Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்படாத பிரதேச மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு விமானம் மூலம் துண்டுப் பிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிக்கப்படாத பிரதேச மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு விமானம் மூலம் துண்டுப் பிரசுரம்

[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 09:21.53 AM GMT +05:30 ]

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகருமாறு கோரப்படும் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி நகர் நோக்கி முன்னேறி வரும் படையினருக்கு எதிராகப் பிரதேச பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தப் புலிகள் உத்தேசித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ் மொழி மூலமான இந்தத் துண்டுப் பிரசுரங்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவ்வாறு அரசாங்கத்திடம் சரணடைய முடியும் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது

http://www.tamilwin.com/view.php?2aIWn5e0d...d436QV3b02ZLu3e

ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறாங்கள் போலிருக்கிறது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இராணுவம் கள முனையில் முன்னிலையில் இருக்கும் போது இவ்வாறு அறிவிப்பது சாதாரண விடயமே. மக்கள் மீதும் போராளிகள் மீதும் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்த இவ்வாறு செய்யப்படுவது வழமை.

1987ல் ஒப்பரேசன் லிபரேசன் என்ற பெயரில் சிறீலங்காவின் அப்போதைய பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத்முதலி.. தமிழ் மக்களை கோவில்களில் தஞ்சம் அடையச் சொன்னார். இறுதியில் விமானங்கள் மூலம் தஞ்சமடைந்த மக்கள் இருந்த கோவில்கள் மீது குண்டுகளைப் போட்டார்.

1990ல் பிரேமதாச அரசு அதன் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன மக்களை வவுனியாவுக்கு வரச் சொல்லிச் சொன்னார். புலிகளை சரணடையச் சொன்னார். இறுதியில் வவுனியா போன மக்கள் வகை தொகையின்றி காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

1995ல் சந்திரிக்கா அரசின் பாதுகாப்புச் செயலர் ரத்வத்தை வந்தார். அவரும் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரச்சொன்னார். மாங்குளத்திலும், கிளிநொச்சியிலும், ஒட்டிசுட்டானிலும்.. வவுனிக்குளத்திலும் நின்று கொண்டு..போராளிகளை சரணடையச் சொன்னார். ஆனால்... இறுதியில் செம்மணியில் வகை தொகையின்றி புதைத்து விட்டுப் போனார்.

அந்த வரிசையில் தற்போது மகிந்த அரசும்.. கோத்தபாயவும்..???! முடிவு..???! :lol::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1987ல் ஒப்பரேசன் லிபரேசன் என்ற பெயரில் சிறீலங்காவின் அப்போதைய பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத்முதலி.. தமிழ் மக்களை கோவில்களில் தஞ்சம் அடையச் சொன்னார். இறுதியில் விமானங்கள் மூலம் தஞ்சமடைந்த மக்கள் இருந்த கோவில்கள் மீது குண்டுகளைப் போட்டார்.

இலங்கை இராணுவம் முதன்முதல் ஒப்பிரேசன் லிபரேசன் ஆரம்பத்தில் வானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்களை போட ஆரம்பித்தனர்.புலிகளை சரணடையச்சொல்லி துண்டுப்பிரசுரம் போட்டது மட்டுமல்ல பலாலி இராணுவ முகாமிலிருந்து ஒரு வானொலியும் இயங்கிது வானொலியின் பெயர் ஞாபகத்தில் இல்லை அந்த வானொலியிலும் சரணடையச் சொல்லி அறிவித்தல்கள் விட்டது மட்டுமல்ல ஒட்டுக்குழுக்களில் சிலரை வைத்து அவர்கள் சரணடைந்த புலிகள் என்று பேட்டிகளும் போனது . இருபது வருசத்திற்கு முந்திய தந்திரம் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் வேறை . ஆனால் புலிகளில் அதே தலைமை அதே மக்கள். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பாஸ் குடுத்த அங்க ஒரு சனமும் வன்னில் நிற்காது

