Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

தேசியத்தை நேசிப்பவர்கள் மேல் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்க மாட்டார்களா என்று அலையும் கூட்டம் ஒன்று யாழ் களத்தில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் பலரும் தம்மை 💯 தூய்மைவாதிகளாக  அணல் மிதித்து நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால் 💯 தூய்மை என்பது எங்கும் எவரிடமும் இல்லாதது..

உங்கள் மொக்கைக் கருத்தைக் குப்பையில் போடுங்கள். பிழையைப் பிழையென்று கூற முடியாத தாங்கள், சரியைச் சரியென்று கூறுவதற்கும்  அருகதை இல்லாதவர். 

உங்கள் சாதி, சமய, பிதேசவாதத்தை மூடி மறைப்பதற்கு தேசியவாதம் ஒரு முகமூடி. அவ்வளவே. 

அல்வாயன் மீரா போன்றவர்களது கருத்துகளைவிட  விட தங்களின் சப்பைக்கட்டல்  மிகவும் அபாயகரமானது. 

ஒருவர் தன்னைத் தேசியவாதி என்று அறிவித்துவிட்டால் அவர் என்ன கோள்மாள் செய்தாலும் மூடி மறைப்பீர்கள். 

  • Replies 65
  • Views 6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு  அமைச்சர்  சந்திரசேகரனை  மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை.  அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத

  • இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக  யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகள

  • பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

உங்கள் மொக்கைக் கருத்தைக் குப்பையில் போடுங்கள். பிழையைப் பிழையென்று கூற முடியாத தாங்கள், சரியைச் சரியென்று கூறுவதற்கும்  அருகதை இல்லாதவர். 

உங்கள் சாதி, சமய, பிதேசவாதத்தை மூடி மறைப்பதற்கு தேசியவாதம் ஒரு முகமூடி. அவ்வளவே. 

அல்வாயன் மீரா போன்றவர்களது கருத்துகளைவிட  விட தங்களின் சப்பைக்கட்டல்  மிகவும் அபாயகரமானது. 

ஒருவர் தன்னைத் தேசியவாதி என்று அறிவித்துவிட்டால் அவர் என்ன கோள்மாள் செய்தாலும் மூடி மறைப்பீர்கள். 

நூறு வீதம் தூய்மை என்பது எங்கும் இல்லை. ஏதாவது புரியுதா? 
****

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

 

மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு  அமைச்சர்  சந்திரசேகரனை 
மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. 

அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத்தை எழுதியிருப்பார்கள். 

அவர்கள் சொல்ல வந்ததை விரிவாக சொல்லாததால்  அர்த்தம் மாறு பட்டிருக்கலாம்.
அவர்கள் சொல்லாத ஒன்றை... கற்பனை பண்ணி, அல்லது மிகைப் படுத்தி எழுதுவது 
ஏற்புடையது அல்ல.
இது களத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 

தவறான புரிதலால்.... @colomban னுக்கு ஏற்பட்ட மனவருத்தத்துக்கு... 
உண்மையிலே மிகவும் மனம் வருந்துகின்றேன். 🙏

 "a leopard never changes its spots" 
சிறுத்தைகள் தங்கள் புள்ளிகளை ஒருபோதும்  மாற்றுவதில்லை. 

மீரா அல்வாயன் எழுதியது பிழையல்ல ஆனால் கொழும்பானின் புரிதலில்தான் தவறு. 

அடங் கொய்யால,..  .🤣

*****

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

ஐயா,

உங்களை போன்றவர்கள் தாம் 

எம் இனத்தில் அதிகம்.

ஊரிலும் அதிகம் 

தமிழனை சாதி ரீதியாக

பிரதேச ரீதியாக

மத ரீதியாக

பிரித்து பார்ப்பதில்லை.

ஆனால் அல்வாவாயன் மீரா போன்றோரின் குரல்களை 

எதிர்ப்பதும் இல்லை.

எதிர்க்கப்படாத குற்றம் என்பது ஆதரிக்கப்படும் குற்றம்.

எனக் கொள்ளப்படும்

இனியாவது இப்படியான பின்னூட்டம் எனும் விடம் பரவும் போது

எதிர்த்து குரல் கொடுங்கள்.

