Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆகாய சூரியனை...

படம்: சாமுராய்..

பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி

http://www.youtube.com/watch?v=FwYvSfMAzzg

ஓ..ஓ..ஓ..ஓ...

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

கொடி நான் உன்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடி நான்

என் எண்ணம் எதுவோ

கிளி நான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்

உன்னை கொஞ்சும் எண்ணமோ

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

என்னை கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவுதான்

உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கேதான்

காதல் பார்வையில் பூமி நேர் தான்

மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்

உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து

என் வெயிலுக்கு சுகம்தான் உன்வேர்வையில் நனைந்து

காதல் மறந்தவன் காமம் கடந்தவன்

துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்

டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது

உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே

அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி

நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி

கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்

பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி

ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே

உன் எண்ணம் என்னவோ

சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே

என்னை கொல்லும் எண்ணமோ

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தீண்டி தீண்டி

படம்:பாலா

இசை: யுவன் சங்கர் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தீக்குருவியாய்

படம்: கண்களால் கைதுசெய்

பாடியவர்கள்: முகேஸ், கருணி

இசை: ஏ.ஆர். ரகுமான்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே

படம்: தூரத்து இடிமுழக்கம்

பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி

இசை: சலீல் சௌத்ரி

எனக்கு மிகப் பிடித்த பழைய பாடல்களில் ஒன்று..

http://www.youtube.com/watch?v=P6dvBWar1iY

Edited by Danguvaar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்ன என்ன வார்த்தைகளோ

படம்: வெண்ணிற ஆடை

இது ஒரு கலவை பாடல் ஒரு மாறுதலுக்காக. :)

http://www.youtube.com/watch?v=0QFNCpNVNeE

Piano

http://www.youtube.com/watch?v=hzL1U3FtmcY

Audio

http://www.raaga.com/play/?id=155082

mp3

http://rapidshare.com/files/297356043/ENNA_ENNA_VARTHAIGAL.mp3.html

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மறக்க முடியவில்லை

இசை: மரகதமணி

கீரவணி என்ற மரகதமணி

மரகதமணியின் முழுப்பெயர் மரகதமணி கீரவாணி. ஆமாம், தமிழில் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு அழகன், வானமே எல்லை போன்ற படங்களுக்கு இசையமைத்தவரும் இவர்தான். ஹிந்தியில் கரீம் என்ற பெயரிலும் இசையமைத்திருக்கிறார். தெலுகில் 1990 தொடக்கம் 1996 வரை வருடத்திற்குச் சராசரியாக 22 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை மாபெரும் வெற்றிப் படங்கள்.

http://www.youtube.com/watch?v=RbEPGZUg_Kk

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சாதிமல்லி பூச்சரமே

படம்:அழகன்

இசை: மரகதமணி

பாடியவர்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சாதி மல்லிப் பூச்சரமே...

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே

ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி

எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா

தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்

தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா

படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு

இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தென்றலே தென்றலே

படம்: காதல் தேசம்

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடியவர்கள்: மனோ,உன்னி கிருஸ்ணன், டொமினிக்

http://www.youtube.com/watch?v=eyBmG9ZZnLM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உயிரும் நீயே

படம்:பவித்திரா

பாடியவர்: உன்னி கிருஸ்ணன்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : தேன் சிந்துதே வானம்

இசை : குமார்

பாடல் வரிகள் : வாலி

பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே

(உன்னிடம்...)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்

வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் காண்போம்

குரலோசை குயிலோசையென்று

மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்...)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்

கண்ணே உன் கைசேரத் தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு

இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணாவில் உங்களை மாதிரி முயற்சி உள்ள மனிசரை இண்டுவரைக்கும் இந்த யாழ்களத்திலை நான் காணேல்லை

தொடருங்கள் உங்கள் பயணத்தை..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவில் உங்களை மாதிரி முயற்சி உள்ள மனிசரை இண்டுவரைக்கும் இந்த யாழ்களத்திலை நான் காணேல்லை

தொடருங்கள் உங்கள் பயணத்தை..................

நன்றி கு.மா அண்ணா. :D

பாடல்:பூவினை திறந்து

படம்:ஆனந்த தாண்டவம்

பாடியவர்கள்: சிறிநிவாஸ், ?

இசை:G.V.பிரகாஸ்

http://www.youtube.com/watch?v=3Y45QG_9Iss&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வானம் எல்லை

படம்:உன்னை போல் ஒருவன்

இசை: சுருதி காசன்

பாடியவர்கள்: சுருதி காசன்,பிளேஸ்

http://www.youtube.com/watch?v=wO0rJKVtJ9Q

What would you do?

