Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் பிச்சை எடுப்போருமில்லை கட்டாக்காலி நாய்களுமில்லை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள கட்டாக்காலி நாய்களை கொழும்பு மாநகர சபையின் மிருக வைத்தியப்பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இப்பகுதி கட்டாக்காலி நாய்கள் அல்லாத பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாக்காலி நாய்களை இவ்வாறு பிடித்துச் சென்றபோதும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக 40 மோப்ப நாய்களை பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மகிந்தவே பெரிய பிச்சைகாறன்... அது இருக்கிற இடத்திலை மற்றவை இருக்க முடியுமா...??

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுப்போரும் , கட்டாக்காலி நாய்களும் தற்காலிகமாக அம்பாந்தோட்டைக்கு தமது சகோதரர்களிடம் இடம் மாற்றப்பட்டுள்ளார்கள். :rolleyes::o

வீரகேசரி நாளேடு - கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார்.

இவரை கடைசில புடிச்சுட்டாங்களா? ... அவர் இப்ப எங்கே? :huh::o:mellow:

வீரகேசரி நாளேடு -

கட்டாக்காலி நாய்களை இவ்வாறு பிடித்துச் சென்றபோதும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக 40 மோப்ப நாய்களை பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏன் கட்டாக்காலி நாய்களை மோப்ப நாய்களாக பயன்படுத்தக் கூடாது?

அவசர அவசரமாய் 2 கிழமை பயிற்சி கொடுத்தா காணும்

கட்டாக்காலி நாய்களை கொழும்பு மாநகர சபையின் மிருக வைத்தியப்பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

அப்ப மகிந்த குடும்பம்?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரை கடைசில புடிச்சுட்டாங்களா? ... அவர் இப்ப எங்கே? :(:(:huh:

அவர் வேறெங்கே போகப்போகின்றார் , மாநாட்டு மண்டபத்தில் தான் இருப்பார் . :mellow:

ஏன் கட்டாக்காலி நாய்களை மோப்ப நாய்களாக பயன்படுத்தக் கூடாது?

அவசர அவசரமாய் 2 கிழமை பயிற்சி கொடுத்தா காணும்

இந்த 40 மோப்ப நாய்களும் , முன்பு கட்டாக்காலி நாய்களோ என்று யாருக்குத்தெரியும் . :o

கட்டாக்காலி என்றால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாக்காலி என்றால்?

கட்டாக்காலி என்றால் தெரு நாய் என்று அர்த்தம் .

இதற்கு அநேகமாக உரிமையாளர் இருக்கமாட்டார்கள் , குப்பைகளில் காணப்படும் கழிவு உணவுப் பொருட்களையே சாப்பிட்டு உயிர் வாழவேண்டிய நிலைமை .

கண்ட , கண்ட வருத்தம் ( சொறி , குட்டை , தெள்ளு , பேன் , விசர் ) போன்றவை இருக்கும் . சில வேளை இவற்றிடம் தனிய அம்பிட்டால் ஆபத்து , கடித்து குதறி விடும் .

இந்த நாய் கட்டாமல் வளர்வதால் , கட்டாக் கா (வா ) லி நாய் என்று பெயர் வந்திருக்கும் என்று நம்புகின்றேன் தூயா .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது விடயத்தில் மகிந்த குடும்பத்தை பாராட்டத்தான் வேண்டும். சிறீலங்காவின் தலைநகர் இந்த சார்க் மாநாடோடு அழகுறும் போலவே தெரிகிறது. இதையே தொடர்ந்தால் நல்லம். :mellow:

சிறி அருமையான விளக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது விடயத்தில் மகிந்த குடும்பத்தை பாராட்டத்தான் வேண்டும். சிறீலங்காவின் தலைநகர் இந்த சார்க் மாநாடோடு அழகுறும் போலவே தெரிகிறது. இதையே தொடர்ந்தால் நல்லம். :huh:

இதே போலைதான் சிறிமாவும் முந்தி ஒருக்கால் அணிசேரா உச்சி மாநாட்டுக்கு உள்ள சிவர் கக்கூசு பாலம் எல்லாத்துக்கும் பெயின்ற் அடிச்சவ :mellow:

ஏன் சிறிமாட்டப்போவான்... பிரேமதாச எண்டு ஒருத்தர் இருந்தவர் ஞாபகம் வருதோ?

