Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

(எம்.மனோசித்ரா)

தமிழ்க் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தருணம் தேர்தல் முடிவுகளில் மாத்திரமின்றி, முழு நாட்டினதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு நினைவூட்டுகின்றன. 

மேலும் இந்த மாற்றமானது மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, நீடித்த நம்பிக்கையை உருவாக்கவும் உண்மையான நல்லிணக்கத்தை அடையவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய ஐக்கியத்தில் இலங்கை செழிக்கட்டும். மேலும் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சேவையாற்றுவர் என்று நம்புகின்றோம் என அலி சப்ரி தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/198871

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்தது போதும். வீட்டை இருந்தால் போதுமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்தது போதும். வீட்டை இருந்தால் போதுமானது. 

சத்தியமா நுணா இந்தத் தலைப்பைப் பார்த்ததும்  “இத்தினை நாளும் நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தது காணும் வீட்டை போய் இழுத்துப்போர்த்து மூடிக்கொண்டு குப்புறப்படுங்கோ” எண்டுதான் எழுத நினைச்சனான்!😂

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஈரவெங்காயமெல்லாம் அநுரவுக்கு தெரியும், நீங்கள் உங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை மட்டும் பார்த்தால் போதுமானது.

ரணிலின் ஆட்சியில், ரணில்கூட விடுதலைபுலிகள் இறுதியுத்தம் பற்றி பேசியது குறைவு, பதவியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவுக்குபோய் புலிகளை அழித்தோம் என்று பேசுவதும் இலங்கையிலிருக்கும்போது பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்று அடிக்கடி பேசுவதும், ஐநா பொறுப்புக்குறல், பயங்கரவாத தடைச்சட்டம்  என்று  பதவி துண்டுக்காக தமிழ் மக்களின் மனங்கள் பற்றி எந்த கவலையும் கொள்ளாது சிங்கள எஜமான விசுவாசத்துக்காக வன்மம் கக்கினார் மனிதன்.

அதே வாயால் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றி அதிகம் பேசியதில்லை. இன்று தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்துவிடுவார்களோ தமது இடம் பறிபோய்விடுமோ என்ற   என்ற ஒரு பயத்தில்  தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்கிறார்.

இலங்கையின் வரலாற்றில் அன்றிலிருந்து  முள்ளிவாய்க்கால் முடிவுவரை தமிழ்மக்களுக்காக இஸ்லாமிய சமூகம் கவலைப்பட்டதா வரலாறே இல்லை, மாறாக சிங்களவனுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிடுவார்கள்.

அநுர நல்லது செய்கிறாரோ கெட்டது செய்கிறாரோ, இனிமேல் உங்கள் ஆலோசனைகள் அவருக்கு தேவைப்படாத அளவிற்கு பெரும்பான்மையிலிருக்கிறார்.

தமிழ்மக்கள் நல்லிணக்கம் எல்லாம் அநுரவுக்கு  வாக்களித்த அவர்களுக்கும், வாக்கு பெற்ற அநுரவுக்குமான பிரச்சனை உங்களுக்கானதல்ல.

எவரெல்லாம் இந்த தேர்தலின் முடிவில் தூக்கியெறிய்யப்படவேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவர்களெல்லாம் ஏறக்குறைய 90% தூக்கி வெளியே வீசப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 

எவரெல்லாம் இந்த தேர்தலின் முடிவில் தூக்கியெறிய்யப்படவேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவர்களெல்லாம் ஏறக்குறைய 90% தூக்கி வெளியே வீசப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

இப்படி  அறிக்கை விட்டு அனுராவின் அமைச்சில் அமைச்சு பதவி எடுக்கலாம் என நினைக்கின்றார் போலும்...சிலசமயம் இவர் சொல்ல கூடும் அணுராவிடம் நானும் டமிழென்டா அமைச்சு பதவியை தாங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

இப்படி  அறிக்கை விட்டு அனுராவின் அமைச்சில் அமைச்சு பதவி எடுக்கலாம் என நினைக்கின்றார் போலும்...சிலசமயம் இவர் சொல்ல கூடும் அணுராவிடம் நானும் டமிழென்டா அமைச்சு பதவியை தாங்கோ..

இவரும் ..அந்த இனத்தில் சும் தான்....எல்லாம் எனக்குத்தான் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

இவரும் ..அந்த இனத்தில் சும் தான்....எல்லாம் எனக்குத்தான் தெரியும்

இந்த தடவை எங்கன்ட இனத்தின்ட பெயரில் நுழைய பார்க்கின்றார் போல....ஐ.நா நான் போய் பேசுகிறேன் என புரூடா விடபார்க்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முன் பூச்சாண்டி காட்டி தட்டிப்பறிக்க நினைத்தார்கள், அதையும் தாண்டி மக்கள் அவர்மேல் தமக்கிருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார். இப்போ தமிழருக்கு ஏதாவது கிடைத்து விடுமோ என்கிற அச்சத்தில் வந்து புத்திமதி கூறுகிறாராம். ஏதோ அனுரா இவரைக்கேட்டுத்தான் முடிவெடுப்பார் போல. கண்கெட்டபின் புலம்பத்தான் முடியும், தேடியடைய முடியாது இழந்ததை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், மக்கள், அகன்ற கதவை திறந்து அரிய கொடுத்துள்ளது. அவர் மனதை திறந்து நம்மையும் பங்காளிகளாக  அழைத்தால் நன்மைகள் நிறைவேறும். இல்லையேல் சந்திரிகா புலம்புவதுபோல், கோத்தா ஓடியதுபோல் எதுவும் நடக்கலாம். இனிமேல் இவர்கள் வாயை சாப்பிடுவதற்கு அப்பால் திறந்தால் ரொம்ப அவமானப்படுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.