Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mk-stalin-210812350-16x9-1.avif

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது! மு.க.ஸ்டாலின் விசனம்.

”பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று உரையாற்றிய போதே மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”கட்சதீவை மீட்க வேண்டும் எனவும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் எனவும்  பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தாம் வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை; எனவும் இது வேதனை அளிக்கிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் எனவும்,  இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது எனவும் தெரிவித்த  முதலமைச்சர்,  இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்க பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத வகையில்  பிரதமரின் இலங்கை பயணம் அமைந்துள்ளதாகவும், இது தொடர்பாக  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று கூறினார்.

https://athavannews.com/2025/1427817

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

இதன்போது ”கட்சதீவை மீட்க வேண்டும் எனவும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் எனவும்  பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தாம் வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை; எனவும் இது வேதனை அளிக்கிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆக உங்கள் கையெழுத்தை தமிழில் வைக்குமாறு மட்டும் கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

ஆக உங்கள் கையெழுத்தை தமிழில் வைக்குமாறு மட்டும் கூறியுள்ளார்.

அடுத்த முறையாவது... ஸ்ராலின், தமிழில் கையெழுத்து வைத்து கொடுத்தால்...

மோடி நிச்சயம் இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

பிழைகளை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு, மோடியை குற்றம் சாட்டுவது சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதன்போது ”கட்சதீவை மீட்க வேண்டும் எனவும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் எனவும்  பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தாம் வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை; எனவும் இது வேதனை அளிக்கிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு கடல்வளம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டில் ஆலோசகர்கள் இல்லையா?

தங்களது மீனவரையே ஏண்டா

அடுத்த நாட்டு கடலுக்குள் போகிறீர்கள்?

ஏண்டா தடை செய்யப்பட்ட வலைகளை பாவிக்கிறீர்கள் என்று கேட்கவே மாட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழக முதல்வருக்கு கடல்வளம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டில் ஆலோசகர்கள் இல்லையா?

தங்களது மீனவரையே ஏண்டா

அடுத்த நாட்டு கடலுக்குள் போகிறீர்கள்?

ஏண்டா தடை செய்யப்பட்ட வலைகளை பாவிக்கிறீர்கள் என்று கேட்கவே மாட்டாரா?

இதைப் பற்றிய நீண்ட உரையாடல் ஒன்று ஓணாண்டியாருக்கும் கோசானுக்குமிடையே நடந்ததே நீங்கள் பார்க்கவில்லையா?

இந்தியாவின் கடல் எல்லையைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள் - எந்த நாட்டிலும் இருப்பது போல- மத்திய அரசின் பாற்பட்டவை. இந்த எளிமையான தரவைத் தூக்கி ஓரம் போட்டு விட்டு, "தமிழ் நாட்டு அரசு எதுவும் செய்யவில்லை, தமிழ் நாட்டு முதல்வர் தமிழில் கையெழுத்து வைக்கவில்லை" என்று தும்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்!

இப்படி இலகுவாக ஈழத்தமிழர்களை - அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களை- மடை மாற்றிப் பேக்காட்டலாம் என்று சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் தெரிந்திருக்கிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இந்தியாவின் கடல் எல்லையைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள்

சட்டங்கள் மத்தியில் இருந்தாலும் சாதாரண மக்களுக்கே தெரிந்தவை

முதலமைச்சரில் இருந்து எவருக்குமே தெரியவில்லையா?

தெரிந்தும் சுண்டக்காய் நாடுதானே என்று திரும்ப திரும்ப செய்கிறார்களா

என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சட்டங்கள் மத்தியில் இருந்தாலும் சாதாரண மக்களுக்கே தெரிந்தவை

முதலமைச்சரில் இருந்து எவருக்குமே தெரியவில்லையா?

தெரிந்தும் சுண்டக்காய் நாடுதானே என்று திரும்ப திரும்ப செய்கிறார்களா

என்று தெரியவில்லை.

சட்டங்களை இந்தியர்களும் சரி, இலங்கையர்களும் சரி "பரிந்துரைகள் - suggestions" போலத் தான் எடுத்துக் கொள்வார்கள், "கலாச்சாரம்" அப்படி!

