Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளையும், வியாழக்கிழமையும், மதுரையில் சுற்றுப்பயணம்

மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல்

கருணாநிதி, அங்கு இடம்பெறும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.

இதனை முன்னிட்டு, மதுரை ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி

ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் நலன்புரி நிலையங்களில்,

ஏதிலிகளாக தங்கியுள்ள ஐயாயிரத்து தொள்ளாயிரத்து

நாற்பத்தொன்பது ஈழத்தமிழர்கள், இரண்டு நாட்களுக்கு வெளியில்

நடமாடுவதற்கு மாநில காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆத்துடன் மூன்று பகுதிகளிலும் உள்ள நலன்புரி நிலையங்களிலும்

தமிழக காவல்துறையினரும், ‘கியூ| புலனாய்வுப் பிரிவினரும்

இணைந்து, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு,

கணிசமான ஈழத்தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் பாதுகாப்புக் கருதியே, இவ்வாறான

நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டின் கீழ்,

கடந்த ஆறு மாதங்களில், மதுரையில் பதின்மூன்று அப்பாவி

ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

http://www.pathivu.com/?p=2692

இதென்ன புதுசா?..

இதைத்தானே காலாகாலமா அனுபவிச்சுக்கொண்டுவாறம்...

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் வருகை: மதுரையில் அகதிகளுக்கு தடை

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 5, 2008

மதுரை: மதுரையில் நடக்கும் 2 நாள் விழாக்களில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அகதிகள் முகாம்களை விட்டு வெளியே வர 6ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் முகாம்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் தங்கியபடி விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்திய கிருஷ்ணநீதன் என்ற நிக்சனை (22), க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் விடுதலைப் புலிகளி்ன் அரசியல் பிரிவு முக்கிய பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்தவர் கிருஷ்ணநீதன். அகதிகள் முகாமில் இருந்து கொண்டு விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பொருட்களை கடத்தி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நாளையும், நாளை மறு தினமும் மதுரையில் நடக்கும் விழாக்களில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள முகாம்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் 5949 பேர் தங்கி உள்ளனர்.

அவர்கள் அனைவரும் வருகிற 2 நாட்களும் முகாம் களில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் உள்ள வாலிபர்களின் நடவடிக்கையை கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் முகாம்களில் போலீசார் அதிரடி சோதனையும் நடத்தி வருகிறார்கள்.

-தட்ஸ்தமிழ்

விடுதலைபுலிகளுக்கான தமிழக மக்களின் ஆதரவு தற்போது பெருகி கொண்டிருப்பதால், அதை சிதைக்கும் வண்ணம் சிறீலங்கா சிங்கள இனவாத அரசு அதன் கீழ் இயங்கும் சில ஒட்டுக்குழுக்க்களை வைத்து தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் எவரையாவது போட்டுத்தள்ளி விட்டு அந்த பழியை விடுதலை புலிகளின் மேல் போட்டு விடும் வாய்ப்பு இருப்பதால், இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது அவசியமாகலாம்.

அத்தோடு சமீபத்தில் வந்த ஆனந்த விகடனின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில், விடுதலை புலிகளுக்கு தமிழக மக்களிடையே இருந்து வரும் பேராதவை சிதைப்பதற்கான கடைசி ஆயுதமாக இந்திய புலனாய்வுத்துறை றோ தமிழக மக்களின் அபிமானம் பெற்ற ஒரு புள்ளியை போட்டுத்தள்ளி விட்டு பழியை விடுதலை புலிகளின் மேல் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இப்படியான சதிதிட்டங்களை இந்திய றோவும் சிங்கள இனவாத அரசும் இணைந்தே தீட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் காலம் கடந்து கொண்டிருக்கிறது, பல விடயங்கள் தன் கையை மீறி போய் கொண்டிருக்கிறது என்று றோ நன்கு அறியும். ஆகவே கடைசி முயற்சியாக தமிழகத்தில் ஒரு அரசியல் கொலையை அரங்கேற்ற றோ தயங்கப் போவதில்லை

ஆகவே கலைஞர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போதைக்கு குறை சொல்வதற்கில்லை!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

கலைஞர் அவர்களே

நல்லபெயர் எமக்கு.........

விடுதலைபுலிகளுக்கான தமிழக மக்களின் ஆதரவு தற்போது பெருகி கொண்டிருப்பதால், அதை சிதைக்கும் வண்ணம் சிறீலங்கா சிங்கள இனவாத அரசு அதன் கீழ் இயங்கும் சில ஒட்டுக்குழுக்க்களை வைத்து தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் எவரையாவது போட்டுத்தள்ளி விட்டு அந்த பழியை விடுதலை புலிகளின் மேல் போட்டு விடும் வாய்ப்பு இருப்பதால், இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது அவசியமாகலாம்.

அத்தோடு சமீபத்தில் வந்த ஆனந்த விகடனின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில், விடுதலை புலிகளுக்கு தமிழக மக்களிடையே இருந்து வரும் பேராதவை சிதைப்பதற்கான கடைசி ஆயுதமாக இந்திய புலனாய்வுத்துறை றோ தமிழக மக்களின் அபிமானம் பெற்ற ஒரு புள்ளியை போட்டுத்தள்ளி விட்டு பழியை விடுதலை புலிகளின் மேல் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இப்படியான சதிதிட்டங்களை இந்திய றோவும் சிங்கள இனவாத அரசும் இணைந்தே தீட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் காலம் கடந்து கொண்டிருக்கிறது, பல விடயங்கள் தன் கையை மீறி போய் கொண்டிருக்கிறது என்று றோ நன்கு அறியும். ஆகவே கடைசி முயற்சியாக தமிழகத்தில் ஒரு அரசியல் கொலையை அரங்கேற்ற றோ தயங்கப் போவதில்லை

ஆகவே கலைஞர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போதைக்கு குறை சொல்வதற்கில்லை!

நீங்கள் சொல்லுவதும் யதார்த்தமாத்தான் இருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்கப்பா வந்தாரை வாழ வைச்சது எல்லாம் போதும் இப்பிடித்தான்

வந்தாரை வாழ வைக்கிறமெண்டு சிங்களவங்களை உள்ளே விட்டு பட்டது போதாதா?????????

இல்லை இன்னும் வேணுமோ????????

தீவிலை முக்கால்வாசி இப்ப அவங்களட்டை

வந்தாரை வாழ வைக்கிறமெண்டு முழுத்திலயும் அவங்களட்ட குடுத்திடாதயுங்கோ

பிறகு எங்களுக்கு பின்னாலே வரும் சந்ததி எங்களை திட்டி தீர்க்கும் நாங்கள் எங்கள் மூதாதையர்களை திட்டி தீர்ப்பது போல்

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா வந்தாரை வாழ வைச்சது எல்லாம் போதும் இப்பிடித்தான்

வந்தாரை வாழ வைக்கிறமெண்டு சிங்களவங்களை உள்ளே விட்டு பட்டது போதாதா?????????

இல்லை இன்னும் வேணுமோ????????

தீவிலை முக்கால்வாசி இப்ப அவங்களட்டை

வந்தாரை வாழ வைக்கிறமெண்டு முழுத்திலயும் அவங்களட்ட குடுத்திடாதயுங்கோ

பிறகு எங்களுக்கு பின்னாலே வரும் சந்ததி எங்களை திட்டி தீர்க்கும் நாங்கள் எங்கள் மூதாதையர்களை திட்டி தீர்ப்பது போல்

இதைத்தான் நானும் சொல்லவந்தேன்

வந்தாரை வாழவைத்த தமிழகம் இன்று தமிழரையே வரவேற்கமுடியாமல்............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.