Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டு கொத்து ரொட்டி சாப்பிடக் கூடாதோ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு கொத்து ரொட்டி சாப்பிடக் கூடாதோ?

கண்டிப்பா சாப்பிடக் கூடாதுங்க

  • Replies 52
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாட்டிறைச்சியா......???

ஐயோ அது கடவுளுடைய மிருகம்.... மனிதர்கள் ஆகிய உங்களால் எப்படித்தான் இதெல்லாம் முடியுதோ?

அதுதான் கடவுள் உங்களுக்காக பன்றி மான் புலி சிங்கம் ஆடுகளை படைத்துவைத்திருக்கின்றார் அதுகளை அடித்து கொன்றுவிட்டு அரைத்து கறிவைத்து சாப்பிட வேண்டியதுதானே?

எலியும் மாடும் கடவுளுடைய மிருகமென்பதால் அதை தவிர்ப்பதே நன்று..... அப்படியும் சாப்பிடுவோருக்குத்தான் கடவுள் அதற்குள் கொலஸ்ரொலை வைத்திருக்கின்றார். அதையும் மீறீயோருக்காகவே கடவுள் மாடுகளுக்கு கொடிய வியாதியை உண்டுபண்ணி மாடுகளை காப்பாற்றினார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டிறைச்சியா......???

ஐயோ அது கடவுளுடைய மிருகம்.... மனிதர்கள் ஆகிய உங்களால் எப்படித்தான் இதெல்லாம் முடியுதோ?

அதுதான் கடவுள் உங்களுக்காக பன்றி மான் புலி சிங்கம் ஆடுகளை படைத்துவைத்திருக்கின்றார் அதுகளை அடித்து கொன்றுவிட்டு அரைத்து கறிவைத்து சாப்பிட வேண்டியதுதானே?

எலியும் மாடும் கடவுளுடைய மிருகமென்பதால் அதை தவிர்ப்பதே நன்று..... அப்படியும் சாப்பிடுவோருக்குத்தான் கடவுள் அதற்குள் கொலஸ்ரொலை வைத்திருக்கின்றார். அதையும் மீறீயோருக்காகவே கடவுள் மாடுகளுக்கு கொடிய வியாதியை உண்டுபண்ணி மாடுகளை காப்பாற்றினார்.

அட அட அட.. எப்படி இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க மருதங்கேணி..! :wub:

ஏதோ நோய் வராமல் இருங்க மக்கா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டிறைச்சி சாப்பிட்டால் , அடுத்த பிறப்பில் வண்டில் இழுக்கிற மாடாகப்பிறந்து முதுகில் பயங்கர அடி வாங்கவேண்டி வரும் என்று எனக்கு நம்பகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது .

அத்துடன் சூடு காச்சிய இரும்பால் குறியும் வைப்பார்கள் .

  • தொடங்கியவர்

ஏதோ நோய் வராமல் இருங்க மக்கா :lol:

தூயா பபா முரளி பபாவ மக்கு எண்டு சொல்லி திட்டிபோட்டீங்கள். யாழில இப்பத்தான் முதன்முதலாக முதலாவதா ஒரு ஆள் என்னப்பார்த்து மக்கு எண்டு சொல்லிது. அழுகையா வருகிது. :D:lol:

உண்மையத்தானே சொல்லி இருக்கிறீங்கள். சரி பரவாயில்ல.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... :D

வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்டு எனக்கு சரியான பேச்சு விழுந்தது என்ன எண்டால் நான் மாட்டு கொத்துரொட்டி சாப்பிடக்கூடாதாம். கோழி, ஆடு, முட்டை கொத்துரொட்டிகள் எண்டால் பிழை இல்லையாம்.<<<<<<<<<<

உண்மைதான் உங்கட அம்மா சொன்னது 'மாடும் மனிதரைப்போல்(பெண்) 10 மாசம் சுமந்துதான் கன்று ஈனும். மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் என்பது மருத்துவக் காரணம். மாட்டிறைச்சி சாப்பிட்டால் இலகுவில் உடலில் ஊசிகள் ஏறாது என்பதும் இன்னொரு காரணம். தற்போது 'MadCow"என்றொரு நோயைப் பற்றியும் கேள்விப் பட்டிருப்பீங்கள். இந்த காரணமாகத்தான் கோமாதா என்று போற்றி அதையும் எங்கள் சமயம் அதற்குரிய மரியாதையை தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் விழாவாக எடுத்தது.

