Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாய் ஒடுக்கி வைத்தாலும்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ஒடுக்கி வைத்தாலும்

நியாயம் பேசும் வல்லமைகள்...

dogs_jumbled_in_cage-caaf_thumb.jpg

பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே!

இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம்.

ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்?

மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது?

மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும்

கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்?

கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும்,

கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்?

கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம்

செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே!

அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ

முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா?

அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நலிகிறது

கண்ணை மூடி நீ காணாது நிற்பது ஏன்?

கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!

வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!

இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?

குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?

உன் காலுதைப்பை தன்மேல் காலமெல்லாம் தாங்கியள்

நீ கல் தடுக்கி விழுந்தாலும் காயத்தில் ஏந்தியவள்.

சூழ் கொண்ட கருவறைதான் வெவ்வேறு என்னினமே!

சேர்த்தணைத்து சுமந்தது ஈழத்தாய் மடிதானே!

வசந்தச் சோலையிலே வளவுக்குயில் பாடியதும்,

இசைந்த தெங்கிடையே தென்றல் நடம் ஆடியதும்,

கண்ணுரசும் அலையிடையே கயல்கள் விளையாடியதும்,

எண்ணிப் பார்த்திடுக என்னினமே! என்னினமே!

வாயொடுக்கி, மெய்யொடுக்கி விதியென்று கிடவென்று

வந்தோரும் போனோரும் தந்தனத்தோம் போடுகிறார்.

நாயொடுக்கி வைத்தாலும் நியாயம் பேசும் வல்லமைகள்

எம் தாயொடுக்கல் காணாமல் தீர்வெழுத முனைகின்றர்.

எம்மினத்தின் வேதனையை ஏன் அறியாதிருக்கின்றார்?

எண்திக்கும் எவரிருந்து எம் கழுத்தை நசிக்கின்றார்?

கண்ணில் வெண்திரையா? காரணங்கள் பலதிசையா?

எம்மிறக்கை துண்டித்து எது செய்ய நினைக்கின்றார்?

ஈழத் தமிழினமே!

உன்னி மூச்செடுத்தால் உலகெம் திசை திரும்பும். - தாய்

மண்ணுக்கு வலுவூட்ட வல்லமைக் குரல் செய்க!

எமைப் பிள்ளையெனப் பெற்றதெண்ணி ஈழநிலம் பூரிக்கும்.

பின்னாளில் போற்றும் வரலாறும் வாழ்த்துரைக்கும்.

விழவிழ எழுகின்ற வேதம் என்பதெல்லாம்

அழகாக தமிழ் தொடுத்து அரங்கேற்றும் கவிகளுக்கா?

குலம் விளங்க வாழ்ந்தமண் கும்மிருட்டில் விழி கரிக்க

கோடை வசந்தத்தில் கூத்தாடி மகிழ்வதென்ன?

பொங்கு தமிழ் குலமே!

சொந்த உறவுக்குச் சோகங்கள் தருவதற்கா

உந்திக் கிளம்பாமல் உட்கார்ந்து கிடக்கின்றீர்?

முந்திச் செய் தவறால் வெந்தநிலை போதும்

பந்தி படுக்கை விட்டு எப்போது எழுந்திடுவீர்?

அன்னை திருமேனி அந்தரித்துக் கிடக்கிறாள். - எம்மினம்

நொந்து குலையவோ? வேரடி வெம்பி மனையவோ?

எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!

கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக!

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

எழில் தரும் பனிமுகத்தின் ஈரமலரே

புலம் பெயர் மண்ணில் அரங்கேறும்

கவிகளிலே உள்ள கந்தகம் எம்

மனங்களிலே இல்லையே அது ஏன்?

ஈழநிலம் பூரிக்க வாழவந்த தேசத்தின்

வசதிகள் போட்ட வாய்ப்பூட்டா? இல்லை

இறக்கைகள் உடைந்து பறக்க முடியாமல்

எண்ணிப் பரிதவிக்கும் நிலைப்பாடா?

