Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

சந்தையில்  உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.  நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பெய்து வருவதால், போதிய அளவு உப்பை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் உப்பின் விலை சடுதியாக அதிகரிக்கலாம் எனவும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 05 கிராம் உப்பை ஒருவர் சாப்பிட வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சிற்றுண்டி மற்றும் உலர் உணவு உற்பத்தியிலும் சில அளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் உப்பைப் பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 38325 மெட்ரிக் தொன் உப்பும், 46,000 மெட்ரிக் தொன் உப்பும் தேவைப்படுகிறது.

அம்பாந்தோட்டை,புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரச சுரங்கங்களில் மட்டுமே இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1411147

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றில் உப்புக்கும் தட்டுப்பாடு??

பொருளாதாரச்சிக்கலுக்கு வேறு நாடுகளில் கையேந்திக்கொள்ளலாம் என்ற மனநிலையில்???

  • கருத்துக்கள உறவுகள்

அட அண்மையில் ஊருக்கு போனபோது ஆனையிறவில்  மலையாக குவிந்திருந்ததே...அது எங்கை போய்விட்டது....ஆனையிறவில் போர் சின்னம் பார்க்கவாற சிங்களவர் அள்ளிச் சென்றுவிட்டினமோ..🙃

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலும் இப்பொழுது பெய்த கனமழையில் தூத்துக்குடி பக்கம் இருக்கும் உப்பளங்கள் கடலாக மாறிப் போனதாக செய்திகளில் காட்டிக் கொண்டிருந்தார்கள். இலங்கையிலும் உப்பளங்கள் கடலாகி விட்டன போல. இரண்டு நாடுகளிலும் உப்பு திறந்தவெளிகளிலேயே  சேமித்து வைக்கப்படுகின்றது.

மலை உப்பு ஆரோக்கியம், கலர் உப்பு ஆரோக்கியம் என்று விதம்விதமாக வேறு சில வகை உப்புகளும் கடைகளில் விற்கப்படுகின்றது. விலையும் அதிகம். அவர்களின் காட்டிலும் இப்பொழுது மழை............. 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு தட்டுப்பாடு ஏற்படுவது ஓரளவு ஆர்ரோக்கியம்தான், எவரை பார்த்தாலும் சுகர் பிறசர் எண்டு கொண்டு குளிசையோட திரியுறாங்க.

பிளட் பிறசர் எகிறுறதுக்கு உப்பும் பிரதான காரணம்,

அதை கெளரவமாக சோத்தில் உப்புபோட்டு திண்டால் ரோஷம் வரும் எண்டு உல்டாவா அடிச்சுவிடுவாங்க .ரத்த கொதிப்பு அதிகமாகி கத்தினா அதுக்கு ரோஷம் எண்டு பெயர் வைக்குறது.

மூண்டுமாசம் உப்பு தட்டுப்பாடு இருந்தா யாழ்ப்பாணத்தில் வேலி சண்டை காணி சண்டை குறைய வாய்ப்பிருக்கு.

தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

உப்பு தட்டுப்பாடு ஏற்படுவது ஓரளவு ஆர்ரோக்கியம்தான், எவரை பார்த்தாலும் சுகர் பிறசர் எண்டு கொண்டு குளிசையோட திரியுறாங்க.

பிளட் பிறசர் எகிறுறதுக்கு உப்பும் பிரதான காரணம்,

அதை கெளரவமாக சோத்தில் உப்புபோட்டு திண்டால் ரோஷம் வரும் எண்டு உல்டாவா அடிச்சுவிடுவாங்க .ரத்த கொதிப்பு அதிகமாகி கத்தினா அதுக்கு ரோஷம் எண்டு பெயர் வைக்குறது.

மூண்டுமாசம் உப்பு தட்டுப்பாடு இருந்தா யாழ்ப்பாணத்தில் வேலி சண்டை காணி சண்டை குறைய வாய்ப்பிருக்கு.

தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.