If what had to be done

Could only be done by you

Unnaipol Oruvan

With a new flow and new sway

Shruti Hassan and Blaaze

Easier said than done

Solve the problems one by one

இறந்தது நிகழுது எதிரில் பார்

Nananana

Take a look, look at the future missy

நேற்று என்பதை நினைவில் வை

இன்றை அதனுடன் கலவை செய்

அதை நாளை ஆக்கும் மாயம் செய்

வானம் எல்லை என்பது இன்றில்லை

நாளை என்று தனி ஒரு நிலை இல்லை

என்றும்

வானம் எல்லை என்பது இன்றில்லை

நாளை என்று தனி ஒரு நிலை இல்லை

என்றும்

We got to stop we got to stare

We got to see justice till we care

We got to plan we got to understand

We cannot take for granted our lives (nadu nadu)

We got to stop we got to stare

We got to see justice till we care

Break it down break it down

Tamil Nadu hit it sound

Tamil Nadu hit it sound(repeat)

We got to stop, see justice, got to stop, ஸ்டாப் stop

Aaaooh

நன்றும் தீதும் எல்லாம் ........ அது

பிரதர வாராய்...

Whooo

நன்றும் தீதும் எல்லாம் ........ அது

பிரதர வாராய்..

Easier said than done

Vaanam Yellai enbadhu indrillai

Naalai endru thanni oru nilai illai

Endrum

Easier said than done

வானம் எல்லை என்பது இன்றில்லை

நாளை என்று தனி ஒரு நிலை இல்லை

என்றும்

Easier said than done

வானம் எல்லை என்பது இன்றில்லை

நாளை என்று தனி ஒரு நிலை இல்லை

என்றும்

Easier said than done

Solve the problems one by one

இறந்தது நிகழுது எதிரில பார்

Nananana

Everybody drive around the road

and let me say hit the road are you ready now?

let me say make a change with your number one

Unnaipol Oruvan

Everybody drive around the road

and let me say hit the road are you ready now?

let me say make a change with your number one

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
:o ம்ம்ம்...நுணா உங்கள் பாடல்களுக்கு நன்றி..அத்தோடு கண்ணை வாயையும் அபினயம் பிடிக்கிற சைனிஸ் சுட்டிக்கும் நன்றி. :o
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி.

பாடல்: கடவுள் அமைத்து வைத்த மேடை

படம்: அவள் ஒரு தொடர்கதை

இசை: எம்.எஸ்.வி

பாடியவர்: எஸ்.பி.பி

http://www.youtube.com/watch?v=DHTWHMa0iO4&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நட்டநடு ராத்திரியை

படம்: அ ஆ இ ஈ

இசை: விஜய் அன்ரனி

http://www.youtube.com/watch?v=BMKn052mwXA&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அது ஒரு காலம்

அது ஒரு காலம் அழகிய காலம்

அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்

பழையது யாவும் மறந்திரு நீயும்

சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்

ஒற்றையாய் விடத்தானா

முத்துப்போல் சிரித்தாய்

மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்

பிள்ளையாய் இரு நீயும்

துன்பம்தான் மறந்து

பட்டம் போல் பற எப்போதும்

(அது ஒரு..)

இதயம் என்பது வீடு

ஒருத்தி வசிக்கும் கூடு

அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்

உலகம் என்பது மேடை

தினமும் நடனம் ஆடு

புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு

நெஞ்சோடு பாரம் கண்டால்

தூரத்தில் தூக்கிப்போடு

நெஞ்சோடு ஈரம் கண்டால்

இன்னொரு பெண்ணைத்தேடு

ஓடம் போகும் பாதை ஏது

வானில் மிதக்கலாம்

வலிக்கிற வார்த்தை ஏது

எண்ணம் மறக்கலாம்

எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்

அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்

(அது ஒரு..)

ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்

அவளின் நினைவால் எரிந்தேனே நானே

ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்

புரிந்தால் மனதில் துயரில்லை தானே

கல்வெட்டாய் வாழும் காதல்

அழித்திட வேண்டும் நீயே

காற்றாற்றில் நீச்சல் காதல்

கைத்தர வந்தேன் நானே

ஏற்காமல் போனாள் ஏனோ

சோகம் எதற்குடா

ஆறாத காயம் தானோ

காலம் மறந்துடா

உலகின் நடுவே தனியானேன் நானே

அவளால் அழுதேன் கடலானேன் நானே

(அது ஒரு..)

படம்: அதே நேரம் அதே இடம்

இசை: ப்ரேம்ஜி அமரன்

பாடியவர்: ஹரிசரன், ப்ரேம்ஜி அமரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

http://www.youtube.com/watch?v=snZjsVaif0k

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை

ஆனால் அது ஒரு குறையில்லை

(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை

நான் காவலிருந்தால் தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை

நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை

அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை

அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை

கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை

அந்த அக்கரைப்போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை

அவள் இல்லாமல் சுவாசமிலை

அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

எனக்கு எதுவுமில்லை

(அவள்..)

படம்: அங்காடித் தெரு

இசை: விஜய் அந்தோணி

பாடியவர்: பிரசன்னா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மச்சான் மச்சான்

பாடியவர்கள்:Bela Shende,Illayaraja

http://www.youtube.com/watch?v=1MkjQS8cU6Q&feature=related

ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்

வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்

பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான்

வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான்

ஆண்: ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்

நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

பெண்: தாயா நீ சில நேரம்

சேயாய் நீ சில நேரம்

மடிமேல உன்னை சொமப்பேனே

சந்தோஷத்தில் ஒன்னை மறப்பேனே ஓ ஓ ஓ...

ஆண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...

கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள...

பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...

தந்துபுட்டேன்.. தந்துபுட்டேன்.. என்னை உனக்குதான் (மச்சான் மச்சான்...)

(இசை...)

ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

பெண்: என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே

போகும் வழி எங்கும் வருவேனே...

பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே

ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே

மானே... அடி மானே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)

(இசை...)

ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே

ஒன்னத்தேடி நாளும் பறக்குமே

பெண்: அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும்

அந்த நாளை மனசும் நெனைக்குமே

ஆண்: கண்ணைமூடிப் பாத்தா எங்கும் நீ தான் வந்து போகிற

உடல் பொருள் ஆவி நீ தானே

பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே

ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ராசாவே

தேனே.. வந்தேனே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏறத்தாழ ஏழு மணி

http://www.youtube.com/watch?v=2-FATGFOWKw&feature=player_embedded

ஏறத்தாழ ஏழு மணி

என் இமையை பறித்து சென்றாய்

(ஏறத்தாழ..)

இமையை திருப்பி கேட்டேன்

இமையை திருப்பி கொடுத்து

என் கண்கள் பறித்துசென்றாய்

கண்கள் திருப்பி கேட்டேன்

கண்கள் திருப்பி கொடுத்து

என் இதயம் பறித்து சென்றாய்

ஏதோ ஒன்று பறிக்காமல் இருக்க முடியாது உன்னால்

ஏதோ ஒன்றை இழக்காமல் இருக்க முடியாது என்னால்..

(ஏறத்தாழ..)

காதல் வந்ததும் பறந்துப் பார்த்தேன்

வானம் ஒருத் துளி மிஞ்சவில்லை

பாக்கியமெல்லாம் பூ முடிக்கலையாது

வார்த்தை ஏதும் மிஞ்சவில்லை

அழகே உன்னை நெருங்கும்போது ஆசை ஏதும் மிஞ்சவில்லை

அன்பே உன்னை நினைத்து படுத்தால் ஆடை ஏதும் மிஞ்சவில்லை

மிஞ்சியதெல்லாம் கேள்வி ஒன்றுதான்

காதல் செய்தே செத்து போவதா

செத்துக் கொண்டே காதல் செய்வதா

(ஏறத்தாழ..)

ஆணுக்குள்ளே எத்தனை உலகம்

உன்னைக் கண்டதும் விடையறிந்தேன்

பெண்ணுக்குள்ளே எத்தனைப் பூக்கள்

என்னைத்தொட்டதும் விடையறிந்தேன்

துடிக்கும் விண்மீன் எத்தனையோ

தூங்கா இரவில் விடையறிந்தேன்

கொட்டும் மழைத்துளி எத்தனையோ

கொட்ட விழித்து விடையறிந்தேன்

விடையும் தெரியா கேள்வி ஒன்றுதான்

காதல் செய்தே செத்துப்போவதா

செத்துக்கொண்டே காதல் செய்வதா

(ஏறத்தாழ..)

படம்: பேராண்மை

இசை: வித்யாசாகர்

பாடியவர்: சாதனா சர்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணிவெடி

படம்:அ ஆ இ ஈ

http://www.youtube.com/watch?v=MmDofFwfPCM

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மலர் மஞ்சங்கள்

படம்: சாட்சி

பாடியவர்கள்: சுரேந்தர், வாணி ஜெயராம்

இசை: சங்கர்-கணேஷ்

பல ஆண்டுகளுக்கு முன்னர் தாயகத்தில் கேட்ட பாடல். மறுபடியும் கேட்டபோது ஆனந்த அதிர்ச்சி..! :lol:

http://www.youtube.com/watch?v=s00tuC7mz9M

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர் தாயகத்தில் கேட்ட பாடல். மறுபடியும் கேட்டபோது ஆனந்த அதிர்ச்சி..!

நானுந்தான் பாடலை பார்த்தேன். பாடலி்ல் அப்படி என்ன ஆனந்த அதிர்ச்சி . எனக்கு புரியல புரியல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.