Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இராணுவத்துக்கு உதவ இந்தியப் படைகளை அனுப்பும் திட்டமா? - தினமணி

Featured Replies

இலங்கையில் தொடரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையினரை அங்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றை புதுடில்லி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது எனத தமிழகத்திலிருந்து வெளிவரும் தினசரி நாளேடான 'தினமணி' தகவல் வெளியிட்டுள்ளது.

இது விடயத்தில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சென்னை வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன், தமிழக முதல்வரை சந்ததித்து பேச்சு நடத்திய பின் மீண்டும் புதுடில்லி விரைந்தார் என 'தினமணி' தனது செய்திக்கு மேற்கோள் காட்டியுள்ளது.

கருணாநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறிப்பாக இலங்கையில் நிகழும் போர்ச்சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்து என தினமணி குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டம் நாளை புதுடில்லியில் நடைபெறவுள்ளது. தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டங்களில் இன்று கருணாநிதி, மாநில நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்பர். அதற்காக இருவரும் நேற்று புததுடில்லி புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் தான் தினமணி பாதுகாப்புத் தொடர்பான கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்தே தமிழக முதல்வருடன் எம்.கே.நாராயணன் கலந்துரையாடினார். இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படைகளை அனுப்பதல், சில தினங்களுக்கு முன் நடத்தபட்ட தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்தமை ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

உள்நாட்டுப் போர் காரணமாகத் தமிழகத்துக்குள் ஊடுருவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீடிப்பது பற்றிய மத்திய அரசின் முடிவு குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன எனத் தெரிகிறது. எனத் தனது செய்தியில் குறிப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்
:wub: இதுவொன்றுதான் குறைவாக இருந்தது ! இப்போது அதுவும் நடக்கப்போகிறது ! தமிழனின் தலைவிதியை என்னவென்று சொல்வது ?

இந்தியாவின் நேரடியான ஒத்துழைப்புக்கள் தமிழருக்கு எதிரான போரில் இலங்கை அரசிற்கு இன்னும் அதிகரித்த அளவில் வழங்கப்படலாம். ஆனால் இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இதுவொன்றுதான் குறைவாக இருந்தது ! இப்போது அதுவும் நடக்கப்போகிறது ! தமிழனின் தலைவிதியை என்னவென்று சொல்வது ?

விடுதலை என்பது சும்மா கிடைத்திடாது. எமது தேசத்தின் விடுதலை என்பது சிசேரியன் என்றானதன் பின் கத்தி இரத்ததுக்குப் பயந்து பிறக்கிற குழந்தையை தலைவிதி என்று நோகலாமா...??! அது பலவீனத்தின் அடையாலமாகவே தென்படும்..!

சவால்கள் எவ்வகையில் எவ்வழியில் வரினும் அதை சமாளித்து முறியடிக்கும் மனோவலிமைதான் எமது மக்களின் விடுதலைக்கு அடிப்படையாகும். அதை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனதும் வரலாற்றுக் கடமையாகும்..!

Edited by nedukkalapoovan

ஊகங்க்களை வைதே பத்திரிக்கை நடாத்தும் ஜ்ரோப்பிய பதிரிக்கை ஒன்று இருக்கு. அதன் பெயர் பில்ட். அதுபோல இந்தியாவில் விற்கப்படும் பதிரிக்கை தினமனி.

நல்ல பரபர்ப்பான செய்திதான், ஆனாலும் ராணுவத்தை அனுப்புமளவு செல்லாது என்பதே என் கருத்து. அதன் விழைவுகளும் விபரீதமானதென்று அவர்களுக்குத் தெரியும் என்ரே நினைக்கின்ரேன்.

ஆனால் ஒன்று வைத்து குத்தை நம்பினாலும் ...............னை நம்பக்கூடாது என்பது எங்களுக்கு ஒரு அனுபவ முது மொழி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகளவில் படைபலத்தில் முன்னணியில் இருக்கும் இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் படு தோல்வியை தழுவிக்கொண்டவர்கள்.அதன் வடு அவர்களுக்கு என்றுமே நீங்காது.எனவே தங்கள் ஆறாப் பழியை தீர்ப்பதற்கு எந்த வழியையும் தேடுவார்கள்.இந்திய இராணுவமும் றோவும் சேர்ந்து என்றைக்காவது ஒரு நாள் பழி தீர்த்தே தீருவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகளவில் படைபலத்தில் முன்னணியில் இருக்கும் இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் படு தோல்வியை தழுவிக்கொண்டவர்கள்.அதன் வடு அவர்களுக்கு என்றுமே நீங்காது.எனவே தங்கள் ஆறாப் பழியை தீர்ப்பதற்கு எந்த வழியையும் தேடுவார்கள்.இந்திய இராணுவமும் றோவும் சேர்ந்து என்றைக்காவது ஒரு நாள் பழி தீர்த்தே தீருவர்.

ஏன் இப்போது மட்டும் என்ன சும்மாவா இருக்கிறார்கள்? செய்யக் கூடிய அட்டூழியங்களையெல்லாம் ஊமை குசும்பன் மாதிரி பின்னாலிருந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களின் வேலைகள் எல்லாம் நரித் தனமாகத்தான் இருக்கும். சிங்கத்தனமாக அல்ல. அதற்கு நெஞ்சுரம் நிறைய வேண்டும்.

ஒருவேளை புலிகள் பலமிழந்து எலிகளாக மாறிவிட்டால் நீங்கள் சொல்வது போல் நெஞ்சை காட்டிகொண்டு வந்து வீர சாகசம் காட்டுவார்கள்.

செய்தி உண்மையாயின்.......... மாலை போடுறதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.