Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்திற்காக பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு சிங்களவர்களில் சிலர் தற்போது முன்னிற்கின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணத்திற்காக பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு சிங்களவர்களில் சிலர் தற்போது முன்னிற்கின்றனர்

[21 - January - 2008]

* ஹொரணையில் பிரதமர் தெரிவிப்பு

சிங்கள மக்களில் சிலர் பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கவும் சேவைகளை செய்யவும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதென்பது பெற்றோரைக் காட்டிக் கொடுப்பதற்கு சமனானதென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹொரணையில் வெள்ளிக்கிழமை புதிய பொலிஸ் கட்டிடத்தை திறந்துவைத்து பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் இங்கு மேலும் பேசியிருப்பதாவது;

"தெற்கில் நிராயுதபாணிகளாகவிருக்கும் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நினைத்த நேரங்களிலெல்லாம் மனிதப் படுகொலைகளைச் செய்யும் மிலேச்சத்தனமான செயல்களை எந்த மதமும் அனுமதிக்காது. பொதுமக்கள், முப்படையினர், பொலிஸார், அரசியல் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், மதத் தலைவர்கள் என்று பலரையும் படுகொலை செய்து தனி இராச்சியத்தை பெறும் பயங்கர வாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

இன்று குற்றச்செயல்களை வேண்டுமென்றே ஏற்படுத்தும் வேலைத் திட்டமொன்று இருக்கிறது. எமது சில சிங்கள மக்கள் பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கவும் சேவை செய்யவும் முன்னிற்கிறார்கள். பணத்துக்காக ஏன் தாய் நாட்டையே காட்டிக் கொடுக்கிறீர்கள், பிறந்த நாட்டையே காட்டிக்கொடுக்கிறீர்கள்? பிறந்த தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதென்பது தனது பெற்றோரைக் காட்டிக் கொடுப்பதற்கு சமனாகும்.

பிறந்த நாட்டை நேசிக்க வேண்டுமல்லவா? பணத்தினால் மட்டும் ஒருவனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைந்துவிடாது. இன்றைய சூழ்நிலையில் எமது பொறுப்பும் கடமையும் என்னவென்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். இந்த நாட்டில் சமாதானத்தையும் பண்பாட்டையும் ஏற்படுத்த எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அணி திரள வேண்டுமென சகலரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

எமது படையினரின் திறமை காரணமாக கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவர அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. தற்போது தமிழ், சிங்களம், முஸ்லிம் என சகல இன மக்களும் அங்கு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

நீண்டகாலமாகவே குரோதமான யுத்தத்தினால் நாசகரமான அனுபவங்களுக்கு முகம் கொடுத்திருந்த கிழக்கு மாகாண மக்கள் இன்று எம்முடன் இருக்கின்றனர். அரசாங்கம் என்ற வகையில் நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் காண்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளை புரிந்துகொண்டு எமக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்க முன்வந்திருக்கின்றனர். அழிவடைந்துள்ள வடக்குக் கிழக்கை மட்டுமல்லாது தெற்கிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல எமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது."

http://www.thinakkural.com/news/2008/1/21/...s_page44476.htm

  • கருத்துக்கள உறவுகள்

மிக சுகமாக காசு சம்பாரிக்க சிங்கள மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இப்போ பிரதமருக்கு கொஞ்சம் புத்தி தெளிந்திருக்கு. இனி அவர்தங்களுடன் இருக்கும் தமிழ்குழுக்கள்,மற்றும் சங்கரியார் எல்லோரையும் கூப்பிட்டு 'நீங்களும் இனிமேல் பதவிக்கும்,பணத்துக்கும் ஆசைப்பட்டு உங்கட நாட்டையும் காட்டிக் கொடுக்கவேண்டாம்" என்று சொல்லி விரைவில் அனுப்பிவைப்பார் பாருங்கோ! :lol::wub:

தலையாட்டிகளை பெத்தவங்களே நீங்கள்தானே? அதுசரி... நீங்கள்மாத்திரம் அமச்சராகி காசு சம்மாதிக்கலமென்றால், யுத்தமென்றும் ஆயுத கொள்வனவென்றும்கா சம்பாதிகலாமென்றால், சாதாரண சிங்களவனுக்குமாத்திரம் ஏன் ஏலாது?

காட்டிக்குடுக்குறது உங்கட ஆமிக்காரந்தான், அவாவில 35000 40000 மெண்டு செர்த்தனிங்கள்தானே அனுபவிங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
:lol: மக்களின் பெயரால் மனிதாபிமானப் போர் நடத்தும் மகிந்த தன் சொந்த மக்களையே ஏழைகளாக்கி விட்டிருக்குது. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம் எப்படியாவது வயிற்றைக் கழுவத்தானே வேண்டும் ? அது புலிகள் தரும் பணமாயிருந்தால் என்ன , அரசு தரும் பணமென்றால் என்ன ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவிக்காகவும் பணத்திற்காகவும் இலங்கைத்தீவையே சுடுகாடாக மாற்றுவதற்கு துணிந்த மகிந்த கொம்பனி இந்த வசனத்தை சொல்லுறதுதான் பெரிய காமடி! ஐயோ! ஐயோ.. :P

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் தமிழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன !

தமிழர்கள் எப்போதோ இருந்தே செய்கிறார்கள். சிங்களவர்களும் அவ்வழி தொடர்கிறார்கள்.உலக நாடுகள் பலவற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன.நடக்கின்றன.

Edited by nunavilan

சிங்கள இனத்தில் இருந்து எத்தனை பேர் நாட்டுமக்களின் நலனுக்காக வாழ்ந்திருக்கினும்? மகிந்த கூட்டத்தில இருந்து நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஆமிக்காரர்கள் வரை எல்லோரும் பணத்திற்க்கு ஆசைப்பட்டுதானே அரசியலிலையும் போர்புரியவும் களத்தில இறங்கியுள்ளார்கள்.

அட கனக்க ஏன் மகிந்தவின்ர அரசுக்கு கூட்டம் கூட்டமா கட்சி மாறினவங்களெல்லாம் ஏதோ நாட்டுப்பற்றிலே போணவங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடன் இந்த நீண்ட பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:

கருணா, பிள்ளையான், டக்கிளசு, சித்தார்த்தன், ஆனந்த சங்கரி, வரதராஜப் பெருமாள், சிறீதரன், லச்சுமனன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம்....என்ன பெரிய பட்டியல் என்று எதிர்பார்த்தேன் அதுக்குள்ளால முடிந்து விட்டதே ?!!!!!

இவர்கள் காசுக்காக மட்டுமல்ல, வேறு வேறு விஷயங்களுக்காகவும் விலை போவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.