Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

உண்மை அண்ணை. கருத்து மோதல்கள் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். கருத்தாளர்களை சீண்டாமல் அவர்களின் கருத்துகள்/எழுத்துகளின் தவறை அவர்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பதில் எழுதும் போது அவர்களே ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கலாம்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை சொல்லலாம்.

இவ்வளவு காலமும் இங்கு வாசித்து புரிந்துகொண்டதின் அடிப்படையில் தலைவர் போல சீமான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ?! ஒரு நாளும் அது சாத்தியமில்லை.

நாம் எமது மக்களுக்கான பணிகள், சேவைகளில் ஒன்றுபட்டே ஆகவேண்டும்.

இங்கே சீமான் பிரபாகரன் போல இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை, ஏனையோர் எதிர்பார்க்கிறார்களாக தெரியாது.

ஒரு சாதாரண குடியானவனுக்கு இருக்கக் கூடிய மனித ஒழுக்கம், அறவுணர்வு என்பன இல்லாத அரசியல்வாதியான சீமானை, தனிப்பட்ட ரீதியில் தலையில் சுமப்பது (புரினை, ட்ரம்பை சுமப்பது போல!) அவரவர் உரிமை.

ஆனால், யாழ் பொதுவான களம் - இங்கே அறவுணர்வு என்பன இல்லாத அரசியல்வாதியான சீமானைதலையில் சுமந்தால் அது சவாலுக்குள்ளாகும். அந்தச் சவாலை எதிர்கொள்ள இயலாமல் பைத்தியம் முற்றி விட்டதென எழுதும் நிலை இருக்கிறது. இவை தான் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்.

மற்றபடி சீமான் எங்களுக்கு யார்? இங்கே காலங்காலமாக இருக்கும் யாழ் உறவுகளை விட சீமான் எவ்வளவு முக்கியம்? அவருக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் உறவுகளிடம் தான் இதைக் கேட்க வேண்டும்!

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏதோ சீமான் மட்டும்தான் கேவலம்கெட்ட அரசியல்வாதி என்று எழுதப்படுவதுதான் தவறு..

அதை எழுதுபவர்களில் 90வீதமானவர்களுக்கு சீமான் மீது அல்ல பிரச்சினை அவர்பேசும் தமிழ்தேசியம் மீதுதான் கடுப்பு.. ஏற்கனவே இவர்கள் புலிகள் பற்றி புறங்கூறிய பலர்தான்..

இப்படி யார், எங்கே எழுதியிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுங்கள்?

நான் எல்லா இடங்களிலும் எழுதா விட்டாலும், எல்லாத் திரிகளையும் வாசிக்கிறேன் எல்லா இடங்களிலும் இருக்கும் சீமான் எதிர்ப்பாளர்களின் கதையாடல்: "சீமான் சின்னக் கருணாநிதி, இன்னொரு தமிழக சராசரி அரசியல் பிழைப்பு வாதி. ஆனால், தன் பிழைப்பிற்கு புலிகளின் விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார், அவர் அப்படி பயன்படுத்தா விட்டால் நாமும் கண்டு கொள்ளப் போவதில்லை".

"தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் தான் சீமானை எதிர்க்கிறார்கள்" என்பதும் உங்களுடைய self-fulfilling prophecy. உதாரணமாக நான் புலிகளை விமர்சிக்கும் ஒருவன், தீவிர , றௌடித் தனமான தமிழ் தேசியர்களை "தேசிக்காய்கள்" என்று அழைப்பவன். ஆனால், தமிழ் தேசிய எதிரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

. இவர் தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளை விட திறமான ஒருவரல்ல என்பதை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் நடந்து விட்டன. எனவே, ஏனைய தமிழக அரசியல் வாதிகளைப் போலவே அவரையும் நடத்துவதே முறை.

