Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படிக்கு கடவுள்

Featured Replies

பச்சைக் குழந்தை அங்கே

பாலுக்கு அழுதிருக்க

பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்

என்னைக் கடவுளென்று

மனிதன் வணங்குவானோ சொல்?

சத்தியமாய்

அந்தக் கல்லுக்குள்ளே

நான் இல்லையெடா!

மானிடா!

நான் கருணையுள்ளவன்.

ஏழை நெஞ்சுக்குள் தான்

எப்போதும் இருப்பேனடா!

உன் இரத்த உறவுக்கங்கே

பாதி உயிர் போகையிலே

எப்படி நான் கொலுவிருப்பேன்?

நீயமைத்த மஞ்சத்திலே!

எப்போதடா நான் கேட்டேன்?

இப்போது நீ எனக்கென்று

செய்வதெல்லாம்..

வானமே கூரையாய் உன் உறவு

வாழ்வுக்கு வரமிருக்க

கோபுரக் கோயில் கட்டி

என்னை குடியிருக்க நீ கேட்டால்

எப்படி இருப்பேனடா சொல்?

அப்படி நான் இருந்தால்

மனிதன் வணங்கும் தெய்வம்

எனும் தகுதி

எனக்கிருக்குமோ சொல்?

மானிடா!

நான் கடவுள் எனும் பெயரில்

அந்தக் குடிலில்

குடியிருக்க வேண்டுமடா!

என் கடமை செய்து

கண்ணயர வேண்டுமடா!

உன்னைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்.

கோடியில் கோயில் கட்டி

அழைத்தென்னைப்

பழிகாரன் ஆக்காதே!

நீயும் பெரும் பாவம் செய்யாதே!

சத்தியமாய் சொல்கின்றேன்

இப்போது

அங்குவர என்னால் முடியாது.

உள்ளம் கோயில் என்றும்

அன்பே தெய்வமென்றும்

எத்தனை முறையடா சொல்வது!

இனி எப்படியெடா?

உனக்கு உரைப்பது

என் பொருளை..

ஏதோ

என்னைத் தேடி வருவதாய்

சொல்லி

தூரவே போகின்றாய்.

வேண்டுதல் என்றெண்ணி

வீண் விரயம் செய்கின்றாய்.

எனக்கு விழா என்று

உனக்கே விழா எடுக்கின்றாய்.

எனக்கு படைப்பதாய் சொல்லி

நீயே தின்கின்றாய்.

ஏழை பசியிருக்க

ஏப்பம் விடுகின்றாய்.

பெயருக்கும் புகழுக்கும்

பெரும் பணம் இறைத்துப் பின்

கொலரை எடுத்துவிடும்

நீயெல்லாம்…?

எப்படி இருக்கலாம்

என் பக்தனாய்?

எப்படி நான் உண்பேன்

உன் பாவச் சோற்றை

யாருக்கு நான் உரைப்பேன்

உன் ஈனச் செயலை

உண்மையில்

நான் உண்டு உறங்கி

ரொம்ப நாளச்சு

அந்த ஏழைகளைப்போல்..

தயவு செய்து

என் நிலையை நீ

கொஞ்சம் புரிந்து கொள்

மானிடா!

நான் கண்ணீர் வடிப்பதை

இனியாவது கண்டுகொள்

மானிடா!

எப்படி எப்படியோ என்னை வைத்து

பிழையாய் நீ பிழைக்க

என்ன பாவம் நான் செய்தேன்

அணு அணுவாய் நான் இறக்க

அந்த ஏழைகளைப்போல்

மானிடா!

ஓன்று மட்டும் கேள்

நிச்சயமாக

நீ திருந்தும் போது

நீயின்று வேண்டும் வடிவில்

நான் இருக்க மாட்டேன்.

ஒன்றில் இறந்திருப்பேன்

இல்லை

அன்பென்ற வடிவில் உறைந்திருப்பேன்.