பெரியவை சொல்றதில அர்த்தம் இருக்கும். ச்ச்சும்மா உதுகளைச் சாப்பிட்டு 'உம்பா" எண்டு கத்திப்போடாதீங்கோ...:lol:)

. உம்பப இறைச்சி சாப்பிடுறது பற்றி என்ன நினைக்கிறீங்கள் எண்டும் கொஞ்சம் சொல்லுங்கோ. :lol: <<

கொத்துரொட்டி எப்போதும் கடையில் வாங்குவது இல்லை வீட்டில் அதுவும் அநேகமாக நானே செய்து சாப்பிடுவதுதான் பெரும்பாலும் சைவக் கொத்துரொட்டிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமிச உணவுகளை புசித்தால் தேவையில்லாத நோய்நொடிகள் வரும்.விகாரமான எண்ணங்கள் மனதில் எழும்.கூடுதலான உழைப்பு உள்ளுறுப்புக்களுக்கு தேவைப்படும்.

ஒரு காலத்தில் முருங்கை இலை , அகத்தி இலை , வாழைக்காய்ப்பொத்தி பொருத்்துமான் இலை , முசுட்டை இலை இது போல பலவற்றை உண்பவர்களை கேவலமாக பார்த்தவர்கள் இன்று அதற்காக தவமிருக்கின்றார்கள்.

விவசாயிகளை தரக்குறைவாக பார்த்தவர்கள் இன்று காதில் எதையோ தொங்கவிட்ட வண்ணம் விசரன் பைத்தியகாரன் மாதிரி உடம்பு களைக்க ஓடுகின்றார்கள்.ஏனென்றால் உடம்பு களைக்க வேண்டுமாம் :lol:

ஒடியல் புட்டு சாப்பிடவர்களை பார்த்து சிரித்தவர்கள் இன்று அதை எப்படி சமைப்பது என்று திண்டாடுகின்றார்கள். :D

தேனீர் குடிக்கும் போது சீனியை நக்கி குடித்தவர்களை ஏளனம் செய்தவர்களுக்கு சீனி மட்டுமல்ல அவர்கள் வாய்க்கு ருசியாக எதுவுமே உண்ண முடியாத நிலைமை :lol:

குமாரசாமி அண்ணை மிக நல்ல பதில் சொல்லி இருக்கீங்க இதற்காகவே ஒரு தனி இழை தொடங்க வேணும்..அருமையான பதில்கள் அண்ணை.

  • தொடங்கியவர்

மெய்தானோ அப்பிடியோ தமிழ்தங்கை பபா.. எல்லாரும் வெருட்டுறபடியால் இனி முரளி பபா நான் உம்பா இறைச்சிய அளவோட சாப்பிடிறன். இல்லாட்டிக்கு இயலுமான அளவு தவிர்க்கப்பார்க்கிறன்.