நம்மவர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று உப்பில்லை என்றால் பட்டினி கிடந்து சாவார்களே தவிர...

நீங்கள் வேற ???🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

நம்மவர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று உப்பில்லை என்றால் பட்டினி கிடந்து சாவார்களே தவிர...

நீங்கள் வேற ???🤣

🤣..............

உப்பு இல்லாவிட்டால் விரைவாக கெட்டுப் போய்விடும் என்ற அர்த்தத்திலும் சொல்லியிருப்பார்கள் போல, விசுகு ஐயா.

உப்புக் கருவாடு, ஊறுகாய் போன்றன..........

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில சொல் salary - லத்தின் சொல்லான salarium த்தில் இருந்து வருகிறது.

இந்த லத்தின் சொல்லின் அர்த்தம் மாதாந்த கொடுப்பனவு.

Salarium என்பது லத்தின் சொல்லான Sal இல் இருந்து வருகிறது.  

Sal இன் அர்த்தம் உப்பு.

ஒரு காலத்தில் மாதசம்பளமக பணமன்றி உப்பே கொடுக்கப்பட்டதா நம்பபடுகிறது.

இதே போல் Sal இற்கு வேலை செய்த வீரகள்தான் Soldiers எனவும் சொல்லப்படுகிறது.

உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.

உப்பு அளவாக இல்லாதவிடத்து தசை பிடிப்பு ஏற்படும். இதை பேச்சு வழக்கில் குறண்டல் என்போம், எனக்கு விளையாடும் போது அடிக்கடி வரும்.

அதே போல் குறை இரத்த அழுத்தம் வந்து ஆளை கவிட்டும் விடும்.

எல்லாமும் அளவோடு தேவை.

உப்பிட்டவரை உள்ளவரை நினை🤣

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, valavan said:

தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.

இன்றைய கருத்து நாளைக்கு உதவாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

தட்டுப்பாட்டில் ஒரு ஆரோக்கியம்.

😂

5 hours ago, goshan_che said:

உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.

இலங்கை தமிழர்களின் உணவு செய்முறை காணொளிகள் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழர்களின்  காணொளிகள் பார்க்கும் போது அவதானித்துள்ளேன் ஆரோக்கியத்தில்  இருக்கின்ற அக்கறை காரணமாக உப்பை அள்ளி போடுவார்கள்.

6 hours ago, ரசோதரன் said:

உப்பு இல்லாவிட்டால் விரைவாக கெட்டுப் போய்விடும் என்ற அர்த்தத்திலும் சொல்லியிருப்பார்கள் போல, விசுகு ஐயா.

உப்புக் கருவாடு, ஊறுகாய் போன்றன..........

 

எனக்கு தெரிந்திராத தகவல் 👍
corned beef வும் தானே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் உணவு செய்முறை காணொளிகள் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழர்களின்  காணொளிகள் பார்க்கும் போது அவதானித்துள்ளேன் ஆரோக்கியத்தில்  இருக்கின்ற அக்கறை காரணமாக உப்பை அள்ளி போடுவார்கள்.

ஓம் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடம் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ சாதனை போல் நினைக்கும் பழக்கம் உள்ளது.

சிலர் உறைப்பு குறைவாக சாப்பிட்டால் தமிழ் தன்மை குறைந்து விட்டது போல் ஒரு லுக்கும் விடுவார்கள்.

உறைப்பு கூட கூட உப்பும் கூடும்.

யாழ்ப்பாணதில் கே எவ் சி திறந்த நேரம் அங்கே சிலரை அழைத்துப்போனேன்.

எனக்கு சிக்கன் கருவாடு சாப்பிட்டத்தை போல அந்தளவு வாயில் வைக்க முடியாத உப்பாக இருந்தது. கூட வந்தவர்கள் உப்பு அளவாக இருப்பதாக கூறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிலர் உறைப்பு குறைவாக சாப்பிட்டால் தமிழ் தன்மை குறைந்து விட்டது போல் ஒரு லுக்கும் விடுவார்கள்.