விதி என்று கிடந்தாலும் எம் அடிமனதில்

குமுறுகின்ற கந்தகம் ஓர்நாள்

எரிமலையாய் குமுறும் அப்போ

வளவுக் குயில்களெல்லாம்

விதவிதமாய்க் கூவும்

ஈழத் தாய்மடியில்

இளைப்பாறும் நாள் கூடும்

கந்தகத்து முட்களெல்லாம்

குங்குமப் பூப்பூக்கும்

மீண்டோம் எனும் நினைப்பில்

மாண்டே கிடந்தாலும்

வேண்டாம் விதிவலிது

என்று விளையாடும் சொல்லாடல்

மதிகொண்டு மனங்களிலே தீமூட்டி

அது காட்டுத் தீயாக

கனன்றெரியும் காலம் விரைந்து வரும்

விழிகளிலே தீமூட்டி வெற்றிக் கொடிகட்டு

எழில் தரும்பனிமுகத்து ஈரமலரே

  • கருத்துக்கள உறவுகள்

கந்தகம் துப்பத் துப்ப நொந்தழுதோர் நாம்தானே!

வெந்துஅகம் விழிசுரக்க வேதனைகள் சுமந்தோமே!

இந்த நிலம் வந்தபின்னால் அந்த வாழ்வு மறந்தோமா?

குந்த நிலம் கண்டவுடன் கூன் முதுகு கொண்டோமா?

உண்மை தான். பலர் உணர மறுக்கிறார்கள்.

ம்ம்..சகரா அக்கா அருமையான கவிதை.. :( (சொல்ல போனா நாலு தரம் வாசித்தா பிறகு தான் நேக்கு கவிதை முழுவதுமா விளங்கிச்சு)..நான் "பேபி" தானே..சரி அதை விடுவோம்.. :(

எழில்தரும் பனிமுகத்தின் ஈரமலர்களே!

கண்களில் தீ மூட்டுக! ஈழம் காத்திடும் பணி ஏற்றுக!

கடசியா இப்படி சொல்லி இருந்தனியள் தானே :) ..இப்ப கிரிகெட் போகும் அங்க "இலங்கை" அணிக்கு கொடி பிடிச்சு போட்டு வருவீனம் பாருங்கோ..(அச்சோ பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ நான் நடக்கிறதை தான் சொன்னான் சகாரா அக்கா).. :D

உங்கள் ஏக்கம் நிறைவேறினா மகிழ்ச்சி தான் அதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சகாராக்கா.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழில் தரும் பனிமுகத்தின் ஈரமலரே

புலம் பெயர் மண்ணில் அரங்கேறும்

கவிகளிலே உள்ள கந்தகம் எம்

மனங்களிலே இல்லையே அது ஏன்?

ஈழநிலம் பூரிக்க வாழவந்த தேசத்தின்

வசதிகள் போட்ட வாய்ப்பூட்டா? இல்லை

இறக்கைகள் உடைந்து பறக்க முடியாமல்

எண்ணிப் பரிதவிக்கும் நிலைப்பாடா?

சாட்டுகள் பலவிதமாய் வைத்து பொறுப்பிலிருந:து எவரும் விலகிவிட முடியாது கண்மணி.

எங்கள் நிலத்தில் எம்மினம் படும் உயிர்வலியை உணர்ந்து பார்த்தால் எவருக்கும் எக்காரணமும் சொல்லத் தோன்றாது.

நன்றி நுணாவிலான்,

யம்மு என்னுடைய கவிதை உங்களுக்குப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கின்றது என்று கூறினாலும் ஆர்வமாக வாசித்து பொருளை உணர்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியே...

உங்களைப்போல் நானும் பொறுத்திருத்துதான் பார்க்க உள்ளேன்.

கவிதை உணர்வெழுச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

சாட்டுகள் பலவிதமாய் வைத்து பொறுப்பிலிருந:து எவரும் விலகிவிட முடியாது கண்மணி.

எங்கள் நிலத்தில் எம்மினம் படும் உயிர்வலியை உணர்ந்து பார்த்தால் எவருக்கும் எக்காரணமும் சொல்லத் தோன்றாது.

உண்மையே , இருந்தும் காரணம் தேடுகின்றவர் ஏராளம், தேட சொல்லி கொடுப்பவர் ஏராளம், இதை விட ஒரு மிக கேடான கேவலமான துயரம் வேறில்லை. புத்தி மெத்தக் கூடி புறம்போக்கு தனம் செய்வது எம்மினத்தின் சாபக்கேடு.

  • 10 years later...

உறங்கும் சமூகத்தை விழித்தெழச் செய்து

மறந்த நம் மன வேர்களுக்கு

சிந்தனையெழுப்பி  உரமூட்டும் வரிகள்!

ஆனாலும் ஏனோ வாசிப்பின் முடிவில்

துயரமே  குடிகொண்டது மனதில் !!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.