இப்ப மரத்துக்கு கிழ வாழ்கிற சனம் போராட்டத்தில் இனைதந்தால் எப்பவோ தமிழ்

ஈழம் கிடைச்சிருக்கும்

எங்கடா சனத்தில ஒற்றுமை இல்லை, ஒரு சில பெடியள் போராட்டத்தில் இணைத்து

போராட்டத்த நடத்த இயலாது

1990 களில் யாழ் புற நகர் பகுதிகளில் இரவில் சென்றிக்கு நின்று ஆமி ஒட

அடிபட்டுகளைச்சு, நித்திர இல்லாமல் காலையில் cycle இல போராளிகள் வருவினம் , அதே நேரம் யாழ் தலை சிறந்த பாடசாலை களுக்கு செல்லும் அந்த போராளிகள் வயது மாணவர்கள், பெட்டையளுக்கு விசில் அடித்து, குதுகலித்து, காம சேட்டைகளை செய்து கொண்டு போவினம், அந்த போராளிகளுக்கு நான் எதற்காக

போரடவேன்றும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப மரத்துக்கு கிழ வாழ்கிற சனம் போராட்டத்தில் இனைதந்தால் எப்பவோ தமிழ்

ஈழம் கிடைச்சிருக்கும்

ம்.. வெளிநாட்டுக்கு ஓடிவந்த உங்களைப் போன்ற என்னை போன்ற சனம் இயக்கத்தில இணைந்திருந்தாலும் எப்பவோ கிடைச்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் யாழ் புற நகர் பகுதிகளில் இரவில் சென்றிக்கு நின்று ஆமி ஒட

அடிபட்டுகளைச்சு, நித்திர இல்லாமல் காலையில் cycle இல போராளிகள் வருவினம் , அதே நேரம் யாழ் தலை சிறந்த பாடசாலை களுக்கு செல்லும் அந்த போராளிகள் வயது மாணவர்கள், பெட்டையளுக்கு விசில் அடித்து, குதுகலித்து, காம சேட்டைகளை செய்து கொண்டு போவினம், அந்த போராளிகளுக்கு நான் எதற்காக

போரடவேன்றும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்

இதே காலத்தில் நான் ஒரு கரும்புலி அண்ணாவோடு பழகி இருக்கிறேன். அவர் வீரமரணம் அடைந்த பின்னர் தான் தெரியும் கரும்புலி என்பது.

அவரோடு பேசும் போது சொல்வார்.. போராளி என்பவன் இலட்சிய உறுதிமிக்கவன். அவனுக்கு தன்ர இலட்சியம் தான் முதன்மையா இருக்கும். அடுத்தவன் எப்படி வாழுறான்.. என்ன செய்யுறான்.. என்பதைப் பற்றியெல்லாம் இருக்காது என்று. தலைவரை எதுக்கும் விட்டுக் கொடுத்துப் பேசாத தலைமைத்துவ உறுதி மிக்கவர்கள் எங்கள் சகோதரர்கள்.. சகோதரிகள்.

சாதாரண பொதுமகனா இருந்து கொண்டு.. இலட்சிய உறுதிமிக்க போராளியின் மன நிலை உணர்ந்து பேசிக் கொள்ளவது கடினம்.

போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையைக் கூடக் கட்டிக்காக்க முடியாதவங்க எல்லாம்.. போராளிகள்.. இப்படிதான் இருப்பாங்க என்று சொல்வது..???! :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1990 களில் யாழ் புற நகர் பகுதிகளில் இரவில் சென்றிக்கு நின்று ஆமி ஒட

அடிபட்டுகளைச்சு, நித்திர இல்லாமல் காலையில் cycle இல போராளிகள் வருவினம் , அதே நேரம் யாழ் தலை சிறந்த பாடசாலை களுக்கு செல்லும் அந்த போராளிகள் வயது மாணவர்கள், பெட்டையளுக்கு விசில் அடித்து, குதுகலித்து, காம சேட்டைகளை செய்து கொண்டு போவினம், அந்த போராளிகளுக்கு நான் எதற்காக

போரடவேன்றும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்

இவர் சொல்லுகின்ற போரளிகள் கரைநகர் அடிபாட்டுக்குச் சாப்பாடு சேர்த்த போராட்டத்தின் முதல் ஓடிகள் போலக் கிடக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவம் முதன்முதல் ஒப்பிரேசன் லிபரேசன் ஆரம்பத்தில் வானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்களை போட ஆரம்பித்தனர்.

