Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

(எம்.மனோசித்ரா) 

பணம் அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.  

வரிசை யுகம் உருவாகும். இதனை முன்னரே அறிந்ததால் தான் ஒன்றரை ஆண்டுகளில் முடியாவிட்டால் விட்டுச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

களுத்துறையில் இன்று செவ்வாய்கிழமை (05)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது இலங்கை மாத்திரமே.  

அதற்குரிய பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தையே சேரும். எவ்வாறிருப்பினும் அதனை மக்கள் மறந்து விட்டனர்.

தற்போது யார் வேண்டுமானாலும் நாட்டை நிர்வகித்துச் செல்லலாம் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது தவறாகும். இதனை நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம்.  

எனினும் 42 சதவீத மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

செப்டெம்பர் 19ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் அவ்வாறே கையெழுத்திடப்படுகிறது. 

தற்போது நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 14ஆம் திகதியாகும் போது மக்கள் படிப்படியாக இதை உணர்ந்து கொள்வார்கள்.

நாணய நிதியம் குறிப்பிட்டுள்ள இலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த அறிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லை. 

எனவே தான் 98 000 கோடி கடன் பெற்றுள்ளனர். ஒருபோதும் பிணைமுறி கடன் பெறப் போவதில்லை எனக் கூறியவர்கள் தான் இந்தளவு கடனைப் பெற்றிருக்கின்றனர். 

கடன் பெற்று நாட்டை நிர்வகிப்பதென்றால் அரசாங்கம் எதற்கு எனக் கேட்டனர். தற்போது அதையும் இவர்கள் செய்கின்றனர்.

பணம்அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். 

வரிசை யுகம் உருவாகும். இதனை முன்கூட்டியே கணித்ததன் காரணமாகவே ஒன்றரை ஆண்டுகளுக்கு இதனை செய்வதாகவும், முடியாவிட்டால் விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் அதைக் கூறினாலும் அவரது சகாக்கள் அதனை விரும்பவில்லை.

தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும் என்று நிபுனாராச்சி கூறுகின்றார். கடந்த ஆட்சி காலங்களில் தொழிற்சங்கங்களை வீதிக்கிறக்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இவர்கள் தற்போது தமது தேவை நிறைவேறிய பின்னர் அவற்றைக் கலைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

மறுபுறம் ஜனாதிபதி மற்றும் ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று பயந்து ஓடாமல் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்பதே இவர்களது கொள்கையாகவுள்ளது. 

தற்போது கிடைத்துள்ள அனைத்தையும் இழக்கும் போது தான் மக்களுக்கு எமது ஆட்சியில் கிடைத்தவற்றின் பெறுமதி புரியும் என்றார்.

https://www.virakesari.lk/article/197958

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன

அதை அப்ப நாங்கள் பாத்துக்கொள்ளுறம், இப்ப நீங்க நடையக் கட்டுங்க!

இவருக்கும் இந்தமுறை களுத்துறையில் ஆப்பு ரெடியா இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மறுபுறம் ஜனாதிபதி மற்றும் ஹரிணி அமரசூரிய ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று பயந்து ஓடாமல் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்பதே இவர்களது கொள்கையாகவுள்ளது. 

இவருக்கு சிங்களம் புரியவில்லை என நாளைக்கு ஜெ.வி.பி யின் சந்திரசேகரம் தமிழ ஊடகங்களில் விளக்கம் கொடுப்பார்...அணுராவும்,ஹாரணியும் சொல்வதை தமிழ் ஊடகங்களும் தமிழர்களும் தப்பாக புரிந்து கொள்கின்ற்னர் என்பார்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இவருக்கு சிங்களம் புரியவில்லை என நாளைக்கு ஜெ.வி.பி யின் சந்திரசேகரம் தமிழ ஊடகங்களில் விளக்கம் கொடுப்பார்...அணுராவும்,ஹாரணியும் சொல்வதை தமிழ் ஊடகங்களும் தமிழர்களும் தப்பாக புரிந்து கொள்கின்ற்னர் என்பார்..