அதை விட்டு விட்டு, அவரைத் தலையில் தூக்கி வைப்பது, அவர் செய்யும்/பேசும் ஈனத்தனமான செயல்களையும் வெள்ளையடிப்பது என யாழில் சில ஆதரவாளர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களது செயல்களை சவாலுக்குட்படுத்த வேண்டும். "ஒற்றுமை" என்ற பெயரில், இத்தகைய நச்சு விதைகளைக் காவித் திரிவோரை நாம் அணைத்துக் கொள்ள முடியாதென நான் நினைக்கிறேன்

மிகத் தவறான

பொய்யான

இங்கே நடக்காத நடக்கமுடியாத கருத்து இது.

இங்கே பதியப்பட்டுள்ள திரியின் தலைப்பு மற்றும் கருத்துக்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவை சீமானுக்கு எதிரானவை.

தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இனி நா.த.க "Sex Offenders Wing" என்றும் ஒன்று ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன்! நம் ஆட்கள் கண்ணைக் கூட சிமிட்டாமல் "என்ன தவறு அதில்?" என்று இங்கே கொண்டு வந்து வீடியோ ஒட்டுவர்😂!

ஏன் அதை உங்கள் வீட்டிலேயே தொடங்கலாமே!! அப்படி இல்லாவிட்டால் ஈவேராவின் திராவிட கழக வெப் சைட்டில் தொடங்கலாமே!!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.

இதில் மட்டுமல்ல இன்னும்பல இடங்களில் நான் அவதானித்திருக்கிறேன்.. சீமானுக்கெதிரான ஒருசார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. பெரியமனம் பண்ணி சீமான் திரிகளில் நம்மள கருத்தெழுத விட்டதே பெரியகாரியம்..🤣 நன்றி நிர்வாகம்..🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.

களவிதிகளில் நீங்கள் திடீர் கரிசனை காட்டுவதால், கீழே விதிகளைத் தந்திருக்கிறேன்.

"....பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

  • உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் படங்கள்.

  • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்.

  • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).

  • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்).

  • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

இதில் எந்த விதி மீறப் பட்டிருக்கிறது என்கிறீர்கள்? படங்கள் அல்லாமல் சித்திரங்கள் (Artwork), கேலிச்சித்திரங்கள் (cartoon) ஏனையோரும் பயன்படுத்துகிறார்கள் (சசி வர்ணம் எஸ்பிபியின் சித்திரத்தைப் பயன்படுத்துகிறார்) தடை இல்லை! எனவே, கருத்துக்களை எழுதுவதை விட்டு விட்டு, நொய்மையான முறைப்பாடுகளோடு வராதீர்கள்.

17 minutes ago, விசுகு said:

மிகத் தவறான

பொய்யான

இங்கே நடக்காத நடக்கமுடியாத கருத்து இது.

இங்கே பதியப்பட்டுள்ள திரியின் தலைப்பு மற்றும் கருத்துக்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவை சீமானுக்கு எதிரானவை.

ஒரு பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒழித்து ஓடும் ஒரு அரசியல்வாதியை எதிர்த்து, நக்கலடித்து 90% வீதம் கருத்துக்கள், அதுவும் 3 உறுப்பினர்களால் எழுதப் பட்டிருக்கின்றன.

இடையிடையே வந்து "வுட்ரா, வுட்ரா" பாணியிலும், "இது சினிமாவில் சகஜம், எனவே ஓகே" என்ற பாணியிலும் எழுதிய 10% வெள்ளையடிப்புக் கருத்துக்கள் பற்றி உங்களுக்கு முறைப்பாடெதுவும் இல்லையா?

இங்கே இது நடக்கவேயில்லையா? "கறுப்புத் தங்கம்" வைரமுத்துவுக்கும் இதே முட்டுக் கொடுத்தார்களே?

