Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவரின் கொடும்பாவியை எரித்த காங்கிரஸ்

Featured Replies

திருச்சி: திருச்சியில், மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. முன்னதாக மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தமிழகக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு காங்கிரஸார் கோரிக்கை விடுத்தனர்

ம்...தலைப்பித்தம்... தலைவரித்தாடுகிறது...

தமிழ் இரத்தம் எங்கேனும் ஒரு மூலையில் ஓடினால்...

தமிழ் மீது பற்று.. தமிழன் வாழ்வில் அக்கறை .. நெஞ்சின் ஓரத்தில் எங்காவது இருந்தால்..

இவர்கள் இப்படி செய்திருக்கமாட்டார்கள்..

மிகவும் மனவருத்தமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் கொடும்பாவி எரித்தவர்கள் வெறும் வைக்கோல் பொம்மையை எரிக்கவில்லை. தமது கலாச்சாரத்தையும், தன்மானத்தையும், திராவிடப் பாரம்பரியத்தையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எண்ணி அனைத்து இந்தியத் தமிழர்களும் வெட்கப்படவேண்டும்.

உங்கள் மகாத்மா காந்தியை விட எங்கள் தலைவர் ஆயிரம் மடங்கு மேலானவர். உங்கள் காந்தியை எரித்தால் எவ்வளவு ஆத்திரப் படுவீர்கள் ? அப்படையானால் எங்களுக்கு எப்படி இருக்கும் ? எங்கள் மூச்சையல்லவா எரித்திருக்கிறீர்கள்?

இதன் விளைவை விரைவில் உணருவீர்கள். அடிமை வாழ்வுக்கு ஆசைப்படும் அற்பத் தமிழர்களே....நீங்கள் வெற்கித் தலை குனியும் நாள் வெகு தொலைவில் இல்லை!

தங்களுக்குள்ளே வெட்டுப்பட்டு சாகிற ப****கள். அரசியல்

பண்ண இப்ப அதுகளுக்கு புலிகள் தான் கிடைச்சிருக்கினம்...

இப்படியாவது தாங்கள் தமிழ்நாட்டில செல்வாக்கை காட்டலாம்

என்று கஸ்டப்படுகினம்....

Edited by vasisutha

  • தொடங்கியவர்

தலைவரின் கொடும்பாவி எரித்தவர்கள் வெறும் வைக்கோல் பொம்மையை எரிக்கவில்லை. தமது கலாச்சாரத்தையும், தன்மானத்தையும், திராவிடப் பாரம்பரியத்தையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எண்ணி அனைத்து இந்தியத் தமிழர்களும் வெட்கப்படவேண்டும்.

உங்கள் மகாத்மா காந்தியை விட எங்கள் தலைவர் ஆயிரம் மடங்கு மேலானவர். உங்கள் காந்தியை எரித்தால் எவ்வளவு ஆத்திரப் படுவீர்கள் ? அப்படையானால் எங்களுக்கு எப்படி இருக்கும் ? எங்கள் மூச்சையல்லவா எரித்திருக்கிறீர்கள்?

இதன் விளைவை விரைவில் உணருவீர்கள். அடிமை வாழ்வுக்கு ஆசைப்படும் அற்பத் தமிழர்களே....நீங்கள் வெற்கித் தலை குனியும் நாள் வெகு தொலைவில் இல்லை!

இந்த செயலானது காங்கிரஸ்காரரை நிச்சயம் ஒதுக்க செய்யும் தமிழர்களுக்கு இது கோவத்தை உண்டாக்கும் இந்த செயல் பயங்கர கோவத்தை உண்டாக்கினாலும் ஒரு விதத்தில் நல்லதே தமக்கு தாமே குழிபறிக்கும் காங்கிரஸ்காரர் என நினைத்து கொள்ளுங்கள் நண்பரே

தங்களுக்குள்ளே வெட்டுப்பட்டு சாகிற ***. அரசியல்

பண்ண இப்ப அதுகளுக்கு புலிகள் தான் கிடைச்சிருக்கினம்...

