Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான்: துக்ளக் "சோ"

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் "சோ" தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ராஜீவ் கொல்லப்பட்டதில் தவறில்லை என சோ ஒப்புக் கொள்கிறார். என்றே நினைக்கின்றேன்.

Edited by Iraivan

துக்ளக் சோ தான் ஒரு பெரிய ஏமாற்றுப் பேர்வழி, பொய்யர் என்பதை இந்த செய்தியின் மூலம் நிரூபித்துள்ளார். அரசியல் அடிமுட்டாள் கூட ஒரு அரசியல் கொலை செய்ய பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து கருத்து கேட்பானா? அப்படி கேட்டு விட்டு பத்திரிகையாளர்கள் சொல்லிவிட்டார்களே என்று தன் சதித்திட்டத்தை கை விடுவானா?

இந்த துக்ளக் சோ போன்றவர்களுக்கு இராணுவ நடைமுறைகள் எவ்வளவு தெரியும்? இராஜதந்திர நடைமுறைகளாவது சரிவர தெரியுமா? இவர்கள் எல்லாம் அரசியல் ஆய்வாளர்கள் (?!) அத்தோடு சில அரசியல்வாதிகளுக்கு இவர் அரசியல் ஆலோசகர் வேறு! சோ போன்ற கோமாளிகளின் ஆலோசனை கேட்டு அரசியல் நடத்துபவர்கள் உருப்பட்டமாதிரி தான்

தேசிய தலைவரை கொலை செய்ய இந்தியா சதிதிட்டம் தீட்டியது ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு தெரிந்த உண்மை. பின்பு ஒரு பொதுக்கருத்துக்கு ஏற்ப நம்ப வைத்து கழுத்தறுக்கும் அந்த கீழ்த்தரமான கொலைத்திட்டத்தை திரு.ராஜிவ் காந்தி வாபஸ் பெற்றார் என்று சோ சொல்வது தான் பச்சை பொய்

Edited by vettri-vel

கொல்வதற்காக முழுமுயற்சி செய்தார்கள் . அது பலிக்கவில்லை. அதுதான் உண்மை.

வரலாற்றுப்புத்தகங்கள் உண்மையை பதிந்துள்ளன.

பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார் தீக்சித் - ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவல்

சனிக்கிழமை, டிசம்பர் 8, 2007

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுமாறு, இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என். தீக்சித் உத்தரவிட்டதாக, இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தலைவர் ஹர்கிரத் சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இப்படையின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். இவர் தற்போது பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'Intervention in Sri Lanka' என்ற நூலை சிங் எழுதியுள்ளார். இதில், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்தபோது சந்தித்த அனுபவங்களை அவர் எழுதியுள்ளார்.

அதில் முக்கிய விஷயமாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டி விடுமாறு தன்னிடம் அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீக்சித் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.

தீக்சித் குறித்து தான் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் குறித்து ஹர்கிரத் சிங் கூறுகையில், அமைதி காக்கும் படையின் தலைவராக நான் இருந்தபோது, 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி என்னை தீக்சித் போன் மூலம் தொடர்பு கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன், இந்திய அரசு பேச்சுவார்த்தைளை மேற்கொண்டிருந்த நேரம் அது. என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தீக்சித், நீங்கள் பிரபாகரனை நாளை சந்தித்துப் பேசச் செல்லும்போது, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார் தீக்சித்.

ஆனால் அதை நான் உடனடியாக மறுத்து விட்டேன். இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல் என்பதாலும், இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும் என்பதாலும் இதை ஏற்க நான் மறுத்து விட்டேன்.

பின்னர் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் இதுகுறித்து ஆலோசித்தபோது, அவர்களும் எனது கருத்தையே பிரதிபலித்தனர் என்றார் சிங்.

தன்னைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டது குறித்து பிரபாகரனுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, ஒரு வேளை பின்னர் அவருக்குத் தெரிய வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் சிங்.

பிரபாகரனைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டதை அறிந்துதான், பழிக்குப் பழியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் சிங்.

