Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி- ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை மட்டுமல்லாது வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டிமையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டியமை அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்திற்கு மட்டுமல்லாது முழு நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயகத்தை வடக்கிற்கு கொண்டு செல்வதற்கும் கிழக்கு மாகாண மக்கள் அனுமதியளித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் கோரப் பிடியிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தாங்களாகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர். இதன் மூலமாக அந்த மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் துரிதப்படுத்தப்படும். கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது மட்டுமல்லாது வடக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்பதுடன் இந்த தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான முறையில் நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய சகல அதிகாரிகளுக்கும் அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: எங்களுக்கு அந்த ஜனநாயகம் வேண்டாம். அதை அவர்களே வைத்திருக்கட்டும். ஏனென்றால் அந்த ஜனநாயகம் கூட சிலகாலம் தான் உயிர்வாழப்போகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் 1989 இல வடக்குக்கிழக்கு இணைந்த மாகாண சபை தேர்தலையும் நடத்திப் போட்டுச் சொன்னவை. நான் சின்னன் என்றாலும் இப்பவும் ரீவியில பார்த்தது நல்ல ஞாபகமா இருக்குது.

அப்ப அண்ணன் வரதராஜப் பெருமாளுக்கு முதலமைச்சர் மகிடம் சூடின போது.. அவரும் உப்படித்தான் சொன்னவர்...! இதோ வடக்கும் கிழக்கும் அபிவிருத்தியடையுது என்று. ஆனா அங்க பார்த்தா வடக்கும் கிழக்கும் வந்த காசு.. தெற்கையும் மேற்கையும் அபிவிருத்தி செய்யப் போனதும்.. கொஞ்சம் வரதர் அண்ணாச்சியின் சட்டைப் பையை நிரப்பினதும் தான் மிச்சம்.

இப்ப அதே இடத்தில பிள்ளையான் அண்ணாச்சி. என்ன வடக்கு கிழக்கு இணைஞ்சிருந்ததை... புலிய விரட்டி.. பிரிச்சிட்டினம். மகிந்த ஒரு விசயத்தை ஒத்துக் கொண்டுண்டிட்டார். புலிகள் கிழக்கில இருக்கேக்க வடக்கும்கிழக்கும் இணைஞ்சிருந்தது. ஆனால் தன்ர படைகள் அங்க போய் அதை பிரிவினை செய்து பிரிச்சிட்டினம் என்று.

அப்ப பிரிவினையை தூண்டியது.. மகிந்தவும் படைகளும் தானே. புலிகள் அல்ல.

உலகத்தை ஏமாற்ற ஜனநாயம் மலர்ந்திட்டு என்று காட்ட ஒரு தேர்தல்.

உலகத்தில இப்ப எல்லாம் ஜனநாயக நியமம் என்ன என்றால் எப்படியாவது ஒரு தேர்தல் நடத்திறது. அது எவ்வகையில் மக்களுக்க திணிக்கப்பட்டாலும் சரி.. இராணுவ அச்சுறுத்தலுக்க.. ஆயுதங்களின் கீழ ஒரு தேர்தல் நடத்தினாலும்.. அது உலகத்தின்.. சா அமெரிக்காவின் அராஜ ஜனநாயகத்துக்கு.. பூப்போன்ற ஜனநாயமே. ஏன்னா.. அதுவும் அப்படித்தானே ஈராக்... ஆப்கானிஸ்தான் என்று ஜனநாயகத்தை நிலைநாட்டுது. :wub:

இப்ப எல்லாம் ஜனநாயகம் என்பது. இதுதான். "மக்களை இராணுவ அதிகாரத்தால் வாக்குகளை போடச் செய்து அவர்களை ஆளுதல்."

அப்ப இணைஞ்சிருந்ததை.. இப்ப வெற்றிகரமா பிரிச்சிட்டு.. அபிவிருத்தி செய்யப் போகினமாம்...

எனக்கு ஒன்று விளங்கல்ல.. ஐக்கிய இலங்கை எண்டீனம்.. ஆனால் வடக்கும் கிழக்கும் ஐக்கியமாகிறது கூடாதாம்..! வடக்கையும் கிழக்கையும் பிரிக்கலாம் என்றால் ஏன் வடக்கும் கிழக்கும் மிஞ்ச இலங்கையில இருந்து பிரியப்படாது..???! அதுவும் அபிவிருத்திக்கு கூடிய சாத்தியமா எல்லோ இருக்குது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மழைகாலத்தில்.............. முகில்கூட்டம் சூரியனை மறைப்பதை வைத்து........... சூரியன் உடைந்துவிட்டது போன்ற கதைதான் இதுகும். மாரிகாலம் முடிய என்ன செய்போறார் மகிந்து!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்:

அப்ப இணைஞ்சிருந்ததை.. இப்ப வெற்றிகரமா பிரிச்சிட்டு.. அபிவிருத்தி செய்யப் போகினமாம்...

எனக்கு ஒன்று விளங்கல்ல.. ஐக்கிய இலங்கை எண்டீனம்.. ஆனால் வடக்கும் கிழக்கும் ஐக்கியமாகிறது கூடாதாம்..! வடக்கையும் கிழக்கையும் பிரிக்கலாம் என்றால் ஏன் வடக்கும் கிழக்கும் மிஞ்ச இலங்கையில இருந்து பிரியப்படாது..???!

இதனைத்தான் குப்பை அரசியல் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
:D வடக்கும் கிழக்கும் தனித்தனியே பிரிவது சிங்களவனுக்கு நல்லது. வடக்கும் கிழக்கும் இணைந்து இலங்கையிலிருந்து பிரிவது தமிழனுக்கு நல்லது. ஆக மகிந்த தனக்கு நல்லதைச் செய்கிறார். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, மகிந்த இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண மக்களுக்கு வைத்த செக்மேட் ! பிள்ளையானுக்கு வாக்களிக்கவும் முடியாது, அவனுக்கு வாக்களிக்காமல் இருக்கவும் முடியாத நிலையை ஏற்படுத்தியது. எப்படியென்று கேட்கிறீர்களா ? கிஸ்புள்ளாவை தேர்தலில் இறக்கியதன் மூலம் தெந்தமிழீழ மக்கள் தாம் விரும்பாவிட்டாலும் பிள்ளையானுக்கே வாக்களிக்கும்படி ஆகிவிட்டதே ?????

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் டிச்சு போடுறான்...

ரெம்ப நொள்ளு பண்றாரு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.