Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா கொண்டு வரும் புதிய குடிவரவுத் தடைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த தராதரமுள்ள வேலைகளுக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து (அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அமையாத நாடுகளில் இருந்து) ஆட்களை பிரித்தானியாவுக்குள் குடிபெயர தடை விதிக்கப்பட இருக்கிறது.

அதேபோல் பிரித்தானிய வதிவுரிமை பெற்றவர்கள் திருமணம் செய்து அழைத்து வருபவர்களும் எனிமேல் ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னரே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு திருமணம் செய்து அழைத்து வரும் வயதெல்லையும் 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது.

அதுமட்டுமன்றி திறமை அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அப்பாலான நாடுகளில் இருந்து குடிபெயர விரும்புவர்கள் அவர்களின் வயது கல்வித்தரம் அனுபவம் ஆண்டு வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளிகளைப் பொறுத்தே (அவுஸ்திரேலியாவில் உள்ள நடைமுறைக்கு ஒப்ப) பிரித்தானியாவுக்குள் குடிபெயர முடியும்.

http://news.bbc.co.uk/1/hi/in_depth/629/629/7128994.stm

மாணவர்களுக்கும் விசேட புள்ளி வழங்கல் திட்டத்தின் கீழேயே எனிமேல் விசா வழங்கல் நடைபெற இருக்கிறது.

திறமை அடிப்படையில் குடிபெயர விரும்புவர்கள் குறித்த புள்ளிகளைப் பெறினும் ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியம்.

திறமை அடிப்படையில் நிதி,நிர்வாகம், சுகாதாரம், கணணி மற்றும் தொடர்பாடல் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளில் மட்டுமே குடிவரவுக்கு விண்ணபிக்க தகுதி பெற முடியும்.

இந்த நடைமுறைகள் இன்னும் 100 தினங்களில் அமுலுக்கு வர உள்ளன என்று பிரித்தானிய உள்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் மையம் அறிவித்துள்ளது..!

http://news.bbc.co.uk/1/hi/uk_politics/7129187.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஓல்ரைற் அண்னே ஏனண்டா நீங்கள் புரபெசர், விசாவும் குடுப்பாங்கள், ரெசுக்கோல அடுக்கிர எங்கலுக்குத்தான் போராட்டம், அங்க வேலைசெய்யிரதால கொஞ்சமென்டாலும் இங்கிலிசு தெரியும், அதுவுமில்லையெண்டா அதோ கதிதான். :)

அப்ப இனி பிரித்தானிய முன்னேறிவிடும் நெடுக்ஸ் தாத்தா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஆனாலும் துரோகிகளும், விஷமிகளும் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்கு

ஆனாலும் துரோகிகளும், விஷமிகளும் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்கு

அது சரி கருணாவுக்கு என்ன நடந்தது?

சத்தமில்லாம அமெரிக்காவில குடியேறிட்டாரோ என்னவோ?

நீங்கள் ஓல்ரைற் அண்னே ஏனண்டா நீங்கள் புரபெசர், விசாவும் குடுப்பாங்கள், ரெசுக்கோல அடுக்கிர எங்கலுக்குத்தான் போராட்டம், அங்க வேலைசெய்யிரதால கொஞ்சமென்டாலும் இங்கிலிசு தெரியும், அதுவுமில்லையெண்டா அதோ கதிதான். :unsure:

முயற்சி செய்தால் நீங்களும் ஏதாவது படிக்கலாம் தானே. பல்கலைக்கழகம் செல்பவர்களை பெரிய புத்திசாலிகள் என்று நினைத்து விடாதீர்கள். எங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருக்க கூடும். அவ்வளவு தான்!

மிகச்சிறந்த அறிவாளிகள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் தான் உருவாகிறார்கள்!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி செய்தால் நீங்களும் ஏதாவது படிக்கலாம் தானே. பல்கலைக்கழகம் செல்பவர்களை பெரிய புத்திசாலிகள் என்று நினைத்து விடாதீர்கள். எங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருக்க கூடும். அவ்வளவு தான்!