நீங்கள் சைவக்கொத்துரொட்டி செய்யுறனீங்களோ வீட்டில. அது என்னத்த போட்டு செய்யுறது? கத்தரிக்காய் பிரட்டல் கறியுக்க ரொட்டிய போட்டு தட்டி எடுத்துப்போட்டு பிறகு புட்டு கொத்துறமாதிரி சுலகில வச்சு கொத்திப்போட்டு தோசைக்கல்லில போட்டு தட்டகைப்பையால அடிக்கிறதோ? சைவக்கொத்து ரொட்டி எண்டு இண்டைக்குத்தான் கேள்விப்படுறன். :)

எனக்கு முடியுமெண்டால் சைவக்கொத்துரொட்டி கொஞ்சம் செய்து FedEX இல்லாட்டிக்கு UPSஇல அனுப்பி வையுங்கோ.. :)

  • கருத்துக்கள உறவுகள்

மாமிச உணவுகளை புசித்தால் தேவையில்லாத நோய்நொடிகள் வரும்.விகாரமான எண்ணங்கள் மனதில் எழும்.கூடுதலான உழைப்பு உள்ளுறுப்புக்களுக்கு தேவைப்படும்.

குமாரசாமி அண்ணை மிக நல்ல பதில் சொல்லி இருக்கீங்க இதற்காகவே ஒரு தனி இழை தொடங்க வேணும்..அருமையான பதில்கள் அண்ணை.

மாமிச உணவுகளை மனிதன் புசிக்க வேண்டும். மனிதனுக்கு 20 அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. அவை இருந்தால் தான் உடலை கட்டியெழுப்ப முடிவதோடு உடல் அனுசேபத்துக்கு அவசியமான புரதங்களை உற்பத்தி செய்ய முடியும்.

துரதிஷ்டவசமாக மனிதனால் 10 முக்கிய அமினோஅமிலங்களை அவனுடலில் உற்பத்தி செய்ய முடியாது. இவற்றை உணவின் மூலம் தான் உள்ளெடுத்து.. பிரதியீடு செய்ய வேண்டும்.

இந்த முக்கிய 10 அமினோ அமிலங்களும் விலங்குணவு.. சீஸ்.. மீன்.. முட்டை.. பால்.. மற்றும் தாவர வகைகளில் சோயா.. பருப்பு போன்றவற்றில் உண்டு. தாவர உணவுகளை விட விலங்குணவுகளில் மீன் முட்டை பாலில் இவை தேவையான அளவு உண்டு.

அதனால் தான் மனிதன் அனைத்தும் உண்ணிக்கான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறான். இருப்பினும் மரக்கறி மட்டும் சாப்பிடுவோருக்கு பால்.. தயிர் மூலம் முக்கிய 10 அமினோ அமிலங்களும் கிடைக்கப் பெறுகின்றன.

இறைச்சி வகைகளில் சிவப்பு நிற இறைச்சிகளான மாட்டிறைச்சி.. பன்றி இறைச்சி.. ஆட்டிறச்சி என்பன உடலுக்கு ஆபத்தானவையாக சமீபத்திய ஆய்வுகள் பலவற்றில் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து.. மீன்.. கோழி.. பால்.. தயிர்.. போன்றவற்றைச் சாப்பிடலாம். நிறைய மரக்கறிகள்.. பழங்கள் சாப்பிடுங்கள்... அவைதான் அதிகம் விற்றமின், கனிப் பொருட்கள்.. மற்றும் நார்பொருட்களைக் கொண்டுள்ளன.

நான் விலங்குணவுகள் உண்பதில்லை. பறவையில் கோழி மட்டும் உண்பேன். கடலுணவுகளில் மீன் (முள் மீன்கள், கசியிழைய மீன்கள் (சுறா, திருக்கை) இறால் நண்டு மட்டும் உண்பேன். சிப்பி சோகி எல்லாம் உண்ணமாட்டேன்.

எதை உண்டாலும் உங்கள் உடற் திணிவுச் சுட்டெண்ணை (BMI) 18.5 க்கும் 24 க்கும் இடையில் பேணிக் கொள்ளுங்கள்..! :):)

Edited by nedukkalapoovan

மாமிச உணவுகளை மனிதன் புசிக்க வேண்டும். மனிதனுக்கு 20 அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. அவை இருந்தால் தான் உடலை கட்டியெழுப்ப முடிவதோடு உடல் அனுசேபத்துக்கு அவசியமான புரதங்களை உற்பத்தி செய்ய முடியும்.

