Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்று சனிக்கிழமை (02) சென்றிருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நான் மக்கள் நலனில் இருந்தே செயற்பட்டு வருகின்றேன். ஆனால் அன்று எமது தமிழ் அரசியல் முன்னோர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து மேடைகளில் முழங்கி தேர்தல் வெற்றிகளை பெற்று நாடாளுமன்றை அலங்கரித்தினர். 

ஆனால் அவர்கள் தாம் முன்வைத்த விடயத்த்தின் இலக்கை அடையச் செய்வதற்கான பொறிமுறையை துளியளவும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்றுதான் அவர்கள் வழி வந்து போலித் தேசியம் பேசும் இன்றைய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் பொறிமுறையற்றதாக இருக்கின்றது.

நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க 23 ஆசனங்களை கேட்கவில்லை. குறைந்தது 4 முதல் 5 ஆசனங்களையே எனக்க தாருங்கள் என கோருகின்றேன்

அதுமட்டுமல்லாது நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல, தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். எனது மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது

அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை வலுவானது. நடைமுறை சாத்தியமான வழிநடத்தல் எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுவாக்கப்பட்டுவிட்டது.

இதேநேரம் நான் அரசியல் பயத்தால் அல்லது தோற்கடிக்கப்பட்டு விடுவேன் என்ற பயத்தால் ஒருபோதும் ஒதுங்கவும் போவதில்லை.

எமது கொள்கையின் மீது எமக்கிருக்கின்ற பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். எமது இந்த வலுவான கொள்கையை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒருசிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதேநேரம் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20241102-WA0060.jpg

IMG-20241102-WA0058.jpg

https://www.virakesari.lk/article/197738

  • கருத்துக்கள உறவுகள்

அய்யாவும் ...இப்ப இல்லாத ஒன்றுகுத்தான் கற்பனையில் மிதக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அதுமட்டுமல்லாது நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல, தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். எனது மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது

காட்டிக் கொடுத்து

கூட்டிக் கொடுத்து

பத்திரிகையாளர்களில் இருந்து பலரைக கொலை செய்து தான் இன்றுவரை அரசியல் நடக்கிறது.

பழைய கோப்புகளை கிழறாமல் இருக்க வேண்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி பெற்று ஆசனத்தில் அமர்ந்ததும் பேட்டிகளின்போது ஒருபக்கமா சரிந்துகொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தபடி ,

’'’பிரபாகரன் என்னை கொல்லபாத்தார் அவர் கனவிலும் நினைச்சிருக்கமாட்டார் நான் இருப்பேன் அவர் சாவார் எண்டு’’, 

‘’புலிகளுக்கும் முள்ளி வாய்க்கால் நினைவுகளுக்கும் பல்கலை கழக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட கூடாது”

புலிகளால் எமது இனம் அழிவைமட்டுமே சந்தித்தது என்கிறமாதிரி சொல்லுவீங்களே இந்த தேர்தல் நேரம் அதை எல்லாம் பேசி தமிழர்களிடம் வாக்கு கேக்கலாமே, எதுக்கு  அதுபற்றி ஒண்டும் பேசாமல் ஒரு ஆறு ஆசனம் எண்டாலும் தாங்கோ எண்டு அழுகிறீர்கள்?

பதவியிருக்கும்போது  சிங்களவர்கள்  கழுத்திலிருந்து தமிழர்களை பார்த்து  கருடா சவுக்கியமா என்று கேட்பது , பதவி பறிபோனதும் மறுபடியும் தமிழர்களிட்டையே வந்து அழுவது.

மூன்று தசாப்தங்களாக சிங்களவர்கள் தயவில் தமிழர்களை அதட்டி வாழ்ந்தீர்களே, அதே சிங்களவர்களின் கட்சி ஒன்றில் இணைந்து சிங்கள பகுதியொன்றில் நின்று வென்று காட்டுங்கள் அப்போ தெரியும் நீங்கள் காட்டிய சிங்கள எஜமானர்களின் விசுவாசத்துக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் ஒரு எலும்பு துண்டாவது உங்களுக்கு போடுவார்களா என்று.

