Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமகால சினிமா பாடகர்கள் தமிழை நார் நாராகக் கிழிக்கின்றனர் - வைரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vairamuthu1-250_25032008.jpg

பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள்.

அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள் உச்சரித்து ஆச்சரியப்படுத்தினார்கள்.

ஆனாலும் ஜேசுதாஸ் போன்ற சிலர் கடைசி வரை ல, ள, ழ வித்தியாசத்தைக் காட்டாமலேயே பாடி முடித்து பெயரும் வாங்கி விட்டனர். அந்தமான் காதலி படத்தில் அவர் தவறாகப் பாடியதை ஒருமுறை வைரமுத்து சுட்டிக் காட்டி பேசியபோது, ஜேசுதாஸ் ரொம்பவே கோபப்பட்டார்.

இப்போது உதித் நாராயண் போன்றவர்களின் வாயில் தமிழ் நுழைந்து கிழிந்து நார் நாராக நாறிப் போய் வெளியே வருவதை லேட்டஸ்ட் பேஷன் என்கிறது கோலிவுட்.

இந் நிலையில் தற்காலத்தில் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் சிலர் பாடும் அழகை வைரமுத்து கடுமையாக சாடியுள்ளார்.

ஏவி.எம். நிறுவனத்தின் புதிய படத் தொடக்க விழாவுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வைரமுத்து பேசுகையில்,

இப்போதெல்லாம் பெரும்பாலான பாடகர்கள், பாடகிகள், தமிழகத்தைச் சேராதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழை சரிவர உச்சரிக்கத் தெரியவில்லை.

பிற மொழிப் பாடகர்கள், பாடகிகள் தமிழ்த் திரையுலகுக்கு வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழை கொல்லக் கூடாது.

கடந்த காலங்களில் உச்சரிப்புக்குப் பெயர் போன பாடகராக டி.எம். செளந்தரராஜன் திகழ்ந்தார். இத்தனைக்கும் அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல (இவர் குஜராத்தின் செளராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்). ஆனாலும் ஒரு தமிழனால் கூட இப்படி உச்சரிக்க முடியுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு தமிழ் உச்சரிப்பில் அவர் மன்னனாக திகழ்ந்தார்.

அதேபோல பி.சுசீலாவுக்கு தாய் மொழி தெலுங்கு. ஆனால் ஒரு பச்சைத் தமிழச்சியின் தமிழைப் போலவே அவர் அழகாக பாடினார்.

ஒருமுறை ஜேசுதாஸ் பாடியபோது அவரது உச்சரிப்பில் நான் சில திருத்தங்களைக் கூறினேன். அதன் பிறகு அவர் பாடிய பாடல்களில் தமிழ் உச்சரிப்பு பிரச்சினை வரவே இல்லை.

ஆனால் உதித் நாராயணன் பாடுவதைப் பாருங்கள். ஒருமுறை தேவாவின் இசையில் அவர் ஒரு பாடலைப் பாடியபோது, எனது பாடலை மிக மிக தவறாக உச்சரித்தார். நான் எழுதிய வார்த்தை பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்பது. ஆனால் அவரோ, பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம், தப்பில்லை என்று பாடி விட்டார்.

அதைக் கேட்டு நான் அதிர்ந்து போய் விட்டேன். அவரது தவறான உச்சரிப்பு ஒரு கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் வகையில் இருந்தது.

எனவேதான் பாடகர்கள் சரிவர உச்சரித்துப் பாட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

சில காலங்களுக்கு முன்பு வரை பாடலை எழுதிய பாடலாசிரியர்களே அதை எப்படி உச்சரித்துப் பாட வேண்டும் என பாடகர்கள், பாடகிகளுக்கு சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது இசையமைப்பாளர்கள் இப்போது அதைக் கடைப்பிடிப்பதில்லை.