துரதிஷ்டவசமாக மனிதனால் 10 முக்கிய அமினோஅமிலங்களை அவனுடலில் உற்பத்தி செய்ய முடியாது. இவற்றை உணவின் மூலம் தான் உள்ளெடுத்து.. பிரதியீடு செய்ய வேண்டும்.

இந்த முக்கிய 10 அமினோ அமிலங்களும் விலங்குணவு.. சீஸ்.. மீன்.. முட்டை.. பால்.. மற்றும் தாவர வகைகளில் சோயா.. பருப்பு போன்றவற்றில் உண்டு. தாவர உணவுகளை விட விலங்குணவுகளில் மீன் முட்டை பாலில் இவை தேவையான அளவு உண்டு.

அதனால் தான் மனிதன் அனைத்தும் உண்ணிக்கான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறான். இருப்பினும் மரக்கறி மட்டும் சாப்பிடுவோருக்கு பால்.. தயிர் மூலம் முக்கிய 10 அமினோ அமிலங்களும் கிடைக்கப் பெறுகின்றன.

இறைச்சி வகைகளில் சிவப்பு நிற இறைச்சிகளான மாட்டிறைச்சி.. பன்றி இறைச்சி.. ஆட்டிறச்சி என்பன உடலுக்கு ஆபத்தானவையாக சமீபத்திய ஆய்வுகள் பலவற்றில் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து.. மீன்.. கோழி.. பால்.. தயிர்.. போன்றவற்றைச் சாப்பிடலாம். நிறைய மரக்கறிகள்.. பழங்கள் சாப்பிடுங்கள்... அவைதான் அதிகம் விற்றமின், கனிப் பொருட்கள்.. மற்றும் நார்பொருட்களைக் கொண்டுள்ளன.

நான் விலங்குணவுகள் உண்பதில்லை. பறவையில் கோழி மட்டும் உண்பேன். கடலுணவுகளில் மீன் (முள் மீங்கள், கசியிழைய மீங்கள் (சுறா திருக்கை) இறால் நண்டு மட்டும் உண்பேன். சிப்பு சோகி எல்லாம் உண்ணமாட்டேன்.

எதை உண்டாலும் உங்கள் உடற் திணிவுச் சுட்டெண்ணை (BMI) 18.5 க்கும் 24 க்கும் இடையில் பேணிக் கொள்ளுங்கள்..! :):)

அருமையான தகவல்கள்...நன்றி நெடுக்ஸ்

நானும் சின்ன வயசிலை ஆடு, கோழி, மான், மரை,முயல், ஆமை, உடும்பு ஆகியவை சாப்பிட்டிருக்கிறேன். ஆனா இப்ப, சுவை எப்பிடியிருக்கும் எண்டு ஞாபகமில்லை. நாட்டிலை இருக்கேக்கில்லை மாடு, பன்றி சாப்பிடத் தடை. அப்பெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் மாட்டுக் கொத்து ரொட்டி வாங்கிச் சாப்பிடுவம். இப்ப, மாடு, பன்றி எல்லாம் சாப்பிடுவேன். எல்லாம் அளவோடைதான். கூடச் சாப்பிட விருப்பம்தான். ஆனால் கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே அருவருக்கத் தொடங்கிடும். எனக்கு பாம்பு இறைச்சி ரேஸ்ட் பண்ணவேணுமெண்டு விருப்பம். யாராவது சொல்லாமல் தரமாட்டார்களா என ஏங்குகிறேன். கடலுணவு எண்டால் ஒரு பிடி பிடிச்சிடுவன். ஆனால், முள்ளுகள் இல்லாத மீன்கள்தான் சாப்பிடுவன். நண்டு, சிப்பி வகைகள் என்றால் நல்ல விருப்பம்.

