Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் களமுனையில் 10 மாதங்களாக திணறும் எதிரி: நா.தமிழன்பன்

Featured Replies

மன்னார் களமுனையில் 10 மாதங்களாக திணறும் எதிரி: நா.தமிழன்பன்

மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக எதிரி, தான் நினைத்தபடி நிலங்களைப் பிடிக்க முடியாது தமிழீழ விடுதலைப் புலிகளால் திணறடிக்கப்படுகின்றான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி "வண்ணமுகில்ச்சோலை" நிறுவனத்தில் சிறிலங்கா வான்படையால் அழிக்கப்பட்ட ஒளிக்கலை நிறுவன உரிமையாளருக்கு உதவும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நா.தமிழன்பன் சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாம் போராடும் இனம். நமக்கு எதிரி அழிவுகளை ஏற்படுத்துவான். அழிவைச் சந்திப்போரை நாம் கைதூக்கிவிட வேண்டும். இதுவும் போராட்டத்தின் முதன்மைப் பங்களிப்பு. அந்த வகையில் ஒளிக்கலை நிறுவன உரிமையாளரை கைதூக்கி விட ஏனையோர் முனைவது சிறந்த பண்பு.

மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக விடுதலைப் புலிகளின் பலத்தால் எதிரி திணறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றான். தனது இலக்கான எதனையும் அவன் அங்கு எட்டவில்லை. 10 மாதங்களாக "ஜெயசிக்குறு" போல் சிறிலங்காப் படைகள் திணறுகின்றன.

முழுப்படை வளமும் அங்குதான் நிறுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அணிகள் பலமாக அங்கு நின்று எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை நாள்தோறும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்

  • தொடங்கியவர்

"செய்திகளில் வெளிவராத அளவுக்கு அங்கு நாள்தோறும் படைத்தரப்பிற்கு போராளிகள் அடிகொடுத்து சேதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்"

இதுவே களநிலை. இதனைப் புரிந்துகொள்ள வேண்டியது நமது கடமையும்கூட. பத்திரிகைச் செய்திகள் முழுமையான களநிலைவரத்தை வெளிப்படுத்தாது. அங்கு நின்று சமராடும் தரப்புத்தான் அதனை வெளிப்படுத்த வேண்டும். இந்த இழப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் எதிரி வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன்

அப்படியாயின்

அவருடைய பேட்டியைப்போடும்போது

ஏன் இராணுவ உடையுடன் படம் போடவேணும்

இவர் பத்திரிகையாளரா?

போராளியா?

  • கருத்துக்கள உறவுகள்

உது நமக்கு அவசியமில்லாத விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால்

புலிகளின் குரல்மீதான தாக்குதலை சர்வதேசம் கண்டிப்பதில் சங்கடங்கள் வரலாமல்லவா???

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசனின் வாதத்திலும் நியாயமிருக்கிறது. அரசியல் துறைப் போராளிகளை ராணுவச் சீருடையில் காட்டுவது அவ்வளவு நல்லது அல்ல.

சிங்களவனைப் பொறுத்தவரையிலும் தமிழர்கள் அனைவரும் புலிகளாகத் தெரிந்தாலும், சர்வதேசத்தின் பார்வையில் அரசியல்த் துறை வேறு படைத்துறை வேறு என்ற கருத்து இதன்மூலம் சிறிது பாதிக்கப் படலாம்.

செய்தி வெளியிடும் ஊடகங்கள் இவ்வாறான படங்களைப் பிரசுரிப்பதைத் தவிர்த்தல் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி வெளியிடும் ஊடகங்கள் இவ்வாறான படங்களைப் பிரசுரிப்பதைத் தவிர்த்தல் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

நன்றி

இதுவே என் அபிப்பிராயம்.

அதிலும் தேவையற்ற இடங்களில்இவ்வாறான படங்களைப் பிரசுரிப்பதைத் தவிர்த்தல் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் வாய் மூடி மௌனமாக இருப்பதற்கு அது காரணமும் அல்ல. பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்ற அவர்கள் இவ்விடயத்தில் திறப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறானது.

புலிகளின் குரல் என்று வெளிப்படையாகவே அது புலிகளின் ஒலிபரப்புத் தான் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. அதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை. அதில் சர்வதேசம் சங்கடப்படுவதற்கும் வாய்ப்பில்லை.

ஒரு ஊடக சுதந்திரம் என்பது எதிரிக்கும், உள்ள குரலை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமாகத் தான் கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசு அதை மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாகக் குண்டு வீசிக் கொல்கின்றது. அது தான் அங்கே பிரச்சனையே.

எனவே அவர் தமிழீழ இராணுவ உடையில் இருப்பதால் ஒரு பிரச்சனையும் ஆகப் போவதில்லை

இங்கை கனபேருக்கு தாயக கொள்கைகளிலை நம்பிக்கை இல்லை, நாங்கள் வெல்லாம் என்பதுகூட சந்தேகம்... ! ( இதுக்கை சர்வதேசம் உங்களை நம்பவேணுமே..??)

அட சந்தேகம் இங்கை ஊட்ட படுகிறது.. !! சந்தேகம் கொண்ட ஒருவரை எப்படி தாயகம் உதவி கோரமுடியும்...?? அப்படி நம்பிக்கை தரும் வைகைகளில் இங்கு (( யாழ்களத்தில்)) சொல்லப்படும் சொற்கள் எல்லாம் கெட்ட வார்த்தைகள்...! இதுக்கை சர்வதேசத்தை நம்ப வைக்க போகிறீர்களோ...??

