Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். நாட்டில் ஆயிரம் பிரச்சனையிருக்கின்றபோது மட்டும் தைப்பொங்கலுக்குப் புத்தாண்டாண்டை மாற்றியது மட்டும் சரி போல.

  • Replies 123
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

அற்பத்தனமான ஒரு புராணக்கதையை முன்னிறுத்தி, புத்தாண்டு என்னதையே இல்லாமல் செய்கின்றேன் என்பதை விட, 60 ஆண்டுகளின் பெயரையும் தமிழ்பெயரில் மாற்றி தொடர்ந்து பேணுவதில் என்ன குறை உண்டு. புத்தாண்டையே இல்லாமல் செய்வதை விட 60 ஆண்டுகளையும் மாற்றுவதில் என்ன குறை கண்டீர்.

கேள்விக்கு பதில் அளிக்க வேண்டி அளித்தேன்

கேள்வி

ஏன் சித்திரை புதுவருடம் எந்த புராண கதைகளுடனும் சம்பந்த படாது தனித்து நிக்கிறது?

தமிழ் பெயரில் மாற்றி கூறுவதில் குறை என்று எங்கே சொல்லியிருக்கின்றேன் என்பதை சுட்டிக்காட்டவும் அல்லது புத்தாண்டை மாற்றியது சரி என்று எங்கே சொல்லியிருக்கின்றேன் என்பதை சொல்லவும்.

புராணம் அற்பத்தனமானது என்று கூறுகின்றீர்கள். புராணத்தில் உள்ளது கோயிலிலும் உள்ளது அப்போது கோயில் அற்பத்தனமானதா?

[புராணம் எதற்காக உருவாக்கப்பட்டது, அது தமிழரின் தனித்துவத்தின் மீது எவ்வகையான சிதைவை செய்தது, வடநாட்டு சிற்பக்கலைகளுக்கும் தென்னாட்டு சிற்பக்கலைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன, சிவ வழிபாடு எவ்வகையானது , அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு என்ன? எவ்வாறு அது நிர்மூலமாக்கப்பட்டது, சிவ வழிபாட்டை ஏற்ற ஏற்காத பிரமணத்தரப்பினர் யார், இவ்வாறு ஆராய்ந்து கொண்டு போனால் ஏகப்பட்ட உண்மைகள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் இந்துதுவத்தின் பிடியில் சிக்கி சைவம் இந்துதுவத்துக்கு வைப்பாட்டியாய் இருப்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு எது எப்படி சொன்னாலும் புரியப்போவதில்லை.

Edited by sukan

அவர்கள் அரசு அவர்கள் மாற்றுகிறார்கள்.உங்களுக்கு என்ன வந்தது?

அவர்களின் முடிவில் தலையிட தமிழ் நெற்றுக்கு என்ன உரிமை இருக்கிறது?

நீங்கள் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் புத்தாண்டு கொண்டாடலாம் கொண்டாடாமலும் இருக்கலாம் அதற்காக அவர்கள் தமது அரச அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகளை எங்கனம் அவர்கள் உங்களிடம் கேட்டுத் தான் எடுக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் தமிழ் நெற் கேட்கிறது?

தமிழ்னெற்றை என்ன தமிழ் நாட்டு மக்களா நாடத்துகிறார்கள்?

இவ்வாறாக மற்றவர் விடயங்களில் மூக்கை நுழைக்கும் கட்டுரைகளால் தமிழ் நெற் எத்தகைய பயனை அறுவடை செய்கிறது?

அரசு உரிமை இருக்கிறது என்ற விவாத நிலைப்பாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழ் உலகும் இதை ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும் கருத்துப் பரிமாற வேண்டும். பல ஆண்டுகளாக பேணப்பட்ட புத்தாண்டுத் திகதியை மாற்றுவது என்பது இலகுவான விடையம் அல்ல. அதைப்பற்றிய விமர்சனங்கள் எதிர்வாதங்கள் வரும் அவற்றை ஆரோக்கியமான முறையில் எதிர் கொண்டு தமிழ் உலகு ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

ஆனால் இந்த விவாதத்திற்கு தமிழ்நெற் என்ற தளம் பயன்படுத்தப்படக் கூடாது என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இது தமிழ் உலகத்தினினுள் நடக்கும் ஒரு விவாதம். இதை ஏனைய தமிழ் உலகத்தவர்களிற்கு எடுத்துச் செல்ல வேறு பல தளங்கள் உள்ளது. தமிழ்நெற்றின் நோக்கம் வேறு. அதை இதற்கு பயன்படுத்துவது தவறு.

பகுத்தறிவு என்று தமிழர்களை நோக்கி வைக்கப்படும் விடையங்களை எடுத்தாலும் அதற்கு தமிழ்நெற்றை பயன்படுத்துவதை சம அளவில் தவறு. தமிழ்நெற் அதற்கு பொருத்தமானது அல்ல.

அம்பலம் என்பவர் எழுதிய இந்த 2 "opinions" இற்கு பதில் வழங்க விரும்புவர்கள் இதை ஏனைய தளங்களில் தொடருவது தான் பொருத்தமாக இருக்கும் அதற்கு தமிழ்நெற்றும் உரிய முறையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ்நெற்றில் இது போன்ற தமிழ் உலகினுள் உள்ள சர்ச்சைக்குரிய எந்த விவகாரங்களையும் பகிர விவாதிக்க முனைவதை அனைத்து தரப்பும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நெற்றை நிர்வகிப்பவர்களும் தமது கடமை நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழர் புத்தாண்டு என்று மாற்றுவார்களாம். புலத்தில் இருக்கின்ற சிலரும் வால்பிடிப்பார்களாம். ஆனால் தமிழர் புத்தாண்டு எப்படி மாற்ற இயலும் என்று தமிழ்நெற் கேட்டால், உடனே தமிழ்நெற்றுக்கு என்ன உரிமை என்று கேட்பார்களாம்.

தமிழனைப் பற்றிக் கதைத்துக் கொண்டு மற்றவர்களின் விடயங்கள் என்று கேள்வி கேட்பார்களாம். நாங்கள், இவர்களின் கருத்தைப் பார்த்து வீணி வடிக்க வேண்டுமாம்.

முதலில் புத்தாண்டை மாற்றுவதற்கு இவர்கள் யார் என்று கேட்க வக்கில்லை... வந்திட்டார்கள்...

தமிழ்நெற் என்பது தமிழனுக்கு நடக்கின்ற பிரச்சனைகளைக் கொண்டு வருகின்ற ஊடகம். அதில் இந்தப் பிரச்சனையையும் கொண்டு வந்தது தொடர்பாக எவ்விதமான தவறும் கிடையாது.

போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், மறுபக்கம் தமிழரின் கலை, கலாச்சாரத்தினை தன்னிச்சையாக மற்றவர்கள் மாற்ற முனைகின்றபோது அதற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்த தமிழ்நெற்றைப் பாராட்டத்தான் வேண்டும். எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என வாழ்த்தி நிற்கின்றோம்.