இப்ப என்னுடைய சாப்பாடு, மரக்கறிகள், பழங்கள், தானியங்கள்தான். ஹெல்தியாகச் சாப்பிட வேணுமென்பதால் காலையில் பழங்கள், மதியம் பச்சை மரக்கறிகள், பின்னேரம் தானியங்கள். இடைக்கிடை மற்ற சாப்பாடுகளும் சாப்பிடுவேன்.

Edited by சுசிதா

  • தொடங்கியவர்

முதலில ஆரம்பத்திலேயே பாம்பு எண்டு பெரிய அளவில இறங்காமல் முதலில அளவில சிறியதான பூச்சிகள், புழுக்கள உதாரணத்துக்கு கரப்பான் பூச்சி, பல்லி இப்பிடி.. சாப்பிட்டு பழகுங்கோ. அதுக்கு பிறகு பாம்பு பற்றி யோசிக்கலாம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முயல் இறைச்சி நன்றாக இருக்கும் என்று வெள்ளைக்கார நண்பர் ஒருவர் சொன்னதை கேட்டு , ஒரு முறை நானும் ஆசையுடன் உள்ளூரில் உள்ள பண்ணையில் போய் ஒரு உரித்த முயலை வாங்கிக் கொண்டு வீட்டில் கொடுத்தேன் . அதனைப்பார்த்த மனைவி இது பூனை மாதிரி உள்ளது , நான் சமைக்கமாட்டேன் இதை கொண்டு போய் குப்பைவாழியிலே போடுங்கோ என்று சொல்லி விட்டார் .எனக்கும் அத்துடன் அந்த ஆசை போய்விட்டது . நான் வாங்கிய முயலும் குப்பை வாழிக்குள் போய்விட்டது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமி!

ஒடியல்புட்டு , பனங்கிழங்கு ,

பினாட்டு , குரக்கன்புட்டு , ஒடியல்கூழ் , மரக்கறிப்புட்டு , தோசை , ஆட்டுப்பால் , மாட்டுப்பால் , இடியப்பம் , எண்ணைப்புட்டு , உழுத்தங்களி , புக்கையும்சம்பலும் இப்பிடியே ஒண்டொண்டாய் சொல்லிக்கொண்டு போகலாம் இதுகளை சாப்பிட்டுத்தானே எங்டை பழசுகள் நூறுவருஷம் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தவை :D

அதென்ன இப்ப வாய்ப்பாடு மாதிரி பத்து அமிலம் இருபது அமிலம் என்ன நாசமறுப்படா இது :lol:

வயிறாற சாப்பிடோணும் ஓடிஆடி வேலை செய்யோணும் இதுதான் என்ரை தத்துவம் :lol:

மேலை நாட்டவன் எல்லாம் எங்கடை நாட்டு சாப்பாட்டை சுத்தம் சுகாதாரம் ஆரோக்கியம் எண்டு அலைஞ்சு திரியிறான் எங்கடையள் என்னடாவெண்டால் நாகரீகம் எண்டபேரிலை உள்ள குப்பையளை நக்கிக்கொண்டு திரியுதுகள் :o

வெள்ளைக்காரன் நீராவியிலை ரயிலை கண்டுபுடிச்சு ரயில் ஓடுறான் எங்கடையள் இப்பவும் நீராவியிலை குழல்புட்டு அவிச்சுக்கொண்டுதான் இருக்குதுகள் எண்டு நக்கலடிச்சவை எக்கச்சக்கம்.ஆனால் நீராவியிலை ரயிலை கண்டுபிடிச்சவையின்ரை இடத்திலைதான் மூலைக்குமூலை ஆசுப்பத்திரியள் ஞாபகத்திலை வைச்சிருங்கோ :lol:

எதை உண்டாலும் உங்கள் உடற் திணிவுச் சுட்டெண்ணை (BMI) 18.5 க்கும் 24 க்கும் இடையில் பேணிக் கொள்ளுங்கள்..!

