Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை

 

thumbnail.jpg

(பாறுக் ஷிஹான்)

 

 

நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

 
 

குறித்த  சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மற்றும் வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

அத்துடன் கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை  அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு  எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால்   ஞயிற்றுக்கிழமை(19)  கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி கௌரவ அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு   வெள்ளிக்கிழமை(17)  "கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

 

ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிலை சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு

 

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில்  நீதிவான்  அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும்  குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில்  விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மா

 

 

https://puthiyakural.lk/2025/01/19/thiruvalluvar-statue-in-kalmunai-removed-amid-controversies-pictures-450

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, alvayan said:

கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் என்ன மதவாதியா அல்லது இனவாதியா? என்ன கொடுமையடா இது. இப்பவே தமிழருக்கு இந்தநிலை என்றால்..... யேர்மன் டோட்முண்டிலை வள்ளுவருக்கு சிலைவைக்கேக்க ஒரு காவல்துறைகூட இல்லை. ஆனால் தமிழ்மொழி பேசுவோரின் பிரதேசத்தில் பொய்யாமொழிப் புலவனுக்கு இந்தநிலை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

திருவள்ளுவர் என்ன மதவாதியா அல்லது இனவாதியா? என்ன கொடுமையடா இது. இப்பவே தமிழருக்கு இந்தநிலை என்றால்..... யேர்மன் டோட்முண்டிலை வள்ளுவருக்கு சிலைவைக்கேக்க ஒரு காவல்துறைகூட இல்லை. ஆனால் தமிழ்மொழி பேசுவோரின் பிரதேசத்தில் பொய்யாமொழிப் புலவனுக்கு இந்தநிலை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

பருத்திதுறையில் பத்து முசுலிம் இருக்கினமோ தெரியாது...அங்கும் மொஸ்க் கட்டியிருக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

பருத்திதுறையில் பத்து முசுலிம் இருக்கினமோ தெரியாது...அங்கும் மொஸ்க் கட்டியிருக்கினம்...

எம்மதமும் சம்மதம் என்ற சைவர்களின் தாராண்மையால் வந்தவினையாக இருக்குமோ!

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, nochchi said:

எம்மதமும் சம்மதம் என்ற சைவர்களின் தாராண்மையால் வந்தவினையாக இருக்குமோ!

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

அதே. எம்மதமும் சம்மதம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழன் மட்டும் தான் சொல்லுவான். அதற்கமைய நாடுமில்லாமல் ஊரும் இல்லாமல் வீடும் இல்லாமல் இந்த உலகில் அலைபவன் தமிழின் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

அதே. எம்மதமும் சம்மதம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழன் மட்டும் தான் சொல்லுவான். அதற்கமைய நாடுமில்லாமல் ஊரும் இல்லாமல் வீடும் இல்லாமல் இந்த உலகில் அலைபவன் தமிழின் மட்டுமே.

ஆனாலும்என்ன செய்யவது  திருந்தமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்களே.. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nochchi said:

திருவள்ளுவர் என்ன மதவாதியா அல்லது இனவாதியா? என்ன கொடுமையடா இது. இப்பவே தமிழருக்கு இந்தநிலை என்றால்..... யேர்மன் டோட்முண்டிலை வள்ளுவருக்கு சிலைவைக்கேக்க ஒரு காவல்துறைகூட இல்லை. ஆனால் தமிழ்மொழி பேசுவோரின் பிரதேசத்தில் பொய்யாமொழிப் புலவனுக்கு இந்தநிலை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நான் நினைக்கிறேன் இது நகரசபை அனுமதி சம்பந்தப் பட்ட பிரச்சினை. திருவள்ளுவர் உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்தவர் - எந்த  மதத்திற்கும் தொடர்பில்லாதவர். தமிழுக்கு மட்டுமே தொடர்பானவர். 

இனி "கிறிஸ்தவன் திருவள்ளுவரைத் தூக்கி" விட்டானென்று (நீங்கள் அல்ல) பலர் "சூலாயுதத்தோடு" வரக்கூடும்😂!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, nochchi said:

ஆனாலும்என்ன செய்யவது  திருந்தமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்களே.. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

அவர்களிடம் இல்லாததை மற்றவர்களிடமிருந்து சுவீகரிப்பதுதானே மேற்கத்தைய வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

எம்மதமும் சம்மதம் என்ற சைவர்களின் தாராண்மையால் வந்தவினையாக இருக்குமோ!

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

சைவத்திற்கும் இந்தச் சிலை திறப்பிற்கும் என்ன தொடர்பு? 

யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு திருவள்ளுவர் என்கிற சொல்தான் பிரச்சனையாகத் தெரிகிறது. 

செய்தியில் உள்ள திருவள்ளுவருடைய பெயரை நீக்கிவிட்டால் செய்தியின் சாரம்சம் புரியும். 😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்கும்  சைவம் உள்ளிட்ட காவிக் கும்பலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. வெட்கமே இல்லாமல் திருவள்ளுவரை காவிக்கூட்டம் கபளீகரம் செய்யத் துடிக்குது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

திருவள்ளுவருக்கும்  சைவம் உள்ளிட்ட காவிக் கும்பலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. வெட்கமே இல்லாமல் திருவள்ளுவரை காவிக்கூட்டம் கபளீகரம் செய்யத் துடிக்குது!

