Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர், நடிகைகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று தொடங்கியது-(படங்கள் இணைப்பு)

Featured Replies

இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து நடிகர், நடிகைகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று சற்று முன்னர் தொடங்கியது. நடிகர்,நடிகையர் குவியத் தொடங்கி உள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கடந்த 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினர் பங்கேற்ற கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

அதில் கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கமல், ரஜினி: அதன்படி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் மனோரமா, ஸ்ரீபிரியா, நயன்தாரா, சினேகா, திரிஷா, நமீதா உள்ளிட்ட நடிகைகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அஜீத் வந்தார்:

காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரத்த்துக்கு வந்தார் அஜீத். முழுக்க கறுப்பு உடை அணிந்து வந்திருந்த அஜீத்தை ராதாரவியும் விஜய்யும் வரவேற்றனர். அஜீத்தும் விஜய்யும் கைகொடுத்து பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமெடுக்க பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முண்டியடிக்க, உடனே ராதாரவி, 'இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஒரு புனிதப் போராட்டம். தயவுசெய்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்...' என்றார் கண்டிப்புடன்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான பந்தல், மேடை போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நடிகர், நடிகையரைப் பொதுமக்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஹபிபுல்லா ரோடு வழியாக உள்ளே வந்து வித்யோதயா முதல் தெரு வழியாக வெளியே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனால் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகையர் உணர்ச்சிவசப்படக்கூடாது; மேடையில் பேசுபவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகவோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாகவோ பேச வேண்டாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பதுடன் தங்களுடைய விருப்பம்போல நிவாரண நிதி வழங்கி உதவ வேண்டும்.

போராட்டத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவை பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

நடிகர், நடிகையர் உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(படங்கள் இணைப்பு) ...........

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Edited by தராக்கி

நடிகர் நடிகைகளின் பிரமாண்ட உண்ணாவிரதம் தொடங்கியது!

சென்னை: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும்இ உடனடி போர்நிறுத்தம் கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது உண்ணாவிரதம்.

நடிகர் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையில் தமிழின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோர் காலையிலே வந்துவிட்டனர்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கி வைத்தார். மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் இதேபோல மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துப் பேசினர்.

நடிகர்கள் விஜய் விக்ரம் சூர்யா ஜெயம் ரவி கா்த்தி சிவக்குமார் நெப்போலியன் பிரகாஷ்ராஜ் சத்யராஜ் பசுபதி அர்ஜூன் மணிவண்ணன் வடிவேலுஇ சுந்தர் சி நடிகைகள் சினேகா மும்தாஜ் ராதிகா சரத்குமார் சத்யப்பிரியாஇ குயிலி மனோரமா உள்பட பலரும் காலையிலேயே உண்ணாவிரதத்துக்கு வந்துவிட்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பேச அழைத்தார். மிகுந்த எச்சரிக்கையுடன் ஒரு சில வார்த்தைகளில் தங்கள் உணர்வுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அஜீத் வந்தார்:

காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரத்த்துக்கு வந்தார் அஜீத். முழுக்க கறுப்பு உடை அணிந்து வந்திருந்த அஜீத்தை ராதாரவியும் விஜய்யும் வரவேற்றனர். அஜீத்தும் விஜய்யும் கைகொடுத்து பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமெடுக்க பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முண்டியடிக்க உடனே ராதாரவி 'இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஒரு புனிதப் போராட்டம்.

தயவுசெய்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்...' என்றார் கண்டிப்புடன்.

எம்ஜிஆர் பாடல்கள்:

நடிகர் நடிகைகளின் பேச்சுக்கு நடுவே மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

ரஜினி மற்றும் கமல் பிற்பகலில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ike-starts.html

ஒரு உலக சாதனைக்காக ஒரு நாள் படப்பிடிப்பு.

மலையாள நடிகர் ஜெயராமும் கலந்துகொண்டிருக்கின்றார்.

கலந்துகொண்ட அனைத்து நடிகர் நடிகைகளிற்கு நன்றிகள்.

ஆமா கனவுக்கன்னி அது இது என்டு கத்தினாங்கள் அவ வரவில்லையாமே ? வேற யார் சிவாஜி படத்தின் கதாநாயகி. .

கலந்துகொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்

Edited by பல்லவன்

  • தொடங்கியவர்

மன்சூர் அலிகான் தனி தமிழீழந்தான் தீர்வு என பேசியைருக்கின்றார்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அஜீத்தும் நன்றி கெட்டவர்கள் அல்ல-அர்ஜூன்

சென்னை: நானும் சரி, அஜீத்தும் சரி, தமிழர்களுக்கு எதிராக செயல்படும் அளவுக்கு நன்றி கெட்டவர்கள் அல்ல என்று நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அர்ஜூன், என்னைப் பற்றியும், அஜீத் குறித்தும் கடுமையாக விமர்சித்தன். நாங்கள் தமிழர்களுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது.