 

 

 

யாழ் களத்தில் வலம் வருவோரிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் வைரவன்😂.

பெரும்பாலானோர் தங்கள் வாசலில் நெருப்பு வரும் வரை "நமக்கேன் வம்பு?" என்று பேசாமல் இருப்போர். இன்னும் சிலர் உண்மையிலேயே "தொனிச் செவிடர்கள்", அவர்களுக்கு வெளிப்படையாக எழுதினால் ஒழிய இந்த உள் துவேஷம் (implicit bias) எல்லாம் கேட்காத அதிர்வெண்ணில் சஞ்சரிப்பவர்கள்.

மூன்றாவது தரப்பினர் தான் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்: அவர்கள் தொனிச்செவிடரும் அல்ல, பேசா மடந்தைகளும் அல்ல. "நம்மோடு சேர்ந்து விக்கிரகத்தைச் சுமக்கிறானே?" என்ற பாசத்தில் பெயின்ற் வாளியோடு வந்து வெள்ளையடித்து விட்டுக் கடந்து போய் விடுவர்😎. இந்த மூன்றாம் தரப்பின் சொல்லும் செயலும் தான் "தமிழ் தேசியம்" என்று இவர்கள் பெயரிட்டு அழைக்கும் முட்டாள் தனத்திற்கு, கடந்த தேர்தலில் தாயகத்தில் பிடரியில் அடிவிழக் காரணம். அடுத்து வரும் உள்ளூராட்சி, (நடந்தால்) மாகாண சபைத் தேர்தல்களில் முகத்திலேயே தாயக வாக்காளர்கள் அறைந்தாலும் கூட இவையள் திருந்தாயினம். ஏனெனில் விக்கிரகம் சுமத்தல் என்பது இவர்களுக்கு புலத்தில் வியாபார வாய்ப்பு!   

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

பெரும்பாலானோர் தங்கள் வாசலில் நெருப்பு வரும் வரை "நமக்கேன் வம்பு?" என்று பேசாமல் இருப்போர்

ஒரு காலத்தில் வைரவன் போல் இருந்த நான் இப்போ கொஞ்சம், கொஞ்சமாக பேசா மடந்தை ஆகிகொண்டு வருகிறேன்🤣.

யாழ் கற்றுத்தந்த அனுபவப் பாடமே இது.

இப்போ என்னுடன் கருத்து பரிமாறும் போது மட்டும் இந்த வாதங்கள் தலையை தூக்கினால் இவற்றை சுட்டி காட்டுவது என்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளேன்.

காரணம்?

மிக எளிமையானது.

இங்கே விரல் விட்டு எண்ண கூடிய சிலரை தவிர, அநேகர் ஏதோ ஒரு அல்லது பல வாத நோயால் பீடிக்கப்பட்டவர்கள்தான்.

சிலருக்கு முத்திய நோய். பலருக்கு unconscious bias. 

கூடவே இனிமேல் நாம் எழுதி எவரும் மாறப்போவதில்லை என்பதும் கண்கூடு.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் வைரவன் போல் இருந்த நான் இப்போ கொஞ்சம், கொஞ்சமாக பேசா மடந்தை ஆகிகொண்டு வருகிறேன்🤣.

யாழ் கற்றுத்தந்த அனுபவப் பாடமே இது.

இப்போ என்னுடன் கருத்து பரிமாறும் போது மட்டும் இந்த வாதங்கள் தலையை தூக்கினால் இவற்றை சுட்டி காட்டுவது என்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளேன்.

காரணம்?

மிக எளிமையானது.

இங்கே விரல் விட்டு எண்ண கூடிய சிலரை தவிர, அநேகர் ஏதோ ஒரு அல்லது பல வாத நோயால் பீடிக்கப்பட்டவர்கள்தான்.

சிலருக்கு முத்திய நோய். பலருக்கு unconscious bias. 

கூடவே இனிமேல் நாம் எழுதி எவரும் மாறப்போவதில்லை என்பதும் கண்கூடு.