இங்கே பொய் உரைப்பதும், மிகவும் தவறான கருத்துகளை உங்கள் "பக்தி" யின் காரணமாகப் பரப்புவதும் நீங்கள் மட்டும் தான்! அதற்கு புதிதாக நீங்கள் கோசானுக்குக் கொடுத்த விளக்கம் பார்த்துச் சிரித்தேன்: "அண்டர்கவர் Op செய்து பிடிக்க இருந்தேன், சத்தம் போட்டுக் கெடுத்து விட்டீர்கள்" என்று😂!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் அதை உங்கள் வீட்டிலேயே தொடங்கலாமே!! அப்படி இல்லாவிட்டால் ஈவேராவின் திராவிட கழக வெப் சைட்டில் தொடங்கலாமே!!

👆 "சீமான் என்ற தமிழக அரசியல்வாதியையும், நா.த.க என்ற தமிழகக் கட்சியையும் கண்டித்தால், கண்டிக்கும் சக கள உறவின் குடும்பத்தை நக்கலடிப்போம்" என்று மிரட்டும் சீமான் தம்பிகளுக்கு இந்தக் கருத்து சிறந்த உதாரணம்.

"களவிதிகள் பேணல், ஒற்றுமை சிதறுதே!" என்று மூக்குச் சிந்தும் @விசுகு போன்றோரும் கடந்து செல்ல😎 வேண்டிய கருத்துக்கள் இவை!

பி.கு: பையனுக்கு சொல்ல எதுவும் இல்லைப் போல, வெறும் "லைக்" தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தலைவர்களின் படங்களை அவதாரில் போடக்கூடாது என்ற யாழ் களத்தின் விதிமுறைகளையே சீமானுக்கு மட்டும் பிரத்தியேகமாக மீறப்பட்டு உள்ளது அதுவும் நாயாக.

  1. அது படம் அல்ல. கேலிச்சித்திரம்.

  2. என்னை பொறுத்தவரை சீமான் “இன்னொரு தமிழக தலைவர்” என்ற நிலையை நான் கடந்து ஒரு வருடத்துக்கும் மேல்.

  3. அவரை பற்றி அறிய, அறிய அவர் எப்படி பட்ட நச்சு என்பதும் ரோ ஏஜெண்ட் என்பதும் புரிய, இப்போ அவர் எனக்கு கருணா, பிள்ளையான், கேபி ரேஞ் தான்.

  4. நிர்வாகம் கூட சீமானை ஒரு தலைவர் என மதிப்பதில்லை என நினைக்கிறேன். (அப்படியாயி அது நல்ல முடிவு) இல்லாவிடில் என்னிடம் படத்தை தூக்க சொல்லி இருப்பார்கள்.

  5. எதுக்கும் ஒரு ரிப்போர்ட் அடியுங்கள். தூக்க சொன்னால் தூக்குகிறேன்.

52 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பெரியமனம் பண்ணி சீமான் திரிகளில் நம்மள கருத்தெழுத விட்டதே பெரியகாரியம்..🤣 நன்றி நிர்வாகம்..🙏

ரோவினால் ஊட்டி வளர்க்கப்படும், நஞ்சை தூவி தூவி விதைப்பவர்களையும் அனுமதிக்குமாறு, பேச்சு சுதந்திரம், ஊடக தர்மம் அவர்களை கட்டு படுத்துகிறது என நினைக்கிறேன்.

47 minutes ago, Justin said:

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

ஒருவேளை அப்படி இருக்குமோ 🤣

49 minutes ago, Justin said:

களவிதிகளில் நீங்கள் திடீர் கரிசனை காட்டுவதால், கீழே விதிகளைத் தந்திருக்கிறேன்.

"....பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

  • உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் படங்கள்.

  • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்.

  • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).

  • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்).

  • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

இதில் எந்த விதி மீறப் பட்டிருக்கிறது என்கிறீர்கள்? படங்கள் அல்லாமல் சித்திரங்கள் (Artwork), கேலிச்சித்திரங்கள் (cartoon) ஏனையோரும் பயன்படுத்துகிறார்கள் (சசி வர்ணம் எஸ்பிபியின் சித்திரத்தைப் பயன்படுத்துகிறார்) தடை இல்லை! எனவே, கருத்துக்களை எழுதுவதை விட்டு விட்டு, நொய்மையான முறைப்பாடுகளோடு வராதீர்கள்.

ஒரு பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒழித்து ஓடும் ஒரு அரசியல்வாதியை எதிர்த்து, நக்கலடித்து 90% வீதம் கருத்துக்கள், அதுவும் 3 உறுப்பினர்களால் எழுதப் பட்டிருக்கின்றன.

இடையிடையே வந்து "வுட்ரா, வுட்ரா" பாணியிலும், "இது சினிமாவில் சகஜம், எனவே ஓகே" என்ற பாணியிலும் எழுதிய 10% வெள்ளையடிப்புக் கருத்துக்கள் பற்றி உங்களுக்கு முறைப்பாடெதுவும் இல்லையா?

இங்கே இது நடக்கவேயில்லையா? "கறுப்புத் தங்கம்" வைரமுத்துவுக்கும் இதே முட்டுக் கொடுத்தார்களே?

இங்கே பொய் உரைப்பதும், மிகவும் தவறான கருத்துகளை உங்கள் "பக்தி" யின் காரணமாகப் பரப்புவதும் நீங்கள் மட்டும் தான்! அதற்கு புதிதாக நீங்கள் கோசானுக்குக் கொடுத்த விளக்கம் பார்த்துச் சிரித்தேன்: "அண்டர்கவர் Op செய்து பிடிக்க இருந்தேன், சத்தம் போட்டுக் கெடுத்து விட்டீர்கள்" என்று😂!

பதில் நிறைய, சிரிக்க-செரிஒஉச் எழுதலாம்.

குழுவாதமாகிவிடலாம் என்பதால் அமைதி காக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது.

கருணா பிரிந்த போது - அவர் செய்யும் கோக்குமாக்குகளை நான் ஓரளவுக்கு நான் சார்ந்த கிழக்கு மாகாண மக்களிடம் எடுத்து போகும் சந்தர்பம் இருந்தது - ஆனால் கடமையில் தவறி விட்டேன் (புலிகள் பார்த்து கொள்வார்கள் என).

அதே போல் புலிகளின் பெயரால், புலிக்கொடியை போர்த்தியபடி ஒரு நோர்வே ஊடகமும், சில இலண்டன் கூலிகளும் இலண்டனில் அராஜகங்களை அருவருக்க தக்க செயல்களை செய்து விட்டு, அதை புலிகள் தலையில் போட்டு விட்டு, ஜூன் மாதம் 2009 மகிந்தவோடு போய் போட்டோ எடுத்ததையிம் நான் கண்டுள்ளேன்.

அதே அநியாயம் மீளவும் எம் மக்கள் மீது கட்டமைக்கப்படும் போது - முன்னைய மெளனங்களுக்கு பிராயச்சித்தமாக அதை என்னால் முடிந்தளவு எதிர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

கருணா பிரிந்த போது - அவர் செய்யும் கோக்குமாக்குகளை நான் ஓரளவுக்கு நான் சார்ந்த கிழக்கு மாகாண மக்களிடம் எடுத்து போகும் சந்தர்பம் இருந்தது - ஆனால் கடமையில் தவறி விட்டேன் (புலிகள் பார்த்து கொள்வார்கள் என).

அதே போல் புலிகளின் பெயரால், புலிக்கொடியை போர்த்தியபடி ஒரு நோர்வே ஊடகமும், சில இலண்டன் கூலிகளும் இலண்டனில் அராஜகங்களை அருவருக்க தக்க செயல்களை செய்து விட்டு, அதை புலிகள் தலையில் போட்டு விட்டு, ஜூன் மாதம் 2009 மகிந்தவோடு போய் போட்டோ எடுத்ததையிம் நான் கண்டுள்ளேன்.