திரைப்பட இசை என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் பலரும் ஈடுபட்டுள்ளனர். அத்தனை பேரும் சேர்ந்து நமது மொழி சிதைவதற்கு, ஜீவனற்றுப் போவதற்கு அனுமதிக்கக் கூடாது. காக்க முயல வேண்டும். தமிழ் தெரியாத பாடகர்களோ, பாடகிகளோ தமிழை கற்றுக் கொண்டு பாட முன்வராவிட்டால் அவர்களை ஆதரிக்கக் கூடாது என்றார் வைரமுத்து.

வைரமுத்து சொல்வது மெத்தச் சரி!

http://thatstamil.oneindia.in/movies/speci...il-killers.html

Edited by nedukkalapoovan

ஹீஹீ ஜேசுதாஸ் என்னமோ ல ழ ள எழுத்து உச்சரிப்பில் தான் பிழை விட்டார். ஆனால் இப்போ உதித்நாராயணன் சொற் பிழையல்லவா விட்டிருக்கிறார். பாவம் வைரமுத்துவின் பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உச்சரிப்பு விளங்காத மாதிரி தானே பாட்டெல்லாம் வருது.

அந்த பாட்டுடன் தானே ஆட்டமும் மெருகு ஏறுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உச்சரிப்பு விளங்காத மாதிரி தானே பாட்டெல்லாம் வருது.

அந்த பாட்டுடன் தானே ஆட்டமும் மெருகு ஏறுது.

ஏன்னா பாட்டைக் கேட்டு ஆடுறவனுக்கும் தமிழ் சரியாத் தெரியாதே..!

முன்னமெல்லாம் ஆங்கிலப் பாடல்களை கேட்டு ஆடுவாங்க. ஆனால் அதில என்ன பாடுறான்னு பலருக்கும் புரியாது. அப்படியாப் போச்சு தமிழு இன்றைக்கு. அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளில உள்ள பிள்ளைகள் இருக்கே.. சொல்லவே முடியல்ல... தமிழ் பேசாங்க.. ஆனால் தமிழ் பாட்டுக்கு ஆடுவாங்க..! :wub::wub:

தமிழ் பேசாங்க.. ஆனால் தமிழ் பாட்டுக்கு ஆடுவாங்க..!

இப்ப பிறந்ததுகளே ஆடத்தொடங்குதுகள் நீங்கள் வேறை தாத்தா.

ஆனால் ஒண்டை கவனிச்சியளோ ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் தான் எல்லாத்திலும் முதல்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிறந்ததுகளே ஆடத்தொடங்குதுகள் நீங்கள் வேறை தாத்தா.

ஆனால் ஒண்டை கவனிச்சியளோ ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் தான் எல்லாத்திலும் முதல்

நெடுக்குஸ் வந்து தனது புலம்பலை வைக்கப்போறாருங்க. :wub:

ம்ம்ம்...வைரமுத்து அங்கிளின்ட டென்சனில ஒரு நியாயம் இருக்கிறது போல தான் :wub: இருக்கு பட் இசைக்கு மொழி இல்ல என்று சொல்லீனம்.. :wub: (சோ அந்த இசை மழையில நனையும் போது இப்படியான பாடகர்கள் விடும் பிழை நம் செவிக்கு வருவதில்ல :) )..ஆனா என்னவோ தமிழ பாடலை தமிழ் தெரியாத ஒருவர் பாடக்க பாட்டு ரொம்ப நன்னா இருக்கு பாருங்கோ..(அது தான் நேக்கு விளங்கல்ல பாருங்கோ).. :)

இப்ப பாருங்கோ காக்கா வந்து குயில் மாதிரி "கூ கூ" என்று கத்தினா அதில பிழை இருக்கலாம் ஆனா அதில ஒரு இனிமை இருக்கு..(இதை எல்லாம் உணர்ந்தா தான் தெரியும் பாருங்கோ).. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா இசைக்கு மொழி இல்ல கேட்கிற எங்களுக்கு மொழி தெரியும்" :)

அப்ப நான் வரட்டா!!

