிரி இருக்கும்...................இன‌ க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கி இரு த‌ர‌ப்பின‌ரும் இழ‌ந்த‌வை ப‌ல‌ என்று சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் ந‌ங்கு  தெரியும் இப்ப‌ ஆட்சி செய்யும் அனுராவுக்கும் தெரியும்

 

நீங்க‌ள் தான் யாழில் தேவை இல்லாம‌ கோல் மூட்டும் செய‌லில் இற‌ங்கி தொட‌ர்ந்து புலிக‌ள் மீதான‌ வ‌ன்ம‌ம் ம‌ற்றும் சீமானை கேலியும் கிண்ட‌லும் செய்வ‌து..........................இது சில‌ரை வெறுப்ப‌டைய‌ செய்யும்👎😉.......................................

வீரப்பையன், தனி மனித தாக்குதலை ஒன்றிற்கு பல முறை பல திரிகளில்  உங்கள் நண்பர்கள் செய்யும் போது வரவேற்ற நீங்கள் அவர்களுக்கு இந்த அறிவுரையை கூறிவிட்டு இங்கே வாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உண்மையில் விஜை அதிமுகவோடு, காங்கிரசையும் சேர்த்து 45%+45+10% சீட்டுகளை பங்கிட்டு ஒரு உடன்படிக்கை செய்தாலே போதும்.

அடுத்த தேர்தலில் கணிசமான இடத்தை பெறலாம்.

இது சரியான கணக்குத்தான் ஆனால் அதிமுக விஜயக்கு 50 50 சீற் கொடுக்க முன்வருமா? அதிமுக தலைமையில்தான் 4ட்டணி அமையும. இப்படியான ஒரு கட்சிக்கு எந்தக் கொள்கையும் தேவையில்லை.கிட்டத்தட்ட சரத்குமார்கட்சிமாதிரி இருந்தாலே போதுமானது.கொள்கைத்திட்டங்கள் எதுவும் தேவையில்லை.
மாநாட்டில்பல லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தீர்மானங்களை நிறைசவற்றாமல் 4 சுவருக்குள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறரர்கள். கஇழத்தமிழர் பிரச்சினை முpனவர் பிரச்சினை போன்றவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இது எல்லாம் மாநாட்டின் பின்னரான அரசியல் விர்சனங்களில் இருந்து கற்றுக் கொண்டது. மேலும் காவிரி நீர் தொடர்பாக கப்சிப்>முல்லைப் பெரியாறு விடயம் கப்சிப் இப்ப பேசினால் அவருடைய படங்களளைத் திரையிட விடமாட்டார்கள். சீமானின் எதிர்வினைக்கு மெளனம். அரசியல்களத்திற்கு வந்து விட்டால் பதிலடி கொடுக்க வேண்டும். பயப்படறியா குமாரு. இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

நாங்கள் திராவிடர்களை எதிர்ப்பது பிழை என்றால் எதற்காக பிராமணர்களை எதிர்க்க வேண்டும். அவர்களும் திராவிடர்களைப் போல நீண்ட காலமாக தமிழ்மண்ணில் வசிப்பவர்கள்தானே. பாராதியார் ஒரு பிராமணர் அவர் தமிழுக்கு செய்த கரணாநிதி செய்து விட்டார். தென்கிழக்காசிவை ஒரே குடைக்கீழ் அண்ட ராஜராஜ சோழனுக்குச் சிலை இல்லை. காமராஜர்>கக்கனுக்குச் சிலை இல்லை.ஆனால் மெரினா பீச இன்று திராவிடச் சுடுகாடாகி இருக்கிறது.

எதிர்ப்பு பார்பனியம், வர்ணாசிரமம் அதன் வழிவந்த கொள்கைகளுக்கே ஒழிய பிராமண தனி நபர்களுக்கு, கூட்டத்துக்கு அல்ல.

மேலே நான் பார்பனியம் என குறிப்பிட்ட இன மேலாண்மைவாத racial supremacy கொள்கையின் இன்னொரு பெயர்தான் ஹிந்துதுவா, சனாதனம்.

இந்த சனாதனக்கு எதிராக அடக்கபடும் மக்களிடம் இருந்து எழுந்தவைதான் அம்பேத்கரின் தலித்தியமும், பெரியாரின் திராவிடமும்.

பார்பனியமும், தலித்தியமும், திராவிடமும் ஒத்த கொள்கைகள் அல்ல.

பார்பனியம் அடிப்படையிலேயே மனித குல விரோதமானது.

ஆனால் திராவிடமும், தலித்தியமும் மனித குல முன்நோக்குக்கானது.

திராவிடத்தை சிலர் கைகொண்டு கொள்ளை அடிப்பதால், ஹைஜாக் பண்ணி அரசியல் இலாபம் அடைவதால், அது பார்பனியம் போல ஒரு மோசமான தத்துவம் என கூற முடியாது.

பெரியார் பார்பனியத்யை எதிர்த்தார். பார்பனிய சாதி, தனி நபர்களை அல்ல.

சீமான் எதிர்ப்பது தெலுங்கு வம்சாவழியினரை, தனி நபரை.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

வீரப்பையன், தனி மனித தாக்குதலை ஒன்றிற்கு பல முறை பல திரிகளில்  உங்கள் நண்பர்கள் செய்யும் போது வரவேற்ற நீங்கள் அவர்களுக்கு இந்த அறிவுரையை கூறிவிட்டு இங்கே வாருங்கள். 

ச‌க‌ ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌னுக்கு நான் சொன்னான் ந‌ண்பா க‌ட‌ந்து செல்லுங்கோ இது தேவை இல்லை என்று அத‌ற்க்கு பிற‌க்கு அவ‌ர் இதுக்கை எழுதின‌து கிடையாது

எப்போதும் த‌மிழ‌னின் கோவ‌ம் நீங்க‌ள் எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளை த‌லைவ‌ரை கொச்சைப் ப‌டுத்திய‌தால் தான் அவ‌ர் த‌டிச்ச‌ வார்த்தையில் எழுதினார்..........................

10 minutes ago, island said:

வீரப்பையன், தனி மனித தாக்குதலை ஒன்றிற்கு பல முறை பல திரிகளில்  உங்கள் நண்பர்கள் செய்யும் போது வரவேற்ற நீங்கள் அவர்களுக்கு இந்த அறிவுரையை கூறிவிட்டு இங்கே வாருங்கள். 

என் த‌லைவ‌ரை ப‌ற்றி யார் தப்பா க‌தைச்சாலும் அந்த‌ ம‌னுஷ‌ன்ட‌ தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தினாலும் யார் என்றும் கூட‌ பார்க்க‌ மாட்டேன் வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ அள‌விக்கு த‌குந்த‌ பாட‌ம் புக‌ட்டுவேன்..................

இல்லாத‌ த‌லைவ‌ரை உயிருட‌ன் இருக்கிறார் என்று சொல்லும் கூட்ட‌த்தை தான் நான் சொல்ல‌ வ‌ருவ‌து..............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.