Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்

தாய் நாட்டில் உதவி வேண்டி நிற்கும் உறவுகளுக்காய்......

அனைத்துலகம் எங்கிருக்கும்

எம் அனைத்துலக உறவுகளே !

எங்கள் வன்னியின் அவலங்களை

இன்று உலகமெங்கும் அறிவீர்கள்

வாழ்விழந்து போன எங்கள்

நிலைமையையும் அறிவீர்கள்

இன்று மரங்கள்தான் நம் வீடு

மணல்தரை தான் நம் படுக்கை

காட்டு மிருகங்கள் தான் நம் உறவு

குண்டுபோடும் கழுகுகள்தான் நம் எதிரி.

எமக்கு வீடு இருந்தும் எம் வாழ்வை

காட்டில்தான் வாழ்கின்றோம்

காரணம் புரியவில்லை

கண்டபடி ஓடுகின்றோம்.

காலையில் எழுந்தபின்னர்

தண்ணீர் தான் நம் உணவு

அதன் பின்னர் பசிக்காய்

அழுவதுதான் நம் கவலை.

பசியின் கொடுமையினால்

பழைய உணவை உண்டுவிட்டு

புசித்த பின்னர் சிலவேளை

விஷம்போல உணர்கின்றோம்

படுகையிலே சில நாட்கள்

பாடசாலையின்றி பல நாட்கள்

காரணம் என்னவென்று

அம்மாவிடம் கேட்க

அழுகிறால் பதில் சொல்ல

அதன் அர்த்தமும் விளங்கவில்லை?

அப்பாதான் சொன்னார்

நம் புலிகள் விரட்டிடுவார்

எதிரியை ஓட ஓட

அதுவரைக்கும் கொஞ்சம்

பொறுங்களே என் செல்வங்களென்று.

மரங்களின் கீழ் வாழ்கின்றோம்

மணலை படுக்கையாக்கின்றோம்

எங்கள் மரணப் பசியதற்க்கு

எப்படி மண்ணையா நாம் உண்போம்?

எம்மால் கண்திறக்க முடியவிலை

காது இரண்டும் அடைக்கிறது

கண்டதையும் தின்றுவிட

எம் வாய்கள் துடிகிறது

பசியின் மயக்கத்தினால்

படுக்கைக்கு செல்வதென்றால்

பாம்புகளின் ஆட்சியோ

எம் படுக்கயிலே நடக்கிறது.

பாவம் நாம் அண்ணாக்களே!

பழி நாங்கள் அக்காக்களே!

எம்மை பசி தீர வைத்திட்டால்

உங்கள் பாதங்களை

நாம் கழுவுகிறோம்.

நீங்களும் எங்கள்

உறவுகள் தான் சொல்லுங்ளே !

உம் உறவை காத்திடவே - உங்களை

உரிமையுடன் வெண்டுகிறோம்.

உங்களை நாம் கேட்பதெல்லாம்

நம் பசி போக்க ஓர் உதவி

பாம்புகளின் தொல்லையின்றி

படுபதற்க்கு ஓர் வசதி.

புலி வீரர்கள் வெல்வார்கள்

எம் உரிமைகளை வெகுவிரைவில்

நாமும் நம் வீடு செல்வோம்

உம் உதவிக்காய்

நன்றிகள் பல சொல்லி.

இளங்கவி

Edited by ilankavi

காலையில் எழுந்தபின்னர்

தண்ணீர் தான் நம் உணவு

அதன் பின்னர் பசிக்காய்

அழுவதுதான் நம் கவலை.

:):D:D தற்போதைய நிலைமையை கவிதையாக்கி இருக்கின்றீர்கள். நன்று

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக் குழந்தைகளில் கதறல்களை வரிகளில் தந்து அவர்களின் தேவைகள் தீர்க்க குரல் தரும் இளங்கவியின் வரிகள் இரக்கமுள்ளோரின் நெஞ்சைத் தொடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்க்கு ஏற்ற கவிதை .....தொடரட்டும் உங்கள் ஆக்கம்

ம்ம்..வன்னி குழந்தைகளின் கதறலை..கவியிலே கதறி சொல்லி விட்டியள்..ள்..கதறலை கேட்காதவர்களும் தற்போது கேட்டிருப்பார்கள்.. :icon_mrgreen:

தொடரட்டும் தங்களின் கவிக்கள்..!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிவாழ் எம்மினத்தின் வலிநிறைந்த வாழ்வை உங்கள் சொல்லாட்சியில் எடுந்து வந்து விழகசிய வைக்கும் இளையகவியே! இன்னும் இன்னும் எழுக. எழுதுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் நாம் விரைவாக உதவிகளை வழங்க வேணும். வன்னி மக்களை பொருத்தளவில் அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டு இருக்கிரோம் கூட. குறிப்பாக யாழ் மக்கள்.ஏனெனில 1995ம் ஆண்டு அவர்கள் 5 லட்ச்சம் மக்களுக்கு அன்போடு அடைக்கலம் கொடுத்தவர்கள். இன்று அவர்கள் படும் துயரை துடைக்க புலம்பெயர் மக்கள் இன்னும் இன்னும் முன்வரவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவுக்கு

என் கவிதைக்காக உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kinarukaavi க்கு

உங்கள் கருத்துக்கு என் பாராட்டுக்கள். 1995ல் எங்கள் உயிர்களை காத்தவர்களை பாதுகாப்பது எங்கள் கடமையல்லவா.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாறாவுக்கு

வன்னிவாழ் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என் சிந்தனையில் தோன்றிய சில வரிகள் உங்களை கவர்ந்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் தாய் நாட்டிற்க்காக என் படைப்புக்கள் உங்கள் விருப்பப்படியே மேலும் தொடரும்.

நன்றி

இளங்கவி

Edited by ilankavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனாவிற்க்கு

நீங்கள் போய்வருவதற்க்கு முன்னதாக,

என் வரிகளுக்குகாய் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்கள் எல்லோருடன் ஆதரவுடன் என் கவிப்பயணம் தொடரும்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனுக்கு

என் கவிதையை ரசித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் விருப்பம் போல் என்பயணம் தொடரும்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nedukkalapoovan

என் வரிகளில் அந்தப் பிஞ்சு மனங்களின் கதறலைக்கண்டு அவர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களைப்போன்ற நெஞ்சங்கள் இருக்கும் வரை எங்கள் இனத்தை எவராலுமே அழிக்கமுடியாது. உங்கள் இரக்க குணத்திற்கும் இனப்பற்றுக்கும் என் வாழ்த்துடன் சேர்த்து கோடி வணக்கங்கள்.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.