உதித் நாராயணன் பாடுவதைப் பாருங்கள். ஒருமுறை தேவாவின் இசையில் அவர் ஒரு பாடலைப் பாடியபோது, எனது பாடலை மிக மிக தவறாக உச்சரித்தார். நான் எழுதிய வார்த்தை பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்பது. ஆனால் அவரோ, பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம், தப்பில்லை என்று பாடி விட்டார்.

- வைரமுத்து

பெரியம்மா பெண்

பிரியமான பெண்ணா இருக்க முடியாதோ? :wub:

கவிஞர் போன்றோர் சொல்லும் கருத்துக்கு மறு பேச்சு இருக்காது!

காசை வாங்கிக் கொண்டு

பாட்டை எழுதிக் கொடுத்து விட்டு

கடல் காற்று வாங்க போனால் இதுதான் நிலை!

ஏன்

கவிஞர்

யார் பாடுகிறார் என்று கேட்டு பாடல் எழுதலாமே?

இல்லை

பாடல் பதிவாகும் போது உடன் இருக்கலாமே?

இல்லை

பாடல் பதிவான பின் பாடலைக் கேட்டு விட்டு

உடனே திருத்தம் செய்யலாமே?

படத்தில் வந்து சக்கை போடு போட்டு விட்ட பிறகு

காலம் கடந்து கவிஞருக்கு கோபம் வருகிறதோ? :wub:

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?

டிஜிட்டலில் செதுக்கிய குரலா?

எலிசபெத் டெய்லர் மகளா?

ஜாகீர் உசேன் தபேலா இவள்தானா?

சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா

சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செலூலர் போனா

ஆஹா! எவ்வளவு அழகான தமிழ்

எவ்வளவு வளமான வர்ணனை

தான் எழுதிய சில பாடல்களை

வைரமுத்து அவர்கள் மீண்டும் ஒரு தடவை

வாசித்துப் பார்ப்பது இல்லை போல் இருக்கிறது

டெலிபோன் மணி போல் பெண் சிரித்தால் எப்படி இருக்கும்? :wub:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அட! அது தமிங்கிலிஸ்ஸில் எழுதிய பாட்டெல்லோ!!!! :):unsure:

அட! அது தமிங்கிலிஸ்ஸில் எழுதிய பாட்டெல்லோ!!!! :):unsure:

இவர்கள் மட்டும் தமிங்கிலிஸ் பாட்டு எழுதலாம். பாடினால் மட்டும் பிழையோ? முதல்ல இவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளட்டும். பிறகு மற்றவர்களைத் திருத்தலாம். பணத்திற்காக எப்படிப்பட்ட பாடல்களையும் எழுதும் இவர்கள், பாடகர்களை அதுவும் மற்ற மொழிப் பாடகர்களை எப்படிக் குறை கூறலாம். தமிழைக் கற்றறிந்த இவர்களே தமிழை ஒழுங்காக எழுதுகிறார்களில்லை. பிறகு மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டு.

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைரன் சொன்னதை இங்க சரியாப் புரிஞ்சுக்கல்ல என்று நினைக்கிறேன். அவர் தூய தமிழில் கவிதை.. பாடலைப்பாடனும் என்று சொல்லவில்லை. தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புக்களில் கவனம் செலுத்துங்கள் என்று தான் கூறுகின்றார்.

ஒரு கவிஞன் சமூகத்தைப் பிரதிபலிக்கும் போது சமூகம் சார்ந்து கவிதைகளில் மொழிக்கலப்பு இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. ஆனால் அதையும் உச்சரிக்கிறவங்க தலைகீழாக்கினா அதற்கு என்ன செய்வது.

வைரன் தூய தமிழில் எழுதிய பாடல்களுக்கும் இருக்குத்தானே. வைரன் தான் தூய தமிழில் பாடல் எழுதுகிறேன் என்று சாதிக்கவில்லைத்தானே. அவர் தான் எழுதிக் கொடுப்பதையே சரியாக உச்சரிக்கிறார்கள் இல்லையே என்ற கவலையில் அப்படிச் சொல்லி இருக்கலாம். அது யதார்த்தமும் கூட.