அதே அநியாயம் மீளவும் எம் மக்கள் மீது கட்டமைக்கப்படும் போது - முன்னைய மெளனங்களுக்கு பிராயச்சித்தமாக அதை என்னால் முடிந்தளவு எதிர்கிறேன்.

எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம்.

அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது!

2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது.

பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம்.

அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது!

2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது.

பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!

நச்சு செடி வளரும், வளராது…

நாம் முடிந்தளவு மிதித்தோம் என்ற நிம்மதியில் உறங்க போகலாம், இரவிலும், இறுதியிலும்.

ஆனால் இடையில் சில புல்லுகள் குறுக்க மறுக்க ஓடி நசிந்து சாவதுதான் துன்பியல் சம்பவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம் அமெரிக்காவில் ஆட்சி அமைத்திருக்கிறார். சீமானை அவருடன் ஒப்பிடுவதை பார்க்க அவரும் ஆட்சியை பிடிப்பார் போலும். 😂 பல நச்சு செடிகளை மிதித்து சீமான் தனிய நிற்கட்டும். அப்புறம் நஞ்சென்றால் ஒன்றை தானே. வெட்டி விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ட்ரம் அமெரிக்காவில் ஆட்சி அமைத்திருக்கிறார். சீமானை அவருடன் ஒப்பிடுவதை பார்க்க அவரும் ஆட்சியை பிடிப்பார் போலும். 😂 பல நச்சு செடிகளை மிதித்து சீமான் தனிய நிற்கட்டும். அப்புறம் நஞ்சென்றால் ஒன்றை தானே. வெட்டி விடலாம்.

அப்ப இப்பவும் "அண்டர்கவர் ஒபரேசன்" தான் திட்டம்😂?

நல்லது, நமக்கும் இப்ப ஜேம்ஸ் பொண்ட் 007 படங்கள் இல்லாமல் அலுப்படிக்கிறது! யாழ் கள 007 களையாவது பார்த்து பரவசமடைவோம்😎!

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, goshan_che said:

நச்சு செடி வளரும், வளராது…

நாம் முடிந்தளவு மிதித்தோம் என்ற நிம்மதியில் உறங்க போகலாம், இரவிலும், இறுதியிலும்.

ஆனால் இடையில் சில புல்லுகள் குறுக்க மறுக்க ஓடி நசிந்து சாவதுதான் துன்பியல் சம்பவம்.

உங்க பதிவ பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய போராளியா ஆவனும்னு ஒரு வெறி... நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் போராளி வெறி ஊறி போன ஒருத்தரதாலதான் இப்படி போராட முடியும்...நீங்க இன்னும் பெரிய போராளியாக என் வாழ்த்துக்கள்...., 😂😂 🏃🏃🏃

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்க பதிவ பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய போராளியா ஆவனும்னு ஒரு வெறி... நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் போராளி வெறி ஊறி போன ஒருத்தரதாலதான் இப்படி போராட முடியும்...நீங்க இன்னும் பெரிய போராளியாக என் வாழ்த்துக்கள்...., 😂😂 🏃🏃🏃

கறுப்பன் குசும்பன்…

இன்னொரு புது லுமாலா சைக்கிளுக்கு ரூட் போடுறான்🤣

1 hour ago, விசுகு said:

ட்ரம் அமெரிக்காவில் ஆட்சி அமைத்திருக்கிறார். சீமானை அவருடன் ஒப்பிடுவதை பார்க்க அவரும் ஆட்சியை பிடிப்பார் போலும். 😂 பல நச்சு செடிகளை மிதித்து சீமான் தனிய நிற்கட்டும். அப்புறம் நஞ்சென்றால் ஒன்றை தானே. வெட்டி விடலாம்.

