Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி

[28 - April - 2008]

இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.

இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்.

இதேவேளை, ரயில் பாதை அபிவிருத்தித் திட்டங்களுக்காக மற்றொரு தொகையாக 100 மில்லியன் டொலர்களையும் இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2008 நிதியாண்டுக்காக இரு தரப்பு வட்டி வீதம் குறைந்த சலுகைக் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களையே இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. இத் தொகையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக வழங்குவது ஒப்பீட்டளவில் பாரிய தொகையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இதுவரை கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான உணர்வுகளுக்கு இடமளிக்கும் இந்த விடயம் குறித்து அதிகாரி ஒருவரும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இந்த நிதிவளத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முக்கியமாக இலங்கை பயன்படுத்தும்.

இந்தியாவின் இந்த நடவடிக்கையானது விடுதலைப் புலிகளை மறைமுகமாக அழிப்பதற்கான மற்றொரு முயற்சியாக நோக்கப்படுகிறது.

இந்த மாதிரியாக பாரிய அளவில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவும் திட்டத்தை இந்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசியல் பலம் பொருந்திய பங்காளியாக இருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவதற்கான சாத்தியம் இல்லையெனக் கூறப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு விவகார ஆய்வாளர் சி.உதே பாஸ்கர் புதுடில்லியின் இந்த நடவடிக்கைக்கு சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார். ்கொள்கையளவில் இதற்கு நான் ஆதரவளிக்கிறேன். இலங்கைக்கோ நேபாளத்திற்கோ இராணுவ உதவி தேவைப்பட்டால் நாங்கள் தான் முதலில் செல்பவர்களாக இருக்க வேண்டும்.

இல்லாவிடில் அமெரிக்காவோ, சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ அந்த இடைவெளியை நிரப்பிவிடும். அவ்வாறு நடைபெற்றால் கேந்திர உபாய ரீதியாக அது பிரதிகூலமான விடயமாக எமக்கு (இந்தியாவுக்கு) அமையும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.thinakkural.com/news/2008/4/28/...s_page49979.htm

இந்தியாவ திருத்தமுடியா???

திருத்த முடியாதில்லை...

திருந்த மாட்டாங்கள்... அனுபவம் மாதிரி ஒரு நல்ல ஆசான் இல்லை... அது உணரும் போது காலம் கடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவ திருத்தமுடியா???

தமிழ்நாட்டுத்தலைவர்கள்

நாக்கைப்பிடிங்கி சாகலாமையா.....

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே பயணத்தின் பின்னான அண்மைய டில்லி சந்திப்பின்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அண்ணன் வைகோவின் காதில் பூச்சுற்றி அனுப்பிவிட்டார்போல் தெரிகிறது. அதில் அவர் ஈழத்தழிழருக்கு எதிராக இலங்கைக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று சொன்னாரே.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவுடைய கள்ளப் பொஞ்சாதி மாதிரி ஆயிற்றுது. நீ சரியில்ல நான் பாகிஸதானோடையும், சீனாவோடையும், ஈரானோடையும் படுத்துத் தூங்கப்போறனெண்டு இந்தியாவை வெருட்டி வெருட்டிக் காசுபறிக்குது. இந்தியாவும் மூப்படைஞ்சு ஆண்மை இழந்துபோன கணவன்மாதிரி கள்ளப் பொஞ்சாதியுடைய கற்பைக் காப்பாத்துறதுக்கு அதை இதக் குடுத்து படாத பாடு படுகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இந்தியா நிதி உதவி

வீரகேசரி இணையம் 4/28/2008 3:26:35 PM - இலங்கையின் பாதுகாப்புத் துறையினர், ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கொணமிக்கல் ரைம்ஸ் என்ற சஞ்சிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும் 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.

இதேவேளை ரயில் பாதை அபிவிருத்தித் திட்டங்களுக்காக மற்றொரு தொகையாக 100 மில்லியன் டொலர்களையும் இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2008 நிதியாண்டுக்காக இரு தரப்பு வட்டி வீதம் குறைந்த சலுகைக் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களையே இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. இத் தொகையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக வழங்குவது ஒப்பீட்டளவில் பாரிய தொகையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இதுவரை கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான உணர்வுகளுக்கு இடமளிக்கும் இந்த விடயம் குறித்து இந்திய அதிகாரிகள் எவரும் கருத்து தெரிவிக்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரு அண்ணா!

உதை வாசிக்க எனக்கே கொஞ்சம் கூசுது... :lol::):):D

தொப்புள்கொடி உறவு எண்டுறாங்க ஆனால் அதை அறுத்துக்கொண்டிருக்கிறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்ன் மகள் பிரியங்காவின் நளினியுடனான சந்திப்பின் பின்னணியில் ஏதோ இருக்குது?

இந்திய மத்திய அரசு ஒரு மாற்றத்தை விரும்புகின்றது.

இவை சென்ற மாதம் யாழில் இந்தியா பற்றிய செய்திகளாயிருந்தன.

சொந்தநாட்டை கொள்ளையடித்து சுவிஸ்பாங்கில் கணவன் போட அதை வைத்து மனைவியும் மகளும் அரசியல் நடத்தி இன்னமும் எப்படி கொள்ளையடிப்பது என்று திரியும் இந்த கூட்ட்ததை யும் மனிதநேயத்தையும் ஓரே கட்டுரையில் எழுதமுயற்சிக்கும் மூடர்கள் உள்ள வரை. இவர்களின் வாழ்வு ஓகோ...ஆகா என்றுதான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் இன்னும் இந்தியாவை நம்பிக்கொண்டு, எமக்கு தனி நாடு எடுத்துத் தரும் என்ற கனவோடு வாழ்ந்து வரும் ஈழத்து இந்திய அபிமாணிகளுக்கு அர்ப்பணம்.

கடைசியாக ஒன்று, இந்தியாவின் பிரதேச அதிகாரமும், அதன் போலியான ஒருமைப்பாடும் தான் எமது போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பின் அந்த போலி ஒருமைப்பாடு உடைந்தாவது நாம் தமிழீழம் காணுதல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.