Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் ஆயுள்

Featured Replies

65604422kg4.jpg

மீள் ஆயுள் ஓலிவடிவில்...

உன் தோள்களை விட்டு நகர்ந்தால்

என்னை இழுத்து இழுத்து அணைத்தவனே

இரவில் உலாப் போக

பிடிக்கும் என்பதால்

நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே

உனக்கு பிடித்த பகலை இரவாக்கி

காத்திருக்கின்றேன் என் மரணத்திற்க்காய்

வாழ்வின் இறுதி நாளில்

தொலைத்த உன்னைத் தேடுகின்றேன்

நீ தொலைந்ததை மறந்து

யார் செய்த பாவமடா?

யார் தந்த சாவமடா?

உன்னை காதலித்தபடி

இந்த ஆயுள் என்னை

மறு ஆயுளுக்காக அழைக்கின்றது

நான் சென்று வருகிறேன்

-இனியவள்

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள்,கவிதையும், குரல் வடிவமும் நன்று.

கடல் தந்த போர்வையில் கண்ணயர்வது எப்படி?

தண்ணீர் போர்வை

தாலாட்டும் அலை

முகிலுக்குள் முகம் மறைத்த சூரியன் (ஓரு வேளை சூரியன் நாணுகிறானோ?)

????????

சே..., இந்த இனியவள் ஆதியை ஓவியத்தை இரசிக்க விடாமல் மறுஆயுளுக்கு கூட்டிப் போறா...... ஆளை விடம்மா ஆதி இன்னும் கொஞ்ச நேரம் படத்தை இரசிக்கிறன்

இரவில் உலாப் போக

பிடிக்கும் என்பதால்

நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே

இனி "மீள் ஆயுள்" கவிதை அழகு அதிலும் இந்த வரிகள் பேரழகு வாழ்த்துகள் :lol: ...இரவில் உலா போக பிடிக்கும் என்பதால் நிலாவையே ஒய்வெடுக்க சொல்லி இருகிறார் என்றால் அவரை நான் பார்க்க தான் வேண்டும் :lol: ....உங்கள் குரலில் இந்த கவிதையை வாசித்தது இனிமையாக இருகிறது வாழ்த்துகள் இனி!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

வெந்து போன நெஞ்சத்து

வேதனையிற் கவிதை செய்தால்

எழுதிவைத்த ஏடும் தீப்பற்றும்!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்த பாவமடா?

யார் தந்த சாவமடா?

இனியவள் மேலுள்ள இரண்டு வரிகளும் உண்மையான செயல்பாடுகள் அல்ல.

தோல்வியின்போது அதாவது இயலாமையினால் எங்களால் எங்கள் மனதை தேற்றும் வசனங்கள்.

உங்கள் கவிதை வரிகள் உணர்ச்சிவசப்பட்டு உருவாக்கியமாதிரி இருக்கின்றன.

வாழ்வின் இறுதி நாளில்

தொலைத்த உன்னைத் தேடுகின்றேன்

நீ தொலைந்ததை மறந்து

எனக்கு இந்த வரிகள் விளங்கவில்லை, யாரின் வாழ்வின் இறுதி நாளில்?

எது எப்படியிருப்பினும் உங்கள் கவிதைவரிகள் ரசனையைவிட சோகத்தைக் கொடுக்கின்றன.

  • தொடங்கியவர்

இனியவள்,கவிதையும், குரல் வடிவமும் நன்று.

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ,

நன்றிகள்

  • தொடங்கியவர்

சே..., இந்த இனியவள் ஆதியை ஓவியத்தை இரசிக்க விடாமல் மறுஆயுளுக்கு கூட்டிப் போறா...... ஆளை விடம்மா ஆதி இன்னும் கொஞ்ச நேரம் படத்தை இரசிக்கிறன்

ஆதி நீங்கள் கூறுவது போல் அந்த படமும் ஒரு கவிதை தான்,அதை ரசிப்பதில் தவறில்லை!!

ரசிப்பதுக்கு தானே உங்கள் கண்களை தந்துள்ளார்!!

நன்றி

  • தொடங்கியவர்

இனி "மீள் ஆயுள்" கவிதை அழகு அதிலும் இந்த வரிகள் பேரழகு வாழ்த்துகள் :wub: ...இரவில் உலா போக பிடிக்கும் என்பதால் நிலாவையே ஒய்வெடுக்க சொல்லி இருகிறார் என்றால் அவரை நான் பார்க்க தான் வேண்டும் :wub: ....உங்கள் குரலில் இந்த கவிதையை வாசித்தது இனிமையாக இருகிறது வாழ்த்துகள் இனி!! :lol:

பேபி,

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றி!!

ஆமா இந்த கவிதையை சேகமாம வாசிக்க வேண்டும் என்பத்க்கு பல முறை முயற்ச்சி தந்த பயன் நான் இது!!

நன்றி

  • தொடங்கியவர்

எது எப்படியிருப்பினும் உங்கள் கவிதைவரிகள் ரசனையைவிட சோகத்தைக் கொடுக்கின்றன.

வணக்கம் மைந்தன் ,

உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்!!

இந்த கவிதை எழுத பட்ட சூள்நிலை அப்படியாக இருக்கலாம் ,

உண்மைய சொன்னால். உடல் நிலை நன்றாக இல்லாத காலங்களில்

உயிர் போர நிலையில், எல்லாம் எங்களை விட்டு போன மாதிரி ஒரு உணர்வு ,உண்டாகும்!!

அந்த தனிமையில் இப்படி பட்ட சோகம் வந்தால் எப்படி இருக்கும் என்ற பானியில் எழுத பட்ட கவி இது!!

உங்கள் கருத்துக்கும் வருகைக்கு, நன்றி

மறுபிறப்பு வரை நீண்டு செல்வது காதல் ஒன்றுதான்

அனுபவமே கவிதையானபோது உயிர்ப்பெற்று அலைகிறது கவிதை

  • தொடங்கியவர்

மறுபிறப்பு வரை நீண்டு செல்வது காதல் ஒன்றுதான்

அனுபவமே கவிதையானபோது உயிர்ப்பெற்று அலைகிறது கவிதை

அப்படியா பரனீ??

உங்கள் வருகைக்கு நன்றி

இனி குரலும் கவியும் அழகு. உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இனி குரலும் கவியும் அழகு. உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

நன்றி நிலா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.