Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலியின் கவிதைகள்

Featured Replies

நினைவழியா பயணம்

நீண்ட நெடிய பயணங்களின்

பின்பு அங்கே தரித்து

நின்றோம்

செம்மண்ணின் வாசனையும்

வேலி கதியால்களில் பூத்திருந்த

முள் முருக்குகளின் பூக்களும்

தொலைந்து போயிருந்த நினைவுகளில்

உயிர் தடவிற்று

கரிய நிற மாடு பூட்டி

வண்டில் ஒன்று கடந்து போனது

இருளும் நினைவும்

நிலவின்

ஒளியுடன் கலந்த இருந்த

பொழுதில் தான் நாம் அந்த வீதியில்

அமர்ந்து கொண்டோம்

நேற்றும், முந்த நாளும்

அதற்கும் முன்பாகவும்

என் தோழர்கள்

உயிர் சரிந்து வீழ்ந்த

வீதி அது

ஒவ்வொரு அங்குல

நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு

போராடி களம் வென்ற

என் தோழர்களை

தாங்கி நின்ற

வீதி அது

என் பாட்டனின், அவனதும்

பாட்டனின் காலடிகளின்

தடம் காக்க, அவனின்

பரம்பரை போராடி காத்த

வீதி அது

கல்லாய் அமர்ந்து இருந்தோம்

அதில்

வீழும் தோழருக்கு

தோள் கொடுக்க

வழியின்றி இருந்துவிட்டு

வெற்றியின் பின் விருந்து

உண்ண அமர்ந்து இருந்தோம்

மரணித்த தோழர்களின்

குருதி வழிந்த கதைகளை

கேட்பதற்கு அமர்ந்து

இருந்தோம்

அவர்களின்

மரணம் தந்த

வெற்றியின் விழுதுகளை

சுவைபதற்காக

அமர்ந்து இருந்தோம்

கரிய வானில்

கரிச்சான் குருவி

ஒன்று ஒன்று ஏளனமாய் சிரித்து

விட்டு பறந்தது ,

தான் கூட

தோழர்கள் வலி மறக்க

இசை மீட்டகதை

சொல்லி சிரித்தது

எழுந்து மீண்டும் பயணம்

தொடரும் போது

நாங்கள்

ஒரு சிறு

குருவியை கூட

நிமிர்ந்து பார்க்கவில்லை

-நிழலி-

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின்

மரணம் தந்த

வெற்றியின் விழுதுகளை

சுவைபதற்காக

அமர்ந்து இருந்தோம்

கரிய வானில்

கரிச்சான் குருவி

தோழர்கள் வலி மறக்க

இசை மீட்டகதை

சொல்லி சிரித்தது

எழுந்து மீண்டும் பயணம்

தொடரும் போது

நாங்கள்

ஒரு சிறு

குருவியை கூட

நிமிர்ந்து பார்க்கவில்லை

நிழலிக்கு

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களும் சொல்லி அழ நினைப்பதை உங்கள் வரிகளில் சொல்லி நெஞ்சத்தை கனக்க வைத்து விட்டீர்கள். அருமையான கவிதை நிழலி வாழ்த்துக்கள்.

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின்

நினைவழியா பயணம்

செம்மண்ணின் வாசனையும்

வேலி கதியால்களில் பூத்திருந்த

முள் முருக்குகளின் பூக்களும்

தொலைந்து போயிருந்த நினைவுகளில்

உயிர் தடவிற்று

ஒவ்வொரு அங்குல

நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு

போராடி களம் வென்ற

என் தோழர்களை

தாங்கி நின்ற

வீதி அது

என் பாட்டனின், அவனதும்

பாட்டனின் காலடிகளின்

தடம் காக்க, அவனின்

பரம்பரை போராடி காத்த

வீதி அது

கரிய வானில்

கரிச்சான் குருவி

தான் கூட

தோழர்கள் வலி மறக்க

இசை மீட்டகதை

சொல்லி

-நிழலி-

நல்ல கவி மனசு உங்களுக்கு. நன்றாக ஆரம்பிக்கிற கவிதை. பாராட்டுக்கள். அவர் அவர் முகம் அவரவருக்கு. நானென்றால் தோழ தோழியர் என்று எழுதியிருப்பேன். தோழர்கள் என பொதுப்பாலாக எழுதிநீர்களா? பின்னுக்குக் கொஞ்சம் மெருகேற எடிற் பண்ணியியுமிருப்பேன். நல்ல கவிதை அனுபவத்தை தந்ததற்க்கு நன்றி நிழலி

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தாலும் நிலத்தின் மண் வாசனை மாறாத கவிதை . நன்றிகள்.

ம்ம்..நினைவழியா பயணம்..ம்..நினைவுகளை சுமந்தபடியே..யே வாழ்த்துகள் நிழலி..லி அண்ணா..நிழலியின் கவிதை நிழலை தரிசித்தமை மகிழ்ச்சியே..யே.. :rolleyes:

தொடருங்கள்..ள்.. :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பாராட்டிய இளங்கவிக்கும், ஜெயபாலன் அண்ணாவிற்கும், நிலாமதிக்கும், யமுனனிற்கும் என்னுடைய அன்பான நன்றிகள்.