அற்பத்தனமான காரணங்களை முன்வைத்து தமிழரின் நிகழ்வுகளில் கையை வைக்கின்ற எந்த உரிமையும் தமிழக அரசுக்கோ, அல்லது அது சார்ந்தவர்களுக்கோ கிடையாது என்பதைத் தான் தமிழ்நெற் முன்னெடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழர் புத்தாண்டு என்று மாற்றுவார்களாம். புலத்தில் இருக்கின்ற சிலரும் வால்பிடிப்பார்களாம். ஆனால் தமிழர் புத்தாண்டு எப்படி மாற்ற இயலும் என்று தமிழ்நெற் கேட்டால், உடனே தமிழ்நெற்றுக்கு என்ன உரிமை என்று கேட்பார்களாம்.

தமிழனைப் பற்றிக் கதைத்துக் கொண்டு மற்றவர்களின் விடயங்கள் என்று கேள்வி கேட்பார்களாம். நாங்கள், இவர்களின் கருத்தைப் பார்த்து வீணி வடிக்க வேண்டுமாம்.

முதலில் புத்தாண்டை மாற்றுவதற்கு இவர்கள் யார் என்று கேட்க வக்கில்லை... வந்திட்டார்கள்...

தமிழ்நெற் என்பது தமிழனுக்கு நடக்கின்ற பிரச்சனைகளைக் கொண்டு வருகின்ற ஊடகம். அதில் இந்தப் பிரச்சனையையும் கொண்டு வந்தது தொடர்பாக எவ்விதமான தவறும் கிடையாது.

போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், மறுபக்கம் தமிழரின் கலை, கலாச்சாரத்தினை தன்னிச்சையாக மற்றவர்கள் மாற்ற முனைகின்றபோது அதற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்த தமிழ்நெற்றைப் பாராட்டத்தான் வேண்டும். எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என வாழ்த்தி நிற்கின்றோம்.

அற்பத்தனமான காரணங்களை முன்வைத்து தமிழரின் நிகழ்வுகளில் கையை வைக்கின்ற எந்த உரிமையும் தமிழக அரசுக்கோ, அல்லது அது சார்ந்தவர்களுக்கோ கிடையாது என்பதைத் தான் தமிழ்நெற் முன்னெடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

இதே கருத்துத்தான் எனதும்.

உவை சொல்லுற படி பார்த்தால்.. தமிழர் பண்பாட்டில் மதங்களும் ஒரு கூறு என்று சொன்ன கலாநிதி சோமஸ்காந்தனையும்.. விட்டு வைக்காயினம் போல.

உதே குறுக்காலபோனவர்.. தைப்பொங்கல் வாழ்த்தில தமிழ்நெட் .. இந்த ஆண்டுக்கு (2008) என்று போட்டதை.. பெரிசா தூக்கிப் பிடிச்சு அது புத்தாண்டு வாழ்த்தைக் குறிக்குது என்று என்னோட விதண்டாவாதம் செய்தவர்... இப்ப என்னடான்னா.. தமிழ்நெட்டை மிதிக்கனுமாம்...???! சிரிப்புச் சிரிப்பா வருகுது.. இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையில்...! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுவருசம் எல்லாம் முடிஞ்சிட்டுதுதானே, அடுத்த தீவாளி வரக்கும் எல்லாரும் இழுத்து போத்தொண்டு படுங்கோ, தீவாளி கிட்ட வர எழும்பி திரும்பவும் தொடங்கலாம்....... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது பேசுபொருளாகியுள்ள தமிழர் புத்தாண்டு தொடர்பான கருத்தை இணைய உலாவில் காணுற்று இதில் இணைக்கிறேன்

:D

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ...

மாற்றம் என்பது முன்னேற்றதிற்கானதாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் ஒரு வீம்புக்கு மாற்றுவது கொஞ்சம் பயத்தை அளிக்கிறது. கீழ்கண்டவாறு எல்லாம் அறிவிப்புகள் வெளியானால் எவ்வாறு இருக்கும். சற்று நகைச்சுவை உணர்வுடன் படியுங்கள். (அவற்றில் நகைச்சுவை இருப்பதாக தெரியவில்லை என்றாலும்! :D )//

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், சங்ககாலத் தமிழன் அனைத்து சமயம் சார்ந்தவன், அவன் பவுத்தனாக இருந்திருக்கிறான், சமணனாக இருந்திருக்கிறான், மதமற்றவனாகக் கூட இருந்திருக்கிறான். அப்பொழுதும் அனைத்து தமிழர்களாலும் ஆண்டு பிறப்பு கொண்டாடப்பட்டே வந்தது. தமிழர்களின் நாட்காட்டி முறை திரிக்கப்பட்டவுடன் சித்திரையில் தமிழ் ஆண்டு பிறப்பதாகவும் அதன் கொண்டாடமெல்லாம் இந்து பண்டிகையாகவும் மாற்றப்பட்டது, தற்பொழுது தமிழர்களில் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்களா ? கொண்டாவில்லை என்றால் தமிழர் குடி முழுகிவிடுமா என்று கேட்பீர்களா ? எந்த ஒரு மொழியின் ஆண்டுபிறப்பும் மதம் தொடர்புடையாதாக இருந்தால் அந்த மதத்துக்காரர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள், உலகம் முழுவது ஆங்கில நாட்காட்டி முறை இருந்தாலும் எதாவது இஸ்லாமிய நாடுகளில் ஜென 1 ஐ புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறார்களா ? இந்தியாவில் கொண்டாடுகிறோம், அதனையும் இந்துமதவாத சக்திகள் எதிர்கின்றன.

இப்பொழுது சொல்லுங்கள் சித்திரை புத்தாண்டு இந்து பண்டிகைப் போல் உள்ளதா இல்லையா ? ஒரு புத்தாண்டு தேதியை மாற்றுவதன் மூலம் அனைத்து மத தமிழர்களின் ஒருமித்த தமிழ் விழா, பண்டிகையாக அது மாறும் என்றால் அதனை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? சீனர்கள் அவர்களின் புத்தாண்டை மதம் சார்ந்த ஒன்றாக கொண்டாடுவதில்லை, கொண்டாட்டதிலும் மத வாசனை இல்லை.

//வேட்டி தான் தமிழனின் பாரம்பரிய உடை என்று அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வேட்டி கட்டிக் கொண்டு வரச் செய்யலாம், சத்யராஜ் சொன்னது போல தமிழ் கடவுள்களை மட்டும் தமிழன் வழிபட வேண்டும் என்று உத்திரவு இடலாம்.

படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிப்பது போல தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் அவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் இலவசம் என்று அறிவிக்கலாம். (ஆனால், தமிழினத் தலைவர் தம் பெயரை அன்புச்செல்வம் என்றும் கூட்டணித் தலைவரின் பெயரை

இராமஅடியான் என்றும் மாற்றிக் கொள்ள வேண்டும் முதலில்!)//

கேரளா மாநிலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு தான் அலுவலகம் செல்கின்றனர், அதை அவமானமாக யாரும் நினைப்பதில்லை, நமது முன்னோர்வழி உடை வேட்டியை வேஷ்டி என்று வடமொழியில் எழுதுவது தான் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் தமிழனின் மனநிலை மாறவேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் தமிழ்நாட்டு கோவில்களுக்கு வரும் விழுக்காடு, தமிழன் அங்கெல்லாம் படையெடுத்துச் செல்வதை ஒப்பிடும் போது மிக மிக குறைவு, தன்வீட்டை இருட்டாக போட்டுவிட்டு, அடுத்த தெருவுக்கே விளக்குகள் அளிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அவரது செயலை போற்றுவீர்களா ? ஒருவருக்கொருவர் (பரஸ்பரம்) என்ற முறையில் தமிழர்களின் கோவில்களுக்கு பிறமாநிலத்தவர் வந்து சென்றால் நாமும் அவ்வாறு செய்யலாம், எங்கும் இருப்பது கடவுள் என்று நம்பும் தமிழ் பக்தர்கள், பிறமாநிலத்தில் உள்ளவற்றில் சக்தி இருப்பதாகவும், தம்மாநில கடவுள் வெறும் சிலை தான் என்று நினைத்து ஒதுக்கப்படுவதும் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை. குழந்தைக்கு தமிழ் பெயர் வைக்கவும் அரசு அறிவித்தால் உண்டு என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு இன்று தமிழன் தன்னைத் தாழ்வாக நினைத்திருப்பது மாறவேண்டுமா? வேண்டாமா ?

//கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ் குடி. உணவு, உடை, பழக்க வழக்கம், திருவிழா, மொழி - இவற்றில் எதுவும் கலப்பில்லாமல் வணிகம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பிருந்த மூத்தகுடி தமிழன் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆக அந்த ஆதி தமிழன் பயன்படுத்திய பொருட்களை, வாழ்க்கை முறையை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுணர்ந்து அவ்வாறு வாழ தலைப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலாம். //

உலகில் எந்த ஒரு வளர்ந்த நாகரீகமும் உணவு, உடை, பழக்கவழக்கம், நாகரீகம், மொழி ஆகியவற்றை மாற்றிக் கொண்டது கிடையாது, இதற்கு சிறந்த உதாரணமாக சீனர்களையும் ஐரோப்பியர்களையும் காட்டலாம். அலுவலக உடை, வெளிப்பழக்கம் இதெல்லாம் வேறு, இது உலக அளவில் எல்லோரும் செய்வது தான், தன்னளவில் அரைக்கால் சட்டை அணியும் ஆண்கள் வெள்ளைக்கார பெண்மணிகளைப் பார்த்து தம்வீட்டு (தமிழ்) பெண்களும் அவ்வாறு மிடி அணியவேண்டும் என்று சொல்லத் தயாராக இருக்கிறார்களா ? எதுவுமே ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், நாகரீக வளர்ச்சி என்பதை மறந்துவிட்டு விதண்டாவாதத்திற்காக ஏன் கோவணம் கட்டிக் கொண்டே தமிழன் இருக்கக் கூடாது என்றும் கேட்கலாம்.

//எனக்கு புத்தாண்டு எப்பொழுது கொண்டாடினாலும் என்ன? வருத்தம் என்னவென்றால் முன்பு பொங்கலுக்கு ஒருநாள் , தமிழ் வருடப் பிறப்பிற்கு ஒருநாள் என இரண்டு விடுமுறைகள் வரும். நல்ல விருந்து உணவு கிடைக்கும். புது படங்கள் வெளியாகும். இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கி விட்டால்! எதாவது புது பண்டிகைகள் உருவாக்கலாம். இன்று சோழர் காலத்தில் குடவோலை முறை துவக்கிய நாள். பாண்டிய மன்னன் சங்கம் வைத்த தினம், பல்லவன் புலிகேசியை வென்ற தினம். இப்படி.... இதை விட்டு விட்டு...!! :lol: நான் சொல்வது சரியா இல்லையா, நீங்களே சொல்லுங்கள் கோவியாரே! //

விடுமுறையெல்லாம் குறைக்க மாட்டார்கள், சித்திரை திருநாள் என்ற பெயரில் விடுமுறை விடுவார்கள், நீங்கள் சொல்பவை அனைத்தும் அதில் இருக்கும் என்றே நினைக்கிறேன். பிறமொழிக்காரர்களின் பண்பாடு, பழக்கவழக்கம், இதையெல்லாம் நமது முதுகில் சேர்த்து கட்டப்பட்டு இருப்பதை தூக்கி எறிவோம், மிகவும் கூனாகிப் போனதால் தமிழர்களின் பார்வை கூட மங்கிவிட்டது. எல்லாவற்றையும் தமிழுக்குள், தமிழர்களுக்குள் நுழைத்தவர்கள், தமிழர் தம் தெய்வங்களுக்கெல்லாம் (மதுரை வீரன் உட்பட) பூணூல் அணிவித்தவர்கள், தமிழர்கள் பூணூல் அணிய வேண்டும், ஆண்டு தோறும் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வழக்கத்தை மட்டும் ஏன் நுழைக்கவில்லை?

முதலில் தமிழன் தான் யார் என்று உணரட்டும், இது போன்ற நடவடிக்கைகளினால் தான், தனக்கென தனிப்பண்பாடு இருந்தது, தாம் பழம்பெருமை மிக்கவர்கள் என்று தமிழன் உணர்வான். ஆபாசத்தை அடித்தளமாக வைத்துள்ள சித்திரை ஆண்டுப்பிறப்பின் கதைகள் நமக்கு எதற்கு ? இந்த கண்டறாவிக் கதை தமிழர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை என்றாவது உங்களுக்குத்த் தெரியுமா ? சற்று மனம் திறந்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தைக்கு பொங்கலோ பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துக்களையும் சேர்த்தே சொல்வீர்கள்.

வெளிநாட்டு அருட்தந்தை கால்டுவெல் ஐயர் திராவிட மொழிகளை ஆராய்ந்து தமிழ் தனித்தன்மை வாய்ந்தது, அது ஒரு சொம்மொழி என்று கண்டு சொல்லி இருக்காவிடில், வடமொழியில் இருந்து பிறந்ததே தமிழ் என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருப்போம், இன்னும் சிலர் இதே உளறலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவிலிகளின் அறியாக் கூற்றுப்படி வடமொழி தேவபாசையாம், அதிலிருந்து பிறந்த தமிழ் சூத்திர பாசையாம்.

நீங்கள் சொன்னது நகைச்சுவையாக தெரியவில்லை, பலருக்கு இருக்கும் அதே ஐயப்பாடுதான், இதுபற்றி தமிழ் மொழி ஆர்வளர்களும், தமிழ் பற்றாளர்கள் சொல்வதையும் கேட்டால், இது மதசார்பற்று ஒட்டுமொத்த தமிழனுக்கு நன்மை அளிப்பதை புரிந்து கொள்வீர்கள். தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம் குறித்து இஸ்லாமிய, கிறித்துவ சமூகம் வரவேற்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ்புத்தாண்டு மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட நடைமுறைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை, பலதரப்பினரிடம் இதுபற்றி கலந்துமுடிவை எட்டி இருக்கலாம்.

பதிவர்: கோவி.கண்ணன் at 4/15/2008 09:01:00 AM

தொகுப்பு : தமிழ், தமிழ்புத்தாண்டு

நன்றி: காலம்

http://govikannan.blogspot.com/2008/04/blog-post_15.html

அவர்கள் அரசு அவர்கள் மாற்றுகிறார்கள்.உங்களுக்கு என்ன வந்தது?

அவர்களின் முடிவில் தலையிட தமிழ் நெற்றுக்கு என்ன உரிமை இருக்கிறது?

நீங்கள் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் புத்தாண்டு கொண்டாடலாம் கொண்டாடாமலும் இருக்கலாம் அதற்காக அவர்கள் தமது அரச அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகளை எங்கனம் அவர்கள் உங்களிடம் கேட்டுத் தான் எடுக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் தமிழ் நெற் கேட்கிறது?