 

 

 

இதைப் புற்று நோய்கள் போலப் பாருங்கள். எல்லா வகைப் புற்று நோய்களையும் வெட்டி, கதிர்வீசி அழிக்க முடியாது. ஆனால், அனேகமாக எல்லா வகைப் புற்று நோய்களையும் கண்டறிந்து "இது இருக்கிறது" என்று கண்டு, தண்டோரா போட்டு அறிவிக்கலாம். அப்படி அறிவிப்பதே இந்த "கேன்சர்" வியாதி இருப்போர் கருத்துரைக்காமல், ஒளிந்து மறைந்திருக்கச் செய்தால், அதுவும் வெற்றி தான்.

அவர்களை மாற்றுவது நோக்கமல்ல, ஆனால் சமூகத்தில் இத்தகைய குரல்கள் ஒலிக்கவோ, பெருப்பிக்கப் படவோ, செவிமடுக்கப் படவோ கூடாது என்பது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த முயற்சிக்குக் கூட தடையாக இருப்பது  "சக பக்தியாளன்" 😎என்பதால் கேன்சர்களுக்கு வெள்ளையடிக்கும் யாழ் கள உறுப்பினர்கள். புகைக் குண்டெறியும் றௌடிகள் முதல் போலித் துவாரகாவை முன்னிறுத்தி பிசினஸ் செய்பவன் வரை "அவிங்க நல்லவங்க" என்று ஊக்குவிக்கும் போக்கு, எங்களுக்கு இரட்டை ஆப்புச் செருகும்:  ஆப்பு 1, கேன்சர்கள் துணிந்து வளரும். ஆப்பு 2, "இது தான் உங்கட தமிழ் தேசியமா?" என்று மக்கள் NPP போன்ற கட்சிகளை நாடுவர்.

பிறகு இதே ஆட்கள் வந்து "ஐயோ தமிழ் தேசியம் தாயகத்தில் இல்லையே" என்று ஒப்பாரியும் வைப்பர்😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம். இத்தனை வருடங்களாக ஒருவர் எப்படியானவர் எவ்வாறு எழுதுவார் எதற்காக தனது பொன்னான நேரத்தை இங்கே செலவு செய்கின்றார் என்ற புரிதல் உண்டு. நானும் அதே நோக்கம் மற்றும் நிலைப்பாடு தான். அவ்வாறானவர்களுடன் சேர்ந்து சிநேகபூர்வமாக சிந்தித்து எதையாவது முயலலாம் என்று தான் இங்கே வருகிறோம்

அவ்வாறான ஒரு இடத்தில் எங்கே ஒருவர் சிறு தடம்புரள்வார் அவரை வைச்சு செய்ய வேண்டும் என்கிற மனநிலை எனக்கு சரிவராதது. இங்கே பலரும் அப்படி தான். 

ஒரு கருத்துக்களத்தில் கூட  நடப்பவனுடன் ஒற்றுமை பேண முடியாதவர்கள் எவ்வாறு தாயக கட்சிகளின் இன்றைய பிரிவு நிலை சார்ந்து பேசமுடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்

அவ் ஊடக சந்திப்பில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர்கள் இனி உயிருடன் திரும்பப் போவதில்லை எனவும் காணாமலாக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களே என்றவாறும் கருத்து தெரிவித்திருந்தார்.

உண்மையாகவே அவர் ஒரு தமிழராக இருந்தும் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பது எமக்கு மிகுந்த மனக்கவலையை அளிக்கின்றது.

நாம் எமது உறவுகளை தேடி 2836 ஆவது நாட்களாக போராடி வருகின்றோம்.

எமது தொடர்போராட்டத்தில் இதுவரை  300 க்கும் மேற்பட்ட பெற்றோர்களை போராட்ட களத்திலே ஆகுதியாக்கியுள்ளோம்.

அவர்கள் தமது பிள்ளைகளை தேடும் போராட்டத்தில் மரணத்தை தழுவியுள்ளனர்.

எமது வலிகளை புரியாது  ஒரு தமிழ் அமைச்சர் இவ்வாறு கருத்து கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காணாமல் போன பிள்ளைகள்  உயிருடன் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

அதை அவர் எமக்கு கூறவேண்டிய விதமாக கூறவேண்டும். அவர் இப்படி கூறுவதை மனிதாபிமானமற்ற செயலாக தான் பார்க்க வேண்டும்.

