Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளவரல் (வீடு செல்லல் பற்றி...)--- வாசுதேவன்.

Featured Replies

காணவல்லாயோ எனும் எனது கவிதையின் மீது கண்ணெறிந்தோர் அனைவருக்கும் குறிப்பாக அனஸ் அவர்களுக்குமாக இன்னொமொரு கவிதை.

"ஊருக்குப் போனேன் " எனும் தலைப்பில் எனது பயண அனுபவத்தையும் வீடு செல்லும் அனுபவத்தையும் சில காலத்திற்கு முன் இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். பலர் வாசித்துப் பாராட்டினார்கள். இங்கு நான் வெளியிடும் இக்கவிதையும் "வீடு செல்லலுடன்" தொடர்புடைய ஒரு கருத்தியலை முன்வைக்கிறது.

புகலிட வாழ்க்கையும் அதன் அனுபவப்படிவுகளும் உள்நோக்கிய பார்வையினூகக் கவனிப்படவேண்டியவை என நான் கருதுகிறேன். சந்தமும் சொல்லடுக்கும் மாத்திரமே கவிதை என எண்ணிய காலம் அவதியாகிவிட்டதென நான் கருதுகிறேன். அதற்காக சந்தமும் சொல்லடுக்கும் தேவையற்றவை என நான் சொல்லுவதாகக் கருத வேண்டாம்.

ஆனால், சாதாரணமாக இலகுவான சொற்களால் மிகவும் நுட்பமான கருத்தைக் கவிதையில் வெளியிடலாம் எனும் நம்பிக்கை எனக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து கொாண்டே செல்கிறது. சொற்கள் சாதாரணமாக உள்ளன என்பதற்காகவோ அல்லது சந்தமும் எதுகை மோனை அழகும் இல்லையென்பதற்காகவோ கவிதையின் கூறுபொருள் இலவானதென்றும் கூறுமுடியாது.

"மீளவரல்" எனும் பின்வரும் என் கவிதைபற்றி என் இலக்கிய நண்பரகள் பலருடன் உரையாடியிருக்கிறேன். அவர்களில்் சிலரே கூறுபொாருளின் மையத்தை இலகுவாகக் கண்டடைந்தார்கள்.

வாசகர்களின் வாழ்பனுபவ மட்டத்திற்கேற்றாற் போல் இலக்கிய வெளிப்பாடுகள் அவர்களில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது உண்மையெனினும், தேவையற்ற முன்னனுமானங்களிலிருந்து விடுதலைபெறுதலினால் வாசகர்கள் படைப்பாளியின் கூறுபொருளை இலகுவாக வேட்டையாடிவிடமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

கவிதையை வாசியுங்கள்.

யார் அவள் என்று கூறுங்கள்.

________________________________________________________________________________

_______________

மீளவரல்.

------------------------------------------------------------

நீ அழகானவள்.

அபத்தங்களிடமிருந்து

தப்பியோடி நான் உன்

போதையூட்டும்தெருக்களில்

அலைந்து திரிகிறேன்.

வாசிப்பதற்கு

எவ்விதக் கருவியும்

இல்லாமல்,

என் மன மடிப்புகளில்

கிறுக்கி வைத்திருக்கும்

சோக இசைக்குறியீடாய்

நீ பதிந்துகிடக்கிறாய்.

சிலவேளைகளில் நீ

சூனியக்காரியைப் போல்

வெருட்டுகிறாய்.

சிலவேளைகளில்

நீ காதலிபோல்

ஊமையாகப் பேசி

மருட்டுகிறாய்.

உன் மாளிகையில் உள்ள படுக்கைகளில்

மட்டுமே தூக்கம் தூய்மையானதென்கிறாய்.

கனவுகள் வழிந்து அசுத்தப்படாத

தலையணைகளே உன் கட்டில்களை

அலங்கரிப்பதாகக் கூறுகிறாய்.

உன் மாளிகைகளின் சாளரங்களிலிருந்து

பார்த்தால் சூரிய உதயமும்

அஸ்தமனமும் ஒரே நேரத்தில்

தெரியுமென்கிறாய்.

உன் தலைவாசலைக்

கடந்து உள்ளே வந்துவிட்டால்

காலம் அழியுமென்கிறாய்.

இல்லாத தன் வீட்டின்

முன்னால் மனித மனம்

போட்டிருக்கும் வெறும்

கோலமே அதுவென்கிறாய்.

கதவைத்திறந்து வாயிலில்

நின்று கண் சிமிட்டி அழைக்கிறாய்.

அழகான உன் மாளிகையின்

பின்னாலுள்ள இருள்,

மயக்கம் தரும்

உன் புன்னகையையும்

மீறி அச்சுறுத்துகிறது.

நானோ முகவரி இழந்தவன்.

வீடின்றி அலைபவன்.

அந்நியன்.

சுமக்கவோ இறக்கிவைக்கவோ முடியாத

எனது இரகசியங்களை ஒன்றுவிடாமல்

கூறிமுடிப்பதற்கு உன்னைத்தான்

நான் தேர்ந்திருக்கிறேன்.

அதனால்தான் உன் மாளிகையின்

முன்னால் தினமும் பயணம்

செய்கிறேன்.

