Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டாம் பூச்சியின் கனவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thumb-1934451.jpg

பட்டாம் பூச்சியின் கனவு

மனம் வலிக்கிறது.

சம்பிரதாயச் சடங்கின் வடிவில்

கழுத்தை சுற்றிப் பொன்நாகம் பளபளக்கிறது.

அவளுக்கு கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்..

உடல் அவளுக்கானதாக இல்லை.

முதல் முத்தம், முதல் தழுவல் வலியாக..

ஒரு படர்கையின் கனத்தில் பெண்மை நொறுங்கிப் போனது.

அவள் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது.

இன்னொரு வடிவம் அவளுள் சங்கமிக்க

அவள் அனுமதியின்றி எல்லாம் ஆகிவிட்டது.

நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது

இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் படர்ந்த இன்னொரு வடிவம்

வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில்

அவள் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது.

உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம்

அடிக்கடி பீறிட்டுப் பொங்கி எழுகிறது.

வெறுமை சூழ்ந்து மௌனித்த விழிகளுக்குள்

வைராக்கியம் வளர்கிறது.

அவளில் படரும் வடிவம் வெற்றிக்களிப்பில்

இன்னும் நெஞ்சு நிமிர்த்தட்டும்.

பாச விலங்குகளின் உடைப்பில் வானம் விரிகிறது.

பசுமை சூழும் அவள் இதயவனத்தில்

பட்டாம் பூச்சி பறக்கும் கனவு வளர்கிறது.

Edited by valvaizagara

  • 1 month later...

சகீரா,

பாச விலங்குகளின் உடைப்பில் வானம் விரிகின்றது என்று சொல்லுறீங்கள். இதே கருத்து ஆண்களுக்கும் பொருந்துமா? வானத்தில் விரிந்து செல்வதற்கு பாசம் எப்படி ஒரு தடையாக இருக்கமுடியும்? :wub: பாசம் என்று நீங்கள் எதை சொல்லுறீங்கள்? பாசம் இல்லாத பறப்பு என்பது என்னைப் பொறுத்தவரை ஆள் இல்லாத விமானம் போன்றது. அங்கு வெறும் சூனியம் மாத்திரமே உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம் பூச்சியின் கனவு

மனம் வலிக்கிறது.

சம்பிரதாயச் சடங்கின் வடிவில்

அவனது காலில் மெட்டி பளபளக்கிறது.

அவனுக்குக் கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்..

உடல் அவனுக்கானதாக இல்லை.

முதல் முத்தம் முதல் தழுவல் வலியாக..

ஒரு ஆக்கிரமிப்பின்?... கனத்தில் ஆண்மை !! நொறுங்கிப் போனது.

அவன் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது.

இன்னொரு வடிவம் அவனில் படிய

அவன் அனுமதியின்றி?????....!!! எல்லாம் ஆகிவிட்டது.

நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது

இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் ஆக்கிரமித்த!!!!! இன்னொரு வடிவம்

வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில்

அவன் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது.

உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம்

அடிக்கடி பீறிட்டுப் பொங்கி எழுகிறது.

வெறுமை சூழ்ந்து மௌனித்த விழிகளுக்குள்

வைராக்கியம் வளர்கிறது.

அவனை ஆக்கிரமிக்கும் வடிவம் வெற்றிக்களிப்பில்

இன்னும் நெஞ்சு நிமிர்த்தட்டும்.

பாச விலங்குகளின் உடைப்பில் வானம் விரிகிறது.

பசுமை சூழும் அவன் இதயவனத்தில்

பட்டாம் பூச்சி பறக்கும் கனவு வளர்கிறது.