தமிழர்களால்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே தமிழர்களுக்கு எதிராக பேசும் அளவுக்கு நான் நன்றி கெட்டவன் அல்ல. அஜீத்தும் நன்றி கெட்டவர் அல்ல. நாங்கள் மட்டுமல்ல அனைத்து நடிகர், நடிகைகளும் தமிழர்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்கள், துயரங்களை நான் வீடியோவில் பார்த்தேன். மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலை மாற இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fpnmix_34695070982.jpg

சென்னை: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர்நிறுத்தம் கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது உண்ணாவிரதம்.

நடிகர் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையில் தமிழின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோர் காலையிலே வந்துவிட்டனர்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கி வைத்தார். மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் இதேபோல மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துப் பேசினர்.

நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, சிவக்குமார், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், பசுபதி, அர்ஜூன், மணிவண்ணன், வடிவேலு, சுந்தர் சி, நடிகைகள் சினேகா, மும்தாஜ், ராதிகா சரத்குமார், சத்யப்பிரியா, குயிலி, மனோரமா உள்பட பலரும் காலையிலேயே உண்ணாவிரதத்துக்கு வந்துவிட்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பேச அழைத்தார். மிகுந்த எச்சரிக்கையுடன் ஒரு சில வார்த்தைகளில் தங்கள் உணர்வுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அஜீத் வந்தார்:

காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்தார் அஜீத். முழுக்க கறுப்பு உடை அணிந்து வந்திருந்த அஜீத்தை ராதாரவியும் விஜய்யும் வரவேற்றனர். அஜீத்தும் விஜய்யும் கைகொடுத்து பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமெடுக்க பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முண்டியடிக்க, உடனே ராதாரவி, 'இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஒரு புனிதப் போராட்டம். தயவுசெய்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்...' என்றார் கண்டிப்புடன்.

விஜயகாந்த்:

11.30 மணிக்கு நடிகர் விஜயகாந்த் வருகை தந்தார். மேடையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

வந்தார் ரஜினி:

மாலையில்தான் வருவார் எனக் கூறப்பட்ட ரஜினி, பகல் 11.45 மணிக்கு வந்துவிட்டார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்தனர்.

ரஜினி வந்த ஒரு மணி நேரம் கழித்து கமல்ஹாசன் உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

நயன்தாரா- த்ரிஷா:

அதே போல நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

எம்ஜிஆர் பாடல்கள்:

நடிகர் நடிகைகளின் பேச்சுக்கு நடுவே மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ike-starts.html

Edited by puspaviji

ஒரு உலக சாதனைக்காக ஒரு நாள் படப்பிடிப்பு.

ஆமா கனவுக்கன்னி அது இது என்டு கத்தினாங்கள் அவ வரவில்லையாமே ? வேற யார் சிவாஜி படத்தின் கதாநாயகி. .

மேலே உள்ளது மாதிரி எழுதுவதை தவிர்த்தால் நல்லது.

அதற்கு ராதாரவியின் பதில் சிந்திக்க வைக்கும்

அஜீத்தும் விஜய்யும் கைகொடுத்து பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமெடுக்க பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முண்டியடிக்க உடனே ராதாரவி 'இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஒரு புனிதப் போராட்டம்.

தயவுசெய்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்...' என்றார் கண்டிப்புடன்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.

நன்றிகள் :icon_mrgreen:

சன் நியுஸ் அலைவரிசையில் போகின்றது.

தமிழக நட்சத்திரங்களின் உண்ணாவிரதம் - கலைஞர் தொலைக்காட்சி

Edited by vettri-vel

சன் நியுஸ் அலைவரிசையில் போகின்றது.

KTV யில் ...

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதத்தில் பங்கு பற்றிய அனைத்து சினிமா கலைஞர்களுக்கும் நன்றி .

தயவு செய்து கள நண்பர்களே ! உணர்ச்சி வசப்பட்டு நீண்ட கால இடைவெளியின் பின்பு எமக்கா குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் எமது தமிழகத்து உறவுகளிற்கு சங்கடம் உண்டு பண்ணாதீர்கள்.

தயவு செய்து கள நண்பர்களே ! உணர்ச்சி வசப்பட்டு நீண்ட கால இடைவெளியின் பின்பு எமக்கா குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் எமது தமிழகத்து உறவுகளிற்கு சங்கடம் உண்டு பண்ணாதீர்கள்.

யாரும் பிழையாக சொல்லாமலே இதை நீங்கள் சொல்வது..?????

புரியவில்லை...

ஒருவேளை இதுவே பிழையாகமாறலாமல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.