 

அதேபோல தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்து 15 நாட்கள் ஆக முன்னரேயே இப்படியான ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அமைச்சரவை பதவியேற்று சில நாட்களிலேயே ஒரு தமிழ் அமைச்சரால் இப்படியொரு கூற்று வெளியிடப்பட்டது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

 

தேவையானதாக...இருப்பதால் வெட்டி  ஒட்டியுள்ளேன்...இதேபோல் இந்த அமைசரின் பல முகங்களை அவருடைய பேட்டிகள்    அடையாளம் காணலாம்...

இதில் முன்னரே நான் குறிப்பிட்டபடி ..அமைச்சரை...வர்க்க ரீதியாக  குறிப்பிடவில்லை...நம்புவது நம்பாதது ஒவ்வொருவர் தன்மையை பொறுத்தது..இதில் நான் எடுத்துக்கொண்ட விடையமே தமிழ் அமைச்சர் வேசம்போட்டு தமிழரின் இருப்பைகேள்விகுறியாக்க நினைத்த ஒருவரைத்தான்...இதுதான் சிங்கள அரசின் புத்திசாலித்தனம்..இங்கு இந்த சிங்கள் அரசின் எடுபிடிகள் ... இங்கு நான் எழுதிய விடையத்தை...தூக்கிபிடித்து வெளிச்சம் காட்டுபவரும் ..அவர்களே..  இதுக்கெல்லாம் வியாக்கியானம் எழுதினால் நானும் அர்ச்சுனாதான்...ஏனெனில் டாக்டருக்கு படித்தாலும்... ..சில விடையத்தில்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

இதற்கு முன் நீங்கள் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் ஐயா. அசானி என்னும் மலையக சிறுமி பாடல் போற்றியொன்றில் வெற்றிபெற்றபோது இவ்வாறனதொரு கருத்தைதான் எழுதினீர்கள். நான் பலமுறை இதை அவதானிதுள்ளேன்.

குத்தி முறிவது ...உங்கள் சார்ந்தோருக்கு..அசானி விடையத்தி நான் எழிதியதை திரும்ப பார்க்கவும்..அசானியையோ ,கில்மிசாவையோ நான் சாடவில்லை...அதில் என்னுடையகருத்து..ஒரு சினிமாக்கூத்தடிகளீன் ..சிறிய நிகழ்வை கனடாவில் நடைபெறும் பெரிய நிகழ்வில் பெரிதுபடுத்த வேண்டுமா என்பதே...காமாளை கண்ணுக்கு எல்லாமே...அதில் மனோகணேசன் வந்ததையும் குறிப்பிட்டேன்...அவர் அப்போது தமிழருக்கு குழிபறிக்கும் ரணில் அரசின் அமைச்சர்......அந்த நேரமும் இப்படி ஒரு குற்ற்ச்சாட்டை எதிர்கொண்டேன்..முதலில் கருத்தை வாசியுங்கள்.. பின் எழுதலாம்.உங்கடை பேப்பர்போல  எழுதி ...துவேசம் வளர்க்க நினைக்கவில்லை..

6 hours ago, Kapithan said:

மீரா அல்வாயனின் உண்மையான நிறங்கள் வெளிவந்துவிட்டன. 

உங்களையறியாமலேயே உங்கள் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றிகள் பல. 

👏

அட சொல்லுறது ...யாரப்பா....ஓ..ஓ அவரா....போங்கப்பா அவரவர்வேலையை கனியுங்க..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

யாழ் களத்தில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம். இத்தனை வருடங்களாக ஒருவர் எப்படியானவர் எவ்வாறு எழுதுவார் எதற்காக தனது பொன்னான நேரத்தை இங்கே செலவு செய்கின்றார் என்ற புரிதல் உண்டு. நானும் அதே நோக்கம் மற்றும் நிலைப்பாடு தான். அவ்வாறானவர்களுடன் சேர்ந்து சிநேகபூர்வமாக சிந்தித்து எதையாவது முயலலாம் என்று தான் இங்கே வருகிறோம்

அவ்வாறான ஒரு இடத்தில் எங்கே ஒருவர் சிறு தடம்புரள்வார் அவரை வைச்சு செய்ய வேண்டும் என்கிற மனநிலை எனக்கு சரிவராதது. இங்கே பலரும் அப்படி தான். 

