Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஸ்புல்லா உட்பட மூவர் கிழக்கு மாகாணசபையில் தனித்துச் செயற்பட தீர்மானம்

Featured Replies

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹின் தலைமையில் வெற்றிப்பெற்ற மூன்று உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் இந்த நிலையில் தமது ஆதரவு இல்லாமல் கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மையை பெறமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளனா.

அதனால் முதலமைச்சர் தெரிவுக்குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கவேண்டும் என அந்தக்கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர்.

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஜவாஹிர் மொஹமட் அலி மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ செய்திகள் பார்க்க....................

http://isooryavidz.blogspot.com/

paapam%20copy.jpg

கிழக்கு மாகாண சபையின் முதல்வர் ஆசனத்துக்கு துணைப்படை பிள்ளையானை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான மூவர் குழு தனித்து இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இது என்ன சத்திய சோதனை பிள்ளையானுக்கு.........

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: சோதினை , கீதினை எண்டு நீங்களொண்டும் பிள்ளையானைப் பயப்படுத்த வேண்டாம். உந்தப் பயத்திலதான் அவர் மூண்டாம் வகுப்போடெயே பள்ளிக்கூடத்துக்குப் போறத நிப்பாட்டினவராம்.

Edited by இணையவன்

கிழக்கு மாகாண சபையின் முதல்வர் ஆசனத்துக்கு துணைப்படை பிள்ளையானை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான மூவர் குழு தனித்து இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

பிள்ளையானை எதிர்க்கும் அளவிற்கு ஹிஸ்புல்லாவுக்கு தைரியம் உள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன், பிள்ளையானோ அல்லது எவரோ புலிகளுடன் இருக்கும்போதுதான் தைரியமும் , மரியாதையும். அவர்கள் எப்போது புலிகளை விட்டு தமிழ்த் தேசியத்துக்கு துரோகமிழைத்து மகிந்தவின் காலை நக்கத் தொடங்கினார்களோ, அன்றே அவர்கள் மேலிருந்த மரியாதை போய்விட்டது. இன்று அவர்களும் மற்ற காடைக்குழுக்கள் போலத்தான் எல்லாருக்கும் தெரிவார்கள். கிஸ்புள்ளா முஸ்லீம்களால் தெரிவு செய்யப்பட்ட் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். எமது ஆதரவு அவருக்கு இருக்குதோ இல்லையோ, நிச்சயமாக முஸ்லீம்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. அவர் பிள்ளையான் எனூம் கோடரிக் காம்புக்கு பயப்பட வேண்டிய தேவை எதுவுமில்லை.

வேண்டுமென்றால் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இன்னொரு கூலிக் குழுவை வைத்து பிள்ளையானைப் போட்டுத்தள்ளக் கூட முடியும் !

வேண்டுமென்றால் அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இன்னொரு கூலிக் குழுவை வைத்து பிள்ளையானைப் போட்டுத்தள்ளக் கூட முடியும் !

எதிர்மாறா நடந்தா என்ன செய்யுறது ரகுநாதன்?

பிள்ளையான் முதல்வர் ஆகியாச்சாம்! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pillaiyaan.jpg

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் சட்டவிரோதமானது என முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். தாமும் தனது அணியை சேர்ந்த மேலும் இரண்டு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், அரசாங்க தரப்பும் பிள்ளையானை முதலமைச்சராக நியமித்துள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதியும், அரசாங்கமும் முஸ்லீம் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். இதில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தன்னை மாத்திரம் ஏமாற்றவில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கிழக்கில் உள்ள முழு முஸ்லீம் சமூகத்தையும் 12 முஸ்லீம் அமைச்சர்களையும் ஏமாற்றியுள்ளதாக ஹிஸ்புல்லா விசனம் தெரிவித்துள்ளார்.

புதிய வீடியோ செய்திகள்....................

http://isooryavidz.blogspot.com/

paapam%20copy.jpg

Pillaiyaan.jpg

இன்று...

pillayan1_small.jpg

முந்தி இப்படித்தான் ஜெயவர்த்தனா ஒரு நரிவேலை செய்து இந்திய அமைதிப்படையை இலங்கைக்குக் கொண்டுவந்து அவையளை தமிழரோடையே மோதவிட்டு இலங்கைத் தமிழருக்கும் இந்திய நடுவண் அரசிற்கும் இடையிலை ஒரு நிரந்தரக் கசப்புணர்வை உண்டாக்கினவர். இப்ப ராஜபக்சவும் கிழக்குத்தேர்தல் என்று ஒன்றை நடத்தி நாற்காலிக் கனவுகளோட இருக்கிற பிள்ளையான் இஸ்புல்லா போன்றவையள்மூலம் இஸ்லாமியத்தமிழர் மற்றும் இஸ்லாமியரல்லாத தமிழரிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து அவர்களைமோதவிட்டு தான் குளிர்காயலாம் என்று நினைக்கிறார். இந்தச் சதிவலையிலை மாட்டுப்படாமல் அனைத்துத் தமிழ்ச்சமூகமும் அவதானமாயிருந்தால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உதுவற்றி சரியா தெரியாது.....ஆனா 2004 ஆம்ஆண்டத்தய மருமேன் நரியோதான் நாங்க இப்ப கூட்டு எண்டது செய்தியளில தெரிது..... :D

இன்று...

pillayan1_small.jpg

பிரித்தாளும் தந்திரத்தின் பலியாடு ஒன்று, ஒரு ஜனநாயக தறுதலையயோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பை பார்!

வாடிக்கைக்கு நன்றி சொல்லும் ஒரு விபச்சாரியின் சிரிப்பு போலவே உள்ளது!!

எனக்கென்னவோ இவர்கள் புதைகுழியை நோக்கி நடப்பது போலவே தெரிகிறது.

எங்கே இன்னொரு பலியாடு டக்கு, அது பதவியேற்பு விழாவுக்கு ஏன் வரவில்லை.

புலிகள் மட்டும் இல்லையென்றால் சிங்கள் அரசு உங்களை எல்லாம் பிடித்து எப்போதோ ஆப்படித்திருக்கும். இந்த கோட்டுக்கும் சூட்டுக்கும் கூட நீங்கள் புலிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதை விட பிச்சை எடுக்கலாம். ஏன் உடலை கூட விற்று பிழைக்கலாம்! இதை விட அது எவ்வளவோ மேல்!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.