Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் - ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 Oct, 2025 | 05:25 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை - சுவிற்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இல்ஙகைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னிணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வின்போது சுவிற்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிற்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அதேவேளை இச்செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற்றின் அழைப்பின்பேரில் புதன்கிழமை (29) கொழும்பிலுள்ள சுவிற்ஸர்லாந்து தூதரகத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது மேற்படி செயலமர்வு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும் பதில் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இதுகுறித்து சுவிற்ஸலர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/228993

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் சுமந்திரனோடயே பேசுகினம்?🧐

எங்கண்ட பார் சிறியும் இந்தமுறை ஐநாவிலை இங்லிஷ்ல ஸ்பீச் குடுத்தவர்தானே! 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஏன் எல்லோரும் சுமந்திரனோடயே பேசுகினம்?🧐

எங்கண்ட பார் சிறியும் இந்தமுறை ஐநாவிலை இங்லிஷ்ல ஸ்பீச் குடுத்தவர்தானே! 😎

பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு தேவயிலை என்று நினைக்கிறவர் நிச்சயமாக சுமந்திரனுடந்தான் பேசுவினம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

ஏன் எல்லோரும் சுமந்திரனோடயே பேசுகினம்?🧐

எங்கண்ட பார் சிறியும் இந்தமுறை ஐநாவிலை இங்லிஷ்ல ஸ்பீச் குடுத்தவர்தானே! 😎

சுமத்திரன். 50% சிங்களவன். மிகுதி. 50% தமிழன்். தலையில். தலப்பாகையுடன். மாடு. பூட்டி. வயல். உழுவதில். திறமைசாலி. பேச்எசுவார்த்தைகளின். போதும். ஆழமாக. சிந்தித்து. பேசி. பேச்சுவார்த்தையை. இந்த. ஆட்சிக் காலம் முழுவதும் இழுத்து. அடிப்பார் கலர் சேட்டுடன். வருவார். பார்த்தால். அவரே. ஜே விபி. மாதிரித் தான். தெரியும். ஆகையால் அனுர ஆட்கள். எதிர்த்து. பேசமாட்டார்கள். எனவே. தீர்வு. விரைவில். கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் சுவிஸில் ஒரு சந்திப்பு....... அதில் இலங்கையைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்...

கஜன்... கபிலன்... சுரேஷ்..... , சத்தியமூர்த்தி.... என்று பலர் உள்ளடக்கம்

இதில் சுமன் அடக்கமில்லை

ஆகவே அந்த சந்திப்பில் என்ன கதைத்தார்கள் என்று சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சுமனுக்கு விளக்க மளித்துள்ளார்-

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

கஜன்... கபிலன்... சுரேஷ்..... , சத்தியமூர்த்தி.... என்று பலர் உள்ளடக்கம்

இதில் சுமன் அடக்கமில்லை

ஆகவே அந்த சந்திப்பில் என்ன கதைத்தார்கள் என்று சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சுமனுக்கு விளக்க மளித்துள்ளார்-

சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை. முன்பு கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளில் சுமந்திரன் தனியே சென்று சந்தித்து விட்டு, யாரையும் கூட்டி வரவேண்டாம் என்று என்னையே அழைத்தார்கள், இது ஒரு இரகசிய சந்திப்பு என்று கதை விட்டு, தனக்கு சார்ந்த மாதிரி அறிக்கை விடுவார். அதனாலேயே சந்தேகப்பட்டு, சுமந்திரனே நேரில் சென்று என்ன கதைத்தார்கள், முடிவெடுத்தார்கள் என்று விளக்கம் கேட்டிருக்க கூடும். அதன் பின் ஏதோ தன்னை அழைத்து விளக்கம் கொடுத்த மாதிரி இவர் அறிக்கை விடுகிறார் போலும். இவருக்கு இரகசிய சந்திப்பு, அறிக்கை நடத்தாவிட்டால் உறக்கம் வராது.

6 hours ago, ஏராளன் said:

அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும் பதில் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இதுகுறித்து சுவிற்ஸலர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

6 hours ago, ஏராளன் said:

அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார்.

இதற்கு, என்ன பேசப்பட்டது என அதில் கலந்து கொண்ட தனது கட்சிக்காரரிடமே கேட்டுத்தெரிந்திருக்கலாம். "தான் கள்ளன் பிறரை நம்பானாம்."

  • கருத்துக்கள உறவுகள்

செயலமர்வில் கலந்து கொண்டவர்கள், அடுத்து எப்போ, எங்கே தொடர்ந்து பேசுவது என முடிவெடுத்திருப்பார்கள். அதன்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இல்லை தொடர்ந்து பேசாமல் இருக்கவும் கூடும். இவர் வலியச்சென்று ஏன் தன்னையும் அழைக்கும் படி, அல்லது தானே அவர்களை பேச அழைக்கிறார்? இவர் வேண்டாமென அவர்களே முடிவெடுத்திருக்கலாம். அழையா வீட்டுக்கு நுழைய துடிக்கிறார். தன்னை புறந்தள்ளி தனக்கு தெரியாமல் ஏதாவது நடந்து விடுமோ என பதறுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.