இப்படியாவது தாங்கள் தமிழ்நாட்டில செல்வாக்கை காட்டலாம்

என்று கஸ்டப்படுகினம்....

இதால அவர்களின் அரசியல் நிலை கீழ் நிலைக்கு செல்லும் திமுகா பொன்றோருக்கு இன்னும் உந்து சக்தியை தரும் இதெல்லாம் நன்மைக்கே என நினைப்போம் கைபுள்ளதான் காங்கிரஸ்காரர்கள்

மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது !தமிழ் ரத்தம் ஓடும் எவரும் இப்படியொரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். இவர்கள் தமிழ்நாட்டுக்கு பிழைப்பதற்காக வந்த வந்தேறு குடிகள். வட இந்திய எசமானர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் அற்பப் பதர்கள். இவர்கள் எமது சரித்திரத்தையல்லவா எரித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

ஏன் இவ்வளவு ஆத்திரம் ? நாங்கள் சுதந்திரம் கேட்பதில் என்ன தவறு? எங்கேயோ இருக்கும் உனது எசமானிக்காக உங்கள் சகோதரனை அல்லவா இழிவுபடுத்துகிறீர்கள் ?

கொடுமை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! அதுதான் இயற்கையின் நியதி! 1991 இல் நடந்தது அதுதான்!

கள விதிகளுக்கமைய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியாவது காங்கிரஸ் தலைமையின் கவனத்தை கவர்ந்து பதவியை பெற வெண்டும் என்ற குறுகிய நோக்கோடு செய்யும் சில மதிகெட்டவர்களின் செய்கைக்காக தமி்ழக தமி்ழர்களாகிய நாங்கள் எம் ஈழ உடன்பிறப்புகளிடம் மன்னிப்பு கோருகிறோம்.

தயவு செய்து இது போன்ற மதிகெட்ட மனிதர்களை செய்கைகளை பெரிதுபடுத்தி அவர்களை பெரிய ஆட்கள் ஆக்கிவிடாதீர்கள். ஜெரோம் ஒன்றும் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் கிடையாது. முன்னாள் காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் அடைக்கல ராஜின் உறவினர் என்பதை தவிர வேறு எந்த முகவரியும் இல்லாத இவருடம் இருப்பவர்கள் எல்லாம் காசுக்காக கூடிய கூட்டம் தானே தவிர, கொள்கையால் கவரப்பட்டவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகிறவனில் தப்பில்லை, ஆட்டுவிக்கின்றவன் யாரோ....

  • தொடங்கியவர்

இளங்கோவன் கொடும்பாவியை தூக்கிலிட்டுப் போராட்டம்

சேலம்: முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தூக்கில் தொங்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபிச்செட்டிபாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் இளங்கோவன், முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து வைத்துள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் ஆவேசத்துடன் பேசினார்.

இதையடுத்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உருவ பேனர்களை கிழித்தெறிந்தனர். தமிழ்ச்செல்வன் பேனரை கிழித்த காங்கிரசாரை கண்டித்து ஈரோட்டில் பெரியார் திக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஈரோடு நான்கு ரோடு சந்திப்பில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவ பொம்மையை கட்டி தொங்க விட்டிருந்தனர்.

இதைக் கண்டித்த ஈரோடு காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தவிர கோபிச்செட்டி பாளையத்தில் இளங்கோவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் இன்று காலை சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் சிலர் இளங்கோவனின் உருவ பொம்மையை தமிழின துரோகி என்று எழுதி தூக்கில் தொங்விட்டிருந்தனர்.

தகவல் தெரிந்ததும், சேலம் டவுன் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர். சேலம் காங்கிரஸ் அலுவலகத்துக்கும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் உருவபொம்மையை தூக்கில் போட்டது யாரென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளங்கோவனின் உருவபொம்மை பிரச்சனையால் ஈரோடு, சேலம் மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒப்பாரி கவிதையை வைத்து அரசியல் இலாபம் தேட நினைக்கும் தமிழக அரசியல்வாதிகள்?