ஏதோ நடக்கட்டும்....!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா! உங்களின் கருத்தில் உள்ள வருத்தத்தை ஏற்றுக் கொள்கின்றேன். நகைச்சுவை, மக்களுடைய மனங்களில் உள்ள அறியாமையை நக்கலடிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. ஆனால் தலைவர் பற்றிய விடயங்கள் போன்ற சீரியசான, விடயங்களில் யோசித்துப் பதில் எழுதிpயருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

இந்திய அரசின் சூழ்ச்சியை எம்மவர் திலீபனையும், குமரப்பா, புலேந்திரன் போன்ற பல தளபதிகளையும் இழந்த பின்னர் தான் கொஞ்சமாவது புரிந்து கொண்டார்கள். அப்படி எம்மவர்கள் சிலரின் நிலையுள்ளது என்பது வேதனையான உண்மை. அது இப்போதும் பெரிய மாற்றங்களுக்குள் உள்ளாகவில்லை.

ஆனால் அதை எம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமானால் கேலி பண்ணுவதால் ஏதுவுமே ஆகப் போவதில்லை. அதைத் தெளிவுபடுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, புலிகள் சொல்லியே கேட்காதவர்கள் நாம் சொல்லியா கேட்கப் போகின்றார்கள் என அலுத்துக் கொள்வது எல்லாம் அவசியமற்ற ஒன்றே.

ஏனென்றால் இம்மக்கள் நம்மவர்கள், கடைசி வரைக்கும் கூடவே பயணம் செய்தாக வேண்டும். அவர்களை இடையில் விட்டுவிட்டும் போக முடியாது.

தூயவன்..

முதலிலை தாயகம் மீட்க்க முடியும் என்பதையும் நாங்கள் சரியான பாதையிலைதான் போய் கொண்டு இருக்கிறம் எண்டதையும் நீங்கள் நம்புகிறிர்களா...??? அப்ப அதை மற்றவர்களுக்கும் சொல்லுங்கோ அதை அவர்களையும் நம்ப வையுங்கோ....! இங்கை அதுக்கே பஞ்சமாய் இருக்கு...

வெற்றி பெறுவதை கூட ஒருவர் நம்பாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்...

இலகுவான வளிகளில் ஒருவருக்கு புரிய வைப்பதை விட்டு இங்கைகூட சில மேதைகள் நையாண்டி மூலம் புரிய வைக்கிறார்களாம்.... பன்னாடை எண்டு மற்றவனை திட்டினால் போதாது எதுக்காக திட்டுகிறார் என்பதை சொல்லும் அறிவு வேண்டாமா...??? அதை புரிய வைக்கும் திறன் இங்கை இருக்கிறதா...???

இங்கை யாழிலையே நையாண்டி மட்டும் பண்ணுறவை சர்வதேசத்துக்கு புரிய வைக்க நினைப்பதை என்ன சொல்லுறது...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஷ்கொ எனும் ஐ.நா. நிறுவனம் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது( இக்கண்டனத்தால் வந்த நண்மைகள் என்றால் எதுவும் இல்லைதான்).

தமிழன்பனின் செய்தியோடு வந்த புகைப்படம் புலிகளால் போடப்பட்டது அல்ல, மாறாக அச்செய்தியை பிரசுரித்த இணையத் தளத்தால் பிரசுரிக்கப்பட்டது. அதைத்தான் தவறு என்று சொல்லியிருந்தோம்.

நீங்கள் எல்லாரும் சொல்லியவாறு சர்வதேசத்தால் எந்தப் பயனும் இல்லைதான், ஆனாலும் இன்றும் புலிகள் 2001 யுத்த நிறுத்த உடன்பாட்டை மதித்து நடப்பதற்கு காரணமும் அதே சர்வதேச அபிப்பிராயம் தான்.

இங்கே களத்தில் எழுதும் எல்லாருக்கும் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கு, யாரும் யாருக்கும் அந்த நம்பிக்கயை ஊட்ட வேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளில் வெளிவந்ததை விட அதிகமாக

மன்னார் கள முனைகளில்

இராணுவத்துக்கு பேரிழப்பு

புலிகளின் பிரமுகர் தெரிவிப்பு

மன்னார் கள முனையில் சமீப காலமாக செய்திகளில் வெளிவந்ததைவிட அதிகமாக இராணுவம் பேரிழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தை மீட்கப் புலிகள் போர் மூலம் தேவைக்கு அதிகமாகவே செய்துவிட்டார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் அரசியல் ரீதியாக, இராஜதந்திர ரீதியாகப் பல விடயங்களை புலம் பெயர் தமிழர் ஒழுங்காகச் செய்தால் தாயக மீட்பு விரைவுபடுத்தப்படும்.. ஆனால் நடப்பதோ வேறு!! தங்களுடைய சில்லறை விடயங்களைத் தீர்த்து வைக்கக்கூட தாயகத்தில் உள்ள புலிகளின் தலையீடு தேவை என்ற நிலையில்தான் புலம்பெயர் செயற்பாடுகள் உள்ளன..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்பன் 1984 ம் ஆண்டில் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர், இந்திய இராணுவ வருகைக்கு முன்னர் யாழில் நடந்த போர்களில் 'ஜவான்' என்ற பெயரில் பங்குபற்றியவர். 1990 களில் நடந்த யாழ் கோட்டை முற்றுகையில் ஒரு காலை இழந்தபின் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் ஆனார். இன்றும் முதலில் போராளி பின்னர் தான் பத்திரிகையாளர், சிறந்த புகைப்படக்கலை நிபுணர்.

Edited by RishiK

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரிசிக், உங்கள் தகவலுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.