இந்த பொது தேர்தலில் தமிழர் பகுதியில் யார் வென்றாலும் பரவாயில்லை, காலம் காலமாக தமிழ்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எம்மண்ணிலிருந்து அடியோடு களையப்பட்டு புதியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகி நேர்மையுடன் இவர்கள் கண்முன்னாலேயே நடமாடினால் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இதேநேரம் நான் அரசியல் பயத்தால் அல்லது தோற்கடிக்கப்பட்டு விடுவேன் என்ற பயத்தால் ஒருபோதும் ஒதுங்கவும் போவதில்லை.

அங்கு நிற்கிறார் செயலாளர் நாயகம்! அதிலிருந்தால், தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பி விடலாமென கனவு காண்கிறார். சாதாரண மக்களுக்கு அளிக்கும் தண்டனைகளை விட, அரசியல் வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு அதிக பட்ஷ தண்டனை அளிக்கப்படவேண்டும். மக்களின் பிரதிநிதிகள் அவர்களை நல்ல வழியில் நடத்த வேண்டியவர்கள். பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றுவதும், கொலை, கொள்ளை நடத்துவதும் அரசியலில் முன்னிலையில் அமரும் திருடர்களை வாழ்நாள் சிறையில் அடைக்க வேண்டும். தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு தேர்தலின்போது ஒதுங்கப்போவதில்லை மக்களுக்கு சேவை. இவர் மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவர் என்ன சொல்வது? மக்களே தேர்ந்தெடுத்து அனுப்புவார்களே! இவர் ஏன் கெஞ்சுகிறார்? எத்தனை அடிஉயர  கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும், காசு வாங்க தரைக்கு இறங்கி வந்தே ஆகவேண்டும்.பாராளுமன்ற கதிரை அலங்கரிக்க மக்கள் ஆணை கொடுத்தால் மட்டுமே கிட்டும்.

9 hours ago, ஏராளன் said:

மக்களுடன் தொடர்ச்சியாகவாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர்

வேறெங்கு இவர்களின் பருப்பு வேகும்? மக்களுடன் இருந்தாற்தான் அவர்களை சுரண்டி வாழலாம், கொலை செய்தி கூலி பெறலாம். இதைவிட இவருக்கு வேறென்ன தெரியும்?

9 hours ago, ஏராளன் said:

அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை வலுவானது. நடைமுறை சாத்தியமான வழிநடத்தல் எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுவாக்கப்பட்டுவிட்டது.

இதைத்தான் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் கேட்பதுமில்லை. இவரால் அதை செயற்படுத்துவிக்கவும் முடியவில்லை. தேர்தல் காலங்களில் இதுதான் அவரது பிரச்சாரம். மக்களின் நலனுக்காக அரசியல் செய்பவர், அவர்களின் நலனுக்காக  செய்த நன்மைகளையும்  கொஞ்சம் எடுத்து விடலாமே? போன ஆசனத்துக்கு ஒன்றும் சாதிக்காதவர், வாழ்நாளில் எதையும் செய்யப்போவதில்லை. சிறியதில் நம்பிக்கையற்றவன் பெரியதிலும் நம்பிக்கையற்றவனே.

9 hours ago, ஏராளன் said:

எமது கொள்கையின் மீது எமக்கிருக்கின்ற பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். எமது இந்த வலுவான கொள்கையை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

அது என்ன கொள்கை? புளித்துப்போன, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி  என்பதா? அங்கால ஒருவர் வேறொரு பல்லவி. இவர்களெல்லாம் தேர்தல் கால திருடர். அயோக்கியர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க 23 ஆசனங்களை கேட்கவில்லை.

உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஆனால் நீங்கள் அதைவிட வேறொன்றும் மாற்றி செய்யவில்லையே? அப்படியென்றால் உங்கள் சாதனையை சுட்டிக்காட்டியிருக்கலாமே? இனிமேலும் அலங்கரிக்கிற கனவோடு பாராளுமன்றம் போகாலாமென்கிற கனவோடு இருந்தீர்களானால்; அது தவறு. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன வேலை தெரியும்? முன்னைய வேலையெல்லாம் செய்ய முடியாது. கம்பிதான் எண்ண வேண்டும் முன்னைய பாக்கியையும் சேர்த்து. அப்படி ஒரு திறமை இருந்திருந்தால்; ஏன் இந்த ஏமாற்று வேலைக்கு போட்டியிடுகிறீர்கள்? அத்தோடு உங்களுக்கு கதிரையில் சரியாக உட்கார முடியவில்லை, எழுந்து நின்று பேச முடியவில்லை, காரில்லாமல் நடந்து செல்லவும் முடியாது, நாய் கலைத்தால் ஓடவும் இயலாது. பேசாமல் சொன்னது போல் ஓய்வெடுப்பதே உங்களுக்கு நல்லது. இவர் போன்றவர்கள் தேர்தல் மேடையில் நின்று மற்ற அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போது, கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள், மேடையில் ஊர் வம்பு பேசவேண்டாம், நீ என்ன செய்தாய் எங்களுக்கு? அதை சொல்லு, இனிமேல் பாராளுமன்றம் போய் என்ன சாதிக்கப்போறாய்? அதை சொல்லு கேட்க்கிறோம், அப்படியேதும் இல்லையானால் நாங்கள் போகிறோமென எழுந்து சென்று விடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பனை அபிவிருத்திச் சபையின் தலவரி ன்  பேட்டி ஒன்று ஒ டுது ..  அதில் அய்யாவின் லீலைகள் சொல்லிமாளாது...சிறியர் அதை ஒருக்கால் இதிலை கொழுவி விடுங்கோ..விடுப்புக் கேட்க நல்லயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

காட்டிக் கொடுத்து

கூட்டிக் கொடுத்து

பத்திரிகையாளர்களில் இருந்து பலரைக கொலை செய்து தான் இன்றுவரை அரசியல் நடக்கிறது.

பழைய கோப்புகளை கிழறாமல் இருக்க வேண்டுங்கள்.

இவர் புலிகளின் ஆயுதபலம் இருக்கும்வரை மத்தியில் கூட்டு, மாநிலத்தில் சுயமென்று பாடித்திரிந்தவிட்டு புலிகள் இல்லாத இந்தப் பதினைந்து ஆண்டுகளில் இப்போ தேர்தல்காலத்தில் மீண்டும் உளறுகிறார். இந்தியாவே இவரது வழக்குகளைக் கணக்கிலெடுக்கவில்லை. இலங்கையரசு, அனுர அரசு சிங்களர் அரசு, தமிழரைத் துன்புறுத்திய தமிழரைத் தண்டிக்குமா? அரவணைக்குமா?
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, alvayan said:

புதிய பனை அபிவிருத்திச் சபையின் தலவரி ன்  பேட்டி ஒன்று ஒ டுது ..  அதில் அய்யாவின் லீலைகள் சொல்லிமாளாது...சிறியர் அதை ஒருக்கால் இதிலை கொழுவி விடுங்கோ..விடுப்புக் கேட்க நல்லயிருக்கும்

அல்வாயன்... இந்தக் காணொளியையா சொன்னீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்... இந்தக் காணொளியையா சொன்னீர்கள். 

நன்றி சிறியர் ..இதேதான்...தெளிவான பேச்சு...எப்படி ..இப்படி யென்ற்று ..விளங்கவில்லை...குத்தியரை கிழித்து தொங்க விடுகிறார்... ஏ.கே.டி  பெயின்டோ தெரியாது...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.