தயவு செய்து முயற்சி செய்

என்னை முழுதாய்க் கொல்ல

அல்லது

அன்பென்ற வடிவில்

என்னை எப்போதும் காண

அது வரை

நான் ஏதும் தவறுரைத்தால்

என்னை மன்னித்து விடு

இல்லை தண்டித்து விடு

வழமை போல

இப்படிக்கு

உண்மையுடன்

உங்கள் கடவுள்

அன்பே தெய்வம்

ஆதவன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பிடிச்ச கவிதையி எனக்கு பிடிச்ச வரிகள்

பச்சைக் குழந்தை அங்கே

பாலுக்கு அழுதிருக்க

பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்

என்னைக் கடவுளென்று

மனிதன் வணங்குவானோ சொல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா உங்களுக்கு பிடிச்ச கவிதை எனக்கும் நல்லா பிடிச்சிருக்கு. :huh:

இதை பிரதி செய்து கோவில் வாசலில் போடுவமா என்று யோசிக்கிறன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வெண்நிலா காலத்திற்கேற்ப

இதை பிரதி செய்து கோவில் வாசலில் போடுவமா என்று யோசிக்கிறன் :huh:

ஆனால் இன்னிசை அடிவேண்டுவீர்கள் பரவாயில்லையா? :wub::lol:

இப்படிக்கு கடவுள் என..கடவுளே வரைந்திட்ட மடலை கவிதையில் சுவாசித்தேன் :rolleyes: ..ம்ம் கடவுளின் மடல் கூட சிலருக்கு கசக்க தான் செய்யும் நிலா..லா அக்கா.. :D

தாங்கள் படித்து சுவைத்தது மட்டுமில்லாது..கடவுளின் மடலை எங்களுக்கும் பிரித்து காட்டியமைக்கு நன்றிகள்..எழுதிய கடவுளுக்கு வாழ்த்துக்கள்..ள்.. :o

கடவுள் காச்சி தரமாட்டாரோ..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''உன் இரத்த உறவுக்கங்கே

பாதி உயிர் போகையிலே

எப்படி நான் கொலுவிருப்பேன்?

நீயமைத்த மஞ்சத்திலே''

வெண்ணிலா

அருமையான வரிகள். உண்மையின் யதார்தத்தை அப்படியே உரைத்த வரிகள்

வாழ்த்துகள்.

இளங்கவி

  • தொடங்கியவர்

உங்களுக்கு பிடிச்ச கவிதையி எனக்கு பிடிச்ச வரிகள்

பச்சைக் குழந்தை அங்கே

பாலுக்கு அழுதிருக்க

பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்

என்னைக் கடவுளென்று

மனிதன் வணங்குவானோ சொல்?

:rolleyes::rolleyes: கறுப்பி அக்கா உங்களுக்கும் பிடிச்சிட்டுதோ உந்த வரிகள். எனக்கும் தான் :rolleyes:

  • தொடங்கியவர்

நிலா உங்களுக்கு பிடிச்ச கவிதை எனக்கும் நல்லா பிடிச்சிருக்கு. :rolleyes:

இதை பிரதி செய்து கோவில் வாசலில் போடுவமா என்று யோசிக்கிறன் :o

அட உங்களுக்கும் பிடிச்சிட்டுதா?

ஏன் பிரதி செய்து கோயில் வாசலில் போட யோசிக்கிறியள்? போட்டிருக்கலாமே இப்படி எல்லோரும் யோசிப்பதால் தான் ......................... :rolleyes::rolleyes::unsure::(

நல்ல கவிதை வெண்நிலா காலத்திற்கேற்ப

ஆனால் இன்னிசை அடிவேண்டுவீர்கள் பரவாயில்லையா? :o:D

ஆமாம் முனிவா காலத்திற்கேற்ற கவிதைதான். அட உடனேயே கண்டுபிடிச்சிட்டியள் பாருங்க. :D

கோயில் வாசலில் போட்டால் ஏன்பா அடிப்பாங்க? நிஜம் தானே கவிதை வரிகள் சொல்லுவது :)

  • தொடங்கியவர்

இப்படிக்கு கடவுள் என..கடவுளே வரைந்திட்ட மடலை கவிதையில் சுவாசித்தேன் :rolleyes: ..ம்ம் கடவுளின் மடல் கூட சிலருக்கு கசக்க தான் செய்யும் நிலா..லா அக்கா.. :unsure:

தாங்கள் படித்து சுவைத்தது மட்டுமில்லாது..கடவுளின் மடலை எங்களுக்கும் பிரித்து காட்டியமைக்கு நன்றிகள்..எழுதிய கடவுளுக்கு வாழ்த்துக்கள்..ள்.. :rolleyes:

கடவுள் காச்சி தரமாட்டாரோ..!! :(

அப்ப நான் வரட்டா!!

ம்ம் சிலருக்கு என்ன பலருக்கு உண்மைகள் கசக்கும் தானே ஜம்முபேபி.

பேபிகளும் கடவுளும் ஒன்றாமே உது உண்மையோ......