அவரும் சாக்கு மானாடு விளையாட்டுப்போட்டி எல்லாம் வைச்சவர்... அப்பவும் உப்பிடித்தான் அள்ளினவங்கள்...

அப்ப அவிசாவளையிலையும் பீலியந்தலையிலையும் இரண்டு மண்டபம் கட்டி அடைச்சு வைச்சவங்கள்.. பிறகு என்ன நடந்த தெண்டு தெரியாது..

பிச்சக்காரங்களின்ர எண்ணிக்கை திரும்பவும் கூடிட்டுது... அவங்கள் எல்லாம் வெளில வந்துட்டாங்களா அல்லது வெளில இருந்தவங்கள் எல்லாம்

பிச்சை எடுக்கத்தொடங்கிட்டாங்களா எண்டு தெரியாது.

இப்பவும் மகிந்த உவங்களை பிடிகலாம் அடைக்கலாம் ஆனாலும் சாப்படு போடுறார் அதுவும் 3 நேரம் சாப்பாடு போடுறார் எண்டு கேள்விப்பட்டா

பிறகு சிங்களவங்களை கொன்றோல் பண்ண பாகிஸ்தானில இருந்துதான் ஆமி வரவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது விடயத்தில் மகிந்த குடும்பத்தை பாராட்டத்தான் வேண்டும். சிறீலங்காவின் தலைநகர் இந்த சார்க் மாநாடோடு அழகுறும் போலவே தெரிகிறது. இதையே தொடர்ந்தால் நல்லம். :mellow:

அழுக்கு எல்லாம் வெளியில தான் இருக்கு உது எல்லாம் பெரிய அழுக்கில்லை முதல் மகிந்தவையும் அவரின் பரிவாரங்களையும் ஆசியாவைவிட்டே கடத்தினால் ஆசியாவே ஒரு புது பிறப்பு எடுத்தது போல இருக்கும் :huh: .

கட்டாக்காலி என்றால் தெரு நாய் என்று அர்த்தம் .

இதற்கு அநேகமாக உரிமையாளர் இருக்கமாட்டார்கள் , குப்பைகளில் காணப்படும் கழிவு உணவுப் பொருட்களையே சாப்பிட்டு உயிர் வாழவேண்டிய நிலைமை .

கண்ட , கண்ட வருத்தம் ( சொறி , குட்டை , தெள்ளு , பேன் , விசர் ) போன்றவை இருக்கும் . சில வேளை இவற்றிடம் தனிய அம்பிட்டால் ஆபத்து , கடித்து குதறி விடும் .

இந்த நாய் கட்டாமல் வளர்வதால் , கட்டாக் கா (வா ) லி நாய் என்று பெயர் வந்திருக்கும் என்று நம்புகின்றேன் தூயா .

விளக்கத்திற்கு நன்றி சிறி..

ஆக மொத்தம் இது தமிழ் பெயர்தானா??

விளக்கத்திற்கு நன்றி சிறி..

ஆக மொத்தம் இது தமிழ் பெயர்தானா??

தமிழ்ப்பெயராக்கூட இருக்கலாம்.. :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி சிறி..

ஆக மொத்தம் இது தமிழ் பெயர்தானா??

ஓம் தூயா , இது சுத்த தமிழ்ப்பெயர் என்று தான் நான் நினைக்கின்றேன் .

வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள கட்டாக்காலி நாய்களை கொழும்பு மாநகர சபையின் மிருக வைத்தியப்பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இப்பகுதி கட்டாக்காலி நாய்கள் அல்லாத பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாக்காலி நாய்களை இவ்வாறு பிடித்துச் சென்றபோதும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக 40 மோப்ப நாய்களை பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்ப டக்கிளசையும் மற்றதுகளும் இன்னும் கொழும்புக்குள்ள நிக்குதே ???

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப டக்கிளசையும் மற்றதுகளும் இன்னும் கொழும்புக்குள்ள நிக்குதே ???

அவர்கள் கட்டிய காலிகள். அதுதான் புதியவன். :D

அவர்கள் கட்டிய காலிகள். அதுதான் புதியவன். :D

ஓவ் !!! அதோ சங்கதி ! என்னா ளொள்ளு பாருங்க!

எனக்கு என்ன எழுதுறாங்கள் என்று தெரியுது இல்லை என்ன மொழி சொற்கள் இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.