:unsure::lol::unsure::):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில சொல்லியிருக்கிற நிலை ஆண்களுக்கு ஏற்பட முடியாத ஒண்டென்டு மிகவும் நேரமெடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு பேப்பர் கட்டுரையில வெளிவந்த தாலியறுப்பு ஒரு மிகையான தீவிரவாதமெண்டால், கட்டுற தாலியெல்லாம் பொன்விலங்கு எண்டு சொல்லுறதும் மற்றப் பக்கத் தீவிர வாதம் என நான் நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் உங்களுக்கு இந்தக் கவிதை புரியவில்லையா? அல்லது இந்தத் தாலியைப் பற்றி ஏதாவது கருத்தாடல் துவக்கவேண்டும் என்பதற்காக உங்கள் கருத்தாக இதைப் பதிகிறீர்களா?

தாலி என்பது விலங்கா இல்லையா என்பது அதை அணிந்திருக்கக் கூடியவர்களின் வாழ்நிலையைப் பொருத்தது. சிலருக்கு விலங்காக இருக்கும் தாலி பலருக்கு ஒரு அன்புச் சின்னமாக இருக்கிறது. வேறு சிலருக்கு ஒரு திருமண அடையாளமாக இருக்கிறது. அன்புச் சின்னமா?, திருமண அடையாளமா?, விலங்கா? என்பது அவரவர் வாழ்நிலையைப் பொருத்தது. இந்தக் கவிதையில் தாலி என்பது ஒரு ஆதிக்க சின்னமாக இருக்கிறது. விளக்கம் போதாது என்று நீங்கள் விவாதத்தைத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் உங்களுக்கு இந்தக் கவிதை புரியவில்லையா? அல்லது இந்தத் தாலியைப் பற்றி ஏதாவது கருத்தாடல் துவக்கவேண்டும் என்பதற்காக உங்கள் கருத்தாக இதைப் பதிகிறீர்களா?

தாலி என்பது விலங்கா இல்லையா என்பது அதை அணிந்திருக்கக் கூடியவர்களின் வாழ்நிலையைப் பொருத்தது. சிலருக்கு விலங்காக இருக்கும் தாலி பலருக்கு ஒரு அன்புச் சின்னமாக இருக்கிறது. வேறு சிலருக்கு ஒரு திருமண அடையாளமாக இருக்கிறது. அன்புச் சின்னமா?, திருமண அடையாளமா?, விலங்கா? என்பது அவரவர் வாழ்நிலையைப் பொருத்தது. இந்தக் கவிதையில் தாலி என்பது ஒரு ஆதிக்க சின்னமாக இருக்கிறது. விளக்கம் போதாது என்று நீங்கள் விவாதத்தைத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அன்புள்ள சகாரா,

விளங்காமலிருக்க இது ஒன்றும் ஆழமான பொருள் பொதிந்த கவிதையல்லவே. நான் சொன்னதும் சிக்கலான கருத்தல்ல. தாலியறுப்பும் தாலி வெறுப்பும் இரண்டு பக்கத் தீவிரவாதங்கள் என்றேன். இதில் விளக்கக் குறைவு எங்கே வெளிப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. இது ஒரு கருத்து. ஒரு ஆக்கத்திற்குக் கருத்துக்களை எதிர்பார்த்துத் தான் பொதுவான இடத்தில் படைப்புகளை ஒட்டுகிறீர்கள். பிறகு அபிப்பிராயங்களைக் கோபாவேசத்தோடு எதிர் கொள்வது ஏன்? எப்போதுமே மற்றோர் உங்கள் கருத்துக்களை/ஆக்கங்களை ஆகா ஓகோ என்று புகழ வேண்டுமென்றால் நியாயமான எதிர்பார்ப்பா அது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் நீங்கள் கூறவருகிற விடயம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இங்கு எங்கு உங்களுடன் கோபாவேசத்துடன் உங்கள் கருத்தை எதிர்த்தேன். இயல்பாக நான் எழுதும் எழுத்து பார்ப்பதற்குக் கோபாவேசமாக தோன்றினால் மன்னித்துவிடுங்கள். நிற்க. இதுவரை நான் கோபமாக இங்கு எழுதியதாக ஞாபகம் இல்லை. உண்மையிலேயே கோபமாக வாதாடும் நிலைக்கு நான் வந்தால் அதை எப்படிக் கூறுவீர்கள்?

