Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8 மீனவர்களைக் காணவில்லை-ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம்!

Featured Replies

மீன் பிடித்துவிட்டு கரைக்கு ஜூலை 22 அன்று திரும்பியிருக்க வேண்டிய ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் கரைக்குத் திரும்பாததால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.

தொடர்ந்து வாசிக்க..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் கடலுக்குள்ளும், இந்தியமீனவர்கள் வழி தவறிப் போகின்றவர்கள் தான். ஆனால் அதற்காகப் பாகிஸ்தான் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொள்வதில்லை. சிங்களக் காட்டுமிராண்டிகள் தான் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்.

தமிழக உறவுகள் இந்திய அரசிடம் பாதுகாப்புப் பெறும்வரை சுயபாதுகாப்பில் அவதானமாக இருங்கள். அது தான் உங்களைப் பாதுகாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா இதையும் சிங்களவன் தான் செய்திருப்பான்

எதுக்கும் ஒரு தடவை இந்திய ராணுவம் இலங்கைக்குள்ள

இருக்கும் போதே சொல்லுங்கள் தேடி பிடிக்கட்டும்

இல்லாவிட்டால் இதையும் விடுதலைபுலிகள் தான் செய்தார்கள் என்று

சொல்லுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களை காக்க கூட்டு ரோந்து

.

Thursday, 24 July, 2008 02:39 PM

.

ராமநாதபுரம், ஜூலை 24: கடலில் மீன் பிடிக்கும் மீனவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய கடலோர காவல் படையும், தமிழக காவல் துறையின் ஒரு பிரிவான கடலோர பாதுகாப்பு குழுவும் இணைந்து மன்னார் வளைகுடா, பாக். நீரிணைப்பு மற்றும் பாக். வளைகுடா ஆகிய பகுதிகளில் கூட்டு ரோந்துப் பணியை துவக்கியுள்ளனர்.

.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இந்திய கடலோர காவல் படையின் அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழு (கடலோர பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழக காவல் துறையின் பிரிவு) அதிகாரிகளும் அண்மையில் முடிவு செய்தனர்.

அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து மன்னார் வளைகுடா, பாக். நீரிணைப்பு, பாக். வளைகுடா ஆகிய பகுதிகளில் கடலோர கூட்டு ரோந்து பணியை துவக்கி உள்ளனர்.

அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மண்டபம் கடலோர காவல்நிலைய போலீசார் மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை நிலைய அதிகாரிகளுடன் சேர்ந்தும், கடலோர பாதுகாப்பு குழுவின் மற்றொரு குழுவினர் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல்படை நிலையத்துடன் சேர்ந்தும் இந்த கூட்டு ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கூட்டு ரோந்து படையினர் பாக். வளைகுடா, பாக். நீரிணைப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் செல்வார்கள்.

அதிலும் குறிப்பாக மண்டபம் மற்றும் தூத்துக்குடி இடையே உள்ள மனிதர்கள் வாழாத 21 தீவுகள் மீது முக்கிய கவனம் செலுத்தப்படும். கடலோர பாதுகாப்பு குழுவின் ஒரு பிரிவினர் ஏற்கனவே கடலோர ரோந்து பணி மேற்கொள்வதில் இருவார கால பயிற்சியை பெற்றிருக்கிறார்கள்.

இருப்பினும் இந்த கூட்டு ரோந்து அவர் களுக்கு கடலின் தன்மை, நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம் போன்றவை குறித்து மேலும் அதிக அளவில் புரிந்துகொள்ள உதவி புரிவதாக அமையும்.

malaisudar.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காக்(கா) கூட்டு ரோந்து
:wub:
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசுக்கு கவலை தெரிவித்து ஒரு கடிதம் எழுதிப்போட்டு விட்டு , நாம் உண்ணாவிரதம் இருப்போம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அரசுக்கு கவலை தெரிவித்து ஒரு கடிதம் எழுதிப்போட்டு விட்டு , நாம் உண்ணாவிரதம் இருப்போம் .

கண்ணீர் கவிதை எழுதுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்தால் ஒரு இரங்கற்பா பாடி கதையை முடித்து வைப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட என்னப்பா இது யாருமே திருந்த மாட்டாங்கள் போல இருக்கு

அதுசரி பணம் எண்டா தான் பிணமும் வாய் திறக்குமே :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இந்த கச்ச தீவு எங்கப்பா இருக்கு

தயவுசெய்து தெரிந்தோர் அறியத்தரவும் :huh:

அது யாருக்கு சொந்தம் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்களைச் சுடுவது புலிகளே அமைச்சர் இராதாகிருஷ்ணன். இன்றைய சுடரொளியில் செய்தி வந்திருக்கின்றது.

தமிழக மீனவர்களைச் சுடுவது புலிகளே அமைச்சர் இராதாகிருஷ்ணன். இன்றைய சுடரொளியில் செய்தி வந்திருக்கின்றது.

ஐயா..இராதா...நீங்க ஏன் கடலுக்கு போய் வர கூடாது.. :huh:

நேற்றய தினமனியில் இலங்கை சென்று திரும்பிய இந்திய மீனவ சங்கத்தலைவர் தேவதாசிடம் ராதாகிருஸ்ணன் சொன்னதாக வெளிவந்த செய்தி இது.ராதாகிருஸ்ணனும் ஓர் இந்தியர் தானே

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரத்தில் பதற்றம்!

அது ஒன்றுதான் உங்களுக்கு உரியது. அதையாவது வடிவாக செய்யுங்கள் தமிழக மீனவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா..இராதா...நீங்க ஏன் கடலுக்கு போய் வர கூடாது.. :huh:

அதானே ஒருக்கா கடலுக்கு போய் வந்தா தானே தெரியும் அவருக்கும்

மீனவர்களை யார் சுடுறதெண்டு :o

ஒரு சிலருக்கு சொன்னால் புத்தி வரும்

ஒரு சிலருக்கு பட்டால் தான் புத்தி வரும்

படட்டும் நல்லா பட்டுத் தெளியட்டும் :o:o

ஆனா போறவர் ஒழுங்கா திரும்பி வரவேணுமே :lol::lol::lol:

இராதா கிறுக்கனுக்கு மீன்பிடித்துறை அமைச்சில் ஒரு கண் போல் தெரிகிறது. இது மீன் பிடிக்கும் பிரச்சினையல்ல. ஆட்களைப்பிடிக்கும் பிரச்சனை. உரியவர்கள் உணர வேண்டும். அல்லது அதைச் செய்பவர்களுக்கு உரிய வழியில் உணர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றய தினமனியில் இலங்கை சென்று திரும்பிய இந்திய மீனவ சங்கத்தலைவர் தேவதாசிடம் ராதாகிருஸ்ணன் சொன்னதாக வெளிவந்த செய்தி இது.ராதாகிருஸ்ணனும் ஓர் இந்தியர் தானே

இல்லாட்டில் வெள்ளைவான் மாதிரி வெள்ளை 'கப்பல்' கடலுக்க சுத்துதோ என்னமோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.