நான் ஏ9 வீதி திறக்கப்பட்ட சமயத்தில் யாழ் சென்ற பயணத்தை நினைவில் வைத்து நேற்று இக் கவிதையை எழுதினேன். ஏ9 வீதி திறந்து மிக சில நாட்களில், ஒழுங்காக பேருந்து சேவை தொடங்க மிக முன்பாக நானும் இன்னும் 9 நண்பர்களும் யாழ்பாணம் சென்றோம் (நான் 12 வருடங்களின் பின் யாழ் சென்ற அனுபவம் அது). 2 இரவுகளும், 2 பகல்களும் எடுத்தன போய் சேர்வதற்கு. அந்த அனுபவம் காட்சி படிமங்களாக, உறைந்த உணர்வுகளாக இன்னும் நெஞ்சிலேயே இருக்கின்றது. இன்னும் சில கவிதை சில நேரங்களில் எனக்கு தோன்றலாம்

ஜெயபாலன் அண்ணா,

பூனை புலியை பார்த்து தனக்கும் உடலில் வரிகள் வேண்டும் என்று சூடு போட்டுக்கொண்டதை போலதான் நான் கவிதை எழுதுவது. உங்களினதும், சேரனினதும், அஸ்வகோசினதும் (இவர் இப்போ எங்கு இருக்கின்றார்?), சிவசேகரத்தினதும் கவிதைகளை பார்த்துதான் நான் கவிதைகள் எழுத முயன்றேன். சில கவிதைகள் முன்பு சரிநிகரிலும், மூன்றாவது மனிதனிலும் முன்பு பிரசுரிக்கப்பட்டன. உங்களின் பாராட்டு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகின்றன.

நான் தோழர் எனும் சொல்லு பொதுப்பால் என நினைத்தே பயன் படுத்தினேன். அச் சொல் பொதுப்பால் சொல் இல்லையா?

இக்கவிதையை இன்னும் கொஞ்சம் செழுமை படுத்தி இருக்கலாமோ என தோன்றுகின்றது. ஒரு தாளில் எழுதி பலமுறை வாசித்து பார்த்தபின் கணணியில் தட்டச்சு செய்து இருக்கலாமோ எனவும் தோன்றுகின்றது. நேரடியாக கணணியிலேயே கவிதை எழுதியமையால் சில எழுத்து பிழைகளும் வந்து விட்டன.

பாராட்டிய அன்புள்ளங்களுக்கு மீண்டும் நன்றிகள்

-நிழலி-

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

நினைவழியா பயணம்

கல்லாய் அமர்ந்து இருந்தோம்

அதில்

வீழும் தோழருக்கு

தோள் கொடுக்க

வழியின்றி இருந்துவிட்டு

வெற்றியின் பின் விருந்து

உண்ண அமர்ந்து இருந்தோம்

நிமிர்ந்து பார்க்கவில்லை

-நிழலி-

விருந்துண்ணும் நிலையில் கண்டிவீதியை தரிசித்தோர் நாம். ஆயினும் வீழாத மண்ணின் வீரம் செறிந்த வீதியின் முதுகில் பதியமாகியிருக்கும் வீரியம் மிக்க வித்துக்களின் வெற்றியில் நாமும் மகிழ்ந்திருந்தோம். உண்மை சுடுகிறது நிழலி.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கவிதை நிழலி..! புலம்பெயர் வாசிகளின் மனநிலை என்றும் நீங்கள் சொல்வதை ஒத்ததே..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏ9 பாதையில் பயணித்த போது அந்த கனமும் நெஞ்சில் சோகமும் தானாகவே எழும். குறிப்பான வெட்டை வெளியான ஆனையிறவுக்குள் எமதுகால்கள் பதியும் போது அந்த வெற்றி வீரரின் சாதனைகளையும் அந்த மண்னை மீட்க அவர்கள் எப்பிடி அந்த வெளியினில் போரிட்டனர் என்பதையும் எண்ணி ஆச்சரியமும் கூடவே வெட்கமும் பட்டுள்ளேன்.

சிலரால் எழுத முடியும் சிலரால் நயமாக பேச முடியும் சிலரால் மட்டுமே கவிதை பயக்க முடியும் அது உங்களால் முடிகின்றது அதுகும் நன்றாகவே முடிகின்றது.

நினைமீட்ட உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள் நன்று இன்னும் தொடரு

ஒவ்வொரு முறை ஊர் போய்வரும் போதும் மனதில் எழும் எண்ணங்கள்....

கவிதைப்பகிர்வுக்கு நன்றி :D

  • தொடங்கியவர்

மேலும் மேலும் பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட 9 வருடங்களின் பின் நான் எழுதிய முதல் கவிதை இது. தொடர்ந்து எழதவே மனம் விளைகின்றது... பார்ப்போம்...

(வீட்டில் யாழ் இணையத்தை பார்க்கும் போது ஒரு திரியிற்கான பதில்கள் எல்லாம் ஒன்றன் கீழ் ஒன்றாக தெரியாமல், மரக்கிளைகள் போல அடுக்கி தெரிகின்றது (Tree View). ஒவ்வொரு பதிலுக்குமான இணைப்பை அழுத்தியே பார்க வேண்டி உள்ளது. இப் பிரச்சனை IE 7 இல் வீட்டில் மட்டும் தான் வருகின்றது... இதை எப்படி சரியாக்குவது என்று யாருக்கேனும் தெரியுமா?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.