புலம்பெயர்ந்துள்ள பிள்ளைகளுக்கு நல்லா தமிழ் பேசக் கூடிய வசதி இருக்கிறது. சிலருக்கு தமிழ் நல்லாப் பேச வரும். ஆனால் வேண்டும் என்றே கொன்னையாகக் கதைப்பார்கள். அது அடுத்தவை தங்களைப் பற்றி நாலு பெருமையாக் கதைக்கட்டன் என்ற நோக்கிலேயே அன்றி... தமிழ் தெரியாமல் அல்ல. இப்படியான விசமத்தனங்கள் சினிமாவிலும் நடக்கலாம்..! வைரனின் கவலையோடு நான் ஒத்திசைகிறேன். அதேவேளை வைரனும் பிறமொழிக் கலப்புகளை இயலுமானவரை தனது பாடல்களுக்குள் இடைச்செருகல் செய்வதைத் தவிர்க்க முயல்வதும் வரவேற்கத்தக்கது..!

ஒரு தவறைக் காட்டி பிறிதொரு தவறை அங்கீகரிக்க முயலக் கூடாது..! :)

Edited by nedukkalapoovan

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?

டிஜிட்டலில் செதுக்கிய குரலா?

எலிசபெத் டெய்லர் மகளா?

ஜாகீர் உசேன் தபேலா இவள்தானா?

சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா

சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செலூலர் போனா

ஆஹா! எவ்வளவு அழகான தமிழ்

எவ்வளவு வளமான வர்ணனை

தான் எழுதிய சில பாடல்களை

வைரமுத்து அவர்கள் மீண்டும் ஒரு தடவை

வாசித்துப் பார்ப்பது இல்லை போல் இருக்கிறது

டெலிபோன் மணி போல் பெண் சிரித்தால் எப்படி இருக்கும்? :unsure:

கவிஞர் மறந்திருப்பார்.

சுத்த தமிலில எழுதியதை?

நினைவு காட்டியதற்கு நன்றி!

வெளிமாநில மொழி பேசும் பாடகர்களுக்கு தமிழ் முறையாக வராது.

அவர்களது குரல்

இசை ஞானம்

தயாரிப்பாளர் அல்லது நடிகரின் தேவை மற்றும் விருப்பம்

பாடகரின் புகழ்

இது போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டே

இவர்களை பாட வைக்கிறார்கள்!

தவிரவும்

இசையமைப்பாளருக்கு

பாடகரது மொழியில் இசையமைக்க

ஒரு வாய்ப்பு கிட்டவும் இது காரணமாகிறது.

முன்பெல்லாம் பாடல் ஒலிப்பதிவாகும் போது

தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர் - இசையமைப்பாளர் - கவிஞர்

அனைவரும் இருந்தே பாடல் பதிவாகியது.

இப்போது

போட்ட டியுனை கேட்ட கவிஞர்

வரிகளை கொடுத்து விட்டு

காசை பையில் போட்டுக் கொண்டு போய்விடுகிறார்.

இறுதி ஒலிப்பதிவில் பெரும் பாலும் இருப்பது

பாடகர் அல்லது பாடகி

மற்றும் ஒலி சேர்ப்பாளர்

உதவி இசையமைப்பாளர்................!

இதில் எங்கே தவறு? :)

தவிரவும்

சொல் புரியும் பாடலை விட

சொல் புரியாத பாடல்களே அதிக பிரபல்யம் ஆகிறது?