உன்னைப் பார்காமலே போவது

போல் பாசாங்கு செய்கிறேன்.

நீயோ தினமும் உன்வாசலில்

புன்னகைத்து நிற்கிறாய்.

கதவைத்திறந்து வாயிலில்

நின்று கண் சிமிட்டி அழைக்கிறாய்.

நானோ வீடின்றிப் பயணிக்கும் அந்நியன்.

உன்னைப் பார்க்காமலே

போவதுபோல் இன்னமும்

எத்தளை நாட்களுக்கு நான்

பயணிக்கப் போகிறேன் ?

நான் உன்னை நேசிக்கிறேன்.

உன் மாளிகையிலிருந்து புறப்பட்டுவரும்

நறுமணம் எனக்குப்

போதையூட்டிக்கொண்டேயிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்க மண்டையச் சொறியுதா அல்லது பிய்க்குதா எண்டுதான் தெரியேல்ல.

அவளை எனக்குச் தெரிஞ்சா சத்தியா ஒருத்தரிட்டையும் சொல்லமாட்டன். சாத்திரியிட்டதான் கேட்கவேணும் அவருக்குத்தான் வாசுதேவனைத் தெரியும் எண்டு சொன்னவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசு தேவன்

அழைத்துச் செல் என்னை,

நான் புறப்பட்ட இடத்திற்கு........................................ இந்த இடம்

மிக நன்றாக வந்திருக்கிறது. உண்மையில் இந்த வலிகள் தான் நாம் சுமக்கக்கூடிய மீதம். ஆனால் அந்த வலிகளின் மீது இன்னும் எத்தனை காலத்திற்கு மனங்கள் இதனையே யோசிக்கும் யோசித்து யோசித்து மீதி.............................

அனஸ்

பேசுபொருள:; "மரணம்" ?

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் எளிமையான சொற்களால் வார்த்தெடுத்த கவிதை அழகு .

யார் அவள்??????????

மரணதேவதை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரையும் அவரவர்

புறப்பட்ட இடத்திற்கு உன்னால்

மட்டுமே அழைத்துச் செல்ல முடியும்.

என்னை மறந்து நாளையோ

மறுநாளோ நான் நுழைவேன்

உன் வாசலுக்குள்.

அழைத்துச் செல் என்னை,

நான் புறப்பட்ட இடத்திற்கு.

ஒவ்வொரு மனிதனும் தான் புறப்பட்ட இடத்தை திரும்பவும் அடையத்தான் காத்திருக்கிறான்.. உழன்று கொண்டிருக்கும் வாழ்வின் வலிகள் எப்போதுமே புறப்பட்ட இடத்தில் எல்லாச் செளகரியங்களும் கிடைக்கும் என்று நம்பிக்கைகொள்ள வைக்கின்றது.. அப்படியாயின் ஏன் புறப்பட்ட இடத்தைவிட்டு நீங்கவேண்டும்? அங்கேயே தரித்திருக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவனின் மனசைத் தொடும் கவிதை வாசித்தது மகிழ்ச்சி. வருங்க அனஸ் எப்ப யாழுக்கு வந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞருக்கு வணக்கம். ஒரு மாதமிருக்கும்

அனஸ்

எனக்கும் கருப்பொருள் "மரணம்" என்றே தோன்றுகிறது. புறப்பட்ட இடம் "சவச்சாலை".

வாசுதேவன் அண்ணா... மரணம் பற்றிய உங்களின் தேடல் அதிகமாகியுள்ளதே, காரணம் என்ன? :wub:

புறப்பட்ட இடம் எல்லாருக்கும் ஒன்றுதான். அந்த இடத்தில் எல்லாருக்கும் இடம் உண்டு. எல்லாரும் ஒருநாள் புறப்பட்ட இடத்தை கட்டாயம் அடையத்தான் போகிறார்கள். இருந்தும் கடந்துவரும் இடங்கள் மாறுபடுகின்றன. கடந்துவரும் அனுபவங்கள் மாறுபடுகின்றன. விட்டுவரும் தடங்கள் மாறுபடுகின்றன.

கவிதை நன்று. தொடருங்கள்.

அனஸ்... நீங்கள் தீபம் தொலைக்காட்சி அனஸ்சா? நீங்களும் ஒரு கவிஞர்தானே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவன் அண்ணா... மரணம் பற்றிய உங்களின் தேடல் அதிகமாகியுள்ளதே, காரணம் என்ன? :wub:

அதுக்கு அவர் வேலை செய்யிற இடமும் செய்யிற வேலையும் காரமாயிருக்கலாம் :lol::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறைப் பூங்காவில் காவியமாகிய உங்கள் கவிதை வரிகள் மிகமிக அற்புதம்.

இங்குள்ள மஞ்சத்தில் தூங்குபவர்களுக்கு மட்டும் தூக்கம் தூய்மையாகிறது.

கனவுகளற்ற கனமான சயனங்கள் . வாசலில் நின்று கண்சிமிட்டி அழைக்கும்

இக்காதலிக்கு கையசைக்க மனமுள்ளவர் சிலர். மனமற்றவர் பலர். பாதையற்ற

வாழ்க்கைத் தத்துவம். வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.