அவர்கள் தன்மான தமிழர்கள்🤣

1 hour ago, goshan_che said:

யாழ்ப்பாணதில் கே எவ் சி திறந்த நேரம் அங்கே சிலரை அழைத்துப்போனேன்.

எனக்கு சிக்கன் கருவாடு சாப்பிட்டத்தை போல அந்தளவு வாயில் வைக்க முடியாத உப்பாக இருந்தது. கூட வந்தவர்கள் உப்பு அளவாக இருப்பதாக கூறினர்.

அதே அதே அனுபவங்கள் எனக்குமே ஏற்பட்டது😀

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உப்புப் பிரியன் தான்! 10 பைக்கற்ற வாங்கி வைப்பம்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றில் உப்புக்கும் தட்டுப்பாடு??

பொருளாதாரச்சிக்கலுக்கு வேறு நாடுகளில் கையேந்திக்கொள்ளலாம் என்ற மனநிலையில்???

நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாடுதான், "ரின் மீனையும்" இறக்குமதி செய்கின்றது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்புக்கு தட்டுப்பாடு ?

உப்புக்கு தட்டுப்பாடு ?

பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்னர்.

எனவே இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் என தொழிலதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மழையால் உப்பு உற்பத்தி இல்லை, மழையால் விளைந்த உப்பை அறுவடை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 05 கிராம் உப்பை ஒருவர் சாப்பிட வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சிற்றுண்டி மற்றும் உலர் உணவு உற்பத்தியிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது, விவசாய நடவடிக்கைகளிலும் உப்பைப் பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 38,325 மெட்ரிக் டன் உப்பும், 46,000 மெட்ரிக் டன் உப்பும் தேவைப்படுகிறது.
அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரச சுரங்கங்களில் மட்டுமே இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

https://athavannews.com/2024/1411376

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து விசேட ஆய்வு!

நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து விசேட ஆய்வு!

நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தகம், வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் நாட்டில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போது உள்நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக உப்பை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உப்பு வரத்தக நிறுவனங்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எவ்வாறெனினும், நாட்டில் உள்ள உப்பு இருப்பு மற்றும் நுகர்வுக்கு தேவையான அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின், இறக்குமதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2024/1411426

  • கருத்துக்கள உறவுகள்

"எட்டு நாளில் ஒரு ஏற்றம் தரும் வேளாண்மை" என்று கூறுவார்கள் . ......... பொதுவாக கோடையில் தேவையான அளவு உப்பை உற்பத்தி செய்து (அடுத்து வரும் மூன்று நாலு மாதம் மாரிகாலங்களுக்கும் சேர்த்து) கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் .......அவற்றைப் பராமரிக்க வெப்பத்துடன் கூடிய குடோன்களையும் செய்து வைத்திருக்க வேண்டும் ........அவையும் போதாது என்றால் சிறிது விலை குறைத்து கூட்டுறவு சங்கங்கள், பெரிய பெரிய கடைகள் வசம் அனுப்பி வைக்க வேண்டும் . ...... இவை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பற்றாக் குறையை சமாளிக்க முடியும் . .......!

கொஞ்சம் யோசியுங்கள் நாட்டில் எந்த அரசு வந்தாலும் மதுபானங்களுக்கு எப்போதாவது தட்டுப்பாடு வந்ததுண்டா ......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

கொஞ்சம் யோசியுங்கள் நாட்டில் எந்த அரசு வந்தாலும் மதுபானங்களுக்கு எப்போதாவது தட்டுப்பாடு வந்ததுண்டா ......!

சிந்திக்க வைக்கும்.... நியாயமான கேள்வி சுவியர்.
உப்பை... அரசனில் இருந்து ஆண்டி வரை பாவிக்கின்றார்கள்.
ஆனால்.... அதில், பெரும் லாபம் இல்லாததால்... முதலாளிகள் அதில் அக்கறை செலுத்துவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.