Johnny English 🕵️‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

கோட் ஓடர் இல்லாமல் அழைப்பாணையை ஒட்ட முடியாதாம்.

ஒட்டிய பொலிசே முழிக்குதாம்.

இன்று பெரியாரை பேசிய குற்றத்துக்கான அழைப்பாணையை

கையிலேயே கொடுத்திருக்காங்களாம்.

இந்தப் பொலிசை நம்பி நம்ம தம்பிகளும் குரல் கொடுத்தது வீணா போச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

கோட் ஓடர் இல்லாமல் அழைப்பாணையை ஒட்ட முடியாதாம்.

ஒட்டிய பொலிசே முழிக்குதாம்.

இன்று பெரியாரை பேசிய குற்றத்துக்கான அழைப்பாணையை

கையிலேயே கொடுத்திருக்காங்களாம்.

இந்தப் பொலிசை நம்பி நம்ம தம்பிகளும் குரல் கொடுத்தது வீணா போச்சே.

அழைப்பாணை summons என்றாலே அது ஒரு கோர்ட் ஆடர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அழைப்பாணை summons என்றாலே அது ஒரு கோர்ட் ஆடர் தானே?

1. நீதிமன்ற அழைப்பாணை (Court Summons):

• ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜராக அழைக்க நீதிமன்றம் வழங்கும் உத்தரவு.

• இது குற்றவியல் வழக்குகளிலும், சிவில் வழக்குகளிலும் வழங்கலாம்.

2. போலீஸ் அழைப்பாணை (Police Notice):

• CrPC (Criminal Procedure Code) 41A, 160 ஆகிய பிரிவுகளின்படி, போலீஸ் விசாரணைக்கு தேவையான நபர்களுக்கு அழைப்புநோட்டீஸ் (Notice) அனுப்பலாம்.

• இது நீதிமன்ற ஆணை அல்ல, ஆனால் காவல் நிலைய விசாரணைக்காக அழைக்கும் நோட்டீஸ் ஆகும்.

முக்கிய வித்தியாசம்:

• Summons என்பது நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவு.

• Police Notice என்பது விசாரணைக்காக போலீசாரால் வழங்கப்படும் அழைப்பே, ஆனால் இது சட்டப்படி கட்டாயமாக ஆஜராக வேண்டிய உத்தரவு அல்ல..

இதில் சீமானுக்கு வழங்கப்பட்டது இரண்டாவது.. கோர்ட் ஓடர் அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பாலபத்ர ஓணாண்டி said:

1. நீதிமன்ற அழைப்பாணை (Court Summons):

• ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜராக அழைக்க நீதிமன்றம் வழங்கும் உத்தரவு.

• இது குற்றவியல் வழக்குகளிலும், சிவில் வழக்குகளிலும் வழங்கலாம்.

2. போலீஸ் அழைப்பாணை (Police Notice):

• CrPC (Criminal Procedure Code) 41A, 160 ஆகிய பிரிவுகளின்படி, போலீஸ் விசாரணைக்கு தேவையான நபர்களுக்கு அழைப்புநோட்டீஸ் (Notice) அனுப்பலாம்.

• இது நீதிமன்ற ஆணை அல்ல, ஆனால் காவல் நிலைய விசாரணைக்காக அழைக்கும் நோட்டீஸ் ஆகும்.

முக்கிய வித்தியாசம்:

• Summons என்பது நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவு.

• Police Notice என்பது விசாரணைக்காக போலீசாரால் வழங்கப்படும் அழைப்பே, ஆனால் இது சட்டப்படி கட்டாயமாக ஆஜராக வேண்டிய உத்தரவு அல்ல..

இதில் சீமானுக்கு வழங்கப்பட்டது இரண்டாவது.. கோர்ட் ஓடர் அல்ல..

விளக்கத்துக்கு நன்றி.