தமிழ்னெற்றை என்ன தமிழ் நாட்டு மக்களா நாடத்துகிறார்கள்?

இவ்வாறாக மற்றவர் விடயங்களில் மூக்கை நுழைக்கும் கட்டுரைகளால் தமிழ் நெற் எத்தகைய பயனை அறுவடை செய்கிறது?

:D என்ன சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற நிலையா? அதில் சொன்ன நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமையும், நியாயமான விளக்கங்கள் கசப்பா இருந்த உடனம் தமிழ் நெட்டுக்கு என்ன உரிமை என்ன இருக்கு எண்டு கேக்கிறீங்கள். நல்லா தான் இருக்கு? :D

அரசு உரிமை இருக்கிறது என்ற விவாத நிலைப்பாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழ் உலகும் இதை ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும் கருத்துப் பரிமாற வேண்டும். பல ஆண்டுகளாக பேணப்பட்ட புத்தாண்டுத் திகதியை மாற்றுவது என்பது இலகுவான விடையம் அல்ல. அதைப்பற்றிய விமர்சனங்கள் எதிர்வாதங்கள் வரும் அவற்றை ஆரோக்கியமான முறையில் எதிர் கொண்டு தமிழ் உலகு ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

ஆனால் இந்த விவாதத்திற்கு தமிழ்நெற் என்ற தளம் பயன்படுத்தப்படக் கூடாது என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இது தமிழ் உலகத்தினினுள் நடக்கும் ஒரு விவாதம். இதை ஏனைய தமிழ் உலகத்தவர்களிற்கு எடுத்துச் செல்ல வேறு பல தளங்கள் உள்ளது. தமிழ்நெற்றின் நோக்கம் வேறு. அதை இதற்கு பயன்படுத்துவது தவறு.

பகுத்தறிவு என்று தமிழர்களை நோக்கி வைக்கப்படும் விடையங்களை எடுத்தாலும் அதற்கு தமிழ்நெற்றை பயன்படுத்துவதை சம அளவில் தவறு. தமிழ்நெற் அதற்கு பொருத்தமானது அல்ல.

அம்பலம் என்பவர் எழுதிய இந்த 2 "opinions" இற்கு பதில் வழங்க விரும்புவர்கள் இதை ஏனைய தளங்களில் தொடருவது தான் பொருத்தமாக இருக்கும் அதற்கு தமிழ்நெற்றும் உரிய முறையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ்நெற்றில் இது போன்ற தமிழ் உலகினுள் உள்ள சர்ச்சைக்குரிய எந்த விவகாரங்களையும் பகிர விவாதிக்க முனைவதை அனைத்து தரப்பும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நெற்றை நிர்வகிப்பவர்களும் தமது கடமை நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்ன குறுக்காலபோவான் தமிழ் நெட்ட விட வேற நிறைய தளங்கள் இருக்கா? எது யாழ? :lol: நல்லா தான் அலசி ஆராய்விங்கள்? தமிழர்களின் செய்திகளை மட்டும் தாங்கி வருவது மட்டும் ஒரு செய்தி எட்டின்/ இணையத்தின் கடமையல்ல அவர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் சம்பந்தமான விடயங்களையும் அலசி ஆரய அது தயாராய் இருந்தா தான் அது செய்தி நிறுவனம். அப்ப ஏன் தமிழ்னெட் ஒவ்வொரு ஊருகளிடையும் பெயர் உருவான காரணத்தை விளக்கமா போட்டு கொண்டிருக்கே? அது கூட தேவையற்றது என்று சொல்லலாமே? உங்கள் வாதங்களுக்கு சார்பில்லாதவையை தமிழ் நெட் எழுத கூடாது. அதை வெளிப்படையா சொல்லலாமே. அதுக்கு ஏன் இத்தனை சுத்தி வளைப்பு. :lol:

quote name='KULAKADDAN' date='Apr 16 2008, 01:56 PM' post='402367']

:D என்ன சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற நிலையா? அதில் சொன்ன நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமையும், நியாயமான விளக்கங்கள் கசப்பா இருந்த உடனம் தமிழ் நெட்டுக்கு என்ன உரிமை என்ன இருக்கு எண்டு கேக்கிறீங்கள். நல்லா தான் இருக்கு? :D

:

குளம்,

தமிழ்னெற்ற் அதில என்ன சொல்லி இருக்கு. நீங்கல் தனிய முடிவு எடுக்க ஏலாது எங்களையும் கூடி ஆரன்ச்சு தான் முடிவு எடுக்க வேணும் எண்டு.

எனது கேள்வி தமிழ் நாடு அரசு தமிழ் நெர்றோடு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்க அதற்க்கு என்ன கடப்பாடு இருக்கிறது.

எது புத்தண்டு என்பது அரசு சார்ந்த விடயம்.எந்தக் கலண்டரைப் பாவிப்பது என்பதை அரசர்களும் அரசுகளுமே எடுத்து வருகின்றன.தமிழ் நாட்டு அரசின் முடிவை மாற்றச் சொல்ல தமிழ்னெற்றுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? தமிழ் நாட்டு மக்களின் விருப்பு வெறுப்பக்களையே தமிழ்னாட்டு அரசு பிரதிபலிக்கிறது.

இதில் ஒரு வருடத்தின் ஆரம்பம் என்பது ஒரு தொடக்கப்புள்ளி .அது எதுவாக இருப்பது என்பதை அந்த நாட்டின் மக்களே தீர்மனிகிறார்கள்.இதில் ஒரு விஞ்ஞானமும் இல்லை வெங்காயமும் இல்லை.

தமிழ் நெட் எங்க சொல்லி இருக்கு தங்களை கூடி பேச சொல்லி? தமிழ் மக்களின் விழா தொடர்பாக சரியாக கூடி பேசாது தீர்மானம் எடுக்க முடியாது அதை தான் சுட்டி காட்டி இருக்கு. இது ஒண்டும் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான விழா இல்லை அவர்கள் மட்டும் தீர்மானம் எடுக்க. தமிழ் நெட் தங்களோட பேசுங்கோ எண்டு எங்கயும் சொல்ல இல்லை. தமிழ் நாட்டு மக்களின் மனதை பிரதிபலிக்குதா? நல்ல பகிடி தான். திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் எதை வைத்து தீர்மானித்தாங்க? சும்மா 2006 க்கு 23/ 29?? வருசத்தை கூட்டி வச்சா சரி எண்டா? அந்த கணக்கை எப்பிடி பிடிச்சாங்க? அந்த மாற்றம் இப்ப நடக்க இல்லை திருவள்ளுவர் ஆண்டை சொல்ல தொடங்கி கன வருசம் ஆச்சு. ஆனா அதை பற்றி ஆராய்ந்த விளக்கத்தை எங்கும் காண முடியவில்லை. நீங்களும் நானும் இன்னும் எங்களுக்கு தெரின்ச 2 பேரும் கூடி பேசி தீர்மானிக்கிறது தான் ஆராய்ச்சி எண்டா அதை போல பகிடி வேறை ஒண்டுமில்லை. தர்க்க ரீதியான ஆராச்சிகளும், ஆதாரங்களுடனும் நிறுவப்படாது அது ஆரியரது/ இது திராவிடரது என்று சொல்லி எடுத்தோம் கவிழ்த்தோம் என தீர்மானிப்பது நாகரீகமும் அல்ல அது நிலைத்தும் நிக்காது.

