Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏய்.. உலகமே விழித்துக்கொள்..

Featured Replies

ஏய்.. உலகமே விழித்துக்கொள்..

இரும்புக்கம்பிகள்..

நம்மை என்ன செய்யும்..

உலகமெலாம் தமிழனை

உருட்டுவதேன்..

சிறைகள்.. வெறுமையாகும்..

நேரமெல்லாம்..

அப்பாவித்த தமிழனையா

உள்ளே... அடைப்பது..

அடிப்பது... உதைப்பது...

மனிதாபிமானத்துக்குள்..

அடங்காத மனிதனா கேட்பாரில்லாத..

குடிமகனா தமிழன்...

மகிந்த மேய்க்கின்ற

மந்தைகளா தமிழன்..

சொந்த நாட்டிலேயே..

அகதியான.. பாவியா தமிழன்..

ஏய் உலகமே..

விழித்திரு.... எங்களைப்

பாதுகாக்க..

நீ வரவில்லை..

எங்களை நாங்களே பாதுகாக்க

நீ விடவில்லை..

ஒரு கண்ணில் எண்ணெய்..

எம் துயர் உனக்கு தெரியமாலிருக்கலாம்..

என் தங்கையின் அழுகுரல்..

குழந்தைகளின்.. ஓலம்..

தாயின் விசும்பல்..

உன் காதுகளில் விழவில்லை..

காதுகளையும் மூடிக்கொண்டாயா..

மறுகண்ணில் நீர்..

கொழும்பில் குண்டுவெடிப்பென்றால்

அடுத்த நிமிடமே கண்டனம்..செய்ய

காத்துக்கிடக்கிறாய்..

தமிழ்உயிர்களின் மேல்..

தீக்குண்டு போட.. கைகோர்த்து

காசு கொடுக்கிறாய்..

மேடையிலும் தொலைக்காட்சியிலும்..

மனிதநேயம் பேசும் நீ

நடத்தையில்..மௌனியாய்க் கிடக்கிறாய்..

எம் பேரெழுச்சிக் கூட்டங்கள்...

புரியவைக்கவில்லையா.. உனக்கு..

தமிழர் யார் பக்கமென்று..

ஏய் உலகமே..

பசிக்கின்ற போது..

நீர் கூட

கொடுக்காத நீ

எங்கள் சிதைகளுக்கு வரவேண்டாம்..

பந்தியாய்ப் படைக்கவேண்டாம்..

உங்கள் உரிமையை நீங்கள்

போராடிப் பெற்றுக்கொள்ளுங்கள்..

என்று ஒரு வார்த்தை சொல்லிப்பார்..

அங்கு தேசம் பூக்கும்..

தீயில்லாத தேசம்..

திறமைகள் படிக்கடடாய்..

வெற்றிகள் கனியாய்..

சாதனைகள்.. விருதாய்..

சரித்திரங்கள் பொறிக்கும்..

ஒரு தேசம்.. ஒளிவீசி

தனித்துவமாய் தெரியும்..

அழுகுரல் இல்லா..

அமைதிப்பூங்காவாய்..

எல்லோரும் விரும்பும்

எழில்மிகு தேசம்..

எங்கள் தேசமாய் இருக்கும்..

ஏய்.. உலகமே விழித்துக்கொள்..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை விகடகவி.

அழுகுரல் இல்லா..

அமைதிப்பூங்காவாய்..

எல்லோரும் விரும்பும்

எழில்மிகு தேசம்..

எங்கள் தேசமாய் இருக்கும்..

ஏய்.. உலகமே விழித்துக்கொள்..

ஒவ்வொரு தமிழரின் விருப்பமும் அதே தான்.

தாய்நாட்டில் பற்றுக்கொண்ட ஒவ்வொருவரின் உணர்வுகளையும் கவிதையில் பார்க்க முடிகின்றது. மிக நல்ல படைப்பு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நல்லதொரு கவிதை மாமா வாழ்த்துகள் :lol: .... உலகம் விழிக்க வேண்டும் அது தான் எல்லா ஈழதமிழர்களினதும் விருப்பம் :wub: ஆனா மாமா எம்மில் பலர் கண்விழிக்காம இருப்பது தான் வேடிக்கை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

ஆகா உலகம் எத்தனை அழகு

இன்னும் எனகாய் என்னென்ன உளது!! :wub:

சமகாலத்தில் கொழும்பில் தமிழர் கைதினையடுத்து உங்கள் மனதினில் எழுந்த உணர்வுகளை கவியினில் வடித்திருக்கின்றீர்கள் கவிதை அருமை.

