Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
07 FEB, 2025 | 12:40 PM
image
 

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் இதுவரை 56  இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்காக 554 இலங்கையர்களை ரஸ்யா சேர்த்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள விஜித ஹேரத் எவரையும் ரஸ்யா பலவந்தமாக சேர்த்துக்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என  குறிப்பிட்டுள்ளார்.

2025 ஜனவரி 20 ம் திகதி வரை 59 இலங்கையர்கள் ரஸ்ய உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள அமைச்சர் இவர்கள் குறித்த விபரங்கள் என்னிடம் உள்ளன இவற்றை நாடாளுன்ற ஹன்சார்ட்டில் சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/206056

  • கருத்துக்கள உறவுகள்

Freelancer   / 2025 பெப்ரவரி 07 , பி.ப. 02:04 - 0      - 44

கடந்த ஜனவரி 20ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். 

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார். 

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதின், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார். 

இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார். R

Tamilmirror Online || ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் மரணம்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அவர்கள் இலங்கையிலிருந்து என்ன செய்வார்கள் பணம் வேண்டும் பணத்துக்காகவே போய் சேர்ந்தவர்களாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார்.

சிறிலங்கன் ....ஐயா வடக்கு தெற்கு என பிரிவினை பேசாதீர்கள் ...
 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பாவம் அவர்கள் இலங்கையிலிருந்து என்ன செய்வார்கள் பணம் வேண்டும் பணத்துக்காகவே போய் சேர்ந்தவர்களாக இருக்கலாம்

இல்லை மேற்குலகநாடுகளில் வேலை செய்ய சென்ற இலங்கையர்களை ரஷ்ய புட்டின் அரசு முகவர்கள் மூலம்  ஏமாற்றி  தனது இராணுவத்தில் இணைந்து போர் செய்ய கட்டாயப்படுத்தி  சாகடித்துள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் - தயாசிறி

Published By: DIGITAL DESK 2    07 FEB, 2025 | 08:00 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ரஷ்ய இராணுவத்தில்  பலவந்தமான  முறையில்  இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். என ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பிரதமரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7 ) நடைபெற்ற  தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனியார் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ரஷ்ய இராணுவத்தில்  பலவந்தமான  முறையில்  இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு நாங்கள் ரஷ்யாவுக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தோம். அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை பொறுப்பான அமைச்சர் இலங்கையர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.

இலங்கையர்கள் பலவந்தமான முறையில் ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இலங்கையர்களில் பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் உடல்களை இலங்கைக்கு அனுப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். ஆனால்  அவ்வாறு அவர்கள் செயற்படவில்லை.. ஆகவே  ரஸ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.

நீர் சுத்திகரிப்பின் போது  பயன்படுத்தப்படும் குரோமியம் இராசாயன பதார்த்தத்தின்  மூலக்கூறின் அளவு 10 மி.கி அதிகமாகவே காணப்படுவதாக  குறிப்பிடப்படுகிறது. இதனால் மனித உடலுக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துங்கள்.

நாட்டில் இன்று குழாய் நீர் பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நீர் சுத்திகரிப்பின் போது பயன்படுத்தப்படும் குரோமியத்தின் அளவு 10 மி.கி ஆக காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கிரீன் எனர்ஜி என்ற தனியார்  நிறுவனம் இறக்குமதி செய்த குரோமியத்தின்  அளவு 10 மி.கி இற்கும் அதிகமாகவே காணப்படுகிறது.

 10 மி.கி இற்கும்  அதிகமானதாக  அளவுடைய குரோமியத்தை நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் போது  மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/206106

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழப்பு.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
 
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
 
ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
 
எனினும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதின்,ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.
 
இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார்.
 
மேலும் ரஷ்ய இராணுவத்தில் உள்ளவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா எனவும் வினவியிருந்தார்.
 
இதற்குப் பதிலளித்த விஜித்த ஹேரத் ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் அவர்களது உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2025 at 03:49, விளங்க நினைப்பவன் said:

இல்லை மேற்குலகநாடுகளில் வேலை செய்ய சென்ற இலங்கையர்களை ரஷ்ய புட்டின் அரசு முகவர்கள் மூலம்  ஏமாற்றி  தனது இராணுவத்தில் இணைந்து போர் செய்ய கட்டாயப்படுத்தி  சாகடித்துள்ளது

இவர்கள் எப்படி?

ரஸ்யா போய் இறங்கியவர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2025 at 07:18, தனிக்காட்டு ராஜா said:
On 7/2/2025 at 23:19, விளங்க நினைப்பவன் said:

 

இவர்கள் எப்படி?

ரஸ்யா போய் இறங்கியவர்கள்??

இலங்கையில் உள்ள ஒருவர் முறைப்படி துதரகம் மூலம் விண்ணபித்து செல்வது அல்லாமல் முகவர் மூலமாக பெரும் தொகை பணம் கொடுத்து விமானம் மூலம் மேற்குலக நாடுகளுக்கு போக முயற்ச்சித்தால் அந்த முகவர்கள் முதலில் அவர்களை  பெரும்பாலும் ஆபிரிக்க அல்லது வேறு  ஒரு நாட்டிற்கு கொண்டு சென்று நீண்ட நாட்கள் அங்கே தங்க வைத்திருந்து பின்பு தான் அனுப்புவார்களாம். 
ரஷ்ய புட்டின் அரசிடம் பெட்டி வாங்கிய இந்த முகவர் இந்த அப்பாவிகளிடமும் மேற்குலக நாட்டுக்கு அனுப்புகிறேன் என்று பணம் வாங்கி கொண்டு கொலைகளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 
ரஷ்யாவில் நீங்கள் இறங்கியதும் அங்கே எமது ஆள் வந்து உங்களை பொறுப்பு எடுத்து மேற்குலக நாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பார் என்று சொல்லி ஏமாத்தி இருப்பார்.
பழைய காலங்களில் தமிழர்கள் ரஷ்யா சென்று அங்கே இருந்து தான் மேற்குலநாடுளில் செற்றிலானவர்கள் அதையும் முகவர் இவர்களிடம் ஏமாற்றுவதற்காக சொல்லியிருக்கலாம்.

மேற்குநாடுகளில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள் இலவச ரிக்கட்,  கொற்றல்  தங்கும் செலவு பணம் கொடுத்தாலும்  ரஷ்யாவுக்கு விடுமுறைக்கு  கூட அங்கே போக மாட்டார்கள்
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.