Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

48 மணித்தியாலங்களிற்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம்-- அபேவர்தன எச்சரிக்கை!!!

Featured Replies

எதிர்வரும் 48 மணித்ததியாலங்களிற்குள் நாட்டில் எப்பகுதியிலேனும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறும் ஊடக அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் எப்பகுதியிலேனும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் எவரும் ஈடுப்பட வேண்டாம்.

தயவு செய்து தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகள் என அவர் கூறினார்

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

போட்டானே ஒரு போடு...

அடப்பாவி உனக்கு சிங்களவங்கள் தான் ஆப்பு வைப்பாங்கள் போல...

எல்லாரும் எதுக்கெடுத்தாலும் புலிப்பூச்சாண்டி காட்டி திரிஞ்சவடியா

இப்ப எவன் சொன்னாலும் மத்தவங்களுக்குத்தெரியும் இது சுத்தப்பூச்சாண்டி எண்டு

இருந்தாலும் முன்னம்போட்ட சிங் சொக்கால இப்ப வய்த்திறக்கேலாது..

பசிச்சாலும் சிங்களவன் வாய்திறக்கேலாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் எப்ப ஜோசியர் ஆனார்

எல்லாரும் ஓடித்தப்புங்கோ குருக்ஸ் வருகிறார் :lol::D

இப்படியானவர்களும் வதந்திகளைப் பரப்புவார்களா? நம்பவே முடியல்ல.

48 மணி நேரத்தில் யாருக்கோ உயிராபத்து போல யாரு அந்த நபர் கருணா அல்லது பிள்ளையான் ???? நடக்கட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயத்தில் உளறுகிறாங்கள். அதுவும் இவங்களின் புலனாய்வுத்துறை சொல்லியிருக்காம் :lol::D . இவங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடக்கவேணும் என்றால் நடந்தே தீரும் அதை யாராலும் தடுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்ட் டவுண் தொடங்கிட்டது உண்மை ஆனால் அது 48 அல்லது 480 என்பது போகப் போகத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வச்சாண்டா ஆப்பு.....10 ம் திகதி வரைக்கும் இப்படியே எதையாவது சொல்லி பேய்க்காட்ட போறாங்க. எதுக்கும் கவனமா இருப்பம்.....

எல்லாம் சரி இதல்லாம் சொன்ன அரச புலானாய்வுத்துறை, ஏன் கட்டுநாயக்கா, அநுராத புரம், கொலனாவ, போன்ற தாக்குதல்களுக்கெல்லாம் முன் அறிவித்தல் கொடுக்கவில்லை, நான் நினைக்கிறன் அதெல்லாம் அரச ஆதரவுடன் தான் நடந்தது போல் தெரிகிறது... (சும்மா)

புலி வருகுது புலி வருகுது என்று முட்டாள் சிங்களவனை ஏமாற்றி ஒரு நாளைக்கு உண்மையில் புலிவரும் போது ஓடிதப்ப இடமில்லாமல் கிடக்கப் போகினம். பயங்கரவாத அரசிற்கு விவஸ்தையே இல்லாமல், தொழிலாளர் போரட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் புலிவருகுது என கதை விடுகின்றது. வெட்கம் மானம் ரோசம் கெட்ட மஹிந்தனின் பயங்கரவாத அரசு.

ஜானா

48 மணிநேரத்தில் பாரிய தாக்குதல் அச்சம்: வேலை நிறுத்தத்தை கைவிடக் கோரல்

[திங்கட்கிழமை, 07 யூலை 2008, 07:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தென்பகுதியில் எதிர்வரும் 48 மணிநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக கூறி எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் சிறிலங்காவின் தென்பகுதியில் பாரிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஜே.வி.பி. அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அரசாங்கத்தில் உள்ள 90 சதவீதமான தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே தென்பகுதியில் எதிர்வரும் 48 மணிநேரத்தில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புலனாய்வுத்துறையினரின் தகவலின்படி எதிர்வரும் 48 மணிநேரத்தில் தென்பகுதியில் புலிகள் பாரிய தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை அதன் ஏற்பாட்டாளர்கள் கைவிட்டுவிட வேண்டும். இல்லையேல் இத்தகைய போராட்டத்தில் இடம்பெறும் தாக்குதல்களுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல. குறிப்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளை குறிவைத்து இடம்பெறும் தாக்குதல்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற முடியாது.

எனினும் இத்தகைய தாக்குதல் அச்சத்தினால் பாதுகாப்பை உச்சளவில் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனவே தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இத்தகைய வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது புலிகளுக்கே சாதகமானதாக உள்ளது. இத்தகைய வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசுக்கு எதிராக தொழிலாளர்களை தூண்டிவிடும் சதித்திட்டம் உள்ளது என்றார் அவர்.

இதேவேளை சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் புலிகளின் தாக்குதல் அபாயம் குறித்த எச்சரிக்கையை கொழும்பு மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்தி முழு உச்ச விழிப்பு நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.

புதினம்

இப்ப பகிடி என்னவென்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுறவை எல்லாருக்கும் குண்டாக்கள் மூலம் அடி விழப்போகுது. அதுக்கு சாட்டுறதுக்கு புலிதானே இருக்கு . . . திரும்ப ஒரு இனக்கலவரத்தை அரசே உருவாக்க போகிறது. ஜேவிபியை கிண்டி இருக்கிறதையும் இல்லாமல் செய்யப்போறாங்கள் . . .

இப்ப பகிடி என்னவென்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுறவை எல்லாருக்கும் குண்டாக்கள் மூலம் அடி விழப்போகுது.. . .

குண்டர்கள் மூலம் அடியா? அதெல்லாம் அந்தக்காலம்... இப்பதானே கருணா வந்திருக்கார்... அவள்ளி வைக்கப்போறங்கள் குண்டுகளை... பழியை புலிகளின் மேல போடுறதுக்கு இப்பவே அறிக்கையும் விட்டாச்சு..

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன்

தமிழர்கல் இடுபடாமல் விடுவது நல்லது இதைவைத்து 4 சிங்களவரோடு 40 தமிழர்களுக்கும் அடித்துவிடுவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்ப ஜோசியர் ஆனார்

இவர் போராட்டம் நடத்தவேண்டாம் என கெஞசும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன்

மிகவும் பாவமாக இருந்தது

அவர்களது போராட்டத்தை நிறுத்தவும் புலி தேவைப்படுவது வேடிக்கையானது.....

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் எல்லாப்பக்கமும் இறுகிப்போய் கிடக்கிது போல .......

கடைசியாய் புலியை காட்டித்தான் சிங்களவரை பயப்படுத்த வேண்டி இருக்கின்றது .

இதனைத்தான் ஆப்பிழுத்த நிலைமை என்பதோ ........

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் வானிலை அறிக்கை போல இருக்கிறது. அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யலாம். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு ஒண்டும் நடக்க் கூடாது எண்டு கடவுளை வேண்டுவம்.அப்படி ஏதாவது நடந்தாலும் அது புலி தான் செய்தது எண்டு வரும் பாருங்கோ :wub:

என்ன செய்யிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.