இந்தியத் தூதராக இருந்த தீக்சித், பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டதாக, முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என். தீக்சித் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/12...rabhakaran.html

சதிச்செயல் செய்தவன் சுற்றவாளி?! அதை சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி?!

இதில் உருவப்பொம்மை வேறு எரிக்கிறார்கள் சில வெட்கங்கெட்டவர்கள்!

Edited by vettri-vel

ராஜீவ் காந்தி என்ன நினைத்தார் என்பது ஒரு புறமிருக்கட்டும். 1987 ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சி ஒன்றில் துக்ளக் 'சோ' வின் பேட்டி ஒன்று பார்த்தேன்.

அதில் அவர் கூறிய தமிழீழ விரோதக்கருத்துக்கள் இப்பவும் எனக்கு நினைவில் இருக்கிறது.

அவர் கூறும்போது ஒரு இடத்தில் "விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கொள்கைகள் எதுவும் கிடையாது.அது தமிழ் மக்களுக்காக போராடவில்லை. இந்த இயக்கத்தினால் நிறைய தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருக்கிற

"நமது இராணுவம் கட்டுப்பாடானது. எனவே முதுகில் சுட்டுக்கொல்லும் வேலையை செய்ய முடியாது. அதனால் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்து விட்டேன் என்றும் அப்புத்தகத்தில் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது."

இத்தோடு "......விதிவிலக்காக விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்திக்க அனுப்பி விட்டு திரும்பி வரும் வழியில் பதுங்கியிருந்து ஜொனியைச் சுட்டுக் கொன்றோம்...." என்றும் எழுதியிருந்தால் அவரது நேர்மையை மேலும் பாராட்டியிருக்கலாம்.

அமைதிப் படைகள்(?) ஈழத்திற்க்கு வந்த போது நேசக்கரங்கள் நீட்டி அன்போடு வரவேற்ற அப்பாவித் தமிழர்கள் ஈவிரக்கமற்ற கூர்க்காப் படைகளால் கொல்லப்பட்டதுவும், பாரதத்தில் ஓடுகின்ற புனித நதிகளான கங்கா, ஜமுனா, காவேரி........... போன்ற பெயர்களைக் கொண்ட எத்தனையோ எமது தமிழ்த் தாய்மார், சகோதரிகள் வல்லுறவுட்க்கு உட்பட்டு கொல்லப்பட்டதுவும் பாரததேசத்தின் கறை படிந்த வரலாறு. அதே நேரத்தில் பகவத் கீதை மூலம் போர் தர்மத்தை எமக்குப் போதித்ததும் நாம் நேசிக்கும் பாரத தேசந்தான்.

இழைக்கப்பட்ட துரோகங்களை கொடுமைகளை மறக்காமலிருப்போம். ஆயினும் எங்கள் ஈழத்தமிழினத்தின் எதிர்கால நல்வாழ்க்கை கருதி மீண்டும் எமது நேசக்கரங்களை பாரத தேசத்தினை நோக்கி உயர்த்திப் பிடிப்போம்.

சிறுபுள்ளி

Edited by Small Point

துக்ளக் சோ தான் ஒரு பெரிய ஏமாற்றுப் பேர்வழி, பொய்யர் என்பதை இந்த செய்தியின் மூலம் நிரூபித்துள்ளார். அரசியல் அடிமுட்டாள் கூட ஒரு அரசியல் கொலை செய்ய பத்திரிகையாளர்களை கூட்டி வைத்து கருத்து கேட்பானா? அப்படி கேட்டு விட்டு பத்திரிகையாளர்கள் சொல்லிவிட்டார்களே என்று தன் சதித்திட்டத்தை கை விடுவானா?