காரணம்

விளங்காமை காரணமாக

நாலு முறை கேட்கிறான்

அதுவே ஜனரஞ்சகமாகிவிடுகிறது! :(

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் தற்கால இசை இப்படி ஆனதுக்கு யார் காரணம்? இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் சிறிது சிறிதாக மேற்கத்தைய சாயல் மற்றும் உச்சரிப்பை அறிமுகப்படுத்தியபோது பெரும்பாலும் அது வரவேற்பினையே பெற்றது. மக்கள் விரும்பி வரவேற்றார்கள். உதாரணமாக, காதல் பிசாசே.. காதல் பிசாசே.. ஏதோ சௌக்கியம் பருவாயில்லை.. என்று தேன்மதுரக் குரலோன் உதித் நாராயணன் பாடியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மக்களுக்கு ஆங்கிலத் தன்மை கொண்ட பாடல்கள் புல்லரிப்பை :) ஏற்படுத்துவதால் அவர்களும் விரும்பி ரசிக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் முன்னர் தமிழர்களை ஆண்டதால் ஜீன்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமா என்று தெரியவில்லை. :unsure:

ஆனால் படைப்பாளிகளுக்குச் சிறிதளவேனும் சமூக அக்கறை இருந்தால் நல்லது. அவர்கள் வழங்காமல் மக்களை எதுவும் சென்றடையாது. அவர்களின் பணத்தாசை சீரழிவை ஏற்படுத்துகிறது. இவற்றுக்குத் துணைபோகாத படைப்பாளிகளும் உள்ளனர். உதாரணமாக கவிஞர் அறிவுமதி அவர்கள் நல்ல பாடல்களைத் தருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர் என்று அறிந்தேன். ஆங்கிலம் கலக்காமல் விரசம் புகுத்தாமல் பாடல் தருவதைக் கொள்கையாகக் கொண்டவர். ஆனால் அவருக்கு வாய்ப்புக்கள் பெரிதாக இல்லை. இதில்தான் பல கவிஞர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. தயாரிப்பாளரோ இயக்குனரோ இசையமைப்பாளரோ சீரழிந்த பாடல்களை எழுதச்சொல்லும் போது ஒருவர் மறுத்தால் இன்னொரு கவிஞர் தயாராகவே இருக்கிறார்.

ஆனால், நாளையே தமிழக அரசு சுத்தத் தமிழுடன் சரியான உச்சரிப்பைக்கொண்ட பாடல் உள்ள படங்களுக்கு வரிக்கழிவு அளித்தால் நாளையே சிவபுராணம் கணக்கில் பாடல்கள் வரும் என்பது மட்டும் நிச்சயம்..! :(

எல்லோரும் பாடலாசிரியர் தமிங்கிலீசில் எழுதுவது பற்றியே பேசுகின்றீர்கள். ஆனால் இங்கே வைரமுத்து சுட்டிக் காட்டியிருப்பது தமிழைப் பிழையான அர்த்தத்தில் மாற்றி படிப்பதையே. அதற்காகவே அவர் பிரியமான பெண்ணை இரசிக்கலாமென்பதை, பெரியப்பாவின் பெண்ணை இரசிக்கலாமெனப் பாடியபோது தான் ஓடோடிச் சென்று மாற்றியதையும், அந்தமான் காதலியில் திருக்கோயிலே என்று எழுதிய வரிகளை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் தெருக்கோயிலே என்று படித்ததையும் உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இசையமைப்பாளர்களே புரியாத வார்த்தைகளையும் தமிங்கிலீசு வார்த்தைகளையும் சொல்லி அவை வருவது போல் பாட்டெழுதச் சொல்கின்றார்கள். அதனாலேயே பல பாடலாசிரியர்கள் அவற்றைப் பிழைப்புக்காக எழுதவேண்டியுள்ளது. இதையே கவிஞர் வாலி அவர்களும் பிழைப்புக்காகவே சினிமாவென்றும் ஆத்மதிருப்திக்காக தன்னுடைய கவிதைகளென்றும் சொல்லியிருந்தார். இது கவிஞர் வைரமுத்துவிற்கும் பொருந்தும். இவர்களின் சினிமா ப்பாடல்களை வைத்து இவர்களை குறை கூறுவதைத் தவிர்த்து, இவர்களது கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகளைப் பாருங்கள். அவை இவர்களின் நிஜ முகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் காட்சியின் சூழ்நிலைக்கேற்பவும், கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்பவும்தான் அவர்கள் பாட்டெழுதுகின்றனர். சென்னைத்தமிழ் பேசி மெரினாவில் கடலைபோடும் இருவர் பாடினால் " வா வாத்யாரே ஊட்டான்டே" என்ற மாதிரித்தான் எழுதுவார்கள். அதுவே நன்கு படித்து தமிழும், ஆங்கிலமும் கலந்து கலாய்த்துக் கொண்டு கார் லைசென்ஸ் கொடுக்கும் மிடில்கிளாஸ் இளைஞன் காதலித்தால் தமிங்கிலிஸ்ஸில்தான் பாட்டு வரும். அதுதான் யதார்த்தமும்கூட!!! :lol::lol:

