Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது

adminNovember 4, 2025

thavil.jpg?fit=1107%2C738&ssl=1

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான  சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார்.

குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று  காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு , தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , அப்பெண்ணை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்தாகவும் , அதன் போது, பூநகரி பகுதியில் அப்பெண்ணுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து அப்பெண் மயக்கமடைந்த நிலையில் ,அவரை கொலை செய்து கடலில் வீசிவிட்டு தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக  காவல்துறை   தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகையை சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 17 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , அப்பணத்தினை தனது சொந்த தேவைகளுக்காக செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  அதன் அடிப்படையில் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை  காவல்துறையினர் மீட்டுள்ளனர்

சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரங்கள் காவல்துறைக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் காவல்துறையினர்  அனுமதி கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னணி. 

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் , வுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மறுநாள் 12ஆம் திகதி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனை அடுத்து பெண்ணின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை, தலையில் பலமாக தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்பட்டதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகளும் காணப்பட்டன.

பெண்ணின் நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் ,  ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்தது.  அதேவேளை பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் பெண் வீட்டில் இருந்து புறப்படும் போது, 10 பவுண் நகைகளை அணிந்து சென்றதாகவும் , சடலம் மீட்கப்படும் போது அவை காணப்படவில்லை எனவும் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களில் கொலை செய்யப்பட்ட பெண் வேலை செய்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்றுமொரு பெண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலையே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://globaltamilnews.net/2025/222314/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்குப்பிட்டி பெண் கொலை வழக்கு; சந்தேகநபர தவில் வித்துவான் அல்ல! மறுப்பு அறிக்கை வெளியீடு

sangupity.webp

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.

குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் அதனை மறுத்துள்ளது.

குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர். முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம்.

எனவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் தவில் வித்துவான் என்பதை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றுள்ளது.

https://akkinikkunchu.com/?p=347691

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யபட்ட காரணம் எங்கும் தெளிவாக இல்லை ஒரு பத்து பவுன் நகைக்கு கொலை என்பது சந்தேகமாக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

கொலை செய்யபட்ட காரணம் எங்கும் தெளிவாக இல்லை ஒரு பத்து பவுன் நகைக்கு கொலை என்பது சந்தேகமாக உள்ளது .

சுதி செய்த சதி...தான் காரணம்....(கள்ள தொடர்பு)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

சுதி செய்த சதி...தான் காரணம்....(கள்ள தொடர்பு)

கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பெண்களைத் ‘திருட்டின்பப் பிரியை’ என்று கொஞ்சம் மரியாதையாக அழைக்கலாம்.

நானென்றால் ‘கள்**க் காரிகை’ என்று இன்னும் மரியாதையாக அழைப்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆

அல்லது வேலி பாய்ந்த காதல்❣️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆

வேனுமென்றால் இப்படியும் சொல்லலாம் ...இப்ப தானே உலகம் பல மாற்றங்களை சந்திக்கின்றது...

மாற்று சிந்தனை,கட்டுடைத்தல் ..... தேவையென்றால் ஓஷோ சொல்லியிருக்கிறார் என சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2025 at 19:52, கிருபன் said:

குலதீபா

பெயர் வச்ச ஆள் மட்டும் என் கைல சிக்கினான்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, putthan said:

சுதி செய்த சதி...தான் காரணம்....(கள்ள தொடர்பு)

3 hours ago, putthan said:

வேனுமென்றால் இப்படியும் சொல்லலாம் ...இப்ப தானே உலகம் பல மாற்றங்களை சந்திக்கின்றது...

மாற்று சிந்தனை,கட்டுடைத்தல் ..... தேவையென்றால் ஓஷோ சொல்லியிருக்கிறார் என சொல்லலாம்

நீங்கள் இந்த கொலையை நியாயப்படுத்துகின்றீர்கள்?

ஒவ்வொருவருவருக்கும் என தனிமனித சுதந்திரங்கள் உண்டு என்பதை இங்கே பல திரிகளில் பலர் எழுத வாசித்துள்ளேன். அதெல்லாம் பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொருவருவருக்கும் என தனிமனித சுதந்திரங்கள் உண்டு என்பதை இங்கே பல திரிகளில் பலர் எழுத வாசித்துள்ளேன். அதெல்லாம் பொய்யா?

கொலையுண்ட பெண் எப்படி? எதற்காக ?கொலையெய்யப்பட்டார் என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும் .

செய்தி நிறுவனங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதும் வக்கிர மனப்பாண்மை கொண்டவை என்பதில் மறுப்பு இல்லை

தங்கள் வியாபாரத்திலேயே கண்ணாக இருக்கும் அதற்காக கண்ணும் காதும் மூக்கும் வைத்து எழுதும்

கொலையுண்டவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன .

அவரது கணவன் ஒரு சராசரி கூலித் தொழிலாளி

அவர்களுடைய நிலைமை இங்கே யாருக்கும் தெரியாது

அந்தக் குழந்தைகள் தாய் இல்லாமல் எப்படி வாழ போகின்றார்கள்

கொலையுண்டவரின் கணவரால் அந்தக் குழந்தைகளைத் தனியனாக நின்று காப்பாற்ற முடியுமா என்ற சிந்தனைகள் இல்லாமல்...... உயிருடன் இல்லாத கொலையுண்ட விசாரணையே இன்னும் நீதி மன்றத்திற்கு வராத நிலையில்

தனி நபருடைய தனிப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து

அப்படி இப்படி நடந்தது என மிகுந்த மலிந்த ரசனையுடன் கருத்துக்களை எப்படி யாழ் களம் அனுமதிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயங்களில் சில விடயங்களுக்கு ஊர்ப்பாசம் தர்மோபதேசம் செய்யும். பல சமயங்களில் பலவிடயங்களுக்குக் கள்ள மௌனங்காக்கும்!🕶️

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாத்தியார் said:

கொலையுண்ட பெண் எப்படி? எதற்காக ?கொலையெய்யப்பட்டார் என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும் .

செய்தி நிறுவனங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதும் வக்கிர மனப்பாண்மை கொண்டவை என்பதில் மறுப்பு இல்லை

தங்கள் வியாபாரத்திலேயே கண்ணாக இருக்கும் அதற்காக கண்ணும் காதும் மூக்கும் வைத்து எழுதும்

கொலையுண்டவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன .

அவரது கணவன் ஒரு சராசரி கூலித் தொழிலாளி

அவர்களுடைய நிலைமை இங்கே யாருக்கும் தெரியாது

அந்தக் குழந்தைகள் தாய் இல்லாமல் எப்படி வாழ போகின்றார்கள்

கொலையுண்டவரின் கணவரால் அந்தக் குழந்தைகளைத் தனியனாக நின்று காப்பாற்ற முடியுமா என்ற சிந்தனைகள் இல்லாமல்...... உயிருடன் இல்லாத கொலையுண்ட விசாரணையே இன்னும் நீதி மன்றத்திற்கு வராத நிலையில்

தனி நபருடைய தனிப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து

அப்படி இப்படி நடந்தது என மிகுந்த மலிந்த ரசனையுடன் கருத்துக்களை எப்படி யாழ் களம் அனுமதிக்கின்றது

On 4/11/2025 at 19:52, கிருபன் said:

முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு , தொலைபேசி ஊடாக உரையாடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியளவில் யாழ் . மாவட்ட செயலகத்திற்கு அருகில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று , அப்பெண்ணை அழைத்துக்கொண்டு பூநகரி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்தாகவும் , அதன் போது, பூநகரி பகுதியில் அப்பெண்ணுக்கு குடிப்பதற்கு , குளிர்பானம் வழங்கியதை அடுத்து அப்பெண் மயக்கமடைந்த நிலையில் ,அவரை கொலை செய்து கடலில் வீசிவிட்டு தான் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு சென்று தடய பொருட்களை அழித்து விட்டு , யாழ்ப்பாணம் திரும்பியதாக சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக  காவல்துறை   தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த திரியை வாசித்த போது இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டாலும், குளோபல் தமிழ் நியூஸ் வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையிலேயே கருத்துகள் பரிமாறப்படுவதை கண்டு கொண்டேன்.

இந்த பெண்மணிக்கு இந்த ஆடவரை முன்னமே தெரிந்துள்ளது, அவரை நம்பி போன இடத்தில் எதோ விபரீதம் நடந்துள்ளது என - செய்தியின் அடிப்படையில்தான் கருத்துகள் வந்துள்ளன.

வவுனியாவுக்கு திருமணத்துக்கு போவதாக சொல்லி போன குலதீபா அம்மையாருக்கு சங்குபிட்டியில் என்ன வேலை? என்பது நியாயமான கேள்விதான்.

ஒன்றில் தவில்காரர் வவுனியா பஸ்சில் இருந்து அவரை தர தர என இழுத்து போயிருக்க வேணும். அப்படி என்றால் அது செய்தியாகி இருக்கும். அல்லது கேரதீவு- பூநகரி இடையே இவராக இறங்கி இருக்க வேண்டும்.

பிகு

எழுதிய பாங்கை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கருத்தின் போக்கு நியாயமானதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.