Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தேர்தல் வேண்டாம் எங்கிறார் சங்கரி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி

கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

பிபிசி/தமிழ்

--------------

அப்ப சங்கரி அம்மானையும் வடக்கின் மகன் என்று பிள்ளையான் அம்மான் நிராகரிச்சிட்டாரோ...! :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியாரை எல்லோரும் ஓரம் கட்டிவிட்டார்கள் போலும். அது தான் இப்படியான "இந்த பழமும் புளிக்கும்" என்று அறிக்கை விடுகிறார்.

தமிழீழ விடுதலை புலிகளை எதிர்க்கும் இன்னார் ஒட்டு குழு பிள்ளையானை எதிர்க்க

அஞ்சுகிறார். அச்சத்தில் வாயடைத்து பி.பி.சி.காறரை அதட்டிய விதம்..

அதிலிருந்து புரிகிறது அம்மான் நல்ல கிலி பீதியில நிக்கிறார் என்று... :lol::lol::lol::D:D

புலிகளுக்கு சங்கரி பயப்படமாட்டார்

ஏனெண்டா அவருக்கே தெரியும்

புலிகள் கோமாளிகளை கொல்லுறதில்லை எண்டு...

வேணுமெண்டா தர்மசிறி விக்கிரமநாயக்க, ரம்புக்வெல, சங்கரி, உந்த பட்டியல்ல ஆர் வேணுமெண்டாலு, தைரியமா எங்க வேணுமெண்டாலும் போய்ட்டு வரலாம்... சத்தியமா சொல்லுறன் புலிகள் ஒண்டும் செய்ய மாட்டாங்கள்.

ஆனா சனங்கள் அடிச்சா அதுக்கு ஒண்டும் செய்யேலாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு சங்கரி பயப்படமாட்டார்

ஏனெண்டா அவருக்கே தெரியும்

புலிகள் கோமாளிகளை கொல்லுறதில்லை எண்டு...

வேணுமெண்டா தர்மசிறி விக்கிரமநாயக்க, ரம்புக்வெல, சங்கரி, உந்த பட்டியல்ல ஆர் வேணுமெண்டாலு, தைரியமா எங்க வேணுமெண்டாலும் போய்ட்டு வரலாம்... சத்தியமா சொல்லுறன் புலிகள் ஒண்டும் செய்ய மாட்டாங்கள்.

ஆனா சனங்கள் அடிச்சா அதுக்கு ஒண்டும் செய்யேலாது.

சங்கரியாருக்கு அது நல்லாவிளங்கியதாலதான்

தம்பிக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார்

இல்லை யென்றால்பேனவைப்பிடிக்கும் வயதா இது???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தல்: 3 தமிழர் கட்சிகள் இணைந்து புது கூட்டணி

கொழும்பு: இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தேர்தலில் தமிழர் ஒருரை முதல்வர் பதவியில் அமர்த்தும் பொருட்டு 3 தமிழர் கட்சிகள் இணைந்து புதுக் கூட்டணியை அமைத்துள்ளன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலை கூட்டாக சந்திக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை முடிவு செய்துள்ளன. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து புதிதாக தமிழர் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டணியையும் உருவாக்கியுள்ளன.

இதுகுறித்து பிளாட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 10ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் வேறு சில தமிழர் கட்சிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் மிகப் பெரிய கூட்டணியாக இது உருவெடுக்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஏப்ரல் 3ம் தேதிக்குள் இந்தக் கூட்டணி இறுதியாகி விடும்.

அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அதுபோன்ற சமயத்தில் தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண முதல்வராக இருப்பதே நல்லது என்பதால் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்தக் கூட்டணி நேற்று இறுதியானது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் சித்தார்த்தன், டியுஎல்எப் தலைவர் அனந்தசங்கரி, இபிஆர்எல்எப் உள்ளூர் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு வரை விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை ராணுவம் கைப்பற்றிய பின்னர் அங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...of-eastern.html

இப்பதான் தமிழரின் ஒத்துமையை காட்ட போகினமாக்கும். வேற எதை எல்லாம் காட்டுவினம் எண்டதை முன்னமே சொன்னா டமிழ் மக்கள் அதிர்ச்சி அடையிறதை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலை கூட்டாக சந்திக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை முடிவு செய்துள்ளன. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து புதிதாக தமிழர் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டணியையும் உருவாக்கியுள்ளன.

மக்களாலும், அரசாலும் ஓரம் கட்டப்பட்டவர்கள் ஒன்றாக கூடி "ஊமை கண்ட கனவாக" இருக்கப்போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

"பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட பாற்கடல் ஈந்த பிரான்" என்று சொல்லுறவை கண்டியளே. இப்படி ஒவ்வொருதனுக்கும் ஒவ்வொரு விருப்பமும் தேவையும் இருக்கு. ஒரு முறைதான் இந்த உலகத்திலை பிறந்து வாழப்போறம் அதை நல்லா இருந்து அனுபவிச்சிட்டு போவம் எண்டு நினைக்கினம் போல, விடுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

"பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட பாற்கடல் ஈந்த பிரான்" என்று சொல்லுறவை கண்டியளே. இப்படி ஒவ்வொருதனுக்கும் ஒவ்வொரு விருப்பமும் தேவையும் இருக்கு. ஒரு முறைதான் இந்த உலகத்திலை பிறந்து வாழப்போறம் அதை நல்லா இருந்து அனுபவிச்சிட்டு போவம் எண்டு நினைக்கினம் போல, விடுங்கோவன்.

சங்கரியார் பால் வேண்டி அழுதிருக்க மாட்டார். பால் இருக்கிற இடம் வேண்டி அழுதிருப்பார் :unsure::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.