Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கை தவழும் காதல்

Featured Replies

கை தவழும் காதல்

பூ விழுந்த மனசு மற்றும் சிதறல்கள் என்ற கவிதை தொகுப்புகளை (இன்னும் வெளிவராமலேயே) இந்த யாழ் இணையத்தினூடாக உலாவ விட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக இனி இந்த கிறுக்கல்களும் வரவிருக்கின்றன.

கடிகாரத்தின் முட்களோடு போட்டி போட என் பேனாக்களிற்கு முடியவில்லை. ஆதலால் இயலுமானவரை தருகின்றேன்.

இன்று தவழ்ந்த காதல்

(எனது மகளை நினைத்து கிறுக்கியது)

new_image.jpg

அலைகடலில் ஓடமாய்

அந்தரிக்கும் விழி அழகோ

அடுக்கடுக்காய் உதிர்ந்து விழும்

புன்னகைப் பூக்கள் அழகோ

ஆயிரம் அர்த்தம் விதைக்கும்

அசைவுகள் அழகோ

என் மஞ்சத்தில் உருவாகி

கைகளில் தவழுகின்ற

காதல்தான் உன்னழகோ

அழகிற்கே அழகுரைக்கும்

உன்னழகுதான் எதுவோ ?

Edited by Paranee

ம்ம்..மாஸ்டர் "கை தவழும் காதல்" கைகளை விட்டு தவழமால் அழகாக செல்கிறது :o ..தங்களின் மகளை நினைத்து கிறுக்கிய கவியும் ஒர் அழகு தான்..தங்களின் கைகடிகாரதிற்கு நேரம் கிடைக்கும் போது இன்னும் தவழட்டும் உங்கள் பேனா வாழ்த்துக்கள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

அன்பாக அழகாக உங்கள் மகளின் அசைவுகள் ஒவ்வொன்றையும் ரசிக்கின்றீர்கள் என்பதை கவிதைகள் சொல்லிச் செல்கின்றன மாஸ்டர். தொடருங்கோ

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணிலா மற்றும் ஜம்முபேபி

இன்றைய காதல்

என் உயிரின் ஓசையே

உளியில் பிறந்த சிலையே

கலவியில் மலர்ந்த கவிதையே

ஜென்மங்கள் தேடி கிடைத்தாயோ

ஜெனனத்தின் அர்த்தம் தந்தாயோ

புண்ணியம் செய்து பிறந்தவளே

பூர்வ ஜென்மத்தின் தொடராய் வந்தாயோ

கற்பனை சிறகில் நான் பறக்க

கண்முன்னே தோன்றி நின்றாயே

பொத்தி வைத்த அன்பையெல்லாம் - இனி

பூசை செய்தே காட்டிடுவேன். . .

  • கருத்துக்கள உறவுகள்

" பொத்தி வைத்த அன்பையெல்லாம் -" இனி

வணக்கம் பரநீ .......

பொத்தி வைத்த அன்பையெல்லாம் பூசைசெய்து காட்டுவேன் ....

.அருமை யான கவி ...அதை அனுபவிபவர்களுக்கு தான் புரியும்

.செல்லமகளை நான்றாக அனுபவிக்கிறீர்கள் .கொடுத்து வைத்தவர்.

இனிய வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா .

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி

இன்று என்னுடைய மகளிற்கு சோறு ஊட்டி மகிழ்ந்தோம். உண்மைதான் சிலவற்றை அனுபவிக்கும்போதுதான் மகிழமுடிகின்றதுஷ

  • தொடங்கியவர்

இன்றைய காதல்

விழிமுன் மலர்ந்து

விரைந்து புகுந்தாள்

விடலை என்னுள்ளே

படபடத்து தேடினேன்

தடமின்றி மறைந்துவிட்டாள்

மின்னல் மகளோ

தேவதைப்பெண்ணோ

கண்முன் தோன்றி கரைந்து சென்றவள்

காதலை என்னுள்ளே கலந்து சென்றவள்

யாரோ யாரவளோ ?