அவர்கள் அரசு அவர்கள் மாற்றுகிறார்கள்.உங்களுக்கு என்ன வந்தது?

அவர்களின் முடிவில் தலையிட தமிழ் நெற்றுக்கு என்ன உரிமை இருக்கிறது?

நீங்கள் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் புத்தாண்டு கொண்டாடலாம் கொண்டாடாமலும் இருக்கலாம் அதற்காக அவர்கள் தமது அரச அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகளை எங்கனம் அவர்கள் உங்களிடம் கேட்டுத் தான் எடுக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் தமிழ் நெற் கேட்கிறது?

தமிழ்னெற்றை என்ன தமிழ் நாட்டு மக்களா நாடத்துகிறார்கள்?

இவ்வாறாக மற்றவர் விடயங்களில் மூக்கை நுழைக்கும் கட்டுரைகளால் தமிழ் நெற் எத்தகைய பயனை அறுவடை செய்கிறது?

"தைத் திருநாளே தமிழர்களின் புத்தாண்டு" என்ற செய்தியை கனடாப் பிரதமருக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த முறை அவர் தைத் திருநாளுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆமாம்! தமிழர் புத்தாண்டை தமிழகத்தில் மாற்றுவார்களாம். உடனே இங்கே சில பேர் அது சம்பந்தமாக கனேடிய பிரதமரை அறிவுறுத்தும் அளவுக்கு போவார்களாம். ஆனால் தமிழ் நெட் அது பற்றி எல்லாம் எழுதக்கூடாதாம். அப்படி எழுதியதும் அது தமிழகத்தின் உள்விவகாரம் என்று ஒரே அடியாக குட்டிக்கரணம் அடிப்பார்களாம். எது மற்றவர் விடயம்? எது தமிழகத்தின் உள்விவகாரம் ?

கனடா எப்போது தமிழகத்தின் ஒரு பகுதியாகியது??? . என்ன கொடுமை சார் இது :D

மாற்றம் தமிழகத்துடன் நின்று விடுமானால் தமிழ் நெட் ஒருவேளை அபிப்பிராயம் எழுதுவதை தவிர்த்து இருக்கக்கூடும். ஆனால் இங்கே சில தலையாட்டி பொம்மைகள், ஆராய்ச்சிகள் எதுவுமின்றி, அங்கே மஞ்சள் கொடி அசைவதற்கெல்லாம் உடனே இங்கு புலத்தில் பச்சை கொடி காட்ட முயல்வதால் தான் பிரச்சினை.

Edited by vettri-vel

தமிழ் நெட் எங்க சொல்லி இருக்கு தங்களை கூடி பேச சொல்லி? தமிழ் மக்களின் விழா தொடர்பாக சரியாக கூடி பேசாது தீர்மானம் எடுக்க முடியாது அதை தான் சுட்டி காட்டி இருக்கு.

சரியாக் கூடித் தீர்மானம் எடுக்கவில்லை என்னும் முடிவுக்கு 'அம்பலம்' எப்படி வந்தார்? தமிழ் நாட்டு அரசைப் பொறுத்தவரை அவர்கள் கூட வேண்டியவர்கள் கூடி ஆராய்ந்து முடிவை எடுத்திருகிறார்கள்.இங்கே தமிழ் நெட்டின் அடிப்படை வாதமே தமிழப் புத்தாண்டு தினத்தை மாற்றக் கூடாது என்பதே.ஆகவே தமது கருத்தின் படி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதை வைத்து, தங்களைக் கலந்தாலொசித்து முடிவு எடுக்க வில்லை என்பதே அதில் தொக்கி நிற்கும் கருத்து.தமிழ் நாட்டு அரசைப் பொறுத்தவரை அவர்கள் கூடி ஆராய்ந்தே முடிவை எடுத்திருகிறார்கள்.மறைமலையட

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக எனக்குமுள்ள சந்தேகமும் அது தான். 500 தமிழ்ப் புலவர்கள் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைக் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். அவர்கள் எதை அடிப்படையை வைத்துக் கண்டு பிடித்தார்கள் என்பது பற்றி எவ்வித தகவலும் ஏற்படவில்லை. எல்லாவற்றையும் ஆராயும் நண்பர் சுகனும், அது பற்றி ஆராய்ந்த மாதிரித் தெரியவும் இல்லை.

திருவள்ளுவர் ஆண்டு எப்படிக் கணிக்கப்பட்டது? திருவள்ளுவர் ஆண்டு தான் தமிழர் ஆண்டு எனில், அவர் பிறந்த தினமல்லவா புத்தாண்டு நாளாக வரவேண்டும். அவர் பிறந்த நாள், தைப்பொங்கலா? அதற்கான ஆதாரம் எங்கிருந்து பெறப்பட்டது?? தொல்காப்பியம், அகத்தியம் போன்ற இதை விட முந்திய ஏடுகளின் வரலாற்றை வைத்து ஏன் தமிழர் ஆண்டைக் கணிக்கவில்லை..

இப்படியெல்லாம் நிறையக் கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் பதிலளிக்கத் தயாரா?

திருவள்ளுவர் ஆண்டை எவ்வித தர்க்கரீதியான ஆதாரங்களுமின்றிக் குறைத்துக் கணித்ததின் மூலம், தமிழருடைய வரலாறு எல்லாமே சுருங்கிப் போய்விட்டது. அவருடைய ஆண்டை வைத்துத் தான் தமிழ் இலக்கியங்களின் வரலாறு கணிக்கப்படுவதால் சென்றநூற்றாண்டில் இருந்து தான் தமிழர் என்ற அடையாளம் பெற்றதாக இவ்வளவு நாளும் கருதிவந்தோம்.

ஆனால் அடுத்தவருடம் தான் தமிழர் புத்தாண்டு தைப்பொங்கலில் இருந்து ஆரம்பிக்கப் போகின்றது என்பதால், தமிழன் என்ற அடையாளமே இன்னும் பிறக்கவில்லை.... பிறப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் புத்தாண்டு என்ற கருணாநிதி அறிவித்திருந்தால் இதைப் பற்றிக் கதைக்க எமக்கு உரிமையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழர் என்று எழுதுகின்றபோது, அதைப் பற்றிக் கதைக்க அனைவருக்கும் உரிமையுண்டு. கருணாநிதி அவர்கள் ஒன்றும் தமிழர் பற்றித் தனித்து முடிவெடுக்கின்ற உரிமை உள்ளவரில்லையே.

அல்லது வேணுமென்றால் திராவிடப் புத்தாண்டு என்று அறிவிக்கலாம். அது பற்றி யாருக்கும் கவலை கிடையாது.

எப்படியாவது புலத்தமிழன் தலையிலும் இதைக் கட்டலாம் என்று திரிந்தவைக்கு அம்பலத்தார் எழுதிய கட்டுரை பிரச்சனை தந்திட்டுதாம்.

தமிழ்நாட்டில் மட்டும் அது கொண்டாடவேண்டும் என்றால் மெல்போன் சபேசன், தொடக்கம் நக்கீரன் வரைக்கும் ஏன் அதற்கு வழிய வேண்டும்?? அல்லது யாழ்களத்தில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும்போது அதற்கு என்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்

நாரதர் சொல்லியிருக்கின்றார். எனவே தைப்பொங்கலுக்கு மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் புத்தாண்டு கொண்டாடட்டும். யாராவது புலத்தில் கொண்டாடினீங்கள் என்றால் அதற்குப் பிறகு தான் நாரதரை யார் என்று பார்ப்பீர்கள். அப் புதுவருடம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியது. ஒகே

சிலபேருக்கு இப்ப தான் தமிழ்நாட்டின் மேல் பாசம் பொங்கி வழியுது.