அதுசரி நெடுக்கு!உந்த கணக்கின்ரை விளக்கத்தை பக்கத்து வீட்டுக்காரனுட்டையே கேக்கிறது :lol:

ஒடியல்புட்டு , பனங்கிழங்கு ,

பினாட்டு , குரக்கன்புட்டு , ஒடியல்கூழ் , மரக்கறிப்புட்டு , தோசை , ஆட்டுப்பால் , மாட்டுப்பால் , இடியப்பம் , எண்ணைப்புட்டு , உழுத்தங்களி , புக்கையும்சம்பலும்

இதற்கெல்லாம் செய்முறை போட்டிடணும்... :lol:

நெடுக்குசாமி!

ஒடியல்புட்டு , பனங்கிழங்கு ,

பினாட்டு , குரக்கன்புட்டு , ஒடியல்கூழ் , மரக்கறிப்புட்டு , தோசை , ஆட்டுப்பால் , மாட்டுப்பால் , இடியப்பம் , எண்ணைப்புட்டு , உழுத்தங்களி , புக்கையும்சம்பலும் இப்பிடியே ஒண்டொண்டாய் சொல்லிக்கொண்டு போகலாம் இதுகளை சாப்பிட்டுத்தானே எங்டை பழசுகள் நூறுவருஷம் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தவை :lol:

அதென்ன இப்ப வாய்ப்பாடு மாதிரி பத்து அமிலம் இருபது அமிலம் என்ன நாசமறுப்படா இது :o

வயிறாற சாப்பிடோணும் ஓடிஆடி வேலை செய்யோணும் இதுதான் என்ரை தத்துவம் :wub:

மேலை நாட்டவன் எல்லாம் எங்கடை நாட்டு சாப்பாட்டை சுத்தம் சுகாதாரம் ஆரோக்கியம் எண்டு அலைஞ்சு திரியிறான் எங்கடையள் என்னடாவெண்டால் நாகரீகம் எண்டபேரிலை உள்ள குப்பையளை நக்கிக்கொண்டு திரியுதுகள் :lol:

வெள்ளைக்காரன் நீராவியிலை ரயிலை கண்டுபுடிச்சு ரயில் ஓடுறான் எங்கடையள் இப்பவும் நீராவியிலை குழல்புட்டு அவிச்சுக்கொண்டுதான் இருக்குதுகள் எண்டு நக்கலடிச்சவை எக்கச்சக்கம்.ஆனால் நீராவியிலை ரயிலை கண்டுபிடிச்சவையின்ரை இடத்திலைதான் மூலைக்குமூலை ஆசுப்பத்திரியள் ஞாபகத்திலை வைச்சிருங்கோ :unsure:

அதுசரி நெடுக்கு!உந்த கணக்கின்ரை விளக்கத்தை பக்கத்து வீட்டுக்காரனுட்டையே கேக்கிறது :lol:

உண்மைதான். இதுகளச் சாப்பிட்டால் எங்களுக்கு நோய், நொடி வராதுதான். ஆனா எங்கட ஆக்கள் உதுகளையா சாப்பிடுகினம். உதுகளையெல்லாம் சாப்பிட்டு எத்தினை வருசமாச்சு. நீங்கள் சொன்னதுகளிலை ஒரு மாமிசமும் இல்லைப் பாருங்கோ. அதுதான் அவை நூறு வருசம் இருந்தவை. இப்பிடியான சாப்பாடுகள் இருக்கெண்டுகூட இப்ப வளர்ர பிள்ளையளுக்குத் தெரியாது. ஆனா, இப்ப எங்கட பெரிசுகளை உந்தச் சாப்பாடுகளைத்தான் தேடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol: சுஜி இங்க ஒட்டகம் இறைச்சி கிடைக்கிறது

முகவரி கொடுத்தால் அனுப்பி வைக்கப்படும்.