நீங்கள் யாழ்பாணம் ஜேவிபியின் தலைவரை தானே சொல்கின்றீர்கள் அவரது பேட்டி ஒன்று அவர்களது  பிரசார தமிழ் யுரியுப்பரின் காணொளியில் பார்த்தேன் அவர் தமிழ் கதைப்பது ஒரு மாதிரி இருந்தது 🙄

----------------------

ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினராம் ( பெயர் சொன்னார்கள் தெரியாத பெயர் என்பதால் மறந்துவிட்டது ) வெனிசுலா இல்லை கியுபா இல்லை  இலங்கையை சிங்கபூராக தாங்கள் மாற்றுவோம் என்றாராம்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் யாழ்பாணம் ஜேவிபியின் தலைவரை தானே சொல்கின்றீர்கள் அவரது பேட்டி ஒன்று அவர்களது  பிரசார தமிழ் யுரியுப்பரின் காணொளியில் பார்த்தேன் அவர் தமிழ் கதைப்பது ஒரு மாதிரி இருந்தது 🙄

----------------------

ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினராம் ( பெயர் சொன்னார்கள் தெரியாத பெயர் என்பதால் மறந்துவிட்டது ) வெனிசுலா இல்லை கியுபா இல்லை  இலங்கையை சிங்கபூராக தாங்கள் மாற்றுவோம் என்றாராம்

அவரே தான்..மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர் ...ஜெ.வி.பி யில் 84 களில் இணைந்தவர் என நினைக்கிறேன்..இவர் ஒருத்தர் தான் நீண்ட கால தமிழ் உறுப்பினர்..ஆரம்ப காலத்தில் இவரது தமிழ் புரியவே மாட்டது..தற்பொழுது ஒர்ளவு தமிழ் பேசுகின்றார் ..

சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, putthan said:

சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்

வர வர உங்களுக்கு குசும்பு அதிகமாகிறது😁,

இதனை  கூறியது இந்திய தொழிலதிபரான அருண் குமார், இலங்கையின் கேந்திர முக்க்கியத்தினால் இலங்கை தெற்கு ஆசியாவில் ஆபிரிக்க, கிழக்காசிய பொருளாதார மையங்களுக்கிடையேயான மையப்புள்ளியாக இலங்கை இந்தோ படுபிக் பிராந்தியத்தில் இரு பொருளாதார சக்திகளுக்கு இசைவான  சுவிஸ் போல ஒரு அணிசேரா அமைப்பாக இர்ந்து தனது நிலையினை உறுதிப்படுத்தவேண்டும் என கூறியிருந்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இதனை  கூறியது இந்திய தொழிலதிபரான அருண் குமார்,

இந்திய தொழிலதிபரான அருண் குமாருக்கு இலங்கை மீது அவ்வளவு அக்கறையாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய தொழிலதிபரான அருண் குமாருக்கு இலங்கை மீது அவ்வளவு அக்கறையாம் 🤣

அது நடந்தது 2018 இல், இந்தியா எப்போதும் இலங்கையின் கரிசனையினை பெற விரும்புவது வாடிக்கையான விடயம், ஆனால் இலங்கைதான் இந்தியாவினை கண்டுகொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

அது நடந்தது 2018 இல், இந்தியா எப்போதும் இலங்கையின் கரிசனையினை பெற விரும்புவது வாடிக்கையான விடயம், ஆனால் இலங்கைதான் இந்தியாவினை கண்டுகொள்வதில்லை.

இரண்டு தினங்களுக்கு முதல் ஒர் வீடியோ பார்த்தேன் அறூஸ் என்ற அரசியல் ஆய்வாளர் சொல்லியிருந்த்தார் சுவிஸ்லாந்து போல ஓர் அரசியல் கட்டமைப்பு இருந்தால் "புலம்பெயர்ஸ்"முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என கூறியிருந்தார்...அதுதான் சும்மா நக்கலுக்கு அப்படி எழுதினேன்,,

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2024 at 12:28, ஏராளன் said:

வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது இலங்கை மாத்திரமே.  

நாட்டை நேசிக்கும் ஒரு தலைவன் நாடு வங்குரோத்தடைந்திருக்கும் போது

எனக்கு 15 சமையல்காரர்

150 பாதுகாப்பு படை

5 டாக்ரர்கள்

இப்படி என்று வேண்டுகோள்களை வைப்பானா?

வீட்டில 2 அவசர ஊர்தி வேற.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, putthan said:

இரண்டு தினங்களுக்கு முதல் ஒர் வீடியோ பார்த்தேன் அறூஸ் என்ற அரசியல் ஆய்வாளர் சொல்லியிருந்த்தார் சுவிஸ்லாந்து போல ஓர் அரசியல் கட்டமைப்பு இருந்தால் "புலம்பெயர்ஸ்"முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என கூறியிருந்தார்.

நீங்கள் போர் இயல் ஆய்வாளர் அருஸ் வீடியோவை பார்த்திருக்கின்றீர்கள் 🤣  அவர் அரசியல் கட்டமைப்பு , முதலீடுகளிலும் ஆய்வாளர் போல இருக்கின்றது. தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி இவர்கள் தொல்லைகள் வேறு

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

 

சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்

அங்கை குளிர் என்டு இங்கை வந்தால் இங்கையுமா.😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.