//The calendar followed by Muslims is Arab calendar//

//All calendars are secular.// இதைப் பார்த்துச் சிரிக்கலாம்.இசுலாமியக் கலண்டரை அரபிக்கள் மட்டுமா பாவிக்கிறார்கள்.உலகில் உள்ள இசுலாமியர்கள் எல்லோரும் பாவிக்கிறார்கள். நபிகளின் பிறந்த தினதில் இருந்து தான் இசுலாமியக் கலண்டர் தொடங்கிறது.அது எவ்வாறு மதமற்ற கலண்டராக இருக்கமுடியும்?

இந்த வசனந்தை எனக்கு தெரின்ச படி மொழி பெயர்த்தால் முஸ்லீம்கள் கடைப்பிடிக்கும் கலண்டர் அராபுக்களுக்குரியது. அதில் என்ன பிழை. அரபுக்களால் நபிகளின் பிறப்பை வைத்து தயாரிக்கப்பட்ட கலண்டரை இப்போது அனைத்து முஸ்லீம்களும் கொண்டாடுகிறார்கள்.

சரி இப்போ நீங்களே சொல்லி விட்டீர்கள் இது தமிழ் நாட்டிற்குரிய மாற்றம். பிறகேன் கனடா பிரதமருக்கு நீங்கள் ஆலோசனை சொல்ல போனீர்கள் அல்லது புலத்தமிழருக்கு சித்திரையில் வருவது புதுவருடமல்ல தைப்பொங்கல் தினம் தான் புதுவருடம் என காவடி எடுத்தீர்கள். உங்கள் பேச்சு உங்களுக்கே முரண்பாடாக இல்லை? சுருங்க சொன்னால் உங்களின் கருத்தியலுக்கு எதிராக தமிழ் நெட் பேசி விட்டது. அது தான் உண்மை. அதற்காக இப்போது தமிழக அரசியல், எமக்கான ஆதரவு என பயங்காட்டும் ஆயுதத்தை துக்கி பிடித்திருக்கிறீர்கள்.

Edited by KULAKADDAN

தமிழ்நாட்டின் புத்தாண்டு என்ற கருணாநிதி அறிவித்திருந்தால் இதைப் பற்றிக் கதைக்க எமக்கு உரிமையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழர் என்று எழுதுகின்றபோது, அதைப் பற்றிக் கதைக்க அனைவருக்கும் உரிமையுண்டு. கருணாநிதி அவர்கள் ஒன்றும் தமிழர் பற்றித் தனித்து முடிவெடுக்கின்ற உரிமை உள்ளவரில்லையே.

அல்லது வேணுமென்றால் திராவிடப் புத்தாண்டு என்று அறிவிக்கலாம். அது பற்றி யாருக்கும் கவலை கிடையாது.

எப்படியாவது புலத்தமிழன் தலையிலும் இதைக் கட்டலாம் என்று திரிந்தவைக்கு அம்பலத்தார் எழுதிய கட்டுரை பிரச்சனை தந்திட்டுதாம்.

தமிழ்நாட்டில் மட்டும் அது கொண்டாடவேண்டும் என்றால் மெல்போன் சபேசன், தொடக்கம் நக்கீரன் வரைக்கும் ஏன் அதற்கு வழிய வேண்டும்?? அல்லது யாழ்களத்தில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும்போது அதற்கு என்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்

நாரதர் சொல்லியிருக்கின்றார். எனவே தைப்பொங்கலுக்கு மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் புத்தாண்டு கொண்டாடட்டும். யாராவது புலத்தில் கொண்டாடினீங்கள் என்றால் அதற்குப் பிறகு தான் நாரதரை யார் என்று பார்ப்பீர்கள். அப் புதுவருடம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியது. ஒகே

சிலபேருக்கு இப்ப தான் தமிழ்நாட்டின் மேல் பாசம் பொங்கி வழியுது.

தூயவன் எழுதும் கருதுக்களை உள் வாங்கி அதற்கான பதிற் கருதுக்களை எழுதுங்கள். நீங்கள் இன்று உயர் கல்வி படிப்பவர் அதற்கான முதிர்ச்சியுடன் கருத்தாடுங்கள்.தனி நபர் சார்ந்து எழுதுவதை நிறுத்துங்கள்.

இது சபேசன் நாரதர் என்னும் தனி நபர்கள் சார்ந்த கருத்தாடல் அல்ல.

தம்ழினெறின் அம்பலதாருக்கு அவரது கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது.ஆனால் தமிழ்னெற்றின் நோக்கம் அதன் வீச்சு அதன் எல்லைகள் பற்றி பொறுப்பனவர்கள் சிந்திக்க வேண்டும் என்றே எழுதி இருக்கிறேன்,ஏனெனில் உலகை ந் நோக்கிய ஆங்கில ஊடகம் என்று எமக்குத் தமிழ்னெற் மட்டும் தான் இருக்கிறது.அது ஓர் இருவரின் கருதுக்களித் தாங்கி சர்ச்சைக் குரிய அரசியல் பிரசினைகளின் வெளி வருவதன் தார்பரியம் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

// He also tells us about the Pallavas introducing this calendar and the New Year to Southeast Asian Cultures.//

அப்படியாயின் பல்லவர்காலதுக்கு முந்தைய தமிழரின் காலக்கணிகை எது? நாங்கள் தமிழிரின் காலக்கணிகையாக எந்த அரசனின் காலக் கணிகையைத் தமிழரின் காலக்கணிகையாக ஏற்றுக் கொள்வது? நான் முன்னர் கூறியதைப் போல் காலக்கணிகை என்பது ஒரு அரசியல் முடிவு அதற்கும் அறிவியலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.இன்றைய தமிழ் மக்கள் எதனை விரும்புகிறாரார்களோ அதுவே அவர்களின் காலக் கணிகையாக அரசியல் ரீதியாக முடிவு எடுக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?

ஏன் வசனங்களை உங்கள் தெவைக்கு ஏற்ற மாதிரி கொத்து ரொட்டி போட்டு கருத்தை திரிக்கிறீர்கள். :D:D

ஒரு வசனத்தின் பொருள் அந்த அந்த பந்திகளில் இருக்கும் போது ஒரு பொருளையும் அதை பிரித்து தனியே இட்டால் வேறு மாதிரி விளங்க கூடியது.

In fact a Sinhala gentlemen has sent us a touching feedback to say how the Tamils have introduced the solar New Year (the April New Year) to Sinhalese. He also tells us about the Pallavas introducing this calendar and the New Year to Southeast Asian Cultures.

இந்த பந்தியில் சொல்ல வந்தது சிங்களவருக்கு இப்போது இருக்கும் கலண்டரை அறிமுகப்படுத்தியவர்கள் பல்லவர்கள். அதே போல ஏனைய தென் கிழக்கு ஆசிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். இங்கு தென் கிழக்கு ஆசியா என்பது இந்தியா இலங்கையை குறிப்பதல்ல. அது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்றவற்றை குறிக்கிறது. அண்மையில் கானாபிரபா எழுதிய தென்கிழக்காசியாவில் செல்வாக்கு செலுத்திய பல்லவ மன்னார்கள் பற்றிய பதிவை படிக்கலாம். அது பல்லாவர்களின் தென் கிழக்காசிய செல்வாக்கை சொல்லும்.