உலகம் விழித்தபடிதான் இருக்கு ஆனால் அரசாங்கள் அள்ளிவிடும் பொய்களால் .... அதாவது அரசு இப்போது செய்வது சமாதானத்துக்கான போர் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள தமிழ்மக்களை மீட்டு அவர்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதற்காக நடைபெறுகின்றது...

அதனால் உலகநாடுகள் அரசாங்கத்தின்மூலம் தமிழ்மக்களுக்காகத்தான் உதவிகள் செய்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா... :wub:

ஒருவரில் கோபம் என்றால் பொய்களையும் கதைகளையும் கட்டிவிட்டு அவரை எவ்வளவுக்கு இழிவுசெய்வதென்பதுபற்றி சிந்திக்கின்றோம் அல்லவா ... அதேபோலதான் அரசும் மக்கள்தானே அரசு!! :wub:

  • தொடங்கியவர்

கருத்துகளுக்கு நன்றி... நுணாவிலான்..சுகன்..ஜம்மு பேபி...

என்னதான் உண்மை வெளிப்படையாக இருந்தாலும்..

அது கட்டுக்கதை.. புரளி கற்பனை..அப்படி உண்மைகளைக் கேட்டதும்.. அதிர்ந்து போய்.. அதை எப்போதும்..இல்லை என்றே சிங்கள அரசு மறுத்துவருகிறது..

உண்மை நிலை உலகமறியும்..ஒரு நாள் மெய் வெளிப்படும்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அழுகுரல் இல்லா..

அமைதிப்பூங்காவாய்..

எல்லோரும் விரும்பும்

எழில்மிகு தேசம்..

எங்கள் தேசமாய் இருக்கும்..

ஏய்.. உலகமே விழித்துக்கொள்..

உங்கள் கவிதை அழகு.

அமைதிப்பூங்காவாக ஒரு தேசம்

அதுவே எங்கள் தேசமாக வேண்டும்.

அதுவும் விரைவில் வேண்டும்.

உலகம் விழித்துக்கொள்ளுதோ இல்லையொ...

எங்கள் தேசம் விரைவில் எங்களுக்கு கிடைக்கும்!!

நம்பிக்கையுடன் இரு தமிழனே!!

நன்றி விகடகவி

  • தொடங்கியவர்

பார்த்ததற்கும் பதில் கோர்த்ததற்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கத்திக் கத்தியே விழிக்கல்ல.. கவி வரைஞ்சா விழிச்சிடுவினமா என்ன..! முயற்சிக்கு பாராட்டுக்கள் விகடகவி. விகடம் இல்லையே..! :unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

விடகம்...... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

விடகம்...... :unsure:

நம்ம கீபோட் மக்கர் பண்ணிட்டுது. :lol:

  • தொடங்கியவர்

நீங்க வேற..

அப்பிடி ஏதும் வார்த்தை எனக்கு தெரியாம இருக்குமோன்னு..தமிழ் அகராதி எல்லாம் தேடிப்பார்த்தேன்..

உண்மையா எனக்கு தெரியும்.. என்னால ஏதும் மாற்றம் வராதுன்னு..

ஆகால்.. ஒவ்வொரு சம்பவங்கள் ஊரில நடக்கும்போது எங்களை மீறிய உணர்வுகள்.. கவலை..கோபம்..எல்லாம் வரும்.

எனக்கு என் உணர்வுகளை இங்கே பகிர்ந்துக்க யாழ் உறவுகள் இருக்கிறாங்க எண்ட துணிச்சல்ல இங்க வந்து மனக்குமுறல் சந்தேகம் எதையெண்டாலும் கொட்டிடுவேன்..

அதிலே ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.