Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.

 

https://oruvan.com/member-of-parliament-ramanathan-archuna-was-arrested-a-short-while-ago/

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

Published By: DIGITAL DESK 3   29 JAN, 2025 | 04:47 PM

image
 

பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை, கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது. 

அந்நிலையில் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அர்ச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார். 

குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுர நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டு இருந்தது. 

இந்நிலையில், அநுராதபுர பொலிஸ் நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து, அநுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர்.

20250129_154304.jpg

20250129_154203.jpg

https://www.virakesari.lk/article/205245

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன்…

நான் எம்பி…என் காரில்தான் வருவேன் என ஒரே அடமாம்🤣.

# சின்னத்தம்பி ஹைகோர்ட்டை செத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அந்நிலையில் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அர்ச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார். 

அப்பவே என்னடா இலங்கைப் பொலிசு இவ்வளவு அவமானப்பட்டும் சும்மா விட்டுட்டாங்களே.

ஒருவேளை தம்பி இதாலதானே போய்வாறவர் அப்புறமா மடக்குவம் என்று நினைத்திருக்கிறார்களோ என்று.

ஆனால் அங்கேயெல்லாம் விட்டுட்டு யாழிலேயே போய் தூக்கியிருக்கிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

large.IMG_8085.jpeg.cf93f88525b03abf8bcf

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு கொஞ்சம் நாவடக்கம் அவையடக்கம் தேவை . பதவி வரும்போது கொஞ்சம் பணிவு வேண்டுமடா தோளா ...துள்ளுகின்ற  பொதி சுமக்கும்.  விதியை மதி யால் வெல்லலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

சிங்கன்…

நான் எம்பி…என் காரில்தான் வருவேன் என ஒரே அடமாம்🤣.

# சின்னத்தம்பி ஹைகோர்ட்டை செத்தான்

அர்ச்சனா மாற்று அரசியல் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது மக்களுக்கான சேவை செய்வதை விட்டு வேறு ஏதோ எல்லாம் சிந்திக்கின்றார் போலுள்ளது. ☹️

சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் வேறு ஆவேசமாக பேசியிருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்னர் வைத்தியர் அர்ச்சனா விடுதலை செய்யப்பட்டுள்ள செய்தி முகப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா  இராமநாதன்  பிணையில் விடுவிப்பு

adminJanuary 29, 2025
written by  admin January 29, 2025
Archuna.jpg

இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதன்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில்  அவா்  விடுவிக்கப்பட்டுள்ளாா். அத்துடன்  குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி   3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வாரம் அநுராதபுரம் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில்   நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2025/210496/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அர்ச்சனா மாற்று அரசியல் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது மக்களுக்கான சேவை செய்வதை விட்டு வேறு ஏதோ எல்லாம் சிந்திக்கின்றார் போலுள்ளது. ☹️

சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் வேறு ஆவேசமாக பேசியிருந்தார். 

எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், எம் பி ஆனபின் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தேன்.

உங்களை போலவே ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

இப்போ இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு இவர தூக்கியடிக்கப்பட அந்த இடத்துக்கு வினைதிறனானவர் வரவேண்டும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், எம் பி ஆனபின் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தேன்.

உங்களை போலவே ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

இப்போ இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு இவர தூக்கியடிக்கப்பட அந்த இடத்துக்கு வினைதிறனானவர் வரவேண்டும் என்பதே.

எங்கட  தங்கத்துக்கு என்ன குறைச்சல் 

  • கருத்துக்கள உறவுகள்

இது  பொலிசாருக்கு தேவையில்லாத வேலை    இந்த பொலிஸார் நோக்கம் பணம் பறிப்பது மட்டுமே   

ஜேர்மனியில் இந்த வேலையை காமார செய்கிறது    மாற்றி மாற்றி  தெருக்களில்    ஒளிப்பதிவு கருவியை பொருத்தி   விடுவார்கள்   

குறிப்பிட்ட வேகத்திலும் கூட ஒடினால்.  தன்னிச்சையாக படம் எடுக்கும்    ஒரு இரண்டு கிழமையில்.  பணம் கட்டும்படி கடிதம்’ வரும் அதில் 

நேரம்

என்னுடைய படம் 

விதியின் பெயர்

வேகம் 

சம்பவம் நடந்த நேரம்  ...என்பன  பதிவாகியிருக்கும்.   

இரண்டு கிழமைகளில்.  இவ்வளவு பணம் கட்டுமாறு எழுதி இருக்கும்   கட்டப் பிந்தினால்.   தொகை   படிப்படியாக கூடிச்செல்லும்.   

இலங்கையில் எல்லா இடமும். கமெரா. பெருத்தியுள்ளது    இப்படி வேலை வெட்டி இல்லாமல் தெருக்களில் நிற்கும    பொலிஸார் வேறு வேலை செய்யலாம்    

இலங்கையில் விபத்துகளில் ஒவ்வொரு நாளும் மரணங்கள் இடம்பெறுகிறது  ...இது தொடர்வதுக்கு  காரணங்கள் என்ன?? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

எங்கட  தங்கத்துக்கு என்ன குறைச்சல் 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல…

பூராவும் மேக்கப்பு 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.