முனிவர் :unsure::o:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: சுஜி இங்க ஒட்டகம் இறைச்சி கிடைக்கிறது

முகவரி கொடுத்தால் அனுப்பி வைக்கப்படும்.

முனிவர் :icon_mrgreen::rolleyes::lol:

முனி!

அறிமுகத்திலை சாமியார் வேஷம் போட்டிட்டு இப்ப என்ன பெட்டையளை கண்டவுடனை ஒட்டக இறைச்சி ஞாபகம் வந்திட்டுதோ :lol:

முனி!

அறிமுகத்திலை சாமியார் வேஷம் போட்டிட்டு இப்ப என்ன பெட்டையளை கண்டவுடனை ஒட்டக இறைச்சி ஞாபகம் வந்திட்டுதோ :lol:

ஒட்டகம்??? :icon_mrgreen::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சின்ன வயசிலை ஆடு, கோழி, மான், மரை,முயல், ஆமை, உடும்பு ஆகியவை சாப்பிட்டிருக்கிறேன். ஆனா இப்ப, சுவை எப்பிடியிருக்கும் எண்டு ஞாபகமில்லை. நாட்டிலை இருக்கேக்கில்லை மாடு, பன்றி சாப்பிடத் தடை. அப்பெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் மாட்டுக் கொத்து ரொட்டி வாங்கிச் சாப்பிடுவம். இப்ப, மாடு, பன்றி எல்லாம் சாப்பிடுவேன். எல்லாம் அளவோடைதான். கூடச் சாப்பிட விருப்பம்தான். ஆனால் கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே அருவருக்கத் தொடங்கிடும். எனக்கு பாம்பு இறைச்சி ரேஸ்ட் பண்ணவேணுமெண்டு விருப்பம். யாராவது சொல்லாமல் தரமாட்டார்களா என ஏங்குகிறேன். கடலுணவு எண்டால் ஒரு பிடி பிடிச்சிடுவன். ஆனால், முள்ளுகள் இல்லாத மீன்கள்தான் சாப்பிடுவன். நண்டு, சிப்பி வகைகள் என்றால் நல்ல விருப்பம்.

இப்ப என்னுடைய சாப்பாடு, மரக்கறிகள், பழங்கள், தானியங்கள்தான். ஹெல்தியாகச் சாப்பிட வேணுமென்பதால் காலையில் பழங்கள், மதியம் பச்சை மரக்கறிகள், பின்னேரம் தானியங்கள். இடைக்கிடை மற்ற சாப்பாடுகளும் சாப்பிடுவேன்.

சுசி ஒன்றையும் விட்டுவைக்கல போல இருக்கு? வீட்ட நாய் பூனை ஏதும் வளர்த்தனிங்களோ? ( இல்லை ஏதாவது மிஞ்ஞினால் போடுறதுக்குதான்) பா பா பா பாம்பும் சப்பிடபோறிங்களோ :icon_mrgreen: ?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நெடுக்கு!உந்த கணக்கின்ரை விளக்கத்தை பக்கத்து வீட்டுக்காரனுட்டையே கேக்கிறது :lol:

உடற் திணிவு சுட்டெண் பற்றி முன்னர் ஒரு பதிவிலும் கருத்துப் பகிர்ந்திருக்கிறோம்..

மீண்டும் இங்கும் குறிப்பிடுகின்றேன்..