இரெண்டு வேறு பட்ட விடயங்களை அழைப்பாணை என எழுதுவதால் வந்த குழப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அழைப்பாணை summons என்றாலே அது ஒரு கோர்ட் ஆடர் தானே?

இது கோட் அழைப்பாணை இல்லை.

பொலிஸ் அழைப்பாணை.

இதனாலேயே பொலிஸ் நிலையம் போயிருக்கிறார்.

இப்போது எப்படி கையில் கொடுத்திருக்கிறார்கள்?

3 minutes ago, goshan_che said:

இரெண்டு வேறு பட்ட விடயங்களை அழைப்பாணை என எழுதுவதால் வந்த குழப்பம்.

நானும் முதலில் கோட் அழைப்பாணை என்றே எண்ணினேன்.

இது பொலிசாரின் தான்தோன்றித்தனமான வேலை போல.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை 300-400 பேர்வரையும்

சீமானின் நிகழ்ச்சியை 3000-4000 பேர்வரை பார்த்திருக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இது கோட் அழைப்பாணை இல்லை.

பொலிஸ் அழைப்பாணை.

இதனாலேயே பொலிஸ் நிலையம் போயிருக்கிறார்.

இப்போது எப்படி கையில் கொடுத்திருக்கிறார்கள்?

நானும் முதலில் கோட் அழைப்பாணை என்றே எண்ணினேன்.

இது பொலிசாரின் தான்தோன்றித்தனமான வேலை போல.

ஓம்…

ஒட்டியது, கிழித்தது எல்லாம் வெறும் noise. நான் அதை பற்றி இந்த திரியில் மினகெடவில்லை.

முக்கியமான விடயம். அந்த துப்பாக்கிதாரி….

அவர் விடுதலையா? துப்பாக்கி மீள கொடுக்கப்பட்டதா? அல்லது எல்லோரும் சேர்ந்து இந்திய ஒருமைபாட்டுக்குள் அமுக்கிவிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

புதிதாக நீங்கள் கோசானுக்குக் கொடுத்த விளக்கம் பார்த்துச் சிரித்தேன்: "அண்டர்கவர் Op செய்து பிடிக்க இருந்தேன், சத்தம் போட்டுக் கெடுத்து விட்டீர்கள்" என்று😂!

அண்டர்கவர் Op செய்து - இரகசிய கொமாண்டோ நடவடிக்கை எடுக்க இருந்தாரா? பலர் அந்த போலி மோசடி வேலையை கண்டித்தார்கள் உறவு வீரபையனும் கண்டித்தார் இவர் சீமான் விடயத்தில் இப்போது இருப்பது போன்றே இருந்தார்.

2 hours ago, goshan_che said:

Johnny English 🕵️‍♂️

Johnny English இரசித்து பார்க்கலாம் ஆனால் பாலியல் வன்கொடுமை செய்பவர் அக்சன் ஏஜென்ட்டாக நடித்தால் வெறுப்பு தான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நம்ம ஜெலன்ஸ்கியின் லெவலுக்கு கனம் ஆமையாரை எலிவேட் பண்ணியே தீர்வது என்றொரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது மாதிரியெல்லோ இருக்கு .. ?!

  • கருத்துக்கள உறவுகள்

திங்கக்கிழமையில இருந்து ஞாயித்துக்கிழமை வரை நாம் தமிழர் கட்சியை திட்டுவதையும் அங்கிருந்து ஆட்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்வதிலும் திமுக மற்றும் சீமான் போபியாக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க தலைவன் தன்வழியில் அரசியல்கூட்டங்கள் மக்கள் போராட்டங்கள் என்று மக்களோடு பிஸி..

நேற்றும் ஒரு இடத்தில் சீமான் கொலமாஸ் என்ரி குடுத்த தருணம்.. மக்கள் விரும்பி அழைக்கிறார்கள்..கூட்டம் அள்ளுது..சீமான் போபியாக்கள் வயிறு எரியுது..🤣🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.