Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்துவாரம் பகுதியில் குண்டு வெடிப்பு

Featured Replies

இன்று அதிகாலை 7:15மணியளவில் படையினரின் தேடுதலின் போது குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

ஜானா

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

வெளில போனாலும் வெடிக்குது வீட்டுக்குள்ள இருந்தாலும் வெடுக்குது... இதென்ன அனியாயமா போச்சு

பாதுகாப்பு அமைச்சு சந்தேகத்துகிடமான விடுதி ஒன்றின் அறையை சோதனையிட முனைந்த போது அந்த அறையில் இருந்த நபர் குண்டினை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது அத்துடன் படங்களையும் வெளியிட்டிருக்குது

மகிந்தவிற்கு எல்லாப் பக்கத்தைலையும் அழுத்தம் கூடுது போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்துவராம் பகுதியில் இனி கெடுபிடி அதிகமாகப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு அலுத்மாவத்தையில் குண்டு வெடிப்பு 7 பேர் காயம் (புகைப்பட இணைப்பு)

[Friday February 29 2008 04:09:02 AM GMT] [யாழினி]

Tamilwin.com சிறிலங்காத் தலைநகர் கொழும்பு மோதரையில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்

மோதரை ஹிப்பாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இன்று வெள்ளிக்கிழமை காலை 6.05 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

தமக்கு கிடைத்த நம்பகரமான புலனாய்வுத் தகவலையடுத்து காவல்துறைக் குழுவினர் மேற்படி வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்தவரைக் கைது செய்ய முயற்சித்த போதே அவர் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று மோதரை காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்கொலைக் குண்டுதாரி தங்கியிருந்த மேல் மாடி வீட்டுக்கு இன்று காலை 6:00 மணியளவில் சென்ற காவல்துறை குழுவினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து நின்றதுடன் வீட்டின் கதவைத் திறக்குமாறு சத்தமிட்டுள்ளனர்.

எனினும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சுமார் 5 நிமிடங்கள் கழித்து வீட்டின் கதவை பலவந்தமாக திறந்து உள்ளே செல்ல காவல்துறையினர் முயற்சித்த போதே திடீரென பாரிய சத்தத்துடன் வீட்டிற்குள் குண்டு வெடித்துச் சிதறியது.

இதில் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்த 4 காவல்துறையினரும் அயலில் இருந்த 3 பொதுமக்களும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் காவல்துறையைச் சேர்ந்த பெண் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனைப் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

குண்டுவெடித்த வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீண்ட தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளன. குண்டுவெடித்த இடத்தில் இருந்து 4 வீடுகளுக்கு அப்பால் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியவரின் தலை மட்டும் அடையாளம் காணமுடியாத வகையில் சிதைவடைந்து தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவரின் உடலின் ஏனைய பாகங்கள் சிதறியுள்ளன.

தாக்குதலின் போது அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியவர் எனக் கருதப்படுபவரிடம் இருந்த ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் பல மீற்றர் தூரத்திற்கு அப்பால் வீசப்பட்டுக்கிடந்தன. அத்துடன் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினரின் தொப்பிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் நீண்ட தூரத்திற்கு அப்பால் பற்றைக்குள் வீசப்பட்டுக் கிடந்தன.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் குவிந்த அதிரடிப் படையினரும் மேலதிக காவல்துறையினரும், படையினரும் நீண்டநேரமாக அங்கு தீவிர தேடுதல் நடத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு என காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இளைஞர்கள் இருவர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அங்கு இடம்பெற்ற தேடுதலில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களின் விபரம் வருமாறு:

தற்கொலைக் குண்டு அங்கிகள் - 03

கிளைமோர் குண்டுகள் - 06

கைக்குண்டுகள் - 04

சி- ரக வெடி மருந்து பைகள்

நாணயத்தாள்கள் என்பனவே கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேவேளை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில

இது தாங்களாகத் தேடிக்கொண்ட வினை. தாங்கள் அகலக்கால் வைத்துவிட்டதை அரசாங்கம் எப்போதுதான் உணரப்போகுதோ?

மோட்டுச் சிங்களவங்கள் எங்கை உதுகளை உணரப் போறாங்கள். நாங்கள் பாருங்கோ இதே அதே எப்பவெண்டாலும் எந்த நேரத்திலும் வைகுண்டத்திற்கு புட்பகவிமானத்தில பறக்கலாம்.

இதுக்குள்ளை ஏன் புட்பக விமானத்தைக் கொண்டு வாறீங்கள்? உங்கட கதையைப் பார்க்க எங்கட போராட்டம் வளர்ச்சியே அடையவில்லை எண்ட மாதிரியல்லோ இருக்கு.

வெளில போனாலும் வெடிக்குது வீட்டுக்குள்ள இருந்தாலும் வெடுக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி விடுகிறீர்கள்

ஆனால் எமக்காக ஒரு உயிர் தான்நினைத்ததை அடையாமல் அழித்திருக்கிறது

பகிடி விடுகிறீர்கள்

ஆனால் எமக்காக ஒரு உயிர் தான்நினைத்ததை அடையாமல் அழித்திருக்கிறது

நீங்கள் கூறுவது சரி... அந்த உயிர் விலை மதிக்க முடியாது.... அவனது உயிர் சாந்தி அடைய (அவனை) வணங்குகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.