தேடுகின்றேன் தேடிக்கொண்டிருக்கின்றேன்

இன்று என்னுடைய மகளிற்கு சோறு ஊட்டி மகிழ்ந்தோம். உண்மைதான் சிலவற்றை அனுபவிக்கும்போதுதான் மகிழமுடிகின்றதுஷ

சோறு ஊட்ட ஆரம்பித்தாகிட்டுதா? எத்தனை வயது மாஸ்டர் மகளுக்கு?

உங்கள் இண்ரைய காதலின் நாயகிக்கு(மகளுக்கு) என்ன பெயர் மாஸ்டர்

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை தொடருங்கள்

அழகான கவிதைகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் பரணி, உங்களுக்கும் ,உங்கள் செல்லக் கவிக்கும்......

  • தொடங்கியவர்

அனைவருக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்

இன்றைய காதல்

என் சின்ன தேவதையின் கால்சிறகுகளை

அரவணைத்தபடி கொலுசுகள்

மௌனமாய் இல்லை

தமக்குள்ளே ஆயிரம் கதைகள்

அருகே சென்று காதுகொடுத்தேன்

சிறகுகள் தொட்டதால் எமக்குப்பெருமையா ?

எம்மைத்தொட்டதால் சிறகுக்கு பெருமையா ?

பட்டிமன்றம் நடக்கின்றது

விடைபகிராமல் சுவடுமறைத்து

நான் விலகிவிட்டேன்

முடிவும் எடுத்தேன்

உடனேயே இவற்றையும் விலக்கவவேண்டும்

பொறாமைத்தீயில் என் சின்னத்தேவதையின்

சிறகை காயம் செய்துவிட்டால் . .

பரணி அண்ணாவின் குட்டி மகளை பார்த்த பின் எனக்குள் தோன்றிய சில வரிகள் :wub:

நீலவர்ண ஆடை அணிந்து

தவண்டு விளையாடும் குட்டி நிலவே

உன் வட்டமுகம் கண்டால்

நீலவான் முழுமதி நாணுமே

ஒளி பொருந்திய உன்

சின்னக்கண்களிரண்டு

கண்புருவங்களின் நெளிவு

பாணத்தையே விஞ்சிவிடும்

பல்லில்லாத வாய் திறந்து

சிவந்த நாக்கு காட்டி

சிரிக்கும் உன் அழகில்

நான் என்னையே மறந்தேன்

கண்ணிமைக்காது நீண்டநேரம்

உன் குழந்தைமுகம் பார்த்து

சந்தோச வானில்

பறந்தேன் இறக்கைகள் இன்றி

குட்டிப்பூவே

உன் மழலைமொழி

கேட்டிட ஆசை

எப்போது உன் வாய்மலர்வாய்? :lol:

பரணி அண்ணா திட்டாதீங்கோ உங்கள் மகள் மேல் கண்ணு வைச்சிட்டாங்களோ னு. நிலாவும் பெண் தான். :lol:

  • தொடங்கியவர்

ம் நிறைய கண் வைச்சிட்டாங்களே. . .

அருமையான கவிதை வெண்ணிலா

வாழ்த்துக்கள். . .

  • கருத்துக்கள உறவுகள்

பரணீ அண்ணாவின் மழலைக்கு ........

சின்ன அரும்பு மலரும் சிரிப்பில் சிந்தை மகிழும்

எங்கிருந்த போதும் என் இதயம் உனை வாழ்த்து

வாழ்வும் உன்னால் மலரும் நாளிலே ....

என்று கூறி நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன் .நிலாமதி ஆன்

  • 2 weeks later...

ஆதியாக இருப்பதைக்காட்டிலும் பரணியின் குழந்தையாக வடிவெடுத்திருக்கலாமோ? எதுக்கும் பிரம்மனிடம் மனுப்போட்டு வைப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.