கடவுளுக்கு வாழ்த்துக்களா? ம்ம்ம்ம்ம்ம் கடவுள் எல்லோருக்கும் காட்சி கொடுக்கமாட்டாராம்... என்ன செய்ய? அதுக்காக கடவுளுக்கு அபிசேகம் செய்து கூட்டி வர முடியுமா சொல்லுங்கோ.......... கடவுள் எத்தனை பேருடைய நேர்த்திகளை எல்லாம் செய்து முடிக்கணும் ல....... இப்போ கடவுள் ஏழைகளின் நெஞ்சத்தில் குடிகொள்ள போயிருப்பார். :rolleyes:

  • தொடங்கியவர்

''உன் இரத்த உறவுக்கங்கே

பாதி உயிர் போகையிலே

எப்படி நான் கொலுவிருப்பேன்?

நீயமைத்த மஞ்சத்திலே''

வெண்ணிலா

அருமையான வரிகள். உண்மையின் யதார்தத்தை அப்படியே உரைத்த வரிகள்

வாழ்த்துகள்.

இளங்கவி

:rolleyes::rolleyes: ஆமாம் அப்படியே யதார்த்ததை உரைக்கும் வரிகள் தான் ஆதலால் தான் எனக்கும் இக்கவி பிடிச்சிருந்திச்சு எல்லோ

நன்றிகள் உங்கள் கருத்துப்பகிர்வுக்கு இளங்கவி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை யதார்த்தம் ஆனால்

யதார்த்தம் கசக்கும் பிள்ளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயமான கேள்விகள் அழகு தமிழ் நல்லதொரு கவிதை.

வெண்ணிலா உங்களுக்கு பிடிச்ச கவிதை எனக்கும் பிடிச்சிருக்கு :rolleyes: (இவ்வளவு நாளும் என்ட கண்ணில படாமல் போயிட்டுதே என்ன காரணம் யார் செய்த தாமதம் :rolleyes: )

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ன பொருத்தம்! கவி ஆக்கம் ஆதவன். கணணியில் பிரதியாக்கம் வெண்ணிலா. கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் இருவரும் நல்லாயிருக்கவேண்டுமென்று கோயிலுக்கு ஓடிப்போய் சாமிக்கு பாலபிஷேகமும், நவக்கிரகத்துக்கு ஒரு அர்ச்சனையும் செய்து போட்டு வாறன்!!!

  • தொடங்கியவர்

கவிதை யதார்த்தம் ஆனால்

யதார்த்தம் கசக்கும் பிள்ளை

:D ம்ம் மாமா பலருக்கு கசந்துட்டுது போல தான் இருக்கு.

அதுசரி புத்துமாமா யதார்த்தம் கசக்காமல் இருக்க என்ன வழி? :D

நியாயமான கேள்விகள் அழகு தமிழ் நல்லதொரு கவிதை.

வெண்ணிலா உங்களுக்கு பிடிச்ச கவிதை எனக்கும் பிடிச்சிருக்கு :lol: (இவ்வளவு நாளும் என்ட கண்ணில படாமல் போயிட்டுதே என்ன காரணம் யார் செய்த தாமதம் :D )

ஹாஹா கடவுள் தமிழ்க்கடவுள் எழுதிய கவிதை எல்லோ அதுதான் அழகாக தமிழில் எல்லோருக்கும் விளங்குறபோல எழுதி இருக்கிறார் போலும் :D

உங்களுக்கும் பிடிச்சிட்டுதோ? நன்றிகள் சுப்பண்ணை :(

ஹாஹா உங்கள் கண்ணில் படாமல் போயிட்டுதோ? கடவுள் செய்த மாயமோ என்னமோ :icon_idea:

  • தொடங்கியவர்

ஆகா என்ன பொருத்தம்! கவி ஆக்கம் ஆதவன். கணணியில் பிரதியாக்கம் வெண்ணிலா. கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் இருவரும் நல்லாயிருக்கவேண்டுமென்று கோயிலுக்கு ஓடிப்போய் சாமிக்கு பாலபிஷேகமும், நவக்கிரகத்துக்கு ஒரு அர்ச்சனையும் செய்து போட்டு வாறன்!!!

:icon_idea::D என்ன ஒரு கரிசனை சுவி பெரியப்பா. :D பாலாபிசேகம் செய்ய போனால் கடவுள் கேட்பார்

பச்சிளங்குழந்தை பாலுக்கு அங்கே அழுதிருக்க

பாற்குட அபிசேகம்.................. :D:lol:

தேவையா உது?

கவிதையை ஆக்கிய ஆதவனும்

பிரதியாக்கம் செய்த வெண்ணிலாவும் நல்லாதான் இருப்பினம் சுவிப்பெரியப்பா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.