அக்காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் உலங்குவானுர்தி போனபின்பு பறந்துவரும் அந்தத் துண்டுப்பிரச்சுரங்களை யார் அதிகளவில் ஒடிச் சென்று பிடிப்பது என்று போட்டி போட்டு விளையாடினார்கள். அதாவது சிறுவர்கள் விளையாடுவதற்கு தான் அந்தத் துண்டுப்பிரச்சுரங்கள் உபயோகிக்கப் பட்டது.

அக்காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் உலங்குவானுர்தி போனபின்பு பறந்துவரும் அந்தத் துண்டுப்பிரச்சுரங்களை யார் அதிகளவில் ஒடிச் சென்று பிடிப்பது என்று போட்டி போட்டு விளையாடினார்கள். அதாவது சிறுவர்கள் விளையாடுவதற்கு தான் அந்தத் துண்டுப்பிரச்சுரங்கள் உபயோகிக்கப் பட்டது.

இது வேறு நடந்ததா!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறு நடந்ததா!!!

நான் கண்ணால பார்த்த சம்பவங்களில் ஒன்று. பெரியவர்கள் சிலரும் ஒடினதைக் கண்ணால பார்த்திருக்கிறேன். சில வேளைகளில் கொழும்புப் பத்திரிகைகளின் கட்டுக்களையும் மேலே இருந்து போட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இன்னொன்றும் போட்டார்களே கந்தப்பு ? சகடை(அவ்ரோ) என்ற விமானத்திலிருந்து எண்ணெய்ப் பீப்பாக்களில் மனித மலமும், விழுந்தவுடன் எரியும் எண்ணெயும் நிரப்பி வீசினார்களே. நினைவிருக்கா? அதை தெல்லிப்பளையில் எங்கட சொந்தக்காரச் சனம் மண்வெட்டி செய்யக் கொண்டு திரிந்ததைக் கண்டிருக்கிறன்.
  • கருத்துக்கள உறவுகள்

:lol: இன்னொன்றும் போட்டார்களே கந்தப்பு ? சகடை(அவ்ரோ) என்ற விமானத்திலிருந்து எண்ணெய்ப் பீப்பாக்களில் மனித மலமும், விழுந்தவுடன் எரியும் எண்ணெயும் நிரப்பி வீசினார்களே. நினைவிருக்கா? அதை தெல்லிப்பளையில் எங்கட சொந்தக்காரச் சனம் மண்வெட்டி செய்யக் கொண்டு திரிந்ததைக் கண்டிருக்கிறன்.

அப்ப சனம் உந்த அச்சுலக்கை தான் போட்டவர் என்று கதைப்பதுண்டு. அத்துலத் முதலியை சில இடங்களில் அச்சுலக்கை என்றும் அழைப்பார்கள். கொழும்பு டெய்லி நியூஸ் பத்திரிகைகளின் கட்டுக்களையும் வானில் இருந்து போடுவதுண்டு.

மண்வெட்டி செய்ய ??

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஆமாம் தூயா, மண்வெட்டி செய்தது அந்தப் பீப்பாய்த் தகட்டிலிருந்து, அந்தப் பீப்பாக்களினுள் இருந்த பொருட்களைக் கொண்டல்ல.

:rolleyes: ஆமாம் தூயா, மண்வெட்டி செய்தது அந்தப் பீப்பாய்த் தகட்டிலிருந்து, அந்தப் பீப்பாக்களினுள் இருந்த பொருட்களைக் கொண்டல்ல.

ஓ ..

பீப்பாய் என்றதும் நான் ப்ளாஸ்டிக் என நினைத்தேன்...

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.