இந்த துக்ளக் சோ போன்றவர்களுக்கு இராணுவ நடைமுறைகள் எவ்வளவு தெரியும்? இராஜதந்திர நடைமுறைகளாவது சரிவர தெரியுமா? இவர்கள் எல்லாம் அரசியல் ஆய்வாளர்கள் (?!) அத்தோடு சில அரசியல்வாதிகளுக்கு இவர் அரசியல் ஆலோசகர் வேறு! சோ போன்ற கோமாளிகளின் ஆலோசனை கேட்டு அரசியல் நடத்துபவர்கள் உருப்பட்டமாதிரி தான்

தேசிய தலைவரை கொலை செய்ய இந்தியா சதிதிட்டம் தீட்டியது ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு தெரிந்த உண்மை. பின்பு ஒரு பொதுக்கருத்துக்கு ஏற்ப நம்ப வைத்து கழுத்தறுக்கும் அந்த கீழ்த்தரமான கொலைத்திட்டத்தை திரு.ராஜிவ் காந்தி வாபஸ் பெற்றார் என்று சோ சொல்வது தான் பச்சை பொய்

வெற்றிவேல்,

சோ ஒரு பத்திரிகைகாரன் என்று ஒரு இடத்தில் குறிப்பிடும் நீங்களே பின்னர் அவர் அரசியல் ஆலோசகர் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். இவை இரண்டு பதவிகளையும் இவரால் வகிக்க முடியாதா? உதாரணத்திற்கு தற்போதய கே.டி.ராஜசிங்கம் என்ற ஏசியன் பபூன் ஆசிரியர் கருணா விவகாரத்தில் மகிந்தவை வழி நடத்தியதாக சண்டேலீடர் தெரிவித்துள்ளதே!

ராஜீவுக்கு அப்படி ஒரு திட்டம் இருந்தது என்று ராஜீவின் கூட்டணியை சேர்ந்த சோ தற்போது ஒப்புதல் அளித்துள்ளது ஒரு முக்கிய திருப்பம்! அதை ஏற்க மறுப்பது எப்படி ஈழத்தமிழருக்கு உதவ முடியும்? ஈழத்தமிழருக்கு எப்போதே தெரிந்த உண்மையாக இது அமைந்த போதும் தற்போதும் ராஜீவின் கொலையை காரணம் காட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்போருக்கு பாதகமான அம்சம்தானே!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சோ, சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் வெளித்தோற்றத்திற்கு கோமாளிகள் போல் தோன்றினாலும் இவர்கள் அனைவருமே தமிழ் தேசியத்தையும், அதன் விடுதலையையும் தீவிரமாக எதிர்ப்பவர்கள். ஆகவே இவர்களின் ஆலோசனைகளும் ரஜீவின் கூட்டத்தின்போது உள்வாங்கப் பட்டிருக்கலாம் என்பதில் சாத்தியமுண்டு. மற்றும்படி சோ கூறுவதுபோல் முதுகின் பின்னால் குத்த விரும்பவில்லை என்பதெல்லாம் தமது தோல்வியை மறைக்க எடுக்கும் நட்வடிக்கைகள். நித்தியாக்குளத்தில் நடந்தது என்னவென்று சோவுக்கு நன்கு தெரிந்திருக்கும் ...! சிலவேளை அது வெற்றியுடன் முடிந்துவிடும் என்று கனவு கூடக் கண்டிருப்பார்கள்.

இந்தியாவிடம் நேசக்கரம் நீட்ட வேண்டுமென்று அன்பர் ஒருவர் கூறியிருந்தார். நீட்டப்பட்ட நேசக் கரங்கள் எத்தனை முறை வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த நண்பருக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நண்பரே, இந்தியா எங்களை கைவிட்டு கன காலம் போய்விட்டது. இன்று நடக்கும் உக்கிர தமிழ் அழிப்பிற்கு சிறிலங்கா அரசிற்கு உதவியும், ஒத்தாசையும் கொடுத்து வருவது வேறுயாருமல்ல, நாங்கள் நேசக்கரம் நீட்டத் துடிக்கும் எமது இந்தியா தான் என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மன்னிக்க வேண்டும், இது உங்கள்மேல் தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாகுதல் அல்ல, மாறாக என்னுடய எனது தாழ்வான கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.