தாலிவெறுப்பு தீவிரவாதம் என்று சொல்கிறீர்கள். தாலி என்பது ஆதிக்கச் சின்னமாக மாறியிருந்தால் அதை வெறுப்பது தீவிரவாதம் என்று சொன்னால் உங்கள் அகராதியில் தீவிரவாதம் என்பதன் பொருள் என்ன?

பட்டாம் பூச்சியின் கனவு

மனம் வலிக்கிறது.

சம்பிரதாயச் சடங்கின் வடிவில்

அவனது காலில் மெட்டி பளபளக்கிறது.

அவனுக்குக் கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்..

உடல் அவனுக்கானதாக இல்லை.

முதல் முத்தம் முதல் தழுவல் வலியாக..

ஒரு ஆக்கிரமிப்பின்?... கனத்தில் ஆண்மை !! நொறுங்கிப் போனது.

அவன் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது.

இன்னொரு வடிவம் அவனில் படிய

அவன் அனுமதியின்றி?????....!!! எல்லாம் ஆகிவிட்டது.

நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது

இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் ஆக்கிரமித்த!!!!! இன்னொரு வடிவம்

வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில்

அவன் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது.

உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம்

அடிக்கடி பீறிட்டுப் பொங்கி எழுகிறது.

வெறுமை சூழ்ந்து மௌனித்த விழிகளுக்குள்

வைராக்கியம் வளர்கிறது.

அவனை ஆக்கிரமிக்கும் வடிவம் வெற்றிக்களிப்பில்

இன்னும் நெஞ்சு நிமிர்த்தட்டும்.

பாச விலங்குகளின் உடைப்பில் வானம் விரிகிறது.

பசுமை சூழும் அவன் இதயவனத்தில்

பட்டாம் பூச்சி பறக்கும் கனவு வளர்கிறது.

:lol::D:D:D:D:D

உங்கள் நகைச்சுவைத் திறமையைப் பாராட்டுகின்றேன் சகீரா. :lol:

ஆனாலும், பெண்களிடம் திருமணம் செய்தபின் அடிமையாக அடங்கி பயத்துடன் வாழும் எத்தனையோ ஆண்களை நான் எனது நெருங்கிய உறவினர்களிடையே கூட கண்டுள்ளேன்.

பல பெண்கள் இல்லாத ஒன்றை அதாவது வித்தியாசமாக ஏதாவது செய்வதை தான் சுதந்திரமாக நினைக்கின்றார்களோ என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. எனவேதான்..

பாச விலங்குகளின் உடைப்பில் வானம் விரிகிறது... என்ற பதம் எனக்குள் சில கேள்விகளை எழுப்பியது.

நன்றி!

உங்கள் நகைச்சுவைத் திறமையைப் பாராட்டுகின்றேன் சகீரா. :blink:

ஆனாலும், பெண்களிடம் திருமணம் செய்தபின் அடிமையாக அடங்கி பயத்துடன் வாழும் எத்தனையோ ஆண்களை நான் எனது நெருங்கிய உறவினர்களிடையே கூட கண்டுள்ளேன்.

பல பெண்கள் இல்லாத ஒன்றை அதாவது வித்தியாசமாக ஏதாவது செய்வதை தான் சுதந்திரமாக நினைக்கின்றார்களோ என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. எனவேதான்..

பாச விலங்குகளின் உடைப்பில் வானம் விரிகிறது... என்ற பதம் எனக்குள் சில கேள்விகளை எழுப்பியது.

நன்றி!

மாப்பு ஆதியை பாத்து இதை எழுதவில்லைத்தானே...

ஆதி அடங்கி கிடக்கிறதை அறிஞ்ச ஒரே ஆள் நீதான்பா...

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தாடலுக்கு நன்றிகள்

கவிதை பிடித்திருக்கிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.