இப்போ என் கேள்வி இதில் என்ன பிழை. தமிழர்களிடம் ஏற்கனவே இருந்த கலண்டரை பல்லவர்கள் தமது செல்வாக்குக்கு உடபட்ட எனைய பகுதிகளுக்கு அறிமுகம் செய்தார்கள். அதை தான் அம்பலம் என்பவர் சொல்கிறார்.

உங்களுக்கு வேண்டிய மாதிரி வசனங்களை கொத்து ரொட்டி போட்டு கருத்தை திரிக்காதீர்கள். உங்களால் கொத்தி எறிய பட்ட ஒவ்வோரு வசனத்துக்கும் பந்தி சேர்த்து விளக்கம் எழுத நேரம் போதாது.

இந்த வசனந்தை எனக்கு தெரின்ச படி மொழி பெயர்த்தால் முஸ்லீம்கள் கடைப்பிடிக்கும் கலண்டர் அராபுக்களுக்குரியது. அதில் என்ன பிழை. அரபுக்களால் நபிகளின் பிறப்பை வைத்து தயாரிக்கப்பட்ட கலண்டரை இப்போது அனைத்து முஸ்லீம்களும் கொண்டாடுகிறார்கள்.

//All calendars are secular.//

மேற் சொன்னதில் உங்களுக்கு என்ன விளங்கி உள்ளது? secular என்றால் என்ன? எல்லாக் காலக்கணிகைகளும் மதச்சார்பற்றவை என்கிறார்.

சரி இப்போ நீங்களே சொல்லி விட்டீர்கள் இது தமிழ் நாட்டிற்குரிய மாற்றம். பிறகேன் கனடா பிரதமருக்கு நீங்கள் ஆலோசனை சொல்ல போனீர்கள் அல்லது புலத்தமிழருக்கு சித்திரையில் வருவது புதுவருடமல்ல தைப்பொங்கல் தினம் தான் புதுவருடம் என காவடி எடுத்தீர்கள். உங்கள் பேச்சு உங்களுக்கே முரண்பாடாக இல்லை? சுருங்க சொன்னால் உங்களின் கருத்தியலுக்கு எதிராக தமிழ் நெட் பேசி விட்டது. அது தான் உண்மை. அதற்காக இப்போது தமிழக அரசியல், எமக்கான ஆதரவு என பயங்காட்டும் ஆயுதத்தை துக்கி பிடித்திருக்கிறீர்கள்.

கனடாவில் இருக்கும் தமிழர்கள் தமது பிரதமருக்குத் தமது கருதைத் தெரிவிப்பார்கள்.புலத் தமிழனான நான் புலத் தமிழர்கள் பற்றி எழுதாமல் யார் பற்றி எழுதுவது?

தமிழ் நெற் தமிழ் நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் எங்கனம் ஆலோசனை வழங்கலாம்?

இவற்றைத் தவிர்த்து விட்டாலும் அம்பலத்தாரின் கருதுக்கள் எவ்வகையில் எந்தவித தர்க்கமும் அற்றவை என்பதை மேலே ஒவ் வொன்றாக சுட்டிக் காட்டி உள்ளேன் அது பற்றிய உங்கள் கருதுக்கள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறுமனே கருணாநிதி சார்ந்த பிரச்சனையல்ல. உலகத்தமிழர் மக்கள் அனைவரினதும் பிரச்சனை. பொறுப்புள்ள அவர் செய்யவேண்டிய விடயத்தைச் சுட்டிக்காட்டியதில் என்ன தவறு இருக்கமுடியும்? நிச்சயமாக தமிழர் பற்றி அவர் எடுத்த ஆதாரங்கள் ஏதும் காட்டி நியாயப்படுத்ததாத, தன்னிச்சையான தமிழர் பற்றிய முடிவுக்கான கண்டணமாகவே இது வெளியிடப்பட்டிருக்கின்றது.

வெறுமனே சொல்லப்பட்ட ஒன்று. மறைமலை அடிகளும், சார்ந்தவர்களும் எடுத்த முடிவு என்று மட்டுமே. படித்தவர்கள் முடிவெடுத்தால் உடனே அது நியாயம் என்று நினைத்து மக்கள் ஏமாறுவார்கள் என்று தான் கருதப்பட்டிருக்கின்றதே தவிர, மக்களுக்கு எவ்விதமான விளக்கமு;ம கொடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் எடுக்கின்ற இந்த முடிவு எங்களையும் பாதிக்கின்றது. அதனால் தமிழ்நெற்றும் மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.

உங்களுக்குள்ள பிரச்சனை, குளக்காட்டான் சொன்னது போல, எதிரான முடிவு வந்தது என்பதற்காகப் பயம் காட்டுகின்றீர்கள். அவ்வளவு தான்.

சரி. விடுங்கள். தமிழ்நாட்டில் தானே அறிவித்துள்ளார்கள். எம்மவர்கள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுங்கள் என்று உங்களால் சித்திரைப்புத்தாண்டை வைத்து ஒரு கருத்தெழுத முடியுமா? ஏலாது. ஏன் என்றால் உங்களின் உணர்வும் அவர்கள் சார்ந்ததே.

இதைத் தமிழ்நெற்றுக்கான நியாயமான கோரிக்கை என்பதை விட, பக்கம் சார்பான கோரிக்கையாகவே கொள்ள வேண்டும்.

ஏன் வசனங்களை உங்கள் தெவைக்கு ஏற்ற மாதிரி கொத்து ரொட்டி போட்டு கருத்தை திரிக்கிறீர்கள். :D:D

ஒரு வசனத்தின் பொருள் அந்த அந்த பந்திகளில் இருக்கும் போது ஒரு பொருளையும் அதை பிரித்து தனியே இட்டால் வேறு மாதிரி விளங்க கூடியது.

In fact a Sinhala gentlemen has sent us a touching feedback to say how the Tamils have introduced the solar New Year (the April New Year) to Sinhalese. He also tells us about the Pallavas introducing this calendar and the New Year to Southeast Asian Cultures.

இந்த பந்தியில் சொல்ல வந்தது சிங்களவருக்கு இப்போது இருக்கும் கலண்டரை அறிமுகப்படுத்தியவர்கள் பல்லவர்கள். அதே போல ஏனைய தென் கிழக்கு ஆசிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். இங்கு தென் கிழக்கு ஆசியா என்பது இந்தியா இலங்கையை குறிப்பதல்ல. அது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்றவற்றை குறிக்கிறது. அண்மையில் கானாபிரபா எழுதிய தென்கிழக்காசியாவில் செல்வாக்கு செலுத்திய பல்லவ மன்னார்கள் பற்றிய பதிவை படிக்கலாம். அது பல்லாவர்களின் தென் கிழக்காசிய செல்வாக்கை சொல்லும்.

இப்போ என் கேள்வி இதில் என்ன பிழை. தமிழர்களிடம் ஏற்கனவே இருந்த கலண்டரை பல்லவர்கள் தமது செல்வாக்குக்கு உடபட்ட எனைய பகுதிகளுக்கு அறிமுகம் செய்தார்கள். அதை தான் அம்பலம் என்பவர் சொல்கிறார்.