அரசியல் நாடகத்தின் அழகிய உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேறுகின்றன. தமிழருள் பிரிவினையைத் தோற்றுவிக்கும் காங்கிரசார், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் கருணாநிதி, இவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சி.ஐ.ஏ. இந்தக் குழப்பங்களின் மத்தியில் நடைபெறப்போகும் மாவீரர் தின உரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன் தெளிவாக சொல்லிவிட்டார் இவர்கள் பற்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக காங்கிரஸ் கட்சியில் நடக்கின்ற உள்மோதல் அனைவரும் அறிந்த ஒன்றே. மேலிடத்தின் பார்வை பட வேண்டும் என்பதற்காக சிலர் இப்படி ஆட்டம் போடுவது வழமை.

இதனால் எமக்கு தேசியத்தலைவர் மீது மேலும் அன்பு கூடுமே தவிர, குறையாது.

------------------------------------

இந்தக் காங்கிரஸ் கட்சியை, விட பாஜக எதிரானது என்று சொன்ன சபேசனைப் பார்த்து வருத்தத்தோடு நோக்குவதைத் தவிர வேறு வழி ஏதும் புலப்படவில்லை.

சுதந்திர இந்தியாக்காலம் போய் கனகாலமாய்ப்போச்சு, பின்விளைவை அவர்கள் யோசிக்கவில்லை போலும். இந்தியாவில் இனங்களுக்குள் தோன்றும் விரிசல்கள் மானில்ங்களுக்குள் தோன்றும் பகை அதைப்பற்றி என்னும் அலச வேண்டும் கண்டியலோ.

சும்மா கொடும்பாவி எண்டு சொல்லி திரியாம அடுத்த தேர்தலைப்பற்றி யோசிக்கவேனூம். இன்னும் சொல்லவேனும் எண்டா: உந்த இந்திய கோசம் கலையிற நேரத்தில லங்கா வைக்கும் உங்களுக்கு ஆப்பு பாகிஸ்த்தானோட சேர்ந்து.

நான் சும்மா சொல்லவில்லை பாருங்கோ உது நடக்கத்தான் போகுது... எப்ப அது எனக்கு தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்...தலைப்பித்தம்... தலைவரித்தாடுகிறது...

தமிழ் இரத்தம் எங்கேனும் ஒரு மூலையில் ஓடினால்...

தமிழ் மீது பற்று.. தமிழன் வாழ்வில் அக்கறை .. நெஞ்சின் ஓரத்தில் எங்காவது இருந்தால்..

இவர்கள் இப்படி செய்திருக்கமாட்டார்கள்..

மிகவும் மனவருத்தமாக இருக்கிறது.

தம்பி கவி...

இது தலைப்பித்தம் இல்லை!! தாங்க முடியாத் தலைவலி...பதவிக்கோ பணத்திற்கோ வளையாத ஒரு திருமகனை வாழும் வரலாறை...' தாங்க முடியாமல் தங்கள் பலவீனத்தின் வெளிப்பாட்டைக் காட்டி இருக்கின்றார்கள்.

இந்திராகாந்தியும் காங்கிரஸ் தானே ..எங்கே ஒரு சீக்கியன் கொடும்பாவி எரிக்கட்டும் ம்ஹீம்!! 'புலித் தலைவன் என்றாலே...கிலி கொள்ளும் கூட்டத்தின் கோழைத்தனம் இது!!....

இதற்காகவெல்லாம் வருந்தாதீர்கள், எமது மக்களை நம்பியே எங்கள் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை எங்கள் அண்ணா சொல்லி இருக்கின்றார்..

தூயவன்!

காங்கிரஸை விட பாஜக தமிழர்களுக்கு எதிரானதுதான். அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் ஈழத் தமிழர் விடயத்தில் இரண்டுமே ஒரே கருத்தைக் கொண்டவை.

இல. கணேசன் துக்ளக் சோவை தமது ராஜகுரு என்று பேட்டி கொடுத்திருப்பதை படித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடிக் கொண்டு தான் பாலைக் குடிக்குமாம். .... கேள்விப்பட்டிருக்கேன்.... கண்டது இப்போது தான் சபேசன்.

வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மைக்கு உங்களின் சாட்சி அவசியமற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.