ஒரு கருத்துக்களத்தில் கூட  நடப்பவனுடன் ஒற்றுமை பேண முடியாதவர்கள் எவ்வாறு தாயக கட்சிகளின் இன்றைய பிரிவு நிலை சார்ந்து பேசமுடியும்? 

உங்களைப் பொறுத்த வரையில் சினேகபூர்வமான ஒருவர் தவறிழைக்கும் போது வெள்ளைப் பெயின்ற் அடிப்பது ஒற்றுமையைக் கூட்டும் என்கிறீர்கள்? 😂

அப்படியானால் பல வருடங்களாக பெண் வெறுப்பு, சாதி சமய வெறுப்பு, பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் -இப்படியான வாதங்களை இங்கே கருத்துக்களாக எழுதி வரும் உங்கள் "சினேக பூர்வமான" உறவுகளுக்கு நீங்கள் "கவர்" கொடுத்ததால் தமிழர் ஒற்றுமை கூடியிருக்கிறது என்கிறீர்களா? என்ன ஆதாரம் இருக்கிறது இந்த ஒற்றுமை பலமானதாக நீங்கள் கருதியமைக்கு?

இங்கே சில உண்மைகளை  சீனி தடவாமல் எழுதும் ஐலண்டையும், கபிதானையும் நீங்கள் போட்டுத் தாக்குகிற தீவிரத்தில், ஒரு வீதத்தையாவது  இந்தப் பிற்போக்கு வாத சினேகிதர்களை நோக்கி நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? இதைச் செய்யாமல் "எல்லாரும் குறையுடயோர் தான் " என்று நீங்கள் பேசும் சுடலைத் தத்துவத்தை ஏன் கொல்லப் பட்ட, தற்போதும் அச்சுறுத்தப் படும் சில தமிழ் அரசியல் வாதிகள் விடயத்தில் உங்களால் பிரயோகிக்க முடியவில்லை?

இவையெல்லாம் பதில் தேடும் கேள்விகள் அல்ல. தமிழர் ஒற்றுமையில் உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டும் கேள்விகள்.  எனவே ஒற்றுமையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உங்கள் பணியைக் கவனியுங்கள்!     

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, alvayan said:

...தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ்  அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல்  சொல்கின்றாரோ

எழுதியது உது தான்.

யாழ்பாணிகளிடம் மண்டியிட்ட ஒரு சமூகம் இன்று

அமைச்சராகி வந்து யாழ்பாணிகளின் குறையை தீர்க்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றதை கண்டதும்

வெளிவந்த பச்சை துவேசம்.

வர்க்க வேறுபாட்டின் மூலம்

சக தமிழனையே வெறுக்கும்

மேட்டுக்குடித் தனம்.

இதே வெறுப்பைத் தான்

அசானி மீதும் காட்டியதும்.

கொழும்பான் மீது நேற்று காட்டியதும்.

இப்படி அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டி விட்டு

ஆயிரம் சாக்குப் போக்குகள்.

அதை ஆதரிக்கவென இன்னொரு குழு.

நல்ல வேளையடாப்பா உங்களுக்கு

தனி நாடு கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

எழுதியது உது தான்.

யாழ்பாணிகளிடம் மண்டியிட்ட ஒரு சமூகம் இன்று

அமைச்சராகி வந்து யாழ்பாணிகளின் குறையை தீர்க்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றதை கண்டதும்

வெளிவந்த பச்சை துவேசம்.

வர்க்க வேறுபாட்டின் மூலம்

சக தமிழனையே வெறுக்கும்

மேட்டுக்குடித் தனம்.

இதே வெறுப்பைத் தான்

அசானி மீதும் காட்டியதும்.

கொழும்பான் மீது நேற்று காட்டியதும்.