உங்களுக்கு வேண்டிய மாதிரி வசனங்களை கொத்து ரொட்டி போட்டு கருத்தை திரிக்காதீர்கள். உங்களால் கொத்தி எறிய பட்ட ஒவ்வோரு வசனத்துக்கும் பந்தி சேர்த்து விளக்கம் எழுத நேரம் போதாது.

தமிழர்களிடம் ஏற்கனவே இருந்த கலண்டரை பல்லவர்கள் தமது செல்வாக்குக்கு உடபட்ட எனைய பகுதிகளுக்கு அறிமுகம் செய்தார்கள். அதை தான் அம்பலம் என்பவர் சொல்கிறார்.

பல்லவர் காலத்தில் இருந்த கலண்டர் தான் சோழர் காலத்திலும் அதற்கு முந்திய பாண்டியர் ஆட்சியிலும் இருந்ததா?

காலக்கணிகைகளின் பொதுவான வரலாற்றைப் பார்த்தால் ஒவ்வொரு கால கட்டததிலும் அந்தக் காலத்தில் இருக்கும் அரசியற் செல்வாக்கின் படியே காலக்கணிகைகள் உருவாகின.

இதைத் தன் அம்ப்லதாரும் இவ்வாறு எழுதி இருக்கிறார்.

//Calendars are associated with Eras.//

அப்படியாயின் தமிழரின் நீண்ட வரலாற்றில் எந்த ஈராவின் கலண்டரை நாங்கள் தமிழரின் காலக்கணிகை என்பது?.

//The quest is to find a Tamil Era for the Tamil calendar//

என்று அவரே சொல்கிறார்,அதே கேள்வியைத் தான் நானும் கேட்கிறேன்.

Edited by narathar

In fact a Sinhala gentlemen has sent us a touching feedback to say how the Tamils have introduced the solar New Year (the April New Year) to Sinhalese. He also tells us about the Pallavas introducing this calendar and the New Year to Southeast Asian Cultures.

அம்பலம் தனிமனிதர் கருத்துச் சொல்லுறார் எண்டா உதில வாற "us" என்ற பன்மை யாரைக் குறிக்குது? முன்னர் பிரசுரிக்கப்பட்ட Tamil New Year என்றதற்கு கிடைத்த பின்னூட்டம் என்ற context இல் தானே உது எழுதப்படுகுது. இல்லாட்டி அம்பலம் என்பவர் ஒரு குழுவாக இயங்குகிறாரோ? இதை எழுதியவருக்கும் அல்லது எழுதியவர்களிற்கும் தமிழ்நெற்றை நடத்துபவர்கள் பொறுப்பானவர்களிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வது நகைப்பிற்கிடமானது. கடந்த காலங்களில் தமிழ்நெற் சம்பிரதாய சமய கலாச்சார விடையங்களில் பிரசுரித்து வந்ததா? அல்லது 3 நாட்களுக்கு முன்ன அந்த முடிவு எடுக்கப்பட்டதா Also reporting controversial Tamil internal affairs to the World என்று?

புத்தாண்டை மாற்றுவதா இல்லையா என்ற விவாதம் தமிழ் உலகில் நடத்தப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஆனால் தமிழ்நெற் அதற்கு அப்பால் இயங்க வேண்டும். அதன் நோக்கம் பணி கடமை வேறு. தமிழ் உலகினுள் விவாதங்களை கொண்டு (ஆங்கில மொழியில் உட்பட) சொல்ல வேறு பல தளங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதை மாற்றி முடிந்த பிறகு சொல்லுங்கள். முதலே இருந்து அதை;த தாடீன கேட்கின்றோம். மாற்றுவதற்கு என்ன தேவை வந்தது? ஏன் மாற்ற வேண்டும் என்று.

60 ஆண்டு காலப் பெயர்களிலும் அசிங்கமிருந்தால் அதைத் தமிழுக்கு மாற்றுங்கள். அதை விட்டு விட்டு, தங்களுடைய அரசியல், பெயர், பெருமைகளுக்காக எவரிடமும் கேட்காமல் நாளையே மாற்றுவது என்ன நியாயம்?

தமிழ்நெற்றுக்கு நிறையப் பணியிருக்கலாம். ஆனால் தமிழை மறந்து விட்டுத் தமிழீழம் காண்பது எவ்வாறு வீணாதோ,

அவ்வாறே இருக்கின்ற அடையாளங்களை எல்லாம் ஒருவன் ஏலம் போட்டு வித்துக் கொண்டிருக்கின்றபோது, பேசாமல் இருப்பதும் தவறு.

தமிழ்நெற்றுக்கு என்ன கடமை இருக்கின்றது என்பது நடத்துபவர்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் முதலில் தத்தமது கடமைகளைச் செய்யுங்கள்

Edited by தூயவன்

//Being a Tamil, this writer has to write in English not only to see that it reaches international readership, but also to get the attention of our own social elite.

Sanskrit had a similar function in the past. Books of knowledge were written in Sanskrit even by Tamil scholars. Finding something in Sanskrit need not necessarily mean non-Dravidian ideas, innovation or authorship. //

குருக்ஸ் அதற்கான விளக்கத்தையும் அவர் இப்படிக் கொடுத்திருகிறார்.சர்வதேசத்த

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டை மாற்றுவதா இல்லையா என்ற விவாதம் தமிழ் உலகில் நடத்தப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஆனால் தமிழ்நெற் அதற்கு அப்பால் இயங்க வேண்டும். அதன் நோக்கம் பணி கடமை வேறு. தமிழ் உலகினுள் விவாதங்களை கொண்டு (ஆங்கில மொழியில் உட்பட) சொல்ல வேறு பல தளங்கள் உண்டு.

*** இப்ப தமிழ்நெட்டுக்கே.. பணி என்ன என்று கற்பிதம் செய்கிறார்கள். தமிழ்நெட் நிறைய அலசி ஆராய்ந்துதான் இக்கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தந்து பிரசுரித்துள்ளது. அவற்றின் காலத்தேவை கருதித்தான் அவை பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதுவும் முதலாவது கட்டுரை.. கல்விசார் சான்றுகளூடு எழுதப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நெட்டுக்குரிய பணியை அதற்கு தீர்மானிக்கும் தகுதி இங்கிருப்பவர்களுக்கு எவ்வகையிலும் கிடையாது. அதற்கான 1% தகமை கூட இல்லை இவர்களுக்கு என்பதை கருத்தாளர்கள் புரிந்து கொண்டு.. தமிழ்நெட்டுக்கு பணி ஒதுக்கம் கற்றுக் கொடுக்க முதல்.. அது பிரசுரித்த கட்டுரை எவ்வெவ்வகையில் நிராகரிக்கப்படுகுது என்றதை இவை விளக்கினா அல்லது நிறுவினா.. தமிழ்நெட் இவையிண்ட அறிவை யூஸ் பண்ணி.. தகுந்த மாற்றங்களை செய்ய முன்வரும் என்பதை அம்பலத்தார் மறைமுகமாக.. தான் கடந்த பதிவுக்கான பீட் பக்குக்கு நன்றி சொல்லிக் குறிப்பிட்டிருக்கிறார்..! அதைச் செய்யலாமே. அதை விட்டிட்டு தங்கள் இயலாமையை மறைக்க.. தமிழ்நெட்டுக்கு பணி சொல்லினமாம் பணி..! :D:D

Edited by இணையவன்
நிர்வாகம் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.