மிகச்சிறந்த அறிவாளிகள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் தான் உருவாகிறார்கள்!

சரியாகச் சொன்னீர்கள்.

இப்ப பல்கலைக்கழகப் படிப்பும் வியாபாரம் ஆகிட்டுது. கேள்விப் பேப்பரைக் கொடுத்து விடை தேட வைச்சிட்டு.. சோதனை என்றும் அதே பேப்பரைக் கொடுக்கிறாங்க...! எந்தப் பிள்ளைதான் இப்படிச் செய்தா பட்டம் வாங்காது...??!

அதாலதான் வேலை வாய்ப்பில்லாத நிலைக்கு பட்டதாரிகள் உயர்ந்திட்டாங்க எண்ணிக்கையால..! :unsure::unsure:

Edited by nedukkalapoovan

இப்ப பல்கலைக்கழகப் படிப்பும் வியாபாரம் ஆகிட்டுது. கேள்விப் பேப்பரைக் கொடுத்து விடை தேட வைச்சிட்டு.. சோதனை என்றும் அதே பேப்பரைக் கொடுக்கிறாங்க...! எந்தப் பிள்ளைதான் இப்படிச் செய்தா பட்டம் வாங்காது...??!

:unsure::unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பல்கலைக்கழகப் படிப்பும் வியாபாரம் ஆகிட்டுது. கேள்விப் பேப்பரைக் கொடுத்து விடை தேட வைச்சிட்டு.. சோதனை என்றும் அதே பேப்பரைக் கொடுக்கிறாங்க...! எந்தப் பிள்ளைதான் இப்படிச் செய்தா பட்டம் வாங்காது...??!

அதாலதான் வேலை வாய்ப்பில்லாத நிலைக்கு பட்டதாரிகள் உயர்ந்திட்டாங்க எண்ணிக்கையால..! :unsure::unsure:

உண்மைதான்.. அநேகமான கம்பனிகள் காளான்கள் போல இருக்கும் பல்கலைக் கழகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் இடங்களில் படித்திருக்கும் பலரின் சீ.வீ. களைப் பார்ப்பதேயில்லை. ஏனெனில் பலருக்கு வேலைக்குத் தேவையான அடிப்படை விடயங்களே தெரியாது,, வேலைத் தலத்தில் கொப்பியடித்துக் காலத்தை ஓட்டமுடியாது, சுயமாகப் பலவிடயங்களைச் செய்யவேண்டுமே!

எனவே வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகரிக்கவே செய்யும்.

உண்மைதான்.. அநேகமான கம்பனிகள் காளான்கள் போல இருக்கும் பல்கலைக் கழகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் இடங்களில் படித்திருக்கும் பலரின் சீ.வீ. களைப் பார்ப்பதேயில்லை. ஏனெனில் பலருக்கு வேலைக்குத் தேவையான அடிப்படை விடயங்களே தெரியாது,, வேலைத் தலத்தில் கொப்பியடித்துக் காலத்தை ஓட்டமுடியாது, சுயமாகப் பலவிடயங்களைச் செய்யவேண்டுமே!

எனவே வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகரிக்கவே செய்யும்.

அடிப்படையில் விடையம் சார்பாக உள்ளார்ந்த ஆர்வம் தேவை. பட்டம் முதல் ஏனைய இன்னேரன்ன தேவைகளிற்காக பல்கலைக்கழகம் வாறது பிறது புள்ளிகளை குறிவைத்து பரீட்சைக்குத் தயார் பண்ணுவது ஒப்படைகளை அணுகுவது. உப்பிடியானவையை கம்பனிகள் வேலைக்கமர்த்த அவர்கள் என்ன ஆச்சிரமமா நடத்திறார்கள்? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.