அதைவிட்டு " காயாத கானகத்தே நின்றுலாவும்" என இவர் தொடங்கினால் காதலி அப்படியே கடலுக்குள் பாய்ந்திடுவா.

அந்தப்பாடல் வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. (படம் கண்ணெதிரே தோன்றினாள், பாட்டு ஈஷ்வரா..) உதித் நாராயணனும் கொஞ்சம் உச்சரிப்பில் கவனம் செலுத்துகின்றார். நல்ல உதாரணம் சிவாஜி பட பாடல் சகானா சாரல் ..!

இப்பொது நரேஷ் ஐயர், மதுபாலகிருஷ்ணன், கரிஷ் ராகவேந்திரா,போன்றோர் பரவாயில்லை..!

இளையராஜாவின் இசைநிகழ்ச்சியொன்றில் நடந்த "பிழையான உச்சரிப்பு" உம் இறுதியில் இளையாராஜாவின் சமாதானமும்.

காற்று எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசைநிகழ்ச்சியொன்றில் நடந்த "பிழையான உச்சரிப்பு" உம் இறுதியில் இளையாராஜாவின் சமாதானமும்.

காற்று எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே...........

அது அப்பாடகிக்கு முதல் தமிழ் நிகழ்ச்சி என்பதால் மன்னித்தார்கள். தமிழ் பின்னணிப் பாடல் பாடுவதை தொழிலாகக் கொண்டவர்கள்.. தொடர்ந்து பிழை விடுறதை அனுமதிப்பது அழகல்லத்தானே..! :lol:

Edited by nedukkalapoovan

பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

ஒன்னுமா விளங்க இல்ல, பாட்டு எல்லாம் கேட்க நல்லாத்தானே இருக்கிது? ஏன் இப்படி திடீர் கோவம்? சும்மா ஆக்கள பேசிக்கொண்டு இருக்கிற நேரம் ரெண்டு பாட்டு எழுதலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டா தமிழ் விளங்காத மாதிரி பாடுற பாட்டுத்தான் இஷ்டம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டா தமிழ் விளங்காத மாதிரி பாடுற பாட்டுத்தான் இஷ்டம் :lol:

இருக்கும் இருக்கும்.. லண்டன் வந்து ராப்பில ரோட்டில சுத்துறீங்க போல..! :D:lol:

புலம்பெயர்ந்துள்ள பிள்ளைகளுக்கு நல்லா தமிழ் பேசக் கூடிய வசதி இருக்கிறது. சிலருக்கு தமிழ் நல்லாப் பேச வரும். ஆனால் வேண்டும் என்றே கொன்னையாகக் கதைப்பார்கள். அது அடுத்தவை தங்களைப் பற்றி நாலு பெருமையாக் கதைக்கட்டன் என்ற நோக்கிலேயே அன்றி... தமிழ் தெரியாமல் அல்ல. இப்படியான விசமத்தனங்கள் சினிமாவிலும் நடக்கலாம்..! வைரனின் கவலையோடு நான் ஒத்திசைகிறேன். அதேவேளை வைரனும் பிறமொழிக் கலப்புகளை இயலுமானவரை தனது பாடல்களுக்குள் இடைச்செருகல் செய்வதைத் தவிர்க்க முயல்வதும் வரவேற்கத்தக்கது..!