உடற்திணிவு சுட்டெண் = உடல் திணிவு (kg) / உயரம் (m) ^2

^2 = வர்க்கம் 2. <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகத்திலை சாமியார் வேஷம் போட்டிட்டு இப்ப என்ன பெட்டையளை கண்டவுடனை ஒட்டக இறைச்சி ஞாபகம் வந்திட்டுதோ

<_<:lol::lol::lol:

கு சா அண்ணா பெயர்தான் முனிவர் மற்றபடி

சாப்பிட்டில எல்லாம்....ஆஆஆஆ

ஓ சுஜி பெண்........ஓ

இவாவால எத்தனை பேர் அடி வேண்டியிருக்கு என்று

முதல் கேட்கவேணும்?.....கு.சா ...அண்ண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வதும் சாவதும் ஒரு முறைதான். நீங்கள் நெடுநாட்கள் (அதாவது நீண்ட ஆயுட்காலம்) வாழ விரும்புகிறீர்களா? அப்படியென்றால் மேலே நெடுக்கண்ணே குறிப்பிட்டது போல உங்கள் உடல் நலத்திற்கேற்ப உணவு வகைகளை உண்ணுங்கள்.

மனதிற்கு திருப்தியாக உண்டு வாழ விருப்பமா? அப்படியென்றால் நீங்கள் எதை எவ்வளவு வேண்டுமென்றாலும் உண்ணலாம். ஆடு, மாடு, கோழி, பன்றி, மான், முயல், ஆமை, குதிரை, ஒட்டகம், பாம்பு, நாய் ... இப்படியே இந்த வரிசையில் இப்பொழுது மனிதனே மனிதனை கொன்று சாப்பிடும் நிலமை வந்திட்டிது என்றால் பாருங்களேன். ^^

Edited by Tigerblade

சுசி ஒன்றையும் விட்டுவைக்கல போல இருக்கு? வீட்ட நாய் பூனை ஏதும் வளர்த்தனிங்களோ? ( இல்லை ஏதாவது மிஞ்ஞினால் போடுறதுக்குதான்) பா பா பா பாம்பும் சப்பிடபோறிங்களோ :icon_idea: ?

சுப்பண்ணைத் தாத்தா அதெல்லாம் வளர்த்தனாங்கள்தான். ஆனா அவையெல்லாம் எங்கட செல்லப்பிராணிகள் அல்லோ? அவையை எப்பிடிச் சாப்பிடேலும். நான் முதல் சொன்ன இறைச்சிகள் எல்லாம் முந்தி எங்கட வீட்டிலை சமைக்கிறவை. அப்ப சாப்பிடத்தானே வேணும். எங்கட அப்பா, வாகனம் வைச்சிருந்தவர். அடிக்கடி வன்னிப்பக்கம் போய்ட்டு வரேக்குள்ள விதம் விதமான இறைச்சியள் வாங்கிக் கொண்டு வருவார். அநேகமாப் பின்னேரங்களிலைதான் கொண்டு வருவார். அப்ப இரவிரவா எங்கட வீட்டிலை சமையல் நடக்கும். அதோடை எனக்கு அண்ணாவையும் இருந்தவை. அவையும் விதம் விதமான இறைச்சிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வருவினம்.

ஆனா இப்ப, கொஞ்சக்காலமா மரக்கறி வகைகள், பழங்கள் தான் சாப்பாடு. டைகர்பிளேட் சொன்னது மாதிரி, இரண்டு வகையிலும் சாப்பிடுகிறேன். இடைக்கிடை எனக்கு விருப்பமான சாப்பாடும் சாப்பிடுவேன்.

குமாரசாமித்தாத்தா, பெயரை வைச்சு ஆக்களை நம்பேலுமே??? அதுவும் இந்தக் காலத்திலை. என்ன இவ்வளவு விவரம் இல்லாமல் இருக்கிறீங்கள் தாத்தா???

முனிவர், ஒட்டக இறைச்சி நீங்கள் முதல்ல சாப்பிட்டு இருக்கிறீங்களோ? எதுக்கும் அக்கம் பக்கம் விசாரிச்சுப் போட்டுச் சொல்லுறன். பிறகு கண்டதையும் சாப்பிட்டுப் போட்டு வியாதியோடை திரியேலாது.

அடி வாங்கிறவையின்ர கணக்கு வழக்கெல்லாம் வைச்சிருக்கிறதைத் தாண்டிட்டுது.

:D:huh:^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.