இதற்கு ஒரே மருந்தை சிறிலங்கா கடற்படை வைத்திருக்கிறது. கைது, நெருக்கடி மிகுந்த நீர்கொழும்பு போன்ற சிறைகளில் தடுத்து வைப்பு, படகுகள் பறிமுதல். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்பதே என் அபிப்பிராயம்! ஒரு கட்டத்தில் , கிடைக்கும் மீனின் பெறுமதி இதற்கெல்லாம் ஈடு அல்ல என்று புரிந்து கொண்டு எல்லை தாண்டாமல் மீன் பிடிப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த முறையாவது... ஸ்ராலின், தமிழில் கையெழுத்து வைத்து கொடுத்தால்...

ஸ்டாலின் எந்த மொழியிலும். கையெழுத்து வைக்கலாம் மோடி கவலைப்பட போவதில்லை

ஆனால் மோடி ஏன் சொன்னார் தமிழ்லில். கையெழுத்து வையுங்கள் என்று மோடிக்கு நன்கு தெரியும் மோடி சொல்வதை எல்லாம் ஸ்டாலின் எதிர்ப்பார். சரி பிழை பார்ப்பது கிடையாது அனைதையும் எதிர்க்க வேண்டும் சரியை சரி என்று சொல்ல போனால் ...மக்கள் மோடியை ஆதரிக்க தொடங்கி விடுவார்கள் எனவேதான் மோடி செய்வது அனைத்தையும் பிழை என்று சொல்ல வேண்டும் ..... இது மோடிக்கும் தெரியும் அதாவது மோடி செய்யும் சொல்லும் சரியானவற்றையும். ஸ்டாலின் பிழை என்று தான் சொல்லுவார்

மோடிக்கு தமிழ் மீது காதல் இல்லை இவர்கள் என்ன மொழிகளில் கையெழுத்திட்டாலும். மோடிக்கு கவலையில்லை,....ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் இவர்களின் வாயால் நாங்கள் தமிழில் கையெழுத்திட்டா மாட்டோம். என்று சொல்ல பண்ண வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்?? அதாவது மோடி தமிழில் கையெழுத்து இடுங்கள் என்று சொன்னால் ..இல்லை இல்லை நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். அதை நீங்கள் சொல்ல. சட்டம் இல்லை என்பார்கள் ......இங்கே

மோடி புத்திசாலியா?? இல்லை

தமிழர்கள் புத்திசாலிகளா. ?? நான் சொல்கிறேன் தமிழனை நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்த மோடி அதி புத்திசாலி தமிழில் கையெழுத்து வையுங்கள் என்று மோடி சொல்ல வேண்டிய அவசியம் என்ன ??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத வகையில்  பிரதமரின் இலங்கை பயணம் அமைந்துள்ளதாகவும்

2009 இல கனிமொழி கூட்டணி பணயம். தமிழர் நலனுக்கு. என்னத்தை பெற்று தந்தது மகிந்த ராஜபக்ஷவை பார்த்து கண் அடித்ததை தவிர. ......பரிசுகள் கொடுத்து கையையும் கொடுத்து சிரித்ததை தவிர. வேறு நன்மைகள் உண்டா ?? இப்பவும் கனிமொழியை அனுப்பி கதைக்கலாம். இல்லையா?????

  • கருத்துக்கள உறவுகள்

மோடியே ஒரு இனப்படுகொலையாளன். 2002 இஸ்லாமிய மக்களை படுகொலையின் பங்காளர். நியாயமான சர்வதேச விசாரனை நடந்தால் இப்போதும் உள்ளே போக வேண்டியவர். அப்படிப்பட்ட மோடி வந்து பேசி தமிழருக்கு நன்மை கிடைக்கும் என்று நினைக்க நாம் என்ன இளிச்சவாயரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

மோடியே ஒரு இனப்படுகொலையாளன். 2002 இஸ்லாமிய மக்களை படுகொலையின் பங்காளர். நியாயமான சர்வதேச விசாரனை நடந்தால் இப்போதும் உள்ளே போக வேண்டியவர். அப்படிப்பட்ட மோடி வந்து பேசி தமிழருக்கு நன்மை கிடைக்கும் என்று நினைக்க நாம் என்ன இளிச்சவாயரா?

ஆமாம் கண்டிப்பாக ...அல்லது விடின். உங்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விழுந்து அடித்து போய் யார் பக்கத்தில் நிற்பது என்று அடிபட்டு படமெடுத்து கொள்வார்களா???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.