ஒரு தவறைக் காட்டி பிறிதொரு தவறை அங்கீகரிக்க முயலக் கூடாது..! :D

ம்ம்...தாத்தா நீங்க செப்புறது சரி தான் பாருங்கோ ம்ம் புலத்தில் வாழும் தமிழ் பிள்ளைகள் தமிழ் தெரிந்தாலும் கொன்னையாக தான் கதைப்பார்கள்.. :D (அது ஸ்டைல் தானே)...அதை நாலு பேர் கதைத்து அது நாற்பதானாயிரம் பேரை சென்றடைந்து விடும் ஒகேயா நான் சொல்லுறது :lol: ..அதை போல் பாடல்களும் வியாபார நோக்கம் தான்..(அவை இலவச சேவை செய்யல்ல :lol: )..மக்களுக்கு எது பிடிக்குதோ..(எது மக்களின் நாடி துடிப்பு என்று அறிந்து தான் இசையமைப்பாளர்களும் பாடகர்களை தெரிவு செய்கிறார்கள்)..அது மிகவும் வெற்றி பெற்று வசூலையும் தருகிறது நான் சொல்லுறது சரி தானே தாத்தா.. :lol:

சோ தாத்தா அவைய முழுவதும் பிழை பிடிக்க கூடாது..(இந்த லோகத்தில ஒவ்வொரு விநாடியும் பணம் எப்படி சம்பாதிக்கிறது என்று தான் யோசித்து கொண்டு இருப்பீனம்)..அப்படியான லோகத்தில இருந்து கொண்டு..(இப்படி எல்லாம் சொல்லலாமா :D )..

பிறிதொரு தவறை அங்கீகரிக்கவும் கூடாது..(ஊரே ஓடக்க கேட்டு கொண்டு இருக்க கூடாது நாங்களும் சேர்ந்து ஓ(ட்)டிட வேண்டும் தாத்தா :lol::lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பெரியம்மா பெண்

பிரியமான பெண்ணா இருக்க முடியாதோ? :(

பெரியம்மா பெண் பிரியமான பெண்ணாக இருக்கலாம்.ஆணால் ரசிக்கலாமோ :wub::(

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பாடலாசிரியர் தமிங்கிலீசில் எழுதுவது பற்றியே பேசுகின்றீர்கள். ஆனால் இங்கே வைரமுத்து சுட்டிக் காட்டியிருப்பது தமிழைப் பிழையான அர்த்தத்தில் மாற்றி படிப்பதையே. அதற்காகவே அவர் பிரியமான பெண்ணை இரசிக்கலாமென்பதை, பெரியப்பாவின் பெண்ணை இரசிக்கலாமெனப் பாடியபோது தான் ஓடோடிச் சென்று மாற்றியதையும், அந்தமான் காதலியில் திருக்கோயிலே என்று எழுதிய வரிகளை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் தெருக்கோயிலே என்று படித்ததையும் உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இசையமைப்பாளர்களே புரியாத வார்த்தைகளையும் தமிங்கிலீசு வார்த்தைகளையும் சொல்லி அவை வருவது போல் பாட்டெழுதச் சொல்கின்றார்கள். அதனாலேயே பல பாடலாசிரியர்கள் அவற்றைப் பிழைப்புக்காக எழுதவேண்டியுள்ளது. இதையே கவிஞர் வாலி அவர்களும் பிழைப்புக்காகவே சினிமாவென்றும் ஆத்மதிருப்திக்காக தன்னுடைய கவிதைகளென்றும் சொல்லியிருந்தார். இது கவிஞர் வைரமுத்துவிற்கும் பொருந்தும். இவர்களின் சினிமா ப்பாடல்களை வைத்து இவர்களை குறை கூறுவதைத் தவிர்த்து, இவர்களது கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகளைப் பாருங்கள். அவை இவர்களின் நிஜ முகங்கள்.

இதுதான் எனது கருத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.