அட வந்திட்டியளா...உங்கடை பார்வை அப்படி...அது ஒரு வடிவமக்கப்பட்ட டிசைன்... அதை மாற்ற முடியாது..என்னுடைய எழுத்து வேறு டிசைன்...விரும்புபவர், விரும்பாதவர்..அது அவரவர் டிசைன்..

முதலில் இருந்து வாசிக்கவும்...

கொழும்பானுக்கு வக்காலாத்து வாங்குகிறீர்களே...வல்வெட்டித்துறையிலும் விரைவில் பாங்கு ஒலிக்கும் என்றூ ..இதேகளாத்தில் எழுதியவர்தானே...அப்ப அது என்ன டிசைன்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கருத்துக்களம்...இதில் அவரவர் கருத்துகளை யாராலும் பகிரமுடியும்...முட்டையில் மயிர் புடுங்கிறவர்களல் புடுங்க முடியும் ... அதிமேதாவித்தனம் காட்டுபவர்..காட்டலாம் அதுஅவர்களின் விருப்பம் ....அது போலவே விதண்டாவாத கருத்தையும் விதைக்கலாம்..அது  அவரவர் வழி...அதுக்குப்போய் மேட்டுக்குடி..மட்டக்குழி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😂அப்படியானால் பல வருடங்களாக பெண் வெறுப்பு, சாதி சமய வெறுப்பு, பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் - இந்தப் பிற்போக்கு வாத சினேகிதர்களை நோக்கி நீங்கள் காட்டியிருக்கிறீர்களா

காட்டி இருக்கின்றேன். அது ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் சுடு தண்ணீர் தடவ இங்கே வரும் உங்களை போன்றவர்களின் கண்களில் பட்டாலும் வாசிக்க வராது. 

வேண்டும் என்றால் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் திரிகளிலும் தடை செய்யப்பட்ட நண்பர்கள் சம்பந்தமான நிர்வாக நடவடிக்கை திரிகளிலும் இன்றும் பார்க்கலாம். 

இங்கேயும் தவறு நடக்கவில்லை என்று எழுதவில்லை. எல்லோரும் குறை உடையோரே என்றே எழுதினேன். 

அதை ஊதிப்பெருப்பித்து தூற்றுபவர் இங்கே வருவதே இவ்வாறு குண்டு போட மட்டுமே. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😂

இங்கே சில உண்மைகளை  சீனி தடவாமல் எழுதும் ஐலண்டையும், கபிதானையும் நீங்கள் போட்டுத் தாக்குகிற தீவிரத்தில், ஒரு வீதத்தையாவது  இந்தப் பிற்போக்கு வாத சினேகிதர்களை நோக்கி நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? 

1 hour ago, Justin said:

 

 

அவர்கள் என்னை கள்ளன் என்றும் இயக்கப்பணத்தை ஆட்டையப் போட்ட கூட்டம் என்றும் வியாபாரி அதிலும் குண்டூசி வியாபாரி என்றெல்லாம் எழுதும் வரை சிநேகிதன் மட்டுமே. அதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழை நேசிப்பதால் நான் தான் உங்கள் எதிரியாச்சே. எப்படி உங்களிடமிருந்து நியாயம் எனக்கு  கிடைக்கும்?????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

காட்டி இருக்கின்றேன். அது ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் சுடு தண்ணீர் தடவ இங்கே வரும் உங்களை போன்றவர்களின் கண்களில் பட்டாலும் வாசிக்க வராது. 

வேண்டும் என்றால் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் திரிகளிலும் தடை செய்யப்பட்ட நண்பர்கள் சம்பந்தமான நிர்வாக நடவடிக்கை திரிகளிலும் இன்றும் பார்க்கலாம். 

இங்கேயும் தவறு நடக்கவில்லை என்று எழுதவில்லை. எல்லோரும் குறை உடையோரே என்றே எழுதினேன். 

அதை ஊதிப்பெருப்பித்து தூற்றுபவர் இங்கே வருவதே இவ்வாறு குண்டு போட மட்டுமே. 

விசுகர் உங்கள் கருத்தை ஏகமனதாக வரவேற்கின்றேன்...ஏனெனில் எப்பவோ முடிந்த விசயத்திற்கு... நீண்ட விடுமுறை விசயம் என்று விட்டு விடுங்கள் ....

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.