நான் இன்று இணைத்த இரண்டு செய்திகளிலும் திருவள்ளுவர் ..கதாநாயகன்...விசயம் என்னவென்றால்..யாழ்ப்பாணத்தில் மண்டபப் பெயர்...மோடியின் பாராட்டுடன் மாற்றப்படுகிறது.கல்முனயில் அடித்து உடைப்போம் ..என்ற சட்ட மிரட்டலுக்குப் பின்பும் திருவள்ளுவர் நிமிர்ந்து நிற்கிறார்...இதில் எந்த மதத்தையும் இணைக்கும் நோகத்துடன் இந்த செய்திகளை இணைக்கவில்லை..இந்த சிலை, பெயர் மாற்ற துணீபு ஒரேநாளில் நடந்திருக்கிறது...அது எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் பற்றி இவ்வளவு பட்டறிவு இருந்தபின்னும் சட்டத்திட்டங்களை அலசி ஆராய்ந்து விட்டு சிக்கல் என்று தெரியக்கூடியவற்றை இல்லாமல் செய்துவிட்டு முஸ்லீம்கள் நீதிமன்றத்தை நாடியும் எதுவும் நடக்காது என்று உறுதிப்படுத்திவிட்டு இந்த சிலையை திறந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வேண்டும் என்றே முஸ்லீம்களுக்கு சட்ட ரீதியாக வெற்றியை வேண்டும் என்றே கொடுத்து விட்டு தமிழ் மக்களை சீண்டி விடவே அவசரத்தனமான சிலை திறக்கும் முடிவு.

மேலே @alvayanசொல்ல வருபது போல் இதில் ஒரு இந்திய அரசின் பின்புலம் இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலை சர்ச்சைகளுக்கு மத்தியில் திறந்து வைப்பு

20 JAN, 2025 | 11:13 AM
image
 

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள  திருவள்ளுவர் சிலையானது பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (19)  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த திருவள்ளுவர் சிலை  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையிலும் பல  சர்ச்சைக்கு மத்தியிலும் திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில்  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ ,  வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் மற்றும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

jkl__16_.jpeg

jkl__18___1_.jpeg

jkl__3___1_.jpeg

jkl__4_.jpeg

https://www.virakesari.lk/article/204315

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை

 

thumbnail.jpg

(பாறுக் ஷிஹான்)

 

 

நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

 
 

குறித்த  சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மற்றும் வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

அத்துடன் கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை  அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு  எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால்   ஞயிற்றுக்கிழமை(19)  கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி கௌரவ அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு   வெள்ளிக்கிழமை(17)  "கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

 

ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிலை சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு

 

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில்  நீதிவான்  அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும்  குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில்  விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மா

 

 

https://puthiyakural.lk/2025/01/19/thiruvalluvar-statue-in-kalmunai-removed-amid-controversies-pictures-450

இ‌ந்‌‌த கட்டுமான சட்டங்கள் விகாரைகள் அமைக்கும் போது மறைந்து விடுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

குறளுக்கு பற்பலர் உரை எழுதியிருக்கலாம். ஆனால் எனது உரையே உண்மையானது. அதாவது முன் இல்லாதோர் கல்லாதவர்

உடையார் முன் இல்லார்போல்ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.😂

  • கருத்துக்கள உறவுகள்

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்தின் அடிக்கல் நாட்டு வைபவம் 25.10.2021 காலை 10.00 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.

மிகப் பிரமாண்டமாக தயாராகி வரும் திருக்குறள் வளாகத்திற்கு, தெய்வப் புலவர் திருவள்ளுவாின் திருவுருவச் சிலை கொண்டு வரப்பட்டு மிக வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
 
எதிா்வரும் 02.02.2025ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது திருக்குறள் வளாகத்தில் 1330 குறள்களும் கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
பல தலைமுறைகள் கடந்து திருக்குறள் ஒவ்வொருவரின் மனங்களுக்கும் சென்று சேரும் வண்ணம் செஞ்சொற்செல்வாின் முயற்சியால் இந்த அரிய பணி நடைபெற்று வருகிறது.
 
திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மேற் கொள்வதற்கும், தியானங்களை மேற் கொள்வதற்கும், திருக்குறள் தொடர்பாக பல்வேறு மொழிகளில் வெளிவந்த நூல்களை வாசிப்பதற்கான, இங்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, alvayan said:

இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது

கட்டளையனுப்பியோருக்கு இனமுறுகலா அல்லது மதமுறுகலா என்றே தெரியவில்லை. திருவள்ளுவரை வைப்பதால் இனமுறுகல் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. திருவள்ளுவருடைய பெயரைவிட  மேலே சுட்டியுள்ள விடயமே முதன்மையாக நோக்க வேண்டியதாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

கட்டளையனுப்பியோருக்கு இனமுறுகலா அல்லது மதமுறுகலா என்றே தெரியவில்லை. திருவள்ளுவரை வைப்பதால் இனமுறுகல் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. திருவள்ளுவருடைய பெயரைவிட  மேலே சுட்டியுள்ள விடயமே முதன்மையாக நோக்க வேண்டியதாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

முதலில் முசுலிமிடம் கேட்க வேண்டிய கேள்வி இலங்கையில் உனது தாய்மொழி எது....அரபு எப்ப வந்தது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.