Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

மாயா

இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ

நல்ல தகவலை இணைத்த நுனாவிலானுக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட திரைப்படமான குத்துவிளக்கு படத்துக்கான காட்சி ஒன்று

தொண்டைமானாறு சந்நதி கோவிலில் எடுக்கப்பட்டது.அதில் எனது அம்மம்மாவும்

ஒரு காட்சியில் தோன்றி நடித்ததாக அம்மா அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வா.

நீங்கள் குறிப்பிட்ட ரத்தத்தின் ரத்தம் திரைப்படம் ஜெய்சங்கர் ,கீதா குமாரசிங்க நடித்த

இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவலை இணைத்த நுனாவிலானுக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட திரைப்படமான குத்துவிளக்கு படத்துக்கான காட்சி ஒன்று

தொண்டைமானாறு சந்நதி கோவிலில் எடுக்கப்பட்டது.அதில் எனது அம்மம்மாவும்

ஒரு காட்சியில் தோன்றி நடித்ததாக அம்மா அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வா.

நீங்கள் குறிப்பிட்ட ரத்தத்தின் ரத்தம் திரைப்படம் ஜெய்சங்கர் ,கீதா குமாரசிங்க நடித்த

இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பு.

மருமகன், பெருமைக்குரிய விடயம்.

நன்றி நுணாவிலான்இணைப்பிற்கு

மேலே மருமகன் குறிப்பிட்டது போல் இரத்தத்தின் இரத்தமே மட்டுமல்ல பைலட் பிரேம்நாத், தீ, நங்கூரம், மோகனப்புன்னகை, வசந்தத்தில் ஓர் வானவில் போன்ற படங்களும் இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டவை.

அதே போல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட "தெய்வம் தந்த வீடு" திரைப்படம் இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதலாவது 70 MM திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகின்றது.

மேலும் அதிசயமான ஒரு உண்மை என்னவெனில் இலங்கையின் முதலாவது சிங்களப் படத்தை (கடவுனு பொறந்துவ) தயாரித்தவர் திரு. எஸ்.எம்.நாயகம் என்ற தமிழர். அதே போல் முதலாவது தமிழ்ப் படமான சமுதாயத்தை தயாரித்து இயக்கியவர் திரு.ஹென்றி சந்திரவன்ஸ என்ற ஒரு சிங்களவர்.

மேலே நான் இணைத்த தகவல்கள் அனைத்தும் திரு.தம்பியையா தேவதாஸ் அவர்களால் தொகுக்கப்பட்ட "இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை" என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு,உங்களின் மேலதிக தகவல்கட்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கு முதலில் எனது நன்றிகலந்த வணக்கங்கள். ஈழத்துத் திரைப்படம் மஞ்சள் குங்குமம் (1970)என்றவுடனே தமிழ்நாட்டில் இதே பெயரில் வந்த ஒரு படம் ஞாபகம் வந்தது. கூகிளில் தேடியதில் பல நாட்கள் தேடியும் கிடைக்காமல் டிமிக்கி விட்ட ஒரு பாடல் கிடைத்தது. :lol: கேட்டு மகிழுங்கள்.

http://myspb.blogspot.com/2007/04/blog-post_09.html

இவ்வளவு படங்கள் இருக்கா, மன்னிச்சிடுங்க எனக்கு இப்பத்தான் தெறியுது இவ்வளவு படங்கள் இருக்கு என்று. நன்றி நுணாவிலன் இணைப்பிற்க்கு நல்ல தகவல்

நன்றி நுணாவிலன் அண்ணா இணைப்பிற்கு பல நல்ல தகவலை தந்து இருக்கிறியள் :unsure: அது சரி நீங்க இதில என்னென்ன படம் பார்தனியள் நான் வந்து ஒரு படமும் பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை அது தான் கேட்டனான்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கூறிய ஒரு படமும் நான் பார்க்கவில்லை,ஜம்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படங்களில நான் பொன்மணி பார்த்த ஞாபகம் இருக்கு.. ஒரேயொரு காட்சிதான் நினைவில இருக்கு. நாயகனும் நாயகியும் காரில பேசிக்கொண்டுபோவார்கள். அவர்கள் வாயசைத்து முடிச்சாப்பில சத்தம் வரும்.. :unsure:

வாடைக்காற்றும் பார்த்திருக்க வேணும்.. ஆனால் பெரிசா நினைவில இல்லை. வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாட்டு ஒரு நல்ல பாட்டு..

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை நான் பாத்தபடம் மாமியார் வீடு.அதுவும் பள்ளிக்கூடத்துக்கு போகாமல் களவாய்ப்போய் வின்சர் தியேட்டரிலை என்ரை ஆருயிர் நண்பர்களோடை பாத்தது .அதை என்ரை ஊர்க்காரன் ஆரோ ஒருத்தன் வீட்டை போய் சொல்லிப்போட்டான் :unsure:(நாசமறுப்பான்)அண்டேலையிருந்து தொடர்ந்து இரண்டு நாளாய் அம்மாவும் அண்ணையும் போட்டி போட்டுக்கொண்டு பூவரசங்கம்பாலை எனக்கு ஒரே சாத்துப்படிதான் :unsure:

அப்புடி வாங்கிக்கட்டியும் என்னாலை அந்த அத்தியாவசியா தேவையை நிப்பாட்ட முடியேல்லை ஆரும் என்னோடை சேர்ந்து படம் பாக்க வந்தாக்கள் யாழ் களத்திலை இருக்கிறியளோ தெரியாது ஏனெண்டால் இரண்டு படத்துக்கு எடுத்த ரிக்கற் காசு நீங்கள் இன்னும் தரேல்லை :D

இணைப்பிலை இணைத்த நுணாவிலுக்கு நன்றி :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்புடி வாங்கிக்கட்டியும் என்னாலை அந்த அத்தியாவசியா தேவையை நிப்பாட்ட முடியேல்லை ஆரும் என்னோடை சேர்ந்து படம் பாக்க வந்தாக்கள் யாழ் களத்திலை இருக்கிறியளோ தெரியாது ஏனெண்டால் இரண்டு படத்துக்கு எடுத்த ரிக்கற் காசு நீங்கள் இன்னும் தரேல்லை

:lol::lol::lol:

இதில் குறிப்பிட்ட திரைப்படங்களில் சில நான் பார்த்துள்ளேன்.

பொண்மனி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஊரை விட்டு மாட்டு வண்டியில் வெளியேறும் கதாநாயகன் பாடும் பாடல்

சொந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன்

அதுதான் எனக்கு திரு நாள்

என் கனவுகள் பலித்திடும் பெருநாள் (2)

ஆயிரம் பரப்பு நிலம் இருக்கும்

அதில் அண்ணனின் உழைப்பு தினம் இருக்கும்

குடிசைகள் மாளிகையாய் மாறும்

என் மனமும் அதுபோல் மகிழ்வேறும் (சொந்த..)

இப்படியே தொடரும் இந்தப்பாடல் எனக்கு ஞாபகம் இல்லை

உங்கள் தகவளுக்கு நன்றி நுணாவிலன்,

நான் பிறக்கும் முன்னே இந்த படங்கள் வந்துவிட்டன....

இப்படி பட்ட நல்ல படங்களை பார்க்க தளங்கள் இருந்தால் கூறுங்கள் சென்று பார்க்கின்றேன்!!

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் குறிப்பிட்ட திரைப்படங்களில் சில நான் பார்த்துள்ளேன்.

பொண்மனி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஊரை விட்டு மாட்டு வண்டியில் வெளியேறும் கதாநாயகன் பாடும் பாடல்

சொந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன்

அதுதான் எனக்கு திரு நாள்

என் கனவுகள் பலித்திடும் பெருநாள் (2)

ஆயிரம் பரப்பு நிலம் இருக்கும்

அதில் அண்ணனின் உழைப்பு தினம் இருக்கும்

குடிசைகள் மாளிகையாய் மாறும்

என் மனமும் அதுபோல் மகிழ்வேறும் (சொந்த..)

இப்படியே தொடரும் இந்தப்பாடல் எனக்கு ஞாபகம் இல்லை

மருமோன் உந்தப்பாட்டு "மாமியார்வீடு" படத்திலை எண்டு நினக்கிறன் :lol:

குமாரசாமி அண்ணா எனக்கு வடிவாக ஞாபகமில்லை எந்தப்படம் என்று.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரியும் அந்தப்படத்தின் கதாநாயகன் ஈழத்து சிவகுமார் என்று அழைக்கப்படுபவர். எனது அப்பா சிவகுமாரின் ரசிகர். அவருடன் நெல்லியடி மகாத்மா தியேட்டரில் இந்தப்படம் பார்த்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.

http://thaayagakkalaignarkal.blogspot.com/...og-post_16.html

வாடைக்காற்று திரைப்படம் நெடுந்தீவில் படமாக்க முடியாமல் போனமைக்கு காரணம், செங்கையாழியானின் கதைக்கு அங்கு எழுந்த தீவிர எதிர்ப்பு. நெடுந்தீவு வாதம் பேசிய இந்த எதிர்பாளர்களில் முக்கியமானவர் தற்போது ஒஸ்லோவில் வாழும் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். பின்னாளில் கருத்துச் சுதந்திரம் பற்றி அவர் எழுதிவருவது அவரது மனமாற்றத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா தரிசனம் தொலைக்காட்சியில் குத்துவிளக்கு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு காண்பிக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.