Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயாவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாயாவி

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.யாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.

இரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.

அடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையா??கறுப்பா சிவப்பா ??இல்லை கலர்கலரா இருப்பானா??உடம்பிலை முள்ளு இருந்ததா?? பறக்கிற செட்டை (இறக்கை)இருந்ததா?? எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்தி

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையனை கலைச்சுப் பிடிக்கஏலாம கோட்டை விட்ட கதைய மேதாவித்தனமா சொல்லியிருக்கிறீங்க. என்றாலும்நீங்க ஏமாந்தவர் இருக்குமிடத்திற்கு வராமல் இருந்திருந்தால் மானிப்பாய் ஒருதிகில் நிறைந்த இங்கிலிஸ்பட இயக்குனரை இழந்திருக்காது. பாராட்டுக்கள்

கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டையனை கலைச்சுப் பிடிக்கஏலாம கோட்டை விட்ட கதைய மேதாவித்தனமா சொல்லியிருக்கிறீங்க. என்றாலும்நீங்க ஏமாந்தவர் இருக்குமிடத்திற்கு வராமல் இருந்திருந்தால் மானிப்பாய் ஒருதிகில் நிறைந்த இங்கிலிஸ்பட இயக்குனரை இழந்திருக்காது. பாராட்டுக்கள்

கண்மணியக்கா நான் பத்தாம் வகுப்பு பெயில் எண்டதையே 9 ம் வகுப்பு பாஸ் எண்டு மேதாவித்தனமாய் சொல்லித்தான் பழக்கம் :wub:

:D நல்ல பகிடிதான்...கட்டையனைப் பார்த்து ஓட வேண்டிய நிலைமைக்கு வந்ததைப்பார்க்க வடிவேலு ஞாபகம் தான் வருகிறது

நன்றிகள் லீ உங்களிட்டை ஒரு கேள்வி நீங்கள் வெறும் லீ யா அல்லலது புருஸ்லீ ஜெற்லீ மாதிரி ஏதாவது லீயா. அல்லது பல்லி.மல்லி இப்பிடி ஏதாவது லியா?? சும்மா பொது அறிவை வளர்க்கலாமெண்டுதான் கேட்டான் கோவிக்கவேண்டாம். :wub::lol:

நன்றிகள் லீ உங்களிட்டை ஒரு கேள்வி நீங்கள் வெறும் லீ யா அல்லலது புருஸ்லீ ஜெற்லீ மாதிரி ஏதாவது லீயா. அல்லது பல்லி.மல்லி இப்பிடி ஏதாவது லியா?? சும்மா பொது அறிவை வளர்க்கலாமெண்டுதான் கேட்டான் கோவிக்கவேண்டாம். :wub::wub:

அது சந்தர்ப்பத்தை பொறுத்து.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கட்டையன் எங்க முதல் அமைச்சராக இருக்கிறான்?அல்லது மாகிந்தாவுக்கு மெய்பாதுகாவலனோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த கட்டையன் எங்க முதல் அமைச்சராக இருக்கிறான்?அல்லது மாகிந்தாவுக்கு மெய்பாதுகாவலனோ?

புத்தன் இந்தியனாமி காலம் இந்தியனாமியோடை சேர்ந்து மானிப்பாயிலை திரீஞ்சதாய் கேள்விப்பட்டன் பிறகு என்ன நடந்தது எண்டு தெரியாது.. :wub::wub:

சாத்(திரி) அங்கிள் உங்கன்ட "மாயாவி" கதைக்கு முன்னால "ஜேம்ஸ்பாண்ட்" படம் எல்லாம் பிச்ச வாங்கனும் அந்த மாதிரி இருக்கு கதை பாருங்கோ :wub: ..அதிலையும் எங்கன்ட சாத்(திரி) 007 ஆசுபத்திரியில வைத்தியலிங்கத்தை பார்க்க கூட்டமா போன காச்சி முடியல என்னால.. :wub:

ரொம்ப நன்னா இருந்துச்சு கதை சாத்திரி அங்கிள் :D ..நான் உதை தனியா இருந்து வாசித்து சிரித்து கொண்டிருக்க என்னை எல்லாரும் வீட்ட ஒரு மாதிரி பார்க்கீனம்..(கடசியா வைத்தியலிங்கதிற்கு வந்த நிலை தான் எனக்கும் வந்திட்டாலும் எண்டு போட்டு)..அறை கதவை பூட்டி போட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்(திரி) அங்கிள் உங்கன்ட "மாயாவி" கதைக்கு முன்னால "ஜேம்ஸ்பாண்ட்" படம் எல்லாம் பிச்ச வாங்கனும் அந்த மாதிரி இருக்கு கதை பாருங்கோ :wub: ..அதிலையும் எங்கன்ட சாத்(திரி) 007 ஆசுபத்திரியில வைத்தியலிங்கத்தை பார்க்க கூட்டமா போன காச்சி முடியல என்னால.. :D

ரொம்ப நன்னா இருந்துச்சு கதை சாத்திரி அங்கிள் :) ..நான் உதை தனியா இருந்து வாசித்து சிரித்து கொண்டிருக்க என்னை எல்லாரும் வீட்ட ஒரு மாதிரி பார்க்கீனம்..(கடசியா வைத்தியலிங்கதிற்கு வந்த நிலை தான் எனக்கும் வந்திட்டாலும் எண்டு போட்டு)..அறை கதவை பூட்டி போட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றிகள் ஜம்மு வைத்திலிங்கத்தாரைப் பார்க்க ஏதோ திருவிழாவிற்கு போன மாதிரித்தான் ஊர்ச்சனம் போனது எல்லாம் விடுப்பு பாக்கத்தான்

சாத்திரியார் கிறீஸ் பூசி வழுக்கிற மனிசன், உடம்பெல்லாம் முள்ளு இப்பிடி கதையளை நானும் கேள்விப்பட்டிருக்கிறன். எந்த ஊரிலை எண்டெல்லாம் தெரியாது. ஆனா அப்ப அரிவரி/ முதலாம் வகுப்பு படிச்சிருப்பம் எண்டு நினைக்கிறன். உந்த மாயாவியை பற்றி கனக்க கதைச்சிருக்கிறம். அதை ஞாபகத்துக்கு கோண்டு வந்திருக்கிறியள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கிறீஸ் பூசி வழுக்கிற மனிசன், உடம்பெல்லாம் முள்ளு இப்பிடி கதையளை நானும் கேள்விப்பட்டிருக்கிறன். எந்த ஊரிலை எண்டெல்லாம் தெரியாது. ஆனா அப்ப அரிவரி/ முதலாம் வகுப்பு படிச்சிருப்பம் எண்டு நினைக்கிறன். உந்த மாயாவியை பற்றி கனக்க கதைச்சிருக்கிறம். அதை ஞாபகத்துக்கு கோண்டு வந்திருக்கிறியள்.

அது சரி குளக்காட்டான் நீங்களே இப்ப மாயாவியாய் மாறிவிட்டீங்கள். உங்களையும் இப்ப யாழிலை காணக்கிடைகுதில்லை நீங்கள் எடுக்ககிற புகைப்படங்களையும் காணக்கிடைக்குதில்லை. :wub:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல விறுவிறுப்பாக உங்களின் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறியள். களவெடுக்கிறவர்களைத்தான் இந்திய இராணுவமும், சிறிலங்கா இராணுவமும் சேர்க்கிறது. உப்பிடித்தான் உறுப்படாத மாணவருக்கு அடி போட்ட ஆசிரியர் ஒருவர், இந்திய இராணுவ காலத்திலே மருதனாமடம் ஈபிஆர்.எல்.எவ் முகாமின் முன்பு, அந்த உறுப்படாத மாணவரால் துப்பாக்கி முனையில் வெறுட்டப்பட்டார். நல்ல காலம் கட்டையனிட்ட நீங்கள் அடிவாங்கவில்லை சாத்திரி.

லீ சிங்கப்பூரில் வசிப்பதினால் சிங்கப்பூர் அதிபரின் பெயரில்( லீ குவான்) வந்திருக்கலாம் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் போது எங்கே சாத்திரியாரின் வழமையான கதைகளின் சோகமுடிவு போல் தான் முடியுமோ என நினைத்தேன்.

"ஏனெனில் கல்வியங்காட்டில் இயக்கம் கட்டி வைத்த கள்வனுக்கு அறிவுரை சொன்னவர்களும், ஏசியவர்களும், குட்டியவர்களும் பின்னர் இந்தியன் ஆமி காலத்தில் அந்தக் கள்ளனால் ஒன்றாகக் கடத்தப்பட்டு அதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்."

ஆனால் இம்முறை சாத்திரியார் ஏசியாவில் பறந்துபோய் நகைச்சுவையாக முடித்துள்ளார்.

கட்டையனுக்கு நன்றி.

Edited by பிரபா

சுதந்திரன் பத்திரிகையிலும் மாயாவி பற்றிய செய்திகள் வந்தது. பிள்ளைகளைப் பிடிக்கிறான் என்று வகுப்பு மாணவன் ஒருவன் சொல்ல சிறுவர்கள் எல்லோரும் பயத்துடன் இருந்தார்கள். மாயாவி மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி விட்டார் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்தது. பிறகு கர்ப்பமாகி விட்ட பெண் ஒருத்தி பரப்பிய கட்டுக்கதையே மாயாவி என்று பெரியவர்கள் சிலரும் அக்காலத்தில் கதைத்தார்கள்.

சுதந்திரன் பத்திரிகையிலும் மாயாவி பற்றிய செய்திகள் வந்தது. பிள்ளைகளைப் பிடிக்கிறான் என்று வகுப்பு மாணவன் ஒருவன் சொல்ல சிறுவர்கள் எல்லோரும் பயத்துடன் இருந்தார்கள். மாயாவி மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி விட்டார் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்தது. பிறகு கர்ப்பமாகி விட்ட பெண் ஒருத்தி பரப்பிய கட்டுக்கதையே மாயாவி என்று பெரியவர்கள் சிலரும் அக்காலத்தில் கதைத்தார்கள்.

இது எப்போழுது நடந்தது அரவிந்தன்.அந்த காலகட்டங்களிள் நானும் அந்த பத்திரிகையை வாசித்துள்ளேன்.

இது எப்போழுது நடந்தது அரவிந்தன்.அந்த காலகட்டங்களிள் நானும் அந்த பத்திரிகையை வாசித்துள்ளேன்.

நான் நினைக்கிறேன். 79,80,81 களில் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.