Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25-687db9234da9d.jpg?resize=600%2C375&ss

ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!

சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த  இசை நிகழ்ச்சியான சரிகமபவில்  இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான்  அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.

எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதனால் சரிகமபவில் என்னால் சிறப்பாக  பாடமுடியவில்லை.

சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர். இருப்பினும் என்னால் சிறந்த முறையில் பாடமுடியவில்லை.இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன்”  என சினேகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1439929

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில்  இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Paanch said:

பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில்  இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌

நான் எழுத நினைத்ததை நழுங்கள் எழுதிவிட்டீர்கள்.

ஒரு மலையகத்தை சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதை என்பது கடினமான பாதை. ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கான வழிகளை விட மிக கடினமானதும் தடைகள் நிறைந்ததும் ஆகும். அவ்வாறான நிலையிலும் இப் பெண் தன் திறமையினால் மட்டும் முன்னேறி வரும் போது, அவரை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களில் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் கொழும்பு மற்றும் தெற்கைச் சேர்ந்த முஸ்லிம்களும் சமூக வலைத்தளங்களில் இவரை மிக மோசமாக விமர்சித்து இருந்தனர்.

இலங்கையின் பொருளாதாரத்தின் ஆணி வேர்களில் ஒன்றாக இருக்கும், அதே நேரம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும் இருப்பவர்களில் இருந்து தன் திறமையினால் முன்னேறத் துடிப்பவரைக் கூட பின் தள்ளி குப்புற வீழ்த்தி சுகம் காணுகின்றவர்களாக எம் மக்களில் பலர் மாறி விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் உயர்ந்த நிலைக்கு அம்பானி வீட்டு தரத்திற்கு இவா ஆடை அணியாமல் ஒரு சாதாரணமாக ஆடை அணிந்தது காட்சி அளித்தது பல இலங்கை தமிழர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி மன உளைச்சல் அடைய வைத்தது.அதனால் சமூக ஊடகங்களில் விமர்சித்து இவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குழப்பமான தகவல்கள் பகிரப்படுகின்றன என நினைக்கின்றேன்.

சினேகா எனும் இந்த பாடகி ஏற்கனவே இலங்கை தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் எனவும், வசதியானவர் எனவும் கூறப்படுகின்றது.

பிரச்சனை பாடகி சினேகா விடயத்தில் இரண்டு விதமாக உருவெடுத்ததாக கூறப்படுகின்றது.

ஒன்று: சரிகம நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர்கள் வசதி இல்லாத, கஸ்டப்பட்டவர்களாக காண்பிக்கப்படுவதாகவும் சினேகா அவர்கள் இவ்விதமான அனுதாப நோக்கில் சரிகமவினால் நோக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது விமர்சனங்களுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது.

இரண்டு: பாடகி சினேகா வசதியானவராக காணப்பட்டும் இவர் வசதியற்றவராக தன்னை இனம்காட்டி சரிகம நிகழ்ச்சியில் அனுதாபம் தேடியது விமர்சனத்துக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது.

இவை பாடகி சினேகா சம்மந்தமாக நான் அறிந்த விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2025 at 14:51, நிழலி said:

ஒரு மலையகத்தை சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதை என்பது கடினமான பாதை. ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கான வழிகளை விட மிக கடினமானதும் தடைகள் நிறைந்ததும் ஆகும். அவ்வாறான நிலையிலும் இப் பெண் தன் திறமையினால் மட்டும் முன்னேறி வரும் போது, அவரை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களில் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் கொழும்பு மற்றும் தெற்கைச் சேர்ந்த முஸ்லிம்களும் சமூக வலைத்தளங்களில் இவரை மிக மோசமாக விமர்சித்து இருந்தனர்.

இலங்கையின் பொருளாதாரத்தின் ஆணி வேர்களில் ஒன்றாக இருக்கும், அதே நேரம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும் இருப்பவர்களில் இருந்து தன் திறமையினால் முன்னேறத் துடிப்பவரைக் கூட பின் தள்ளி குப்புற வீழ்த்தி சுகம் காணுகின்றவர்களாக எம் மக்களில் பலர் மாறி விட்டனர்.

எனது அவதானிப்பின் படி இப்படியான பிற்போக்கான விடயங்களில் சமூக வலைத்தளங்களில் யாழ்பாணத்து தமிழர்களின் மனப்பாங்கும் முஸ்லீம்களின் மனப்பாங்கும் ஒரே விதமாகமாகவே உள்ளது. இதை பல விடயங்களில் அவதானித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

எனது அவதானிப்பின் படி இப்படியான பிற்போக்கான விடயங்களில் சமூக வலைத்தளங்களில் யாழ்பாணத்து தமிழர்களின் மனப்பாங்கும் முஸ்லீம்களின் மனப்பாங்கும் ஒரே விதமாகமாகவே உள்ளது. இதை பல விடயங்களில் அவதானித்துள்ளேன்.

அது என்றால் முழுக்க உண்மை தான். பிற்போக்கான விடயங்களில் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை கண்டு கொண்ட பெரியவர்கள் தமிழ் தலிபான்கள் என்ற பொருத்தமான பெயரை வைத்தனர்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2025 at 10:25, island said:

எனது அவதானிப்பின் படி இப்படியான பிற்போக்கான விடயங்களில் சமூக வலைத்தளங்களில் யாழ்பாணத்து தமிழர்களின் மனப்பாங்கும் முஸ்லீம்களின் மனப்பாங்கும் ஒரே விதமாகமாகவே உள்ளது. இதை பல விடயங்களில் அவதானித்துள்ளேன்.

இவர் பற்றிய அதிக விமர்சனங்களை பார்த்தனான் என்ற வகையில்..இவரின் மேல் மக்கள் பொறாமை, எரிச்சலில் விமர்சனத்தை வைக்கவில்லை.எதனால் நம்வர்கள் சீ தமிழ் போனால் ஒரே காட்சியை எப்போதும் போட்டுக் காட்டி தாயக மக்களை மிகவும் வேதனைக்குள் தள்கிறார்கள் என்று தான் பலரும் எழுதியிருந்ததை பார்த்தேன்..அது மட்டுமல்ல இந்தப் பிள்ளை ஏயார் போட் போகும் மட்டும் சங்கிலி போன்ற நகைகள் போட்டிருந்ததாகவும் பின் எல்லாமே களற்றபட்டு தான் மேடைக்கு அவர்களால் கொடுக்கபட்ட ஆடையோடு பாட விடப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக சொல்லப் போனால் ஒருவரது அறிமுகத்தில் அகதியாக போவதை கஸ்ரப்படுவதை காட்டினால் போதுமானதாக இருக்காதா....இந்தப் பெண்ணிற்கும் அகதியாக பெட்டி, படுக்கையோடு செல்பவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..அல்லது உண்மையாக எதனால் இவர் விலத்தப்பட்டுள்ளார் என்பது யாருக்காவது தெரியுமா..என்னைப் பொறுத்த மட்டில் சீ தமிழ் எப்போதுமே ஏதோ ஒரு கட்டத்தில் நம்மவர்களை தொடர்ந்து பங்கு கொள்ள விடாது தட்டி விடுவது வழமையாக நடப்பதுவே..

நான் எழுதுவதை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ எனக்கு தெரியாது.ஊரிலிருந்து சீ தமிழ் செல்லும் நமது நாட்டு பிள்ளைகளை எப்படி கேவலமாக காட்டினாலும் ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் தான் நாம் இருக்கிறோமா என்பது அவரவர் மனோ